#எண்கண்_முருகன்_திருக்கோவில்
புதுமையான பெயராக உள்ளது அல்லவா? பிரம்மனுக்கு அருள்புரிந்த முருகப்பெருமான் இக்கோவிலில் குடியிருக்கிறார். திருவாரூரில்ருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப் பெருமானே பிரதான தெய்வம். இரண்டாம் குலோத்துங்கச் சோழனால்
கட்டப்பட்டது. சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலை, ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம். பன்னிரு கரங்களில்
வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத்
தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், அப்படியானால் பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு என்று கூறினார். இதையடுத்து
பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார் முருகப் பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது. இதைத் தவர ஒரு பெயர் காரணம் உள்ளது. அது ஆறுமுகன் சிற்பத்தின்
கதை. முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் என்ற ஊரில் உள்ள முருகப் பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட,
அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் உள்ளதுபோலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். அப்போது உளி பட்டு
அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு, சிற்பிக்கு கண்பார்வை வந்தது என்பது இத்தல சிறப்பு. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" என்றதே எண்கண் முருகன் கோவிலுக்கு இன்னொரு பெயர் காரணம். மூலவரான ஆறுமுகப் பெருமான் மயில் வாகனத்தில்
தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
ஆறுமுகப்பெருமானுக்கு, தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம்
செய்யப்படுகிறது. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும். இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால், சிம்மவர்மன் என்ற மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான். இதையடுத்து அந்த மன்னன், தினமும்
வெட்டாற்றில் நீராடி, எண்கண் வேலவனை தரிசித்து வந்தான். இதையடுத்து ஒரு தைப்பூச நாளில், அவனுக்கு காட்சியளித்த முருகப்பெருமான், மன்னனின் முகத்தை மனித முகமாக மாற்றி விமோசனம் அளித்தார். இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது
நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு தொடர்ந்து 12 மாதங்கள் ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். முருகனை போய் தரிசித்து வருவோம்🙏🏻
ஓம் சரவணபவாய🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 26
Maha Periyava on #ConversionMafia
ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். நிறைய படித்தவர்; Image
அபரிமிதமான பேச்சாற்றலால் மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது. அன்பு தான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும்
வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா என்றவர், மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாட்சியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.
காரணம், எங்கள் பிதா என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேசாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது. "ஹிந்து மதத்லேயும்
Read 12 tweets
Jan 25
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபு என்ற மஹான் மேற்கு வங்கத்தில் அவதாரம் செய்து,
“ஹரே ராம! ஹரே ராம! ராம ராம! ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ஹரே!”
என்ற மஹா மந்திரத்தை, அந்த தேனை, பாரத தேசம் முழுக்க மழையாக கொட்டினார். அவர் இறுதியில் சன்யாசம் வாங்கிக் கொண்டு ஒரு Image
அறையிலேயே பன்னிரண்டு வருடம் தவம் இருந்தார். தான் கிருஷ்ணரின் ராதை என்ற உணர்விலேயே கிருஷ்ணரோட இருந்தார். அந்த மஹான் பகவானோட கலந்து விடும் முன்னே, சிஷ்யர்களுக்கு ஒரு எட்டு ஸ்லோகங்கள் அருளினார். அதற்கு சிக்ஷாஷ்டகம் என்று பெயர். இன்றைக்கும் கௌடியா மடத்தில் தினமும் பாராயணம்
செய்கிறார்கள். மிக அழகான ஸ்லோகம். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம், நாம பக்தி எப்படி செய்யணும் என்பதை சொல்லியுள்ளார்.
த்ருணாதபி ஸுநீசேன தரோர் அபி ஸஹி ஷ்நுனா |
அமானினா மானதேன கீர்தனீய: ஸதா ஹரிஹி ||
புல்லை விட தன்னைக் கீழாக நினைக்கவேண்டும். மரத்தை விட பொறுமையாக இருக்கவேண்டும். தன்னை
Read 5 tweets
Jan 24
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இக்கரையில் நண்பர்கள் சிவாவும் செல்வாவும் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஓடம் ஏதும் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு
ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது. நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் சிவா குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் சிவா. காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.
செல்வா பார்த்தான், நமக்கும் ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று! அப்பொழுது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று செல்வாவும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு
Read 6 tweets
Jan 24
#வடபழனி #தண்டாயுதபாணி_திருக்கோவில்
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவிலை அமைத்து அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை
வைத்து வழிபட்டுள்ளார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் மறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன்
குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு இங்கே ஓடி வருகிறாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே என கூறக்கேட்டு, உறக்கத்தில் இருந்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டிற்கு வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று
Read 27 tweets
Jan 23
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம் ஒரு பக்கம் வேடன் விரட்ட இன்னொரு பக்கம் நாய் துறத்த, மறுபக்கம் புலி பாய என எந்தப் பக்கம் திரும்பினாலும் முயலை கொல்ல எதிரிகள். சரி நாம் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. குளத்தில் குதித்து
தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு இருந்த தவளைகள் "ராம ராம" என சொல்லிக்கொண்டே குளத்துக்குள் தாவின. ஏனென்றால் ஒரு முறை தன் முன்னோர் பாம்பின் வாயில் சிக்கிய பொழுது "ராம ராம" என சொல்லிக் கொண்டே தப்பின.
முயல் சிந்தித்தது. அட! நம்மை
விட சிறிய உயிரினங்கள் "ராம ராம" என சொல்லிக்கொண்டு பயப்படாமல் இந்த உலகில் வாழ்கின்றன என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஸ்ரீராமன் மீதான நம்பிக்கையோடு புது வாழ்வை நோக்கித் திரும்பியது. தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நாம்
Read 4 tweets
Jan 23
Saint Thyagaraja was an ardent devotee of Lord Rama and he composed gems on Lord Rama. He wanted to live in the times of Lord Rama so that he could serve him and see the wonderful Seetha Kalyanam but Sri Maha Periyava said that He did not want to live in the times of Lord Rama.
He gave a beautiful justification for this unusual response. He said, "If I was there during Lord Rama's time, I would have then been a seer too. Whenever Lord Rama went out in His chariot and He saw a seer, the Lord would get down and fall at the seer's feet as a mark of respect
He would have done the same had I been there at that time. Now, I have an opportunity to fall at Lord Rama's feet and serve Him. I would not have had an opportunity to serve Him, had I been around then."
Bhakti towards the Divine should be the desire of every individual and Maha
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(