G K Profile picture
Jun 24, 2022 10 tweets 4 min read Read on X
#வில்வ_ஓடு_விபூதி_திருநீர்!

விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.

இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
இது முற்றிலுமான ஆன்மீக ரீதியான உண்மையும் கூட. சிவ பக்தர்களுக்கு இந்த உண்மை தெரிந்ததுதானே!

சரி, அன்றாடம் நாம் இட்டுக்கொள்ளும் இந்த திருநீரை மேலும் பல மடங்கு சக்தி வாய்ந்த திருநீர் உங்கள் வீட்டு பூஜை அறையில் விபூதியை எப்படி வைக்க வேண்டும்?
எப்படி வைத்தால் அந்த விபூதியில் சிவனின் அம்சம் மேலும் அதிகரிக்கும்
சிவபெருமானுக்கே உரியது வில்வமரம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதே மரத்தில் இருப்பது தான் வில்வக் காய்.

அந்த வில்வக்காயை எடுத்து இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு,
வில்வக்காய் ஓட்டை திருவோடு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் உள்ளே இரண்டு மூன்று வில்வ இலைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

வில்வ காயின் ஓடு, அதன் உள்ளே முதலில் வில்வ இலைகள், அதன் மேலே சுத்தமான திருநீறு நிரப்பி விடுங்கள்.
முடிந்தால் அதற்கு மேலேயும் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.
சிவனை மனதார வேண்டிக்கொண்டு, நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று இந்த திருநீறு பூசிக் கொண்டு போனாலே போதும்.

வரக்கூடிய தடைகளும் தடங்கல்களும் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
இந்தப் பிரசாதம் உங்களுக்கு சிவபெருமானின் கையில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்திற்கு சமம் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது.
அந்த அளவிற்கு மகிமை வாய்ந்து, இந்த வில்வ காயின் ஓட்டில் இருக்கும் இந்த திருநீறு. தினமும் இந்த திருநீரை நெற்றியில் இட்டுக்கொண்டால் தீய சக்திகள் அண்டாது. துர்தேவதைகள் விலகி ஓடும். உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள். நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்....!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G K

G K Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gkrishnamurthi0

Oct 20, 2022
#ஓம்_நமசிவாய
#பக்தி
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.
தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.
தீபாவளி விரதம் முறையாக இருந்து வழிபாடு செய்பவர்கள் முத்தி நலம் அடைவார்கள்.
இதனைப் படிக்கும் சிவநேயச் செல்வர்கள் தீபாவளி விரதமிருந்து சிவசாயுஜ்தம் அடைவார்களாக.

அன்பன்

- கிருபானந்த வாரி
Read 20 tweets
Jul 19, 2022
#திருவானைக்கா_அகிலாண்டநாயகி_பித்தன்_என்று_ஒரு_பெயர்_பெற்றான்

நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம்
பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.
நாம் தண்ணீரில் விழுந்து விட்டால், நீச்சல் தெரியாவிட்டால், மூன்று முறை மேலே வருவோம், அதற்குள் எப்படியாவது கரை ஏற முடியவில்லை என்றால், மூழ்கிவிடுவோம். நீர் மூன்று முறை தான் பிழை பொறுக்கும் என்று சொல்லுவார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் பொறுப்பாள்.
Read 9 tweets
Jul 19, 2022
#சைவ_சமயம்
#தேவாரம்_மனம்_எனும்_தோணி_பற்றி

நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம்.
அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக கவிழ்ந்து விடுகிறது.
Read 12 tweets
Jul 15, 2022
#ருத்ராச்சம்_தரித்து_இறந்த_வீட்டுக்கு_செல்ல_கூடாதா ??
#சைவசமயம் @SSR_Sivaraj

இன்று நம் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர் (பெண்) எப்போதும் ருத்ராச்சம் அணிந்து இருப்பவர், அவர்கள் சொந்தத்தில் ஓர் மரணம், காலையில் விடுமுறை வேண்டும் என்று தகவல் சொல்ல வந்தபோது
என்னை எல்லோரும் ருத்ராச்சதை கழட்டும்படி தீட்டுகிறார்கள், பிணத்தை எடுத்த பின் வேண்டுமானால் போட்டு கொள் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல !!

நம் வாயோ சும்மா இருக்குமா ??

இறந்தவருக்கு மரியாதை செலுத்ததானே போகிறாய் ஆமாம், நீ இப்படியே போய் நமச்சிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கே இரு !
எத்தனையோ லட்சம் பணம் செலவு செய்து இறுதி மரியாதை செய்வது வேண்டுமானால் ஊருக்காக இருக்கும்..

ஆனால் நீ ஒரு ஆள் மட்டுமே அந்த அலைபாயும் இறந்த ஆன்மா இறைவன் அடி நிழலில் இளைப்பாற துணை புரிவாய் என்று சொன்னேன் !!
Read 12 tweets
Jul 14, 2022
#ஈர்த்து_என்னை_ஆட்கொண்ட_எந்தை_பெருமானே !!

திருவாசக வரிகள் !!

மேலோட்டமாக பார்க்கும்போது எங்கோ எதையோ நாடி திரிபவனை தான்பால் ஈர்த்து ஆண்ட பெருமானே என்றே பொருள்கொள்கிறோம் ?? ஆனால் அவ்வரிகளை உட்கொண்டு அனுபவிக்க உற்றவன் உணர்வித்த பொருளே இப்பதிவு !!
பிற பொருள் !! உயிர் !! மீது உள்ள ஈர்ப்பே இன்றுவரை வாழ வைக்கிறது !! ஈர்ப்புக்கு உட்படும் பொருளும் ! உயிரும் ! மாறலாம் ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று எதையோ ! எதைநாடியோ !! நம்மை பயணிக்கவைத்து கொண்டே இருக்கு ! இருக்கும் !!
நமது உடலில் உயிர் என்ற ஒன்றின் ஈர்ப்பாலே உடல் உடலாகவே இருக்கிறது !! அந்த ஈர்ப்பின் பயனாக உடலின் உள் நடக்கும் இயக்கமும் !! வெளியே நடக்கும் இயக்கமும் !!
Read 11 tweets
Jul 12, 2022
#ஓம்_நமசிவாய #சைவ_சமயம்
#கோலாகலமாக_தொடங்கிய_மாங்கனி_திருவிழா!

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(