சிறு வயதில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சித்தலூரில் உள்ள எங்கள் குல தெய்வம் கோவிலுக்கு மாட்டுவண்டியில் செல்வோம். இத்தனைக்கும் இது கட்டை வண்டி, டயர் வண்டி கூட கிடையாது.
அடுத்து டயர் வண்டியில் செல்ல ஆரம்பித்தோம்.அதுவும் மாட்டு வண்டிதான் ஆனால் சக்கரம் மட்டும் டயர், டுயூப் இருக்கும்
அடுத்து டிராக்டரில் செல்ல ஆரம்பித்தோம். அந்த டிராக்டருக்கு வாங்கிய கடன் கலைஞர் கொடுத்த விவசாயக் கடன் தள்ளுபடியில் தள்ளுபடியானது.
பிறகு சொந்த காரில் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. கலைஞர் உருவாக்கி வைத்திருந்த இட ஒதுக்கீடு, ஒற்றைச்சாளர முறை போன்ற கல்வி வாய்ப்புகளும்,
கலைஞர் உருவாக்கிய IT கொள்கை(நாட்டிலேயே முதன்முறையாக) மற்றும் டைடல் பார்க் போன்றவற்றால் IT துறையில. வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தத் காரில் செல்லும் நிலைமை அமைந்தது.
எங்கள் ஊரில் இருந்து குல தெய்வம் கோவிலுக்கு 25 கிமீக்கும் அதிகமாக பயணிக்க வேண்டும். செல்லும் வழி முழுவதும் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி. ஆடி மாதம் மழை பெய்தால் மட்டுமே மானாவாரி பயிர்களான வரகு, சோளம், கம்பு, எள் போன்றவற்றை விதைக்க முடியும்.
அந்தக் காலக்கட்டத்தைதவிர கட்டாந்தரையாக பாலைநிலம் போலவே பெரும்பாலான நிலங்கள் காட்சியளிக்கும்.
கடந்த முறை அதே வழியில் என் அப்பாவுடன் சென்ற பொழுது எப்படி இங்கெல்லாம் இங்கெல்லாம் தென்னை மரங்கள் வந்தன, பல நிலங்கள் வயக்காடாக மாறியிருக்கின்றது என்று கேட்டேன்.
இதெல்லாம் கலைஞர் இலவச மின்சாரம் கொடுத்த பிறகுதான் என்றார்.
89ல் கலைஞர் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்த பிறகு, நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக இல்லாமல் நல்ல தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் கிணறு வெட்ட, போர்வெல் போட ஆரம்பித்தனர்.
அதன் பலனாக மழையை மட்டும் நம்பி இல்லாமல் விவசாயிகளால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடிந்தது. அது ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்தது.
அது சிலரது பிள்ளைகளை உயர் கல்வி படிக்க வைக்க வாய்ப்பாக அமைந்தது.
ஏன் பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் மட்டும் பலதரப்பட்ட பின்ணனி கொண்ட மக்களும் இருக்க இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து ஏன் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் இருப்பதில்லை என்று யோசித்துப் பார்த்தால் நம் தலைவர்களின் தொலை நோக்குச் சிந்தனை புரியும்.
கலைஞர் 70களிலும், 89லும் உருவாக்கிய மாற்றங்களை மற்ற மாநிலங்களில் 2006க்கு பிறகுதான் யோசிக்கவே ஆரம்பித்தனர்.
அவரின் ஒவ்வொரு பட்ஜெட்டும் பொருளாதார சமூகவியல் மாணவர்கள் தங்களின் PHD படிப்புற்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.
இங்கு எதுவும் மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல நடந்து விடவில்லை.
அடித்தட்டு மக்களின் வளர்ச்சியை தனது உயிராக மதித்த கலைஞர் போன்றவர்களால்தான் இப்படி தொலை நோக்காக சிந்திக்க முடியும்.
இவற்றை எல்லாம் அவர் வெறும் ஓட்டுகளுக்காக செய்தார் என்று நினைத்தால் உங்களை விட முட்டாள் வேறு யாருமில்லை.
கலைஞர் அடித்தட்டு மக்களுக்காக செய்தவற்றை சொல்லி முடிக்க இந்த ஆயுள் போதாது. #கலைஞர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1966ல் SSLC க்கு பிறகு எனது தந்தை, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர நேர்முகத்தேர்வு இருந்தது.
அந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றால்தான் படிக்க இடமே கிடைக்கும்.
இந்த நேர்முகத்தேர்வு முறையானது இந்திய கிரிக்கெட் அணியில் ஆட்கள் எடுக்கும் முறையை போன்றதுதான்.
அவாக்களுக்கு போக மீதம் இடமிருந்தால்தான் தருவார்கள்.
அவ்வளவு ஏன் 1990கள் வரை கூட வங்கி பணிகளுக்கு ஆள் எடுப்பது நேர்முகத்தேர்வை வைத்துதான். முதல் நாள் இந்து பேப்பரில் விளம்பரம் கொடுத்து
அடுத்த நாள் சென்னையிலோ அல்லது மும்பையிலோ நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை எடுத்துவிடுவார்கள். ஆனால் அவர்களின் ஆட்களுக்கு எப்பொழுது நேர்முகத்தேர்வு என்று முதலிலே தெரியும்.
ஒரு வங்கியில் கிளர்க் வேலை பார்ப்பதற்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் அறிவுத்திறன் போதுமானது.
ஆங்கிலத்தில் இப்படி ஒரு சொல் இருக்கிறது. எதிரியுடன் கை கோர்த்துக் கொண்டு தன் நாட்டுக்கு எதிராகத், தன் சொந்த மக்களின் நலனுக்கு, விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுபவர், முக்கியமாக எதிரியின் ஆதிக்கத்தின் கீழ், அதிகாரமில்லாத, அடிவருடும், ஒரு
பொம்மை அரசை நடத்துபவர் என்பது அதன் பொருள்.
இது உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதரின் பெயரைக் கொண்டு உருவான சொல் (எபோனிம் eponym).
விட்குன் குயிஸ்லிங் நார்வே நாட்டில் மக்கள் செல்வாக்கில்லாத கட்சியை நடத்தி வந்தவர்; இனவெறி கொடுங்கோலன் இட்லர் பிற நாடுகளைக் கைப்பற்ற தொடங்கியதும்
இட்லர் படைகளை வரவழைத்து நார்வேயைக் கைப்பற்றி, இட்லரிடம், காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி, நார்வேயில், நியமிக்கப்பட்ட ஜெர்மானிய ஆளுநருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு, அவருக்கடியில் நார்வேயின் பொம்மை பிரதமராக 1942 முதல் 1945 வரை இருந்தவர்.
நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?
எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இது.
அவர்களுக்கான பதில்.
உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பார், அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று
யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கவும்.
எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது. எனது சித்தப்பா PUCயில் தோல்வியடைந்த பிறகு அவரால் அடுத்து படிக்க முடியவில்லை.
யார் நமக்கு நன்மையைச் செய்தார்களோ எது நமக்கு நன்மையை விளைவித்ததோ அதையே கெட்டதாக காட்டுவது சங்கிகளின் வித்தைகளில் ஒன்று.
குடிசைமாற்று வாரியத்தை அந்த மக்களுக்கு எதிரானமாக கட்டமைத்தார்கள்.
தந்தை பெரியார் சமத்துவபுரங்களை பட்டியலின மக்களுக்கு எதிரானதாக கட்டமைத்தார்கள்.
அதுபோன்றதொரு போலி கட்டமைப்புதான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழிவானதாக கட்டமைத்திருக்கிறார்கள் சங்கிகளின் தம்பிகள்.
90களுக்கு முன்புவரை எங்கள் கிராமத்தில் பரவலாக கூரை வீடுகளை பார்க்க முடியும். பெரும்பாலோர் பள்ளிக்கல்வியோடு படிப்பை நிறுத்தியவர்கள்.
பலர் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த சிறு விவசாயிகள். நீர்வளம் இல்லாத,மண் வளமும் இல்லாத அந்த நிலங்களில் விவசாயம் செய்வது வரவிற்கும் செலவிற்குமே பொதுமானதாக இருக்கும். எங்கள் பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் இல்லை.
வரலாற்றில் இதுவரை கிடைத்த ஆதராங்களின் படி முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். சுமார் 8000 வருடங்களுக்கு முன்பே அதை உருவாக்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அதை வரி வசூல் கணக்குகளை எழுத பயன்படுத்தும் கணித குறியீட்டு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த சுமேரிய எழுத்து வரி வடிவத்தை இப்பொழுது க்யூனிஃபார்ம் என்று அழைக்கிறார்கள்.
5000 வருடங்களுக்கு முன்பு இந்த வரிவடிவத்தை வாக்கியங்கள் எழுதவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
பாபிலோனிய அரசன் ஹமுராபியின் சட்டங்கள் இன்று நமக்கு தெரியக் காரணம் இந்த வரிவடிவத்தை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எப்படி படிக்க வேண்டும் என்று கண்டறிந்த பின்பு தான்.
சரி விசயத்திற்கு வருவோம். ஹராப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சம காலத்தில் இருந்தன. இரண்டிற்கும் வர்த்தக
மன்னர்களிடம் வரியில்லா மானிய நிலங்களைப் பெற்று உழைக்காமல் உட்கார்ந்து தின்றுவிட்டு, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு சென்னையில் இருந்தால்தான் வளர்ச்சி் என்று தங்கள் முன்னோர்களுக்கு இலவசமாக கிடைத்த நிலங்களை விற்றுவிட்டு சென்னையின் மையப்பகுதிகளில் குடியேறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க
வில்லை. அப்படி குடியேறியவர்களின் தலைமுறை இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறையில் படித்து வெளியில் வருகிறோம். பெற்றோர் உதவியில்லாமல் பரம்பரை சொத்துக்களின் பலமில்லாமல் சொந்த உழைப்பில் புறநகர் பகுதிகளில்
அடுக்குமாடி வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். மாநகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் தேவைப்படும். அதிவும் மையப் பகுதிகளில் கனவு கூட காண முடியாது. மாநகரத்து கல்வி, வேலைவாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை குற்றமாக பார்க்க வைத்துவிட்டார்கள் போலி