G K Profile picture
G K
தென் நாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
Oct 20, 2022 20 tweets 4 min read
#ஓம்_நமசிவாய
#பக்தி
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும். தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.
Jul 19, 2022 9 tweets 2 min read
#திருவானைக்கா_அகிலாண்டநாயகி_பித்தன்_என்று_ஒரு_பெயர்_பெற்றான்

நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம் பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.
Jul 19, 2022 12 tweets 3 min read
#சைவ_சமயம்
#தேவாரம்_மனம்_எனும்_தோணி_பற்றி

நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
Jul 15, 2022 12 tweets 3 min read
#ருத்ராச்சம்_தரித்து_இறந்த_வீட்டுக்கு_செல்ல_கூடாதா ??
#சைவசமயம் @SSR_Sivaraj

இன்று நம் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் ஊழியர் (பெண்) எப்போதும் ருத்ராச்சம் அணிந்து இருப்பவர், அவர்கள் சொந்தத்தில் ஓர் மரணம், காலையில் விடுமுறை வேண்டும் என்று தகவல் சொல்ல வந்தபோது என்னை எல்லோரும் ருத்ராச்சதை கழட்டும்படி தீட்டுகிறார்கள், பிணத்தை எடுத்த பின் வேண்டுமானால் போட்டு கொள் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல !!

நம் வாயோ சும்மா இருக்குமா ??

இறந்தவருக்கு மரியாதை செலுத்ததானே போகிறாய் ஆமாம், நீ இப்படியே போய் நமச்சிவாய மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கே இரு !
Jul 14, 2022 11 tweets 2 min read
#ஈர்த்து_என்னை_ஆட்கொண்ட_எந்தை_பெருமானே !!

திருவாசக வரிகள் !!

மேலோட்டமாக பார்க்கும்போது எங்கோ எதையோ நாடி திரிபவனை தான்பால் ஈர்த்து ஆண்ட பெருமானே என்றே பொருள்கொள்கிறோம் ?? ஆனால் அவ்வரிகளை உட்கொண்டு அனுபவிக்க உற்றவன் உணர்வித்த பொருளே இப்பதிவு !! பிற பொருள் !! உயிர் !! மீது உள்ள ஈர்ப்பே இன்றுவரை வாழ வைக்கிறது !! ஈர்ப்புக்கு உட்படும் பொருளும் ! உயிரும் ! மாறலாம் ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று எதையோ ! எதைநாடியோ !! நம்மை பயணிக்கவைத்து கொண்டே இருக்கு ! இருக்கும் !!
Jul 12, 2022 8 tweets 3 min read
#ஓம்_நமசிவாய #சைவ_சமயம்
#கோலாகலமாக_தொடங்கிய_மாங்கனி_திருவிழா!

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.
Jul 8, 2022 14 tweets 5 min read
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர்
#சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார். • இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
Jul 7, 2022 10 tweets 2 min read
#சிதம்பரத்துக்கு_போனீங்களே_என்ன_கிடைச்சது

நமக்காக இறைவனே இறங்கிவந்து குருவாய் !! உணர்வாய் !! அருவாய் !! அனைத்துமாய் !! ஆத்மார்த்தமாய் !! என்ன எப்படி கிடைக்க வேண்டுமோ ??

எதற்கு என்ன பக்குவாதத்தில் !! எது எல்லாம் !! எப்படி கிடைக்க வேண்டுமோ !! அப்படி ..

#சைவசமயம் கேட்காதே !! நினைத்தற்கு மேலாக !! நினைத்து கூட கற்பனை செய்யாத !!
பெற்றால் தீர்ந்து போகாதா !!
என்றும் எப்போதும் நிலைத்திருக்கும் !!
பிறருக்கு கொடுத்தாலும் குறையாத !!
புரிதல் !! பக்குவம் !! தெளிவு !! என்று பெற்று ...

என்ன பெற்றோம் என்று தெரியாத வண்ணம் அகத்தே ஓர் அமைதி !!
Jul 4, 2022 22 tweets 6 min read
#துலாமை_நேர்_நிறுத்திய #அமர்நீதி_நாயனார்
#சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு, பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
Jul 3, 2022 7 tweets 2 min read
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...

அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ... பாடல்

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
Jul 1, 2022 8 tweets 2 min read
#ஏன்டா உன்னை #பிரச்னையில்லாது #வைத்திருப்பது தான் உனக்கு #பிரச்னையா ?? ( இறைவன் குரல் )

எப்போது எல்லாம் நீ பிரச்சனை என்று சிந்தித்து கொண்டு இருக்கிறாய் என்று நீயே உன்னுள் பொருந்தி இருந்து நன்றாக சிந்தித்துப்பார்

நீ பிரச்சனை என்று சிந்திக்க உனக்கு எந்த வித தடையும் இல்லை தானே Image சிந்திக்கும் இடம், அப்போது இருக்கும் உன் உடல்நிலை , உன்னை சுற்றி இருக்கும் சூழல் போன்ற அத்தனையும் உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் தராத போது தானே பிரச்சனை என்று இதையெல்லாம் கடந்து எதையோ சிந்திக்க கூட முடிகிறது ..

அப்போது
இப்போது உன்னை நான் எப்படி வைத்திருக்கின்றேன் என்று யோசி,
Jun 24, 2022 10 tweets 4 min read
#வில்வ_ஓடு_விபூதி_திருநீர்!

விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
Jun 22, 2022 13 tweets 4 min read
22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை
#சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர். Image சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர், Image
Apr 13, 2022 4 tweets 1 min read
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்!
#சைவ_சமயம்

நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.

நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
Apr 13, 2022 48 tweets 10 min read
#சிவனின்_சப்தவிடங்கத்_தலங்கள்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். அதாவது உளியால் செதுக்கப்படாமல் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் விடங்க மூர்த்தியாக அருள் புரியும் கோவில்கள் என்பதாகும்.

இவ்விடங்களில் மூலவரோடு சிறிய லிங்க வடிவ விடங்க மூர்த்தியும் சிறப்பித்து வழிபடப்படுகின்றனர்.
Apr 12, 2022 6 tweets 2 min read
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.

வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை. பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
Apr 12, 2022 13 tweets 5 min read
#சிவனின்_பஞ்ச_ஆரண்ய_தலங்கள்

பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும். ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.

ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.