#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் சென்று
கேட்டபோது அது அனுமதித்தது. குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப் பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட
இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று. அதற்கு அந்த மரம் கூறிய பதில்,
எனக்குத் தெரியும் நான் வலு இழந்துவிட்டேன், எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப் படுவேன் என்று. ஹே குருவியே, நீயும் உன் குழந்தைகளும் நல்ல
வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எண்ணித்தான் உனக்கு இடம் இல்லை என்றேன். என்னை மன்னித்து விடு என்றது. உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும். பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம். மகாபாரத போரில் பகவான் ஸ்ரீ
கிருஷ்ணன் செய்த செயல்கள் யாவும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான போர், தர்மம் வெல்ல அவர் எதிர் கொண்ட சூழ்நிலைகள் அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் நம்முடன் வாழும் ஒவ்வொருவரையும் மதித்து, அனுசரித்து, அன்புடனும், நல்ல எண்ணங்களுடணும், ஒவ்வொரு ஜீவனும் பரந்தாமனின் சொரூபம் என
எண்ணி வாழ்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

27 Nov
ஷோடஸ லட்சுமி என்றால் ஷோடஸ (16) உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக உள்ள லட்சுமி என்று பொருள்.
அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான Image
தயாதேவி அன்னை லட்சுமி. #ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.
1. சௌந்தர்ய லட்சுமி
நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால் தான் அவர்கள் நம்மை
வரவேற்பார்கள். இதற்கு “சௌந்தர்ய லட்சுமீகரம்" என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.
2. சௌபாக்கிய லட்சுமி
போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன்,
Read 18 tweets
26 Nov
#நவவிதபக்தி 9 வகையான் பக்தி
'ஸ்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்'
1.ஸ்ரவணம்-இறைவன் பெருமைகளை, லீலைகளை காதால் பக்தியுடன் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுதல்
3.ஸ்மரணம் - எப்பொழுதும் அவனையே நினைத்து அவன் நாமத்தை Image
ஜபித்தல்
4.பாதஸேவனம் - அவனுக்குத் தொண்டு செய்தல்
5.அர்ச்சனம் - மலரால் அவன் பாதத்தில் அர்ச்சித்தல்
6.வந்தனம் - நமஸ்கரித்தல்
7.தாஸ்யம் - ஆண்டவன் ஒருவனுக்கே நாம் அடிமை என கருதி அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணிதல்
8.ஸ்க்யம் - இறைவனை நண்பனென எண்ணி தோழமை பூணுதல்
9.அத்மநிவேதனம்- ImageImage
முழுவதுமா இறைவனிடம் அர்ப்பணித்து அவனே அனைத்தும் என்று வாழும் இறைவன் அடியார்.
இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை உதாரணமாகக் கொள்ள முடியும்.
1. ஸ்ரவண பக்தி - அனுமார், இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.
2. கீர்த்தன பக்தி - வால்மீகி, இராமாயணம் இயற்றியவர்.
Read 7 tweets
26 Nov
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு Image
எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்
வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்
Read 13 tweets
24 Nov
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan who was a Sanskrit professor in the Madras University used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and
have a darshan of Periyava. Dr. Raghavan would inform Periyava about the request, he is very keen to have darshan of Periyava, he bothers me frequently, Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly one day, Dr. Raghavan received
intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan of Maha Periyava. Periyava called
Read 18 tweets
24 Nov
இப்பதிவு ஜோதிடம் பற்றியது. பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அழைத்து, தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம், மாறாக பிய்த்து தின்று விடவும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் தந்தை
பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டு பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா? வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை
தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று
Read 13 tweets
23 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எங்கும் ராமநாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. வானர சேனைகள் மளமளவென்று பெரிய கற்களை கடலில் தூக்கிப் போட்டுப் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. அவர்களின் வேகத்திற்கு ஈடாக காற்றும் இதமாக வீசி உதவிக் கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே சிறு அணில் ஒன்று இங்கும்
அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அதை வானர வீரர்கள் கவனித்தபடியே நின்றனர். அதனால் பாலம் கட்டும் பணி சற்று நேரம் ஸ்தம்பித்தது. அணில் வந்த காரணத்தை அறிய அனைவரும் விரும்பினர். அணிலே! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். உன் ஓட்டத்தைப் பார்த்து எங்கள் கவனம் சிதறுகிறது. பாறைகளுக்குள்
அகப்பட்டுக் கொள்ளாதே. ஒதுங்கிப் போய்விடு என்றனர். ஆனால் அணில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு விஷயத்தைச் சொன்னது வானர வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. ராம சேவகர்களே! எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் ராம பிரானைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. இந்தப் பதிலைக்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(