#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீமன்னார்குடி_பெரியவா 28.5.1815- 4.3.1903
#மகாபெரியவா என்றால் எல்லாருக்கும் தெரியும். மன்னார்குடி பெரியவா என்று ஒருவர் இருந்தார். மகா பெரியவா அவர்களே, ஒருவரை #பெரியவா என்று அழைத்தார் என்றால் அவர் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் தான் அந்த மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்ச வேத வியாசர் அவர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள். அப்பா மார்க்க ஸஹாய அப்பய்ய தீக்ஷிதர்
மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து கற்றார்கள். மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தனர். பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக
இருப்பார். கோபிப்பார். அதே சமயம் திரும்ப திரும்ப சொல்லித் தருவார். ஒவ்வொரு நாளும் நடந்து சென்று கைலாசநாதர் கோவில் அருகே காவேரி ஸ்நானம் செய்வார். சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ணா சாஸ்திரிகள் ஒருதடவை தர்க்கத்தில் விடை சொன்னதை அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக் கொண்டு தண்டித்தார்.
குருகுலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ணா சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் செய்தார். இதர சிஷ்யர்கள் மூலம் கிரஷ்ண சாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதை கேள்விப்பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்டவர், மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் கடல் மடை திறந்தாற்போல் பேசிக் கொண்டிருந்தார். அன்று ராமனின் பொறுமை பற்றி பிரசங்கம். என் கண்ணை திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு என்று சிலாகித்தார் சாஸ்திரிகள். பிரசங்கம் முடிந்து கிருஷ்ண சாஸ்திரிகள் தன் குரு வந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து
கைகட்டி நின்றார். "கிருஷ்ணா, ஸ்ரீ ராமனின் கல்யாண குணங்களை பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி சொன்னது அபாரம். நீ மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை தரப்போறே. நாளையில் இருந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய இன்னும் சொல்லித் தரணும்" என்றார். இந்த
நிகழ்ச்சி ராஜு சாஸ்திரிகளை மாற்றி விட்டது. அவரிடம் இருந்த கோபம் மாயமா மறைந்தது. இரக்க குணம் நிறைந்த அமைதியான, பொறுமையான ஆச்சார்யனாகிவிட்டார். 1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் மகன் நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக் கொண்டாா்
இருவருமாக குருகுலத்தை நிர்வாகம் செய்தார்கள். பல சந்யாசிகள் கூட வந்து மாணவர்களாக சேர்ந்து வேத சாஸ்திரம் பயின்றார்கள். அந்த குருகுலம் பிற்காலத்தில் சங்கரமடமாகியது. இதற்கு உதவியவர் வேறு யாருமில்லை, பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் பல உன்னத மஹான்கள் உருவாகினார்கள். ஒருவரை
பெரியவாள் என சொல்வதானால் அவர் ஞானத்திலும், அன்பிலும், பண்பிலும் தெய்வீகத்திலும், ஆன்மீகத்திலும், தவத்திலும் தியானத்திலும் சிறந்தவராக இருக்க வேண்டும். இதெல்லாமும், இன்னமும் கூட அதிகமாகவும் இருப்பதால் தான் நாம் காஞ்சி முனியை மஹா பெரியவா என்கிறோம். அவரே இன்னொருவரை
#மன்னார்குடி_பெரியவா என்று சொல்லும் போது எவ்வளவு மரியாதைக்கு உரியவர் ராஜு சாஸ்திரிகள்! அவர் தன் பாட்டனாரிடம் சாமவேதம், தந்தையிடம் காவ்யம், நாடகம் அனைத்தும் கற்றார். 15 வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத, படிக்க, பேச, கவி இயற்ற திறன் பெற்றார். மிகப் பெரிய பண்டிதர்களிடம் வேதாந்தம், மகா
பாஷ்யம், மீமாம்சம் பயின்றார். 1887ல் பிரிட்டிஷ் ராணி விட்ட்டோரியாவின் தங்கவிழா. மஹா மஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ்திரிகள் பேர் தேர்வானது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். நித்ய கர்மாநுஷ்டானம், பூஜைகள் தடை படக்கூடாது என்று போகமாட்டேன், தனக்கு பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக் கொண்டார். மஹா பெரியவா கூட்டிய அத்வைத மாநாடுகள், சபைகளில் பிரதம பண்டிதராக பங்கேற்றவர். ராஜு சாஸ்திரிகள் 30 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். பல ஆசிரியர்களுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து
உள்ளார். வேத சாஸ்த்ர , ஹிந்து நீதி நெறி விஷயங்களில் வழி காட்டியாக இருந்திருக்கிறார். அவர் எழுதிய நூல்கள் எண்ணிலடங்காதவை.அவருடைய சிஷ்யர்கள் பைங்காநாடு கணபதி சாஸ்திரி, பருத்தியூர் கிருஷ்ணசாஸ்திரிகள் ஆகியோர் தங்கள் குருவை பற்றி புகழ்ந்து எழுதி உள்ளனர். காலம் சென்றது. 1903ல் 88 வயது.
சுயமாக எழுந்திருக்க நடக்க முடியாத நிலை. அவர் மருமகள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார். ஒரு சமயம் தனக்கு பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி ப்ரவசனங்களை கேட்கவேண்டும் போல் இருக்கிறதே என்றார். செய்தி கிருஷ்ண சாஸ்திரியை எட்டியது. எவ்வளவு குரு பக்தி! கிருஷ்ணசாஸ்திரிகள் உடனே
மன்னார்குடிக்கு ஓடினார். சில மாதங்கள் அங்கேயே தங்கி குருவுக்கு முன்னால் அமர்ந்து பிரத்தியேகமாக அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், சிஷ்யர்களுக்கு மட்டுமாக, அவருக்கு பிடித்த ராமாயண ப்ரவசனங்களைச் செய்தார். மன்னார்குடி பெரியவாளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆசிர்வதித்தார். அவர
மார்ச் 4, 1903 அன்று 88 வயதில் விதேக முக்தி அடைந்தார். நாடு நகரம் முழுதும் அவரது மறைவுக்கு வருந்தியது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 20
#MahaPeriyava
The camp of SriMatham was at Tiruvidaimarutur. Every morning the Go puja would be performed before the start of the Sri Chandramouleeswara puja. A completely black-hued cow was maintained by the Matham for this purpose. One morning the black-hued cow did not come Image
for the puja. Another one was brought. The worship concluded. Periyava sent word for the Karvar. Venkataramaiyyer came and prostrated to Periyava.
“Where is the black-hued cow?”
“It is missing since last evening. Seems to have broken loose and run away. It was not to be found in
spite of our searching far and wide. Men have gone out today also.”Periyava completed His anushtanam and set out from the Matham. He walked down all the roads and finally reached the street where the peasants lived. The inhabitants there were surprised. They prostrated to Him as
Read 9 tweets
May 20
#கலியுகம் கலியுகம் எப்படி இருக்கும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது. (உத்தவ கீதையிலிருந்து எடுக்கப்பட்டது).
ஒரு முறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன, Image
எப்படி இருக்கும் என்றே காட்டுகிறேன் என்று கூறி 4 அம்புகளை 4 திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு 4 பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். முதலில் #பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு 5 கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.
சுற்றியுள்ள 4 கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
#அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான
Read 14 tweets
May 20
#பாம்புக்கு_பால்_வார்த்த_கதை பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய Image
துரியோதனன், “ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்பெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார்
ஸ்ரீகிருஷ்ணர்.
“கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு,
Read 16 tweets
May 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய் தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே
பிறந்தோம். நான் ஐந்தாவது பெண். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமில்லை, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்
போனார்கள். அக்காவிற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார், பணம் வேண்டாமா என்று அனைவரும் கவலைப்பட்டோம். திடீரென்று ஒரு நாள் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். அவ்வளவு வசதியும் பெரிய வேலையில் இருக்கும்
Read 9 tweets
May 19
Rama Bhakta Hanuman acted upon the injustice done to Sita Devi in Sri Lanka on the day he lit fire to Lanka. This kind of fire is still burning in the minds of the people against injustice. People in many places have had the courage to question the atrocities that have been going
on against them for years.

“One thing good people have to do to thrive Evil is be silent” Edmund Burke.

“The day we die is the day we refuse to speak the truth even after knowing the truth.“ Martin Luther King
Violence, injustice, and crime are prevalent in the world today.
But there are very few voices against it. No one cares about injustice unless it affects themselves or their community. But they are unjust. The voice of those who are not affected by injustice has the power to make greater impact. No society should forget that if we raise our
Read 5 tweets
May 19
#MahaPeriyava
The Kumbhabhishekam of Sri Kamakshi Amman temple was held in 1944. It was during this period that Janakiramayya grew close to the SriMatham. He belongs to the sub-sect called teertha purohits and was foremost among them in those days. In his father’s days there were
3 or 4 assistant purohits in his house. They would go to the Kanchipuram railway station, receive pilgrims from North India and arrange for their food and stay. Pilgrims from royal families and from Rajasthan would often visit Kanchi. The priests would guide them to take a
sankalpa snana at Sarvateertha temple tank and then arrange for the performance of the oblations to their forefathers. But gradually this stopped. No one was interested in doing this any more. At a certain point of time, Maha Swami gave up the office of the hereditary Chief
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(