இன்றைய digital உலகில் நூலகம் அவசியமா?
மின் புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்கள் எனப்படும் புத்தகங்களின் ஆன்லைன் பதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் நூலகங்கள் தேவையா என்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். அதற்கான பதில் ஆமாம்!!
உலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களும் digital ஆக்கப்பட்டுவிட்டதா? இலவசமாக எல்லா புத்தகத்தையும் டிஜிட்டலில் பார்க்க எல்லாரிடமும் வசதி இருக்கிறதா? அதற்கு net, data எல்லாம் எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லா ஊரிலும் இணைய சேவை இருக்கிறதா? கணினி அல்லது கைபேசி எல்லாரிடமும் இருக்கிறதா?
அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று எல்லோரும் அறிந்து இருக்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லாத சூழலில் நூலகம் அவசியம்தான்.
நூலகம் இன்றைய காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது digital புத்தகங்களும் இலவச இணையசேவையுடன் (free wifi) நூலகங்களில் வழங்கப்படுகிறது.
பல மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று தான் இலவச கணிணி இணைய சேவையை உபயோகிக்கிறார்கள். உலகில் 230,000 பொது நூலகங்கள் இருக்கின்றன. முன்னேறிய நாடுகளான அமெரிக்கா சீனா போன்றவை கூட இன்னும் புதிய நூலகங்களை திறக்கின்றன.
இணையசேவை ஒன்றும் மலிவானது அல்ல. கிராமங்களுக்கு கேபிள் மூலம் இணைய சேவை கொண்டு வருவதோ அல்லது கைபேசியில் இணையத்தை பார்ப்பதோ மலிவு அல்ல அதுவும் ஏர்டெல் போன்றவை தற்போது விலையை ஏற்றி கொண்டு இருக்கும் காலத்தில் bsnl கொஞ்சம் கொஞ்சமாக சேவையை குறைத்து கொண்டு வரும் நேரத்தில்
எப்போது வேண்டுமானாலும் ஜியோ சேவை கட்டணத்தை ஏற்ற கூடும் என்கிற பீதியில் இருக்கும்போது அனைவருக்கும் இணைய சேவை தடையின்றி கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?
இன்று, தகவல்களை ஆன்லைனில் எளிதாக அறிய முடியலாம். ஆனால், பிராட்பேண்ட் அல்லது இணைய சேவையை உபயோகிக்க தெரியாதவர்களை என்ன செய்வது?
அவர்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? அதனால்தான் நூலகங்களின் இருப்பை அழிக்க முடியாது. நூலகங்கள் மூலம், அனைவரும் தகவல்களைப் பெற முடியும்.

உலகளாவிய ஆன்லைன் ஊடுருவல் பரவலாக இருந்தாலும், அனைவருக்கும் பிராட்பேண்ட் சேவை கிடைப்பது இல்லை.
கிடைத்த எல்லோருக்கும் அதை உபயோகப்படுத்த தெரிவதில்லை. நூலகம் என்பது மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மட்டுமே ஆனது அல்ல. அது எல்லா தரப்பு வயதினர்களுக்கும் உரித்தானது. வயதானவர்களும் நூலகத்தை பயன்படுத்துகின்றனர்.
எல்லா மக்களுக்கும் இணையத்தையும் இணையத்தில் புத்தகங்களையும் இலவசமாக வழங்க முடியுமா? இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இணையத்தை உபயோகப்படுத்த தெரிந்து இருப்பதில்லை. பெரும்பான்மையான மக்கள் இணைய சேவையை பெற்று இருந்தாலும், IT (information technology) literacy குறைவாக தான் இருக்கிறது.
பல மாணவர்களால் இன்னும் தேடுபொறி தளங்களில் ஒரு எளிய விஷயத்தை தேடி கண்டெடுக்க முடியவில்லை. கூகுள் தேடலில் தோன்றும் முதல் கட்டுரையையோ கிளிக் செய்வதே பயனர்களின் பொதுவான நடத்தை. அது எந்த அளவிற்கு அவர்களுக்கு உபயோகமாக அல்லது உண்மையாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.
எனவே, நமது சமூகத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றினாலும், நூலகங்கள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய தகவல்களால் முக்கியமானவை. தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் திறமை இல்லாதவர்களும் கூட பொது நூலகத்திற்கு சென்று நூலகர் மூலமாக தேவைப்படும் புத்தகங்களை எடுப்பதோ
அல்லது அவரின் துணை கொண்டு online job அல்லது தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். வீட்டில் இணைய சேவை வைத்து கொண்டு அதை எப்படி பயன்படுத்துவது என்று அறியாதவர்கள் என்ன செய்ய முடியும். எந்த புத்தகம் எங்கு இருக்கிறது.
எந்த போட்டி தேர்வுக்கு எந்த புத்தகத்தை படிக்க வேண்டும்? என்று எல்லாம் சொல்ல நூலகத்தில் நூலகர் உண்டு.
குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலகங்கள் காலத்தின் தேவை.
நமது சமூகம் வாசிப்பில் இருந்து வெறுமனே திரையைப் பார்ப்பதற்கு நகர்கிறது, இதன் காரணமாக மாணவர்கள் படைப்பு மற்றும் பகுப்பாய்வு திறன்களை இழக்கின்றனர். உலகமே டிஜிட்டல் மையமாக ஆனாலும் printed books வழக்கொழிந்து போனாலும் டிஜிட்டல் நூலகங்கள் இருக்கும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

25 Nov
ஒரு அம்மா கிட்ட உங்க பையன் தம்மடிக்கிறதை பார்த்தேன் என்று யாராவது சொன்னால் நம்ப மாட்டாங்க. என் பையன் அப்படியெல்லாம் இல்ல நீ வேற யாரையாவது பார்த்து இருப்ப...அப்படினு சொல்லுவாங்க. சரி அவன் தம்மடிக்குற போட்டோ காமிச்சா இதெல்லாம் ஏத்துக்க முடியாது அவன் சும்மா கூட வச்சு இருக்கலாம் கைல,
போட்டோஷாப் ஆ இருக்கலாம் நான் நம்பமாட்டேன் என் பையன் சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜூவல்லரி சொக்க வைக்கும் ஜூவல்லரி அப்படினு சொல்லுவாங்க. இதுவே ஒரு வீடியோ காமிச்சா அவன் நண்பர்களுக்காக விளையாட்டுக்கு செய்து இருக்கலாம், ஒரு ஆர்வத்துல இப்போதான் முதல் முறை பிடிச்சு பார்த்து இருக்கலாம்
ஆனாலும் அவனுக்கு அந்த பழக்கம் இல்லவே இல்லனு சொல்லுவாங்க. அந்த பையனே வந்து எனக்கு தம்மடிக்குற பழக்கம் இருக்குன்னு சொல்லிட்டா, "ஏன் ஊர்ல யாருக்குமே இந்த பழக்கம் இல்லையா? ஏதோ என் பையன் தான் தம்மடிக்குற மாதிரி பேசற உன் பையன் தண்ணி அடிக்கலையா? பக்கத்து வீட்டு பையன் கஞ்சா அடிக்கலையா?
Read 6 tweets
24 Nov
வெள்ள கதைகளை பற்றி பார்ப்போம். இந்த வெள்ள கதைக்கு பொதுவான கரு மக்கள் சொன்னதை கேக்கவில்லை அதனால் அவர்களை தண்டிக்க கடவுள் வெள்ளத்தை அனுப்புகிறார்.

எகிப்திய வெள்ள புராணங்களில் கடவுள் ரா அவரது மகள் சேக்மெட் அழைத்து மனிதகுலம் கடவுளை மறந்து மரியாதை செலுத்தாமல் இருக்கிறார்கள்.
எனவே ஒரு வெள்ளத்தின் மூலம் அவர்களை அழித்து விடு என்று சொல்லி அனுப்புகிறார், இதன் விளைவாக ஒரு பெரிய ரத்த வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், ரீ என்கிற மற்றொரு கடவுள் குறுக்கிட்டு சேக்மெட் ஐ குடிக்கவைத்து அவளை திசைத்திருப்புவதின் மூலம் மக்களை காப்பாற்றுகிறார்.
Read 10 tweets
24 Nov
இந்திய முற்போக்கு எழுத்தாளரும் சமூகப் போராளியுமான அருந்ததி ராய் பிறந்த தினம் இன்று. இவர் எழுதிய ‘தி கிரேட்டர் காமன் குட்’ மற்றும் ‘தி என்ட் ஆஃப் இமேஜினேஷன்’ உள்ளிட்ட கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
1992ல் வெளிவந்த ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல் இவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்காக இவருக்கு 1997-ல் ‘மான் புக்கர்’ பரிசு கிடைத்தது. இந்தப் பரிசை வென்ற முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமை பெற்றார்.
இவரது எழுத்துப் பணிகளுக்காக ‘மகாத்மா ஜோதி புலே’ விருது கிடைத்தது. சமூகப் பிரச்சினைகள் குறித்த இவரது கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதைப் பெற மறுத்துவிட்டார்.
panuval.com/sinna-visayang…
Read 4 tweets
22 Nov
கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்:

இந்த season 👇

1. The Emerging Mind - ராமச்சந்திரன்
2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை
3. ஞானக்கூத்தன் கவிதைகள்  
4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள்
5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன்
6. Spartacus - Howard Fast
7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன்
8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்

போன season 👇

1. The Plague - Albert Camus
2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள்
3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம்
4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன்
5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy
6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ
9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன்
10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
12. கூளமாதாரி - பெருமாள் முருகன்
Read 4 tweets
22 Nov
ஒரு நூலாசிரியர் தான் படைத்த நூலொன்றின் பிரதியைச் சக எழுத்தாளருக்கோ நண்பருக்கோ கையெழுத்திட்டுக் கொடுப்பது வாடிக்கை. இத்தகைய நூற்படியை அரிய நூல் சேகரிப்பாளர்கள் ‘அசோசியேஷன் காப்பி’ (association copy) என்பர்.
நூலாசிரியர் மட்டுமல்லாமல் அந்த நூலோடு தொடர்புடைய பிறர் (அச்சிடுபவர், வெளியீட்டாளர், முகப்போவியர், அணிந்துரை வழங்கியவர்) நூற்படியை இதே போல் வழங்கினாலும் அதனையும் இவ்வாறே சுட்டுவர்.
பெயர் பெறாத ஒருவருக்கு நூலாசிரியர் கையெழுத்திட்டுத் தரும் பிரதி ‘ப்ரெசன்டேஷன் காப்பி’ (presentation copy) எனப்படும். இதன் மதிப்பு ‘அசோசியேஷன் காப்பி’யைவிட மிகக் குறைவாகும். இவ்வாறு பெயர்பெற்ற இருவருடன் தொடர்புடையதால் இப்பெயர் பெறுகின்றது.
Read 6 tweets
21 Nov
கமலஹாசனின் இன்றைய புத்தக பரிந்துரை. ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் விக்டர் ஃபிராங்கல் எழுதி 1946-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ (Man’s Search for Meaning) புத்தகம். இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவரின் அனுபவங்கள்.
இந்தப் புத்தகம், முதல் பாதியில் வதை முகாமில் ஃபிராங்கலுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இரண்டாம் பாதியில், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் ‘லோகோதெரபி’ என்று அவர் கண்டறிந்த உளவியல் சிகிச்சை முறை கோட்பாட்டையும் விளக்குகிறது.
24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் 1.2 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தமிழில் ச. சரவணன் மொழிபெயர்த்திருக்கிறார்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(