#சங்கரஜெயந்தி #SankaraJayanthi 6.5.22 #பஜகோவிந்தம் #மகாபெரியவா
ஆதி சங்கரரின் நூல்கள் பற்றி மகாபெரியவா கூறுவது இது. “ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் உலகிலிள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப் படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கனவேயிருந்த பிரம்மசூத்திரம், உபநிஷத்துக்கள்,
பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர். இது தவிர, தாமே (ஒரிஜினலாக) ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ் ரீ’ முதலான பல அத்வைத கிரந்தங்களைச் செய்திருக்கிறார். பாஷ்யத்திலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக அவர் சொந்தமாகச் செய்த இது போன்ற நூல்களைப் ‘பிரகரண
கிரந்தங்கள்’ என்பார்கள்.” ஜகத்குரு பாஷ்யம் மற்றும் பிரகரண கிரந்தம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்கியுள்ளார். ஆதி சங்கரர் பக்தர்கள் ஓதி நலம் பெறுவதற்காக ஏராளமான ஸ்தோத்திரங்களையும் இயற்றியுள்ளார். இவை அற்புதமான லலிதமான தேர்ந்த சம்ஸ்கிருதச் சொற்களால் இயற்றப் பட்டிருப்பதால்
சொல்லும்போதே ஆனந்தமாக இருக்கிறது, பொருளை உணரும் போது மனம் பண்படுகிறது. ஆன்மா உயர்கிறது.
#பஜகோவிந்தம்
31 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்டது பஜகோவிந்தம். வேதாந்தக் கருத்துக்களை எளிய நடையில் தரும் இது எப்படிப் பிறந்தது என்பதை பார்போம். ஒரு நாள் ஆதி சங்கரர் தனது சீடர்களுடன் வாரணாசியில்
ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வயதான பண்டிதர் ஒருவர் இலக்கண சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். வயதான காலத்தில் மரணம் நெருங்கி வரும் சமயத்தில் இந்த இலக்கணம் அவரை எப்படிக் காப்பாற்றும் என்று மிகவும் இரக்கப்பட்டு அவரைக் கடவுள் பால் மனதைச் செலுத்தும்
படி அருளுரை புகன்றார். உடனேயே அவர் பஜகோவிந்தத்தைப் பாடியருளினார். இந்த ஸ்தோத்திரம் 12 ஸ்லோகங்களைக் கொண்டதாக அமைந்தது. அதனால் இதை ‘த்வாதசமஞ்சரிகா ஸ்தோத்ரம்’ என்று சொல்வது வழக்கம். கூட வந்த சீடர்கள் 14 பேரும் ஆளுக்கு ஒரு ஸ்லோகத்தைப் பாடி இதில் சேர்க்கவே இதை 14 ஸ்லோகங்கள் கொண்டது
என்ற அர்த்தத்தில் ‘சதுர்தச மஞ்சரிகா ஸ்தோத்ரம் என்று அழைக்க ஆரம்பித்தனர். இந்த இரண்டையும் தனித்தனியே பல சுவடிகளில் காண முடிகிறது. ஒவ்வொன்றிலும் இறுதியில் ஒரு ஸ்லோகம் சேர்க்கப்பட்டது. காலப் போக்கில் இது 31ஆக வளர்ந்து இப்போது இருக்கும் உருவை அடைந்து விட்டது.
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி டுக்ருஞ்கரணே ||
என்பது முதல் ஸ்லோகம். இதை ஏராளமானோர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளனர். ஸ்ரீ காமாக்ஷிதாஸர் மொழி பெயர்த்துள்ள எளிய அழகிய இனிய மொழிபெயர்ப்பை எடுத்துக்காட்டாக இங்கு காணலாம்:
கோவிந்தனைத் துதி
கோவிந்தனைத் துதி
கோவிந்தனைத் துதி மடநெஞ்சே!
காலத்திற்கெதிருன் காலத்தெல்லை
கசதப காத்திடல் இல்லை இல்லை.
இதை ஆங்கிலத்தில் அறிஞர் ஸ்ரீ T.M.P. மஹாதேவன் மொழிபெயர்த்துள்ளார்.
முதல் ஸ்லோகத்திற்கு அவர் மொழிபெயர்ப்பு இது:
Adore the Lord, Adore the Lord, Adore the Lord, O, Fool!
When the
appointed time (for departure) comes,
The repetition of grammatical rules will not, indeed, save you.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம் |
இஹ சம்ஸாரே பஹுதுஸ்தாரே
க்ருபயாபாரே பாஹி முராரே || (ஸ்லோகம் 21)
பொருள் : மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு, மீளவும் தாயின்
குடரிடைப் படுப்பு
இந்த சம்சாரமானது தாண்டுவதற்கு அரிதாக இருக்கிறது. முராரீ! (முரனை சம்ஹாரம் செய்த ஹே! கிருஷ்ணா!) என் மீது கருணை கொண்டு என்னைக் காப்பாற்று! இப்படி ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் இருப்பதோடு மிக நுட்பமான அதி ரகசியமான வேதாந்தக் கருத்துக்களையும்
உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது. பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி தனது இனிய குரலில் இதைப் பாடியுள்ளார். அதைக் கேட்டவர்கள் மனம் உருகி இதில் லயிப்பர். பக்திக்கு ஒரு கீதம் பஜகோவிந்தம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 27
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்,
“இவ்வுலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு, “என்ன மூன்று விதமான Image
மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை! ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்றார் கருடன்.
"அப்படியானால்
அவர்களைக் கூறு" என்றார் மகாவிஷ்ணு.
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.” என்றார் கருடன்.
"சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார் மகாவிஷ்ணு.
Read 12 tweets
Apr 27
#MahaPeriyava
During an occasion of #SankaraJayanthi, a musician sat for a concert of jalatarangam. (Jalatarangam is an Indian melodic percussion instrument. It consists of a set of ceramic or metal bowls tuned with water. The bowls are played by striking the edge with beaters, Image
one in each hand). He was to begin with the hymn Vatapi Ganapatim Bhaje. Although he was an experienced musician, he could not get the shruthi right, however much he tried. Depressed in heart that things had come to such a pass before Sri Maha Periyava, he continued to try to set
the right shruthi. Sri Swamigal understood the musician's predicament. Calling an attendant nearby, He sent word to the musician, "Ask him to remove an ounce of jalam from the fifth bowl."
When the Vidwan did that and tried, the shruthi was set properly.
At once the musician rose
Read 5 tweets
Apr 27
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தந்தை சோமு சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தர், அவரிடம்‌ மகன்‌ சுரேஷ் தனக்கு ஏதேனும்‌ ஒரு துன்பமோ அல்லது மனக்கவலையோ ஏற்படும்‌ போது வந்து கலங்கி நிற்பான்‌. அப்போது அவனது பிரச்சனையைக்‌ கேட்ட பின்‌ தந்தை சோமு, ஹரே கிருஷ்ணா! உன்‌ பிரச்சனை இவ்ளோதானா? எல்லாம் சரியாகிவிடும் Image
என்பார்‌. மகன்‌ சுரேஷ்க்கும்‌ சில நாட்களில்‌ அந்த பிரச்சனையோ துன்பமோ இல்லாது போய்விடும்‌. மகனும்‌ வளர்ந்தான்‌. தந்தைக்கும்‌
வயதானது. அவர் மகன்‌ தற்போது‌ எந்த பிரச்சனை வந்தாலும்‌ தந்தையிடம்‌ சிரித்துக்‌ கொண்டே சொல்ல ஆரம்பித்தான்‌. ஒரு நாள்‌ மகன்‌ சுரேஷ் தந்தையிடம்‌ கேட்டான்‌
"ஏம்பா நான்‌ எவ்ளோ பெரிய பிரச்சனைனு வந்தாலும்‌ நீங்கள் என்னவோ ஹரே கிருஷ்ணா
இவ்ளோதானா? அப்படின்னு கேட்பீங்க, எனக்கும்‌ அந்த பிரச்சனை சுலபமா முடிஞ்சுடுதே எப்படிப்பா?” என்றான்‌. தந்தை சோமு சிரித்துக்‌ கொண்டே சொன்னார்‌, “சில வருடங்களுக்கு முன் பிரச்சனைனா நீ ரொம்ப கண்கலங்குவ. நீ
Read 7 tweets
Apr 26
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார்.
“ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்” என்று கேட்டார்.
அதற்கு அவர், “திரிலோக சஞ்சாரியே, என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே! ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்” என்றார்.
நாரதர் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறாய் நாரதா?"
"நிஜத்தை விட்டு நிழலையே தேடிக் கொண்டு இருக்கிறாய் என்று நினைத்து சிரித்தேன்”
“எனக்கு புரியவில்லையே"
“எப்படி புரியும்? புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அல்லவா புரியும்!"
“நாரதா நிஜம்-நிழல் என்கிறாய், என் ராமர் நிழலா?"
“ஆம் வேறென்ன?
நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார். வேறு அவதாரம் தொடங்கிவிட்டாரே இந்த புது யுகத்தில்!"
“என்ன சொல்கிறாய் நாரதா? என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்? சொல்லேன்.”
"இந்த துவாபர யுகத்தில் அவர் பெயர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளார். சமீபத்தில்
Read 14 tweets
Apr 26
#MahaPeriyava
Kanchi Panneerselvam (former MP) (KP hereafter) used to have frequent darshan of Sri Periyavar. He survived a big car accident once and after that he met Sri Periyavar and received His blessings. Once KP arranged for a special abhisheka aradhana to Kanchi
Kumarakottam Muruga Peruman. Even as the abhishekam was being performed in the temple, his friends told him that Sri Periyavar was coming that side, walking in the Rajavidhi. KP came to the street to receive Sri Periyavar and invite him inside the temple. Looking at KP, Sri
Periyavar said, "It is exactly a year today since you met with that car accident, so are you performing abhishekam to Muruga Peruman? I come only to witness it." Although KP did not remember that a year had gone by since that accident, realising that Sri Periyavar had remembered
Read 10 tweets
Apr 25
#மகாபெரியவா #பூர்வாசிரம_வாழ்க்கை மஹா பெரியவா, சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார் என்ற திவ்ய தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக வைகாசி அனுஷத்தில் மே 20 ம் தேதி 1894 அவதாரம் செய்தார். பெரியவாளுக்கு முன் பிறந்தவர் கணபதி சாஸ்திரிகள். பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து
பிரார்த்தனை செய்து, அவர்கள் குலதெய்வமான சுவாமிமலை முருகனை பிரார்த்தனை செய்து குழந்தையாக பிறந்தவர் மஹா பெரியவா. அதனால் பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன் என்று பேர் வைத்தனர். அடுத்து, லலிதாம்பா, பிறகு சாம்பமூர்த்தி, சதாசிவம் என்கிற சிவன் சார், கடைசியாக கிருஷ்ணமூர்த்தி பிறந்தனர். இவர்கள்
எல்லோரும் தாத்தாவில் இருந்து ஆரம்பித்து, அதற்கு முன் எத்தனை தலைமுறைகளோ தெரியாது அனைவரும் மடத்த்திலிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காமல் மடத்திற்காக வாழ்க்கை முழுதும் சேவை செய்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி, ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம்,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(