#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்து வசை பாடி இருக்கிறார்கள்! எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்! அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன் என்று சாமியார் முன் வந்து பொருமினான் சீடன் பக்தவசலம். ஏதாவது
மந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி என்றான் பக்தவசலம். சாமியார் யோசித்தார். நீ ஒன்று செய் என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா, நீ எங்கு
எல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும் என்றார். இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன் என்று சீடன் பக்தவசலம் எழுந்து போனான். அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஓர்
உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான். ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது பெரிய சிரமமாக தெரியவில்லை. நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது. சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்
கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. பக்தவசலம் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான். என்ன சாமி
இப்படிப் பண்ணிட்டீங்களே என்றான். என்ன புரிந்தது எனறு கேட்டார் சாமியார். பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலக்கத்தானே இப்படி செய்தீர்கள் என்றான் சீடன். சரி. ஆனால் நீ இன்னும்
முழுக்கிணற்றை தாண்டவில்லை என்றார் சாமியார். உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் நீ நினைக்கிறாய், இல்லையா? அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று
நினைக்கிறாய் இல்லையா? என்று கேட்டார். ஆமாம் என்றான். மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை. கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே
உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.
உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள். நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா என்றார் சாமியார். உண்மை அது தான்! நாம் கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனத்தையும் கூடத்தான். எல்லாம் நம் மனதில் மறக்க ஸ்ரீ கிருஷ்ண
மந்திரமே உன்னத மருந்து. அதை சொல்ல சொல்ல நம் மனம் விரிவடையும், எதிரிகள் நண்பர்கள் ஆவர், வறுமை விலகும். இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான். நம் மனதில் என்றும் நினைக்க வேண்டியது
பரந்தமான் ஸ்ரீ கிருஷ்ண மந்திரமே.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 17,
Annam Atma Paripalanam: Food nourishes the soul!
In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and ImageImage
digested, but it includes everything that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’.('உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே' என்று சொல்வார் திருமூலர். இந்த உடம்பு சோற்றால் அடித்த சுவர்.) A number of our scriptures talk
about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’.
Kanchi Maha Periyavaa took sanyasam at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often Image
Read 14 tweets
Jan 16,
பரஸ்பரம் பாவயந்த:’ என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு
ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகும்
ஆதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும். இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு
Read 4 tweets
Jan 15,
பகவான் கண்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மார்கழிக்கு அடுத்த மாதமான #தை மாதமும் புண்ணிய மாதம் தான். தை மாத‌ சிறப்புகள் பல! சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' Image
என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌த்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.
#தை_கிருத்திகை
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி Image
வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் மிக முக்கியமானவை. அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
Read 18 tweets
Jan 15,
#பொங்கல் #மகர_சங்கராந்தி ஒரு தெளிவுரை:
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் #தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் #சங்கராந்தி என்பர். தை மாதப் பிறப்பு #மகர_சங்கராந்தி எனக் கொண்டாடப் படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு
பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி நம் சித்த ரிஷிகள் வழிமுறையை வகுத்துள்ளனர்.
#தான்ய_சங்கராந்தி:
சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தான்ய சங்கராந்தி! அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் 1000 யாகங்கள்
செய்த பலன் கிட்டும்.
#தாம்பூல_சங்கராந்தி:
வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். அன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், இயன்ற தட்சணை வைத்து வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன்கள் பெருகும்.
Read 13 tweets
Jan 14,
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராமன் காட்டிற்கு எழுந்தருளும் போது சீதை பிராட்டி தானும் கூட வருவேன் என்று சொல்ல அதற்கு இராமன் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்கும் உண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம், அரண்மனையில் இருப்பதே இன்பம் என்று சொன்னார். அதைக் கேட்ட
பிராட்டி, இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல. ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம். உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பதே எனக்கு துன்பமாகும். இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக. உம்மைப் போல நாம் அளந்து
அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும் என்று சொன்னாள். இதற்கு இராமன் நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே. இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய் என்றான். அதற்கு பிராட்டி நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப் பாரும்
Read 8 tweets
Jan 13,
#HappyPongal பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, “பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?” என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. “அதுதான் சூரியன்’ என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும்,” என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம்.
பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும்.
அவர் பூஜித்த சந்திர மௌலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை மாவிலை தோரணங்கள் கட்டப்படும். காட்டுப் பூக்களால் மடத்தை அலங்காரம்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(