மகா பெரியவா பற்றி, அவர் யார் என்று தெரியாது என்று இக்காலத்தில் வாழும் யாரும் சொல்லக் கூடாது. நம்மிடைய நடமாடிய தெய்வம் அவர். இப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.
1. இவர் 13 வயதில் (1908ஆம் ஆண்டு) சந்நியாசம் பெற்று காஞ்சி சங்கர மடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
2. நான்கு வேதம், ஆறு
சாஸ்த்திரம், புராணங்களை கற்றுத் தேர்ந்தவர்.
3. 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
4. தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.
5. அவருக்கு தெரியாத துறையே கிடையாது. Astro physics, Neuro science, rocket technology, கர்நாடக இசை என்று
எந்த subject பற்றியும் முனைவர் பட்டம் பெற்றவர்களிடமே புதிய தகவல்களை தந்தும் விவாதித்தும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
6. இந்து மத வேதங்கள் உபநிஷத்கள் தழைக்க அருளியவர்.
7. எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்
வந்து ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் தூரத்தில் அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.
8. எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
9. எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.
10. எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.
11. 99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.
12. அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)
13. உலகம் முழுவது உள்ள இந்துக்களின் ஆன்மீக
குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.
14. போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.
15. இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/
கன்யாஸ்த்ரிகள் சிந்திய கண்ணீர் அவர் பெருமைக்கு
சான்று.
16. கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா, ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா, கண்ணதாசன் போன்றோர் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.
17. காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனம் வந்து வழங்க வந்த போது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என
சொன்னவர். ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.
18. உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்து மதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.
19. நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில்
அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
20. சுதந்திர போராட்டத்தில் தானும் கலந்து, சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.
21. ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய
காரணமாயிருந்த பால் பிரண்டன் என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகிய போது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.
22. தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பவர். அவரின் ஒவ்வொரு பக்தருக்கும்
அவர்கள் வாழ்க்கையில் அதிசயங்களை நிகழ்த்தியிருக்கார்.
23. தர்க்க சாஸ்திரம், ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுநர்களோடு உரையாடி அவர்களுக்கு மேலதிக தகவல்கள் தந்த ஆழ்ந்த ஞானமுள்ளவர்.
24. எண்ணற்ற நூல்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்.
25. திருப்பாவை,
திருவெம்பாவாய், திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.
26. இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று
கூறியவர்.
27. டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.
28. இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.மூன்று லட்சம்
ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.
29. இசைஞானி இளையராஜா இவர் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரை ஶ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை கட்ட வைத்தவர் மகா பெரியவா. ₹22 லக்‌ஷம் கொடுத்து 6வது நிலையை கட்ட மகா மகா பெரியவா மூலம் பாக்கியமடைந்தவர்.
30. விமான
விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர். வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர் குருஜி, தலாய் லாமா, போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர். இப்படி சிறுவராக, இளைஞராக, பெரியவராக, தனி ஒருவராக
ஞானியாக அவதரித்த அற்புத மஹான், உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
காஞ்சிப் பெரியவர், பெரியவா, நடமாடும் காமாக்ஷி என போற்றப் படுபவரின் பெயர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
“மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த
உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம் இல்லை. பிரதி பலன் கருதாது நீ செய்யும் கர்மங்களுக்கு கிடைக்கும் ஆனந்தமே மோக்ஷம்.
இது இப்பிறவியிலேயே கிடைக்கும்.”
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்🙏🏻
மகா பெரியவா சரணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

6 Dec
#ஶ்ரீசம்மோஹனகிருஷ்ணன் இவரை பற்றி இன்று தான் எனக்கு தெரிய வந்தது. எப்படி அர்தநாரீஸ்வரர் பாதி சிவன் பாதி பார்வதியாக உள்ளாரோ அதே போல பாதி கிருஷ்ணன் பாதி ருக்மிணியாக சம்மோஹன கிருஷ்ணன் தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே இருக்கும் மனஸ்தாபங்கள் மறைந்து Image
குடும்பங்களில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மரீசி முனிவர் இவர் மேல் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இயற்றி நமக்கு அருளியுள்ளார். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகளை தரும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம் Image
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே Image
Read 17 tweets
5 Dec
#சபரிமலை செல்லும் #ஐயப்ப_பக்தர்கள் கவனத்திற்கு:
மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் 1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர். அவர் வாவர் சமாதி பற்றி கூறியது. “வாவர் சமாதியில் ஐயப்ப பகதர்கள் வழிபட வேண்டும் எனபது அபத்தமானது. இது தீட்டானது. வாவர்ங்கிற இஸ்லாமியர் எப்படி Image
ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்? மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா? இதையெல்லாம் யோசிச்சு பார்க்கணும். அது மட்டுமல்ல, 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப்போற நேரத்துல வாவர் சமாதியை
பார்க்கறது நல்லது தானா? இதையாவது யோசிக்க வேண்டாமா? நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம். அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு புனித விஷயத்துக்கு போகும்போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்று தான் நான் சொல்லுவேன்".
பந்தள ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு முதியவர்
Read 10 tweets
5 Dec
திருவெண்காடு திருத்தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதனை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை
விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி கிரகம்
என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான பலன்கள் கைகூடும். திருவெண்காடு
Read 13 tweets
5 Dec
தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன் வழிபாடும் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை பழங்குடி மக்கள் தொழுத தெய்வமாகும். இந்தத் தாய் தெய்வத்தை துர்கை என்றும் பலர் வழிபட்டனர். பழந்தமிழர் கொற்றவை என்றனர். இந்தத் தாய்
தெய்வம் மிகப் பழைமையான குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் ‘பழையோள்’ என்றும் ‘மூத்த அம்மா - முத்தம்மா, ஆத்தாள்’ என்றெல்லாம் ஆதி நினைவுகளின் தொடர்ச்சியாக மாரியம்மனை அழைக்கிறோம். ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன், முன்னடியான், காத்தவராயன், இருளன்,
சங்கிலிக் கருப்பன், மதுரை வீரன் போன்ற சாமிகளையும், பெண் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், காட்டேரி, பொம்மி, செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. “துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம்
Read 24 tweets
4 Dec
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர்
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே
Read 7 tweets
4 Dec
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழா
"நம்பெருமாளின் ராஜதர்பார் "
ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் நம்பெருமாள் உடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி நாலாயிரதிவ்ய பிரபந்தங்களை அரையர்கள் இசைக்க கேட்டு அருள்பாலித்தல். அற்புதமான சேவை🙏🏾
காணக்கண் கோடி வேண்டும்🙏🏾
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ மணவாள மானிகள் திருவடிகளே சரணம்🙏🏾
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(