#அறிவோம்_மகான்கள் #இராமலிங்க_அடிகளார் #சத்திய_தருமசாலை #வடலூர் #வள்ளலார் #அணையா_அடுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் 156 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்த அன்னதானம் இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் ஒரு சிறப்பு, அவ்வடுப்பு இன்றுவரை அணையாமல் (அணையா அடுப்பு) இருக்கிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’
இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும்.
வள்ளலார் பிறந்த ஊர் மருதூர். 1823ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம். தந்தை இவரின் 6வது வயதில் இறந்து விட்டதால்
இவர் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கோ கல்வியில் நாட்டமில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகா
வித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை. அங்கும் அவர் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க அடிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் மகாவித்துவான் சபாபதி
முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
என்று மனமுருக பாடிக் கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க அடிகளார்
பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உன் தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேல் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார். அதன்
பின் இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கினார். ஜாதி, மதங்கள் தலைவிரித்தாடிய 1867-ம் ஆண்டு அது. ஜாதி, மத பேதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரின் பசியையும் போக்க முடிவெடுத்தார் வள்ளலார். அதற்காக, சத்திய தருமசாலையை வடலூரில் நிறுவினார்.
அப்போது அவர் கையால் மூட்டப்பட்டது தான் அணையா அடுப்பு. இன்று வரை அந்த அணையா நெருப்பு பலரின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் கடலூர் மாவட்டத்தைப் பல முறை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு,
ஒவ்வொரு வேளைக்கும் நூற்றுக் கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அரிசியும், மற்ற பொருட்களும் ஒரு நாளும் காசு கொடுத்து வாங்கியது இல்லை. எல்லாமே பொதுமக்களின் காணிக்கைதான். பசி தீர்ந்தால் கருணை உருவாகும். அந்தக் கருணையின் மூலம் இறைவனை தரிசித்து ஞானம் பெறலாம்.
அதற்கு, ஜோதி மூலம் வழிபாடு செய்ய வேண்டும் என்பது வள்ளலாரின் எண்ணம். அதனால் 1872-ல் #சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கம் எனும் சத்திய ஞான சபையை நிறுவினார். ஜோதி ஏற்றி வழிபாடு செய்தார். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றார். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தினார். இவர்
பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, #திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப் பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
1874-ல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மாளிகையில், #முத்தேகசித்தி (ஜோதியாக மறைந்தார்) பெற்றார் வள்ளலார்.
தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
1. நல்லோர் மனதை
நடுங்கச் செய்யாதே
2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
11. பிறரை இகழ்ந்து பேசாதே.
12. பிற ௨யிர்களிடமும் ௮ன்பு கொள்க.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல் கூடும்
என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
🙏🏻
வடலூரில் 156 ஆண்டுகளுக்கு முன் மூட்டப்பட்ட பசி போக்கும் அணையா அடுப்பு! அன்பின் பிம்பம் வள்ளலார் பெருமான். அவர் ஏற்றிய அடுப்பை அணையாமல் காப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 27
#ஏன்மாறினோம்? #யாரைகுற்றம்சொல்வது?
நம் சமூகத்தில் இன்று திருமணமான பெண்கள் பெரும்பாலும் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள்.
நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் நம் அடையாளமாக இருந்தது. வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதிய ஆண்களும் பெண்களும் பாழ் நெற்றியுடன்
இருப்பதை நாகரீகம் என்று கருதும் காலமாகிவிட்டது. பாரம்பரிய பண்டிகைகளை நம் குடும்ப வழக்கப்படி கொண்டாடுவது அரிதாகி வருகிறது. இன்றைய தலைமுறை கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டார்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் சுற்றுலா
போல செல்கிறார்கள். பெரும்பாலானோர் ஒன்று தேவைப்படும் போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர். நம் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு
Read 10 tweets
May 27
#நோய்கள்_தீர்க்கும்_சில_திருத்தலங்கள்

#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.

#சங்கரன்கோவில் ராஜபாளையம் ImageImage
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.

#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர் Image
இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.

#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.

#பழனி இவ்வாலயத்தில் அதிகாலையில் தரப்படும் ImageImage
Read 8 tweets
May 26
அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்து
அளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப் படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு காட்டினார். முதலில் பேசிய திமுக தலைவர், (தமிழக முதலமைச்சர் போல பேசவில்லையே, எனவே!) அரசியல் மேடை போல, குற்றச்சாட்டு வைத்து பேசியது
முதிர்ச்சியற்ற முடக்குவாதம். ₹31500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க வந்திருக்கும் பாரதப் பிரதமரையோ, மத்திய பாஜக அரசையோ பாராட்டி பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. பொதுவாக நன்றி சொல்லி, இன்னமும் இன்னின்ன தேவைகள் இருக்கின்றன, தொடர்ந்து பிரதமர் உதவ முன்னுரிமை
Read 4 tweets
May 26
#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும், Image
மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து Image
போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம் Image
Read 24 tweets
May 26
#MahaPeriyava
It was the peak of summer. The village Periyava was camping at that time suffered from scarcity of water. It was a tremendous task to gather and store drinking water. We had to walk two miles to fetch water for Periyava's bath and anushtanam. The attendants were
given one bucket of water each for their bath. Sri Maha Periyava was performing His anushtanam seated under a tree a little away from the building where SriMatham camped. A beggar and his family of several children went from house to house and returned disappointed, not getting
what they asked for. The attendants watched this. Was the village so poor that it could not give a fistful of grain to the needy? Not at all! The people in the village were quite prosperous and could afford to give away even a bit of silver in charity. But then this family was
Read 7 tweets
May 26
#மகாபெரியவா
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம். ஒரு அமாவாசை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு
கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும் என்றார்கள்.
பெரியவா, "குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச் சொல்லு" என்றார்.
பரிகார ஹோமம் நடந்துகொண்டு இருந்தபோது பெரியவா அங்கே வந்து
பெரியவா பார்த்தார்கள். “கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(