ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரம் ஒன்றிற்கு வெள்ளையம்மாள் கோபுரம் என்று எப்படி பெயர் வந்தது என்று தெரியும். இருந்த இடத்தில் இருந்து நினைத்தாலே முத்தியை கொடுக்கும் திருவண்ணாமலை கோவில் வடக்குக் கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்று எப்படி பெயர் வந்தது என்பதை பார்ப்போம். ImageImage
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தில் சாதாரண விவசாயக் குடும்பம் வசிக்கும் வீடு போல் தென்பட்டாலும், உள்ளிருந்து வரும் சாம்பிராணி, ஊதுபத்தியின் வாசமும், இதையெல்லாம் விட 'ஓம் நமச்சிவாய' என்று அழகிய இளங்குரலில் வரும் மந்திரமும் அதை ஒரு சிவாச்சாரியார் வீடோ என்றே நினைக்க வைக்கும்.
எப்போதும் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பாள் அருள்மொழி என்னும் இளம் பெண். எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பக்தி, இவள் வயது பெண்களெல்லாம் தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும், காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும்தான் ‘சிவமே கதி’ என்றிருக்கிறாளே
என்று அவள் தாய் ஆயி அம்மாளுக்கு ஆச்சரியமும் குழப்பமும் இருந்தது. அவர் தன் கணவர் கோபால் பிள்ளையிடம் இதைப் பற்றி கவலைப்பட்டு முறையிட்டார். அவரும் சரி, உன்னுடைய சித்தப்பா பையனுக்கோ, இல்லை எங்க அக்கா பையனுக்கோ வருகிற தை மாதம் பரிசம் போட்டுவிடலாம் . இரண்டு பேருமே நல்லவங்க. கல்யாணம்
ஆனால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்றார். விரைவில் ஒரு நாள் வாசலில் தொங்கிய மாவிலைத் தோரணமும், சமையலறையில் வீசிய பலகார வாசனையுமாக வீடே களை கட்டி இருந்ததைப் பார்த்து என்னம்மா விசேஷம் என்று கேட்டாள் அருள்மொழி. இன்று உன்னைப் பெண் பார்த்து பரிசம் போட வருகிறார்கள் என்ற விவரத்தை ஆயி
அம்மாள் தெரிவித்தார். துடித்துப் போனாள் அருள்மொழி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள். பரிசம் போட்டுவிட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயம் வந்தது. “சிவாயநம சிவாயநம” என்று ஜபித்தபடி விறுவிறுவென்று வேகமாக நடக்கத் தொடங்கியவர் தன்னுணர்வு பெற்றுப் பார்த்தபோது
கோமுட்டிக் குளம் என்ற நீர்த் தடாகத்தின் முன் நிற்பதைக் கண்டாள். அருணை ஈஸ்வரா உன் கருணையே கருணை என்றபடி அந்தக் குளத்தில் குதித்து விட்டாள் அருள்மொழி. குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடிவந்தனர். குளத்தில் குதித்துத் தேடிப்
பார்த்தனர். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. ஆயி அம்மைக்கும், கோபால் பிள்ளைக்கும் அழுதழுது கண்ணீர் வற்றி விட்டது. எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் குளக்கரையை விட்டு நகர மாட்டேன் என்று அங்கேயே தவம் இருந்தார்கள். குளத்தில் எதாவது சின்னச் சலனமாவது தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே
இருந்தார்கள். மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும், தந்தையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அங்கே அன்று மலர்ந்த மலர்போல் உயிருடன் வந்தாள் அருள்மொழி. விஷயம் கேள்விப்பட்டு கூடிய கூட்டத்தினருக்கு அருள்மொழி அங்கிருந்த குளக்கரை மண்ணை எடுத்து கொடுக்க, அது
அருணாசலேஸ்வரர் அவல், பொரி பிரசாதமாக மாறியது. தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும், தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி, தன் பெயர் ‘அம்மணி அம்மாள்’ என்றும் சொன்னார். அப்போதே திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். கண் நிறைய அண்ணாமலையானை
தரிசித்து பக்தர்களுக்குத் தொண்டு செய்வதே மகேசனைத் திருப்திப்படுத்தும் என்று அன்றிலிருந்து அருணைக்கு வரும் பக்தர்களுக்கும், கிரிவலம் செய்பவர்களுக்கும் தொண்டாற்றத் தொடங்கினார். ஆனால் ஈசன் எதற்காக அவரைத் தேர்ந்தெடுத்தானோ அந்தப் பணி முடிவடையாமலேயே இருந்தது. திருவண்ணாமலைக் கோவிலில்
அனைத்து கோபுரங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் வடக்கு கோபுரம் மட்டும் எப்போது கட்ட ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்து கட்டி முடிக்க முடியாமல் மொட்டை கோபுரமாகவே நின்றது. ஒருநாள் இரவு அம்மணி அம்மாள் கனவில் வந்த ஈசன், “வடக்கு கோபுரத்தைக் கட்டுவதே உன் பணி” என்று சொல்லி மறைந்தார்
அன்றில் இருந்து உயிர் மூச்சாக அந்தப் பணியைத் தொடங்கினாள். அவள் ஆற்றலை அறிந்த வணிகர்கள், பண உதவி செய்தனர். அதில் ஒருவர் பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறிவிட்டார். அப்போது அம்மணி அம்மாள், அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தின் அளவை சரியாகச் சொல்ல, வீட்டுக்குச் சென்றதும் எண்ணிப்
பார்த்த வணிகருக்கு பெரிய அதிர்ச்சி. அம்மணி அம்மாள் கூறிய தொகை ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல் மிகச்சரியாக இருந்தது. அந்தச் செல்வந்தர் உடனடியாக மனம் மாறி இருமடங்கு பொருளுதவி செய்தார். இவ்வாறு பலரும் பொருளுதவி செய்ய கோபுரம் ஒவ்வொரு நிலையாகக் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து
நிலைகள் வரை வந்துவிட்டது. எல்லாப் பணமும் தீர்ந்து விட்டாலும் இனி யாரைக் கேட்பது என்று சோர்வடையாமல் மைசூர் மகாராஜாவிடம் சென்றார் அம்மணி அம்மாள். இவரின் எளிய தோற்றம் கண்டு, தடுத்து நிறுத்திய காவலன் யார் நீ என்றான். மகாராஜாவிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன் அப்பா என்றார் அம்மணி
அம்மாள். சரி பார்க்கலாம் அப்படிப் போய் உட்காரு என்றான் காவலாளி. சொன்னபடியே ஓரமாகப் போய் உட்கார்ந்தார் அம்மணி அம்மாள். ஆனால் தனது "லகிமா" சக்தியால் அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்திற்குள் நுழைந்து மகாராஜா முன்னால் போய் நின்றார். உரிய அனுமதி இல்லாமல் தன் முன் வந்து நின்ற பெண்ணைப்
பார்த்த அரசர் ஆச்சரியம் அடைந்து, யார் நீங்கள் என்றார். என் பெயர் அம்மணி. திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கட்ட பொருளுதவி கேட்டு வந்தேன். காவல்காரன் உள்ளே விட மறுத்ததால், லகிமா சக்தியைப் பயன்படுத்தி உள்ளே வந்தேன் என்றார் அம்மணி அம்மாள். உடனே மன்னனின் கட்டளைப் படி அரண்மனைக் காவலன் உள்ளே
வரவழைக்கப்பட்டான். அப்போது அவன், தான் வெளியே நிறுத்தி வைத்த பெண்மணி உள்ளே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அதை அரசனிடமும் சொன்னான். மகாராஜா குழம்பிப் போய் அம்மணி அம்மாளையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்க்க, அங்கே அம்மணி அம்மாள் அமர்ந்து இருந்தார். அவரது சக்தியைக்
கண்டு வியந்து, அவருக்கு உரிய மரியாதைகள் செய்து பட்டுப்புடவை பரிசளித்து குதிரைகளில் பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார். அதைக்கொண்டு ஆறு மற்றும் ஏழாம் நிலைகளைக் கட்டி முடித்தார். மீண்டும் பொருள் தீர்ந்து விடவே, நீயே கதி நீயே சரணம் நமசிவாய என்று தவத்தில் ஆழ்ந்து விட்டார். தவத்தில்
காட்சி அளித்த இறைவன், “பொருள் தேவைப்படும் இடங்களில் எல்லாம், வேண்டிய அளவு திருநீற்றைக் கொடு. அது பொன்னாக, கூலிப்பணமாக மாறி விடும்” என்றார். அம்மணி அம்மாளும் அதன்படியே செய்ய பதினொரு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டன. இவரது இறை ஆற்றலையும், விடாமுயற்சியும் கண்டு அப்போதைய ஆங்கிலேய அரசு
வாய் பிளந்தது. மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்களை விட உயரமாகவும், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்திற்கு இணையாகவும் இருந்த கோபுரம் பதிமூன்று கலசங்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்து, ஈசன் அருளால் தானே முன்னின்று கோபுர கும்பாபிஷேகத்தையும் செய்து வைத்தார் அம்மணி
அம்மாள். அவர் கட்டியமைத்த கோபுரம் இன்றளவும் ‘அம்மணி அம்மாள் கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. தன் யோக சக்தியால் திருநீற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களின் நோய் தீர்த்த அம்மணி அம்மாள், தனது ஐம்பதாவது வயதில் தைப்பூச தினத்தன்று ஈசனோடு கலந்தார். இவரது ஜீவ சமாதி திருவண்ணாமலை கிரிவலப்
பாதையில், எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. 1735 ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ஆயி அம்மாள், கோபால் பிள்ளை தம்பதிக்கு மார்கழி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் அம்மணி அம்மாள். அவர் சிவனையே குருவாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் இறை தொண்டு செய்து, 1875 ஆம Image
ஆண்டு சிவலோகப் பதவி அடைந்தார். அவர் ஈசனோடு கலந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்றும் இவரின் சமாதியில் கொடுக்கப்படும் விபூதிப் பிரசாதம் நோய்களை தீர்க்கிறது. இன்றும் கிரிவலம் வரும் பக்தர்கள் அம்மணி அம்மாளை தியானம் செய்து நம்பிக்கையோடு தனது குறைகளைச் சொல்லிச் செல்கின்றனர். Image
அவர்களின் வேண்டுதலை அம்மணி அம்மாள் அரூபமாக நின்று கேட்டு வழி நடத்துவதாகவும் நம்பப்படுகிறது. அவரது சன்னிதியில் தியானம் செய்தாலே, மனம் அமைதி பெறுவதை உணர முடியும். பெண்களுக்கு ஆன்மிக சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு கோபுரத்தையே
கட்டி முடித்திருக்கிறார் என்பது ஒரு சாதாரணக் காரியமல்ல. இறையருளும், விடாமுயற்சியும், வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அம்மணி அம்மாளின் நினைவாக இன்றும் போற்றப்படும் திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தையும், அவரின் ஜீவசமாதியையும், எப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலுக்குச் சென்றாலும் தரிசித்து விட்டு வருவோம்.
சர்வம் சிவார்பணம்..!
ஓம் நமசிவாய..! Image
@threader_app please compile thanks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

30 Oct
A Teacher from a blind school in Poonamallee near Madras brought the children for MahaSwamigal's darshan but unfortunately Sri Maha Periyava was on 'Mouna Vratham' (Vow of Silence) that day. The Teacher cried saying, "I have disappointed these children! Alas! These children have Image
no eyesight! They can't see Periyava! Only if a few words are spoken to them, they can hear them and be happy. Even if Periyava does not talk to us, we can have a darshan of Him and go away. What can these children do? It was an unexpected situation. Periyava came out from his
room and gestured to the teacher to stop his wailing. He asked for a wooden plank to be placed near the well and sat on it. His silence gave way. He called each and every child near Him, patiently inquired their name, place and the reason for the loss of vision, and blessed the
Read 6 tweets
30 Oct
மகா பெரியவர் ஒருமுறை பரமக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் பின்னாடியே ஓடி வந்தார் கிழவர் ஒருவர். வெயில் சுட்டெரிக்கும் நேரம். கிழவர் பின்தொடர்ந்து வரும் தகவல் அறிந்து, அவருக்காகவே நின்றார் பெரியவர். அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும், Image
“நான் இத்தனை நாள் அங்கே தானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே எதற்கு இப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால் வருகிறீர்கள்” என்று கேட்டார். நான் அங்கேயும் பார்த்தேன். அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வர்றேன் என்றார் கிழவர்.
என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அருகிலேயே இருந்து உங்களையே பார்த்துக் கொண்டு, உங்களுக்குச் சேவகம் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் என்று வேண்டிக் கொண்ட அந்தக் கிழவர் ஓர் இஸ்லாமியர்!
“என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் என்றால் இருக்கும் இடத்திலிருந்து என்னை நினைத்துக் கொள்ளலாமே. உங்கள் நினைவில் நான் வந்தால்,
Read 8 tweets
30 Oct
அதே திருவள்ளுவர் தான்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
(குறள்:30)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
(குறள்:28)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    
நின்றது மன்னவன் கோல்
(குறள்:543)
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          
பெருமிறை தானே தனக்கு
(குறள்:847)
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
(குறள்:413)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள்:259)
அந்தணர் அறவோர் எனப்
படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.
மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர்
Read 7 tweets
29 Oct
புதுடில்லி சுந்தரேசனுக்கு நடராஜப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடு. நடராஜ தத்துவம் அவருடைய அறிவுக்கு விருந்து என்றால், நடராஜர் சிலைகள் அவருடைய கண்களுக்கும், நெஞ்சத்துக்கும் விருந்து.
கோனேரிராஜபுரம் நடராஜர் சிலையில் என்ன சிறப்பு, திருவாலங்காட்டு நடராஜர் எப்படிப் பட்டவர், தில்லை Image
நடராஜத் திருமேனியின் தனித்தன்மை என்ன, உலகிலேயே பெரிய நடராஜர் நெய்வேலியின் தான் இருக்கிறது என்பது போன்ற ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆடிக்கொண்டே இருக்கும் தெய்வத்திடம் ஆராத பக்தி
கொண்ட சுந்தரேசனுக்கு, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் மகா பெரியவாளிடமும் அசைக்க ImageImage
முடியாத பக்தி. ஒரு முறை அவரை தரிசிக்க வந்தவரிடம் மகாசுவாமிகள், "நீ மகிழஞ்சேரி நடராஜாவைப் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார். நடராஜரிடம் தனக்கு அந்தரங்கமான ஈடுபாடு என்பதை பெரியவாளிடம் சொன்னதில்லையே, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று பரவசப்பட்டு, இல்லை தரிசித்ததில்லை என்றார்.
Read 9 tweets
29 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நண்பா நான் இன்று இரவு என் மனைவி சகுந்தலையுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன், தூரப் பயணம் மேற்கொண்ட காரணத்தால் அருகில் உள்ள உங்கள் வீட்டில் இன்றிரவு தங்கி விட்டுப் போகிறேன் என்று தன் நண்பர் சோனுவுக்கு தொலைபேசியில் தகவல் தந்தார் பாஸ்கரன். அதற்கு அந்த நண்பர் Image
சோனு மகிழ்ச்சி வாருங்கள், எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் நீங்கள் வரும் போது கடையில் இருக்கின்ற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான கேக் ஒன்று வாங்கி வாருங்கள் என்றார். எதற்காக என்று பாஸ்கரன் கேட்க, என் மகன் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறான். சர்பிரைசாக அவனை மகிழ்ச்சியில்
ஆழ்த்து விதமாக கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள் என்றார். அவர் கூறியவாறு பாஸ்கரன் கொஞ்சம் அதிகமா செலவழித்து நல்ல cake ஒன்றை வாங்கிச் சென்றார். அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் இவரும் அடுத்தநாள் ஊருக்கு
Read 11 tweets
28 Oct
What a beautiful beautiful sentiment! Maha Periyavaa Charanam🙏🏻
Once, a man and his wife from a well to do family in Kerala, had come to Kanchi, for darshan of Periyava. The family property, according to him, could not be divided among him and his brother amicably. His brother, a Image
rude man (according to him), had gone away and started staying separately without listening to him. Even though he wanted to divide the property and give his brother his due, the brother did not agree to his terms. So he wanted to file a case in the court for a partition. He had
come to seek the blessings of Periyavaa.
"OK! Supposing you file a case, what is the value of stamp paper you have to buy?”asked Periyava.
He mentioned an amount in thousands.
"Lawyer fees?"
Again, he mentioned a large amount.
"In such ancestral property matters, sometimes, you
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(