#ஶ்ரீகுர்ய்ஷ்ணன்கதைகள் #ஶ்ரீராமநவமி
'ராம நாமா சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க்கிருமிகளை அழித்துவிடும். ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள கோபம், வெறுப்பு, பொய், பொறாமை, சூது
போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை அழித்து, ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி’-எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!) அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம்
ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம், மனம், செயல், உள்ளம், உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். இடை விடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ஶ்ரீராமன் அருள்வான் என ஸ்வாமி
பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசம் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார். நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும். மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும். மற்ற ஒன்று புண்ணியத்தை
தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று (நிச்சலதத்வம்-ஜீவன்முக்தி) முக்தி தரும். ‘ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும். மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல ராம நாமத்தைச் சொல்ல
சொல்ல நம் பிறவி நோயை, துக்க நோயை, ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும். ராம நாமாத்தைச் சொல்ல சொல்ல நிகழும் எல்லா செயல்களின், நிகழ்ச்சிகளுக்கும் அந்த ஒன்றே காரணமாகிறது என்பதும், எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனியாய் உணரப்படும்.
ராம நாமாத்தைச்
சொல்லுவோம் இப்பிறவி பயனை அடைவோம்.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முதல் ட்வீட்டில்னுள்ள எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 12
#அறிவோம்_வரலாறு
குஜராத்தின் #சோமநாதபுரி ஜோதிர்லிங்க சிவாலயம் #Somnath சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் இருந்தது. அன்றைய சாதுராஷ்ரம் குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக ImageImageImageImage
ஆக்கியிருந்தன, மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது. இன்றைய பத்மநாதஸ்வாமி ஆலயத்தை விட அதிக தங்கம் அங்கே இருந்தது. அதை விட பெரும் அதிசயம், சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது. சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம். அதன்
ஈர்ப்பு விசையினால் நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது. நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது. அங்கு மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் குவிந்தன. கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு ஜொலித்ததது.
Read 13 tweets
Apr 12
#MahaPeriyava
When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava. She was a regular visitor to the Kanchi Mutt and her father would always insist on her to chant slokas in the Image
Mutt regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring her to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the
Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted young Pattammal to sing during his nine day Pooja. DKP remembered with gratitude how Sri Maha Periyavaa himself offered the coconut kept in the Navarathri kalasam to DKP’s
Read 7 tweets
Apr 11
🏹 #சிவதனுசு சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனின் தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது. சிவ தனுசுவை வைத்திருக்கும் Image
ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து
எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான். நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது
Read 17 tweets
Apr 11
#மகாபெரியவா
ஸ்ரீ மஹா பெரியவா பூஜை, ஆசாரம்,
அனுஷ்டானம் என்று எல்லா விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும், வேத, புராணாங்களைப் பற்றி விளக்கங்கள் சொல்லவும், மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும் வித்வத் சபைகளை திடீர் திடீர் என்று கூட்டச் சொல்வார். அப்படி ஒரு சமயம் வித்வத் சபை நடந்து கொண்டு Image
இருக்கும் போது தன் பையனோ ஒரு பக்தர் அங்கே வந்திருந்தார். அவர் பையனுக்கு அஞ்சு ஆற வயசு இருக்கும். சின்னக் குழந்தைகளுக்கு உள்ள குறுகுறுப்பு இருந்தாலும், அளவுக்கு மீறி சுட்டித்தனம்
பண்ணாமல் அமைதியா அப்பா கூடவே இருந்து அவனும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தான். பகவானுக்கு
ஆராதனை செய்யும்போது ஆசாரம் மீறக்கூடாது. ரொம்ப சிரத்தையா பண்ணணும். இப்படியெல்லாம் பலரும், பரமாசார்யா முன்னிலையில சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அந்த பக்தருக்கு ஒரு சந்தேகம் வந்தது. வித்வத்சபையோட இடைவேளியில பரமாசார்யா எல்லாருக்கும் தரிசனம்
Read 16 tweets
Apr 11
#ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்
ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லக்ஷ்மணன் தன் இருப்பிடம் சேர்ந்து விட்டான். சீதா தேவியாக பிறவி எடுத்த லக்ஷ்மி தேவியோ ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள். ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் Image
வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ராமருடன் புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஸ்ரீராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமன் தான். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகில் இருந்து அவர் பணிகளைச் செய்து ஒரு போதும் அகலாமல்
இருந்தான். பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார். ஒரு நாள் ராமர் அனுமன் பேசிக் கொண்டு இருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது. உடனே இராமன்
Read 14 tweets
Apr 11
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் செல்வந்தர் சிங்காரத்திற்க்குச் சொந்தமாகப் கப்பல்கள் நிறைய இருந்தன. ஒருநாள், கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டதாக செய்தி வந்தது. சிங்காரம் தன் வேலையாட்களை அழைத்து, இன்று மாலையில் நம் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஊரில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் அழைப்பு Image
விடுங்கள் என்று கட்டளையிட்டார்.
வெளியூர் சென்று திரும்பிய செல்வந்தரின் மனைவி லலிதை, மாலை வீட்டுக்குத் திரும்பினாள். வீடு முழுவதும் ஊர்மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். கப்பல் மூழ்கிய விஷயத்தைக் கேள்விப் பட்டதும் கோபமும், அதிர்ச்சியும் அவளைத் தொற்றிக்
கொண்டது. நேராக கணவரிடம் ஓடிவந்தாள். என்னங்க உங்களுக்கு என்ன பைத்தியமா? கப்பல் கவிழ்ந்து போன இந்த சமயத்தில் அன்னதானம் தேவைதானா? நஷ்டத்தோடு மேலும் நஷ்டம் உண்டாக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா என்றாள் லலிதை. நீ கேட்பது சரி தான். ஆனால், ஸ்ரீ ஹரி கோவிந்தன் நமக்கு ஒரு
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(