#நவதிருப்பதி.....

இவற்றை தரிசித்தும்  பயனடைவோம்...

தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன.

🙏🇮🇳1
திருவைகுண்டம், திருவரகுணமங்கை (நத்தம்), திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகியவை அந்தத் திருப்பதிகள்.

🙏🇮🇳2
#திருவைகுண்டம்:

திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது திருவைகுண்டம். மூலவரின் திருநாமம் வைகுந்தநாதன். 🙏🇮🇳3
நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். கிழக்கு பார்த்த திருமுக மண்டலம். மூலவருடன் தாயார் கிடையாது. உற்ஸவர் திருநாமம் கள்ளபிரான். தாயாரின் திருநாமம் வைகுண்டவல்லி, பூதேவி தனி சந்நிதியில் அருள்புரிகிறார்.

🙏🇮🇳4
#திருவரகுணமங்கை (நத்தம்):

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிழக்கே உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் விஜயாசன பெருமாள். ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். தாயார் வரகுணவல்லி, வரகுண மங்கை ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.

🙏🇮🇳5
#திருப்புளிங்குடி:

திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் காய்சினவேந்தன். உற்ஸவர் திருநாமம் எம்இடர்களைவான். தாயார் மலர்மகள், திருமகள் என்று அழைக்கப்படுகிறார். உற்ஸவத் தாயாரின் திருநாமம் புளிங்குடிவல்லி.🙏🇮🇳6
#பெருங்குளம்:

திருப்புளிங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இந்தத் தலம் உள்ளது. மூலவரின் திருநாமம் வேங்கடவானன். உற்ஸவர் மாயக்கூத்தன். தாயார் அலர்மேலு மங்கை, குளந்தை வல்லி என்று திருநாமங்களோடு அழைக்கப்படுகிறார்.

🙏🇮🇳7
#திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி):

பெருங்குளத்திலிருந்து கிழக்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வழியாக மேற்கு நோக்கி 4 கி.மீ. தொலைவு பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம். 🙏🇮🇳8
இருகோயில்களும் அருகருகே அமைந்துள்ளன. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன்கோயில் உள்ளது.

🙏🇮🇳9
#தெற்கு_கோயில்:

மூலவர் திருநாமம் தேவர்பிரான். தாயார் - உபதாயார்களுக்கு தனி சந்நிதி இல்லை.
வடக்கு கோயில்: மூலவர் திருநாமம் அரவிந்தலோசனன். உற்சவர் செந்தாமரைக் கண்ணன். தாயாரின் திருநாமம் கருத்தடங்கண்ணி.

🙏🇮🇳10
#தென்திருப்பேரை:

தாமிரபரணிக்கரையின் தென்கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது. 🙏🇮🇳11
மூலவர் திருநாமம் மகரநெடுங்குழைக்காதன். உற்ஸவர் நிகரில் முகில் வண்ணன். தாயாரின் திருநாமம் குழைக்காத நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியார்.

🙏🇮🇳12
#திருக்கோளூர்:

தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் ஒரு கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வாரின் அவதார தலம் இது. மூலவரின் திருநாமம் வைத்தமாநிதிப் பெருமாள். தாயாரின் திருநாமம் குமுதவல்லி.

🙏🇮🇳13
#ஆழ்வார்திருநகரி:

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது ஆழ்வார்திருநகரி. மூலவரின் திருநாமம் ஆதிநாதன். பொலிந்து நின்ற பிரான். தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. 🙏🇮🇳14
இந்தத் திருப்பதிகள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தவை. 

#வாழ்க_பாரதம் 🇮🇳🙏
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

Wish A HAPPY NEW YEAR 2022 💐

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

2 Jan
வைக்கம் வீரர் '' உருவான '' கதை''....

காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆர‌ம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்ட‌து என்றே நினைக்கத்தோன்றும்.....
வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிராமம்....

1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்....
அன்றைய காலகட்டத்தில் , தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழையமுடியாத நிலை நாடு முழுவதும் இருந்தது....

ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன?
Read 21 tweets
1 Jan
*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ? 

கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
Read 7 tweets
1 Jan
#படித்ததில்_பிடத்தது

#பிராமினர்கள்

அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.
அமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம். தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம்.
திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.

அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம்.
Read 13 tweets
1 Jan
அது 1965 ஆம் வருடம்.

இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு இந்திய ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது...
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது." போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம். ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது..
நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்" என்று...!

ஆனால் ஶ்ரீநகர்,"இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..!
Read 18 tweets
31 Dec 21
பல்லாண்டு காலங்களாக நடக்கும் #பேரதிசயங்கள்*

1. ஒவ்வொரு வருடமும் தவறாது திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேலாயுதத்தை  எடுத்து வரும் போது கருடன்  பறக்கும் அதிசம் எப்படி நடக்கிறது .....?

2. சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்கிறது ....?
3. பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருகின்றது...

4. சூரசம்ஹாரத்தின் போது சிக்கல் சிங்காரவேலரின் திருமேனியிலும், அவரது கைவேலிலும் வியர்வைத்துளிகள்  எப்படி வருகிறது....?  அந்த கல்லாலான விக்கிரஹத்தில் வியர்வைத்துளிகள் எங்கிருந்து வருகின்றன.....?
5. தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலய கும்பாபிஷேகத்தில்  கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிட்டது. எப்படி....?

6. மைசூர் தசராவில் சாமுண்டீஸ்வரி உலா வரும் தினம் கண்டிப்பாக மழை பெய்வது எப்படி.....?
Read 13 tweets
31 Dec 21
பிரதமர் சமீபத்தில் ஆற்றிய உரை....

பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(