இலக்கியங்கள் கூறும் பண்டைத் தமிழர்களின் நம்பிக்கைகள்...!

பண்டைக்காலம் முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழ்ந்து வருகிறான். இயற்கையின் மாறுதலுக்கேற்ப மனித மனமும் மாறுபடுகின்றது.

இயற்கையோடியைந்த மனித வாழ்வில் நம்பிக்கைகள் தோன்றலாயின.
பொ.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #ஆசாரக்கோவை மூலமும், சங்க இலக்கியங்கள் மூலமும் பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளைப் பற்றி அறியமுடிகிறது.

1) தொல்காப்பியத்தில் 'நாளும் புள்ளும் பிறவற்றினி மித்தமும்' (தொல். பொருள். 91) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
#புள் என்பது முதலில் பறவையையும், பின்னர் சகுனத்தையும் குறிப்பனவாக அமைந்துள்ளதை #வாய்ப்புள், #பறவாப்புள் எனக் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

2) #கூகை அலறினால் சாவு வரும் என்ற நம்பிக்கையினைப் புறநானூற்றில் காண்கிறோம்.

'அஞ்சுவரு குராற் குரலுந் தூற்றும்' (புறம். 280)
3) 'காகம் கரைந்தால் விருந்தினர் வருவர்' என்பது தமிழரிடையே அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்துவரும் நம்பிக்கையாகும்.
4) நல்ல காரியத்திற்குப் புறப்படும்போது நல்ல வார்த்தை கேட்பது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது.

இந்த நம்பிக்கை இன்றும் நிலவுவதைக் தொல்காப்பியர் இதனைப் 'பாக்கத்து விரிச்சி' எனக் குறிப்பிடுகிறார்.

விரிச்சி நிற்றல், வாய்ப்புள், பறவாப்புள், நற்சொல் என்றும் கூறுவர்.
5) கனவுகாணல், பல்லி சொல்லுதல், கண் துடித்தல் பற்றிய நம்பிக்கைகளையும் காண்கிறோம்.

இடக்கண் துடிப்பது பெண்களுக்கு நல்லது என தெர்ஸ்டன் (Thurston) கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தலைவனை எதிர்நோக்கும் தலைவிக்குக் கண் துடித்தால், தலைவன் விரைவில் வருவான் என நம்புகிறாள்.
6) அடியார்க்கு நல்லார் 'கனா நூல்' பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இரவில் காணும் கனவுகளுக்குப் பலன் கூறுவதை இன்றும் காணலாம்.

தன்னை ஒருவர் நினைத்தால் தும்மல் வரும் என்ற நம்பிக்கையைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.
7) சுபகாரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைந்தால் நல்ல சகுனமாகக் கருதப்படுவதில்லை. இந்தியா முழுவதும் இந்நம்பிக்கையைக் காணலாம்.

'நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா' (புறம். 280)
8) பல்லி சொல்லும் சகுனம் தமிழரது வாழ்வில் முக்கிய பெற்றிருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன.
9) பச்சோந்தி இடமிருந்து வலமாகச் சென்றால், நல்ல சகுனமாகக் கருதப்பட்டது.

"நாவி சிச்சிலியோந்தி தான்...... வலமாயின் வழிப்பயண மாகை நன்றாம்" (அறப்பளீச்சர சதகம்)
10) பெண்களிடையே #கூடலிழைத்தல் இருந்தது.

காதலன் வருகையை நினைந்து, காதலி மணலில் விரலால் வட்டமிடுவாள்.

வட்டத்தின் இருமுனைகளும் நேராகச் சந்தித்தால் நல்ல அறிகுறி என்றும் அப்படியில்லா விட்டால், நல்ல அறிகுறி இல்லையென்றும் சங்ககால மக்கள் நம்பினர்

(அகம்: 351, கலித்தொகை: 142)
11) தமிழர்கள் எதிர்காலத்தைக் குறிசொல்லுபவர்கள் மூலம் அறிந்து கொண்டனர். இவர்களைக் #கட்டுவிச்சி என்றும் #வேலன் என்றும் குறிப்பிட்டனர்.

பண்டைத்தமிழர்கள் இயற்கையோடியைந்த வாழ்வை நடத்தினர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

- நன்று

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Mar 27
ஐந்திணை மாப்பிள்ளைகள்...!

பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதைத் தமிழிலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.

மாப்பிள்ளையின் ஆற்றலும் திறமையும் வெளிப்படத்தக்க போட்டிகளை நிகழ்த்தி அவற்றில் வெற்றிபெறும் மாப்பிள்ளையையே...
... தன் கணவனாகத் தெரிந்தெடுக்கும் வழக்கத்தைத் தமிழினத்துப் பெண்கள் பின்பற்றி வந்தனர்.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்து நிலங்களில் வாழ்ந்த பெண்கள் தம் நில இயல்புக்கு ஏற்ற மாப்பிள்ளைத் தெரிவும் போட்டிகளையும் நிகழ்த்தினர்.
வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்ட மலை நிலமாகிய குறிஞ்சித் திணையில் புலியை வாய்பிளந்து கொன்று,

அதன் பல்லைத் தாலியில் கோத்துக் கொணர்ந்த மாப்பிள்ளையைத் தன் கணவனாக அந்நிலத்துப் பெண் ஏற்றுக்கொண்டாள் என பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டனர். Image
Read 15 tweets
Mar 24
கொலை - வீரத்தின் வெளிப்பாடு!

பண்டைக் காலங்களில் (சங்க இலக்கியங்களில், பின் அதையொட்டிய காலங்களில்) கொலை மனித இனத்தின் வீரத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.

" பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்று பழந்தமிழ் இலக்கணம் ஆடவனுக்கு இலக்கணம் காட்டுகிறது.
இந்தப் பெருமையும் நெஞ்சுரனும் மனிதக் கொலைகள் மூலமே வெற்றியாகவும், விழுப்புண்ணாகவும் மக்களிடம் வெளிப்பட்டன.

இங்கு மனிதக் கொலைகளே முதன்மை பெற்றன. நாடு பிடிக்கும் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறும் போர்களில் மனித உடல்களே மன்னனுக்குக் கவசம்.
எதிரிகளில் எத்தனை பேர் இறந்துபட்டனர், தன் படைவீரர்களில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதை வைத்தே நடைபெற்ற போரை மதிப்பிட்டனர்.

அறநெறிக் காலங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்தக் காலங்களிலெல்லாம் மனித உயிர்கள் வீரத்தின் அடையாளங்கள். இதைச் சமூகம் அன்று அங்கீகரித்திருந்தது என்பது வெளிப்படை.
Read 11 tweets
Nov 20, 2021
யானைகள் கட்டிய இடம் #யானைச்சாலை எனப்பெற்றது. அவை படையின் பொருட்டு பாதுகாக்கப் பெற்றன.

அவற்றைப் பாதுகாத்தற் பொருட்டு மக்களிடமிருந்து அரசு பெற்ற வரி #ஆணைச்சாலைதேவை எனப் பெற்றது.
ஓராண்டுவரை கார்காலப் பயிர் செய்த உரிமையையோ, மீண்டும் நிலத்தைக் கைக்கொண்டு உழும் உரிமையையோ பெற்றவர்கள் அவ்வுரிமையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்காகக் கிராம வரிப் புத்தகத்தாரின் ஒப்பம் பெற்றனர்.

அதற்காக அளிக்கப்பெற்ற வரி #ஆண்டெழுத்துத்தேவை எனப்பெற்றது.
பசுப்பண்ணை வைத்திருந்தோர் ஆண்டொன்றுக்குத் தவணை முறையில் செலுத்திய வரி #ஆத்திறைப்பாட்டம் எனப்பெற்றது.

ஊரின் எல்லைக்குள் வணிகத்தின் பொருட்டு வரவும் போகவும் விதித்தவரி #ஆயம் எனப்பெற்றது. ஆயம் பெறுமிடம் #சுங்கச்சாவடி எனப்பெறும்.
Read 32 tweets
Nov 20, 2021
கோவிலில் தங்கம் திருடியமைக்காக்க பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!

2-ம் இராசராசசோழனின் 6-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1152) #தஞ்சாவூர் மாவட்டம் #பந்தநல்லூர் ஊரில் உள்ள #பசுபதீசுவரர் கோவில் கல்வெட்டில், கோவில் நிலங்களின் ஆட்சிமுறை பழங்காலத்திலிருந்து...
தொடர்ந்து வந்த முறையைக் குறிப்பிடுகிறது. அக்கோவில் திருமேனிக்கு அணிகலன்கள் செய்யப் பெறுவதற்காகக் கருவூலத்தில் தங்கத்தைப் பாதுகாத்து வந்தனர்.

அக்கோவிலில் பணிபுரிந்த பிராமணர்கள் அத்தங்கத்தைத் திருடிக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு...
அக்கோவிலின் பதிபாதமூலம், பட்டுடை தேவகன்மிகளும், மேற்பார்வையாளராகிய மாகேசுவரக் கண்காணி செய்வார்களும், ஸ்ரீகாரியம் செய்வார்களும், அரசு அலுவலர்களும் ஒன்றுகூடி அக்குற்றத்தை ஆய்ந்தனர். அவர்களுக்குத் தண்டனையும் வழங்கினர்.
Read 5 tweets
Nov 17, 2021
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!

3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.

பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.

அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
Read 4 tweets
Nov 17, 2021
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!

நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன. Image
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.

தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.

சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(