#காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்...!

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் அருகில் #தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது #காயல்பட்டினம் என்னும் பேரூர்.

இவ்வூரின் பழைய பெயர் #காயல் என்பதாகும். #பழையகாயல், #புன்னைக்காயல், #காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக..
இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.

இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.

ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.

#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.

காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.

ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
மேற்கொள்ளப்பட்டுள்ளன இக்கட்டுரையில் #காயல்பட்டினம் எவ்வாறு இசுலாமியரின் வணிகத்தலமாக விளங்கியுள்ளது என்பதை விளக்குவதாக அமைகின்றது.

முதன்முதலாக பொ.பி 633-இல் (ஹிஜ்ரி 12) அரேபிய இசுலாமியர்கள் காயலில் வந்து குடியேறியுள்ளனர். இக்காலத்தில் முதன் முதலாகக் கடற்கரையில் ஒரு மசூதி...
கட்டப்பட்டது. அது 'கடற்கரை மசூதி' என்றே பெயர் பெற்றது. பொ.பி 633-640 காலத்தில் இம்மசூதி கட்டப்பட்டிருக்கலாம்.

கேரளத்துக் கொடுங்களூரிலும் இதே காலத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. இவ்விரண்டு மசூதிகளுமே இந்தியாவின் தொன்மையான மசூதிகளாகக் கருதப்படுகின்றன.
அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் பொ.பி 842-இல் (ஹிஜ்ரி 227) எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் ஏற்பட்டது.

முகமது நபியின் வழிவந்த நான்கு காலிபாக்களின் வழித்தோன்றல்களே இங்கு வந்து குடியேறினர். பொ.பி 1500-க்குப் பின்னரே #காயல்பட்டினம் என்னும் பெயர் வழக்கிற்கு வந்தது எனலாம்
பொ.பி 842-இல் வந்தவர்களால் 'குத்பா பெரிய பள்ளி' என்னும் மசூதி கட்டப்பட்டது. கருப்புடையார் பள்ளியில் காலத்தால் முந்திய வீரபாண்டியன் காலத்துக் (பொ.பி 946-966) கல்வெட்டு காணப்படுகிறது.

இக்கல்வெட்டில் இவ்வூர் 'காயல்கரை', 'காசிர ஊர்', 'பவித்திர மாணிக்கப்பட்டினம்' என்று பல பெயர்களில்
சுட்டப்படுகிறது.

#வாசப், #இபின்பதூதா, #மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் #காயல்பட்டினம் துறைமுகத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொ.பி 1284-இல் காயல்பட்டினத்தில் மூன்றாவது குடியேற்றம் நிகழ்ந்துள்ளது.

தற்போது இவ்வூரில் இசுலாமிய மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
தற்போது 31 மசூதிகள் இங்கு உள்ளன. காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (பொ.பி 640) இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஒன்று, ஜடாவர்மன் குலசேகரன் (பொ.பி 1190-1216) காலத்துக் கல்வெட்டாகும். 'பூவின் கிழத்தி' என்னும் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டில்...
இப்பள்ளி வாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை கூறப்படுகிறது.

இவ்வூரில் அப்போது வாழ்ந்த இசுலாமியர்களை #சோனகர் என்றும், அவர்கள் முத்துச்சலாப வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
'காட்டு மக்தூம் பள்ளிவாசல்' கல்வெட்டு காயல்பட்டினத்தில் மற்றொரு பெயராகப் 'பவித்திர மாணிக்கப் பட்டினம்' என்பதைக் கூறும்.

இப்பள்ளிவாசல் 'சோனவர் பிள்ளார் பள்ளி' என்றும் கல்வெட்டில் சுட்டப்படுகிறது.

இப்பள்ளிவாசலில் உள்ள 'உதய மார்த்தாண்ட வர்மன்' காலத்துக்
கல்வெட்டு (பொ.பி 1387)...
இதனை 'உதயமார்த்தாண்ட பெரியபள்ளி' என்று குறிப்பிடுகிறது.

இவ்வூரின் மற்றொரு பெயராக 'சோணாடு கொண்டான்பட்டினம்' என்று வழங்கப்பட்டதையும் கூறுகிறது.

இது முதலாம் 'மாறவர்மன் சுந்தரபாண்டியனின்' சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டதாகும்.
இத்துறைமுகத்தில் வந்திறங்கும் சரக்குகளுக்கான இறக்குமதி வரி இப்பள்ளி வாசலின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது என்பதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

வீரபாண்டியன் பட்டினமே, 'சோணாடு கொண்டான் பட்டினம்' என்று பெயர்மாற்றம் பெற்றதாகவும் தெரிகிறது.
'கொடிமர சிறுநயினார் பள்ளி' பராக்கிரம பாண்டியன் காலத்தில் பொ.பி 1514-ல் கட்டப்பட்டது.

இங்குள்ள கல்வெட்டு இப்பள்ளியை 'துருக்க நயினார் பள்ளி' என்று குறிப்பிடுகிறது.

'அர்த்த மண்டபம்', 'இடைநாழி', 'பெரு மண்டபம்', 'அலம்பு நீர்வாவி' ஆகிய பகுதிகள் இக்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
பொ.பி 900 முதல் 1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர்.

மதுரை பாண்டிய மன்னர்களுடனும், இப்பகுதியின் குறுநிலத் தலைவர்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டனர்.

அரபு இசுலாமியர்கள் நல்ல குதிரைகளைப் பாண்டியருக்கு இறக்குமதி செய்து கொடுத்தனர்
அவசியமான காலங்களில் போரிலும் நேரடியாக ஈடுபட்டு உதவினர்.

பல நாடுகளுக்கும் இங்கிருந்து முத்து, அரிசி, மிளகு போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்தனர்.

காயல் இசுலாமியர்கள் தமிழிலும், அராபியிலும் நல்ல புலமை பெற்றிருந்தனர்.

கல்வியில் சிறந்த ஊராகவும் இவ்வூர் திகழ்ந்தது.
பொ.பி 1530-க்குப் பிறகு காயல்பட்டின இசுலாமியர்களுக்குப் போர்த்துக்கீசியர்களால் தொல்லைகள் மிகுந்தன.

இப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் உதவியுடன், #போர்த்துக்கீசியர் கொச்சியிலிருந்து படையெடுத்து வந்து முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டியை உண்டாக்கினர்.
கிறித்துவ மதப்பரவலும் இங்கு மோதலை உண்டாக்கியது. இருதரப்பிலும் போரினால் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இப்பகுதியின் #இசுலாமியர் பலரும் #கீழக்கரை, #பரங்கிப்பேட்டை, #நாகூர், #காரைக்கால், #பழவேற்காடு, #சென்னை, #இலங்கை ஆகிய பகுதிகளில் குடியேறினர்.
#போர்த்துக்கீசியர் முதலில் #புன்னக்காயல் பகுதியில் கால் ஊன்றிப் பின்னர் #தூத்துக்குடி-யை மையமாகக் கொண்டு வணிகம் செய்தனர்.

அதன்பின் #காயல்பட்டினம் துறைமுகம் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது.

இன்று கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ஊர் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன
▪︎ #வகுதை, #வகுதாரி என்ற பெயரும் காயல்பட்டினத்திற்கு வழங்கியுள்ளது.

'பெரிய குத்பா ஜும்மா' பள்ளியில் உள்ள ஒரு கல்வெட்டு,

'பவித்திர மாணிக்கப் பட்டினம், வகுதைபுரி, காயல் அதிபர் நிலக்கிழார் மறைவிடம் கொல்லம்', என்று கூறுகிறது".
#பல்சந்தமாலை என்னும் இலக்கியநூல் 'வச்சிரநாட்டு வகுதைபுரி' என்று காயல்பட்டினத்தைச் சுட்டுகிறது.

▪︎ #பல்சந்தமாலை, இந்நூல் பொ.பி 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியதாகும்.

இந்நூலிலிருந்து எட்டுப் பாடல்களை #வையாபுரிப்பிள்ளை தனது #களவியற்காரிகை உரையில் எடுத்தாண்டுள்ளார்.
அப்பாடல்களில் #வச்சிரநாடு, #வகுதாபுரி, 'அஞ்சு வண்ணத்தார்', #யவனர், #அல்லா என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

▪︎ அஞ்சு வண்ணத்தார்:

இப்பெயரில் ஒரு வணிகக் குழுவினர் தமிழகத்திலும், கேரளத்திலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் யார் என்பது நீண்டநாட்கள் ஆய்வுக்குரியதாக இருந்தது.
பல்சந்த மாலைப் பாடல்களின் துணைகொண்டு இவர்கள் இசுலாமிய வணிகர்களாக இருக்க வேண்டும் என 'சதாசிவப் பண்டாரத்தார்' முதன் முதலில் கருத்துரைத்தார். அதுவே உறுதிப்படுத்தப்பட்டது.

'அஞ்சு வண்ணத்தார்' என்பவர், பஞ்ச கம்மாளர்களாக இருக்கலாம் என்று முன்வைக்கப்பட்ட கருத்து வலுவிழந்தது.
எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் (பொ.பி 850-ல்) வந்த இசுலாமியர்களே 'அஞ்சு வண்ணத்தார்' ஆவர்.

#ஹாசிம், #பக்ரி, #பருக்கி, #உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து இசுலாமியப் பிரிவினரே 'அஞ்சு வண்ணத்தார்' எனப்பட்டனர்.

பொ.பி 1284-ல் ஒரு குழுவினர் இங்குக் குடியேறினர்.
#கருப்புடையார் பள்ளிக் கல்வெட்டில், 'அஞ்சுவண்ணத் தொழுகை செய்' என்னும் (பொ.பி 944-66) தொடர் இடம் பெற்றுள்ளது.

முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனக் கருதப்படும் #மிராஜ்மாலை என்னும் நூல் ஆலிப் புலவரால் எழுதப்பட்டது.

பொ.பி 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது இந்நூல்.
இதில் 'அண்டர் தருவெனக் கொடுக்கும் அஞ்சுவண்ண முஸ்லீம்கள்' என்னும் பாடல் அடி இடம்பெற்றுள்ளது.

'சதக் அப்துல்லா அப்பா' என்னும் மிகப்பெரிய கல்வியாளர் இவ்வூரில் பிறந்து வாழ்ந்தார்.
இவரது அறிவாற்றலை அறிந்த #ஔரங்கசீப் பொ.பி 1707-ல், இவரை தென்னிந்தியாவின் தலைமை அதிகாரியாக (நீதிபதி) நியமிக்க விரும்பினார்.

இவர் இதனை ஏற்க மறுக்கவே, இவரது மகன் 'முகமதுலெப்பை ஆலிம்' இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
வள்ளல் #சீதக்காதி இவ்வூரில் பிறந்தவர். இறுதிக் காலத்தில் கீழக்கரையில் வாழ்ந்தார்.

இவ்வாறு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் பேசப்படும் #காயல்பட்டினம் இன்றும்,

ஆய்வாளர்களுக்குப் பல அரிய சான்றுகளைத் தந்த வண்ணம் உள்ளது.
பல வெளிநாட்டுக் காசுகளும், சீன, யவனப் பானை ஓடுகளும் இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளன.

உலகமுழுதும் இவ்வூர் மக்கள் வாழ்ந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்மீகத்திலும், கல்வியிலும், அயல்நாட்டு வணிகத்திலும் #காயல்பட்டினம், தன் பழம்பெருமையை இன்றும் தக்கவைத்துள்ளது.

- நன்றி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jun 25
சங்ககால வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!

தமிழக கிரேக்க, ரோமானியக் கடல் வணிகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியமும், கிரேக்க மாலுமி எழுதிய 'செங்கடல் வழிகாட்டி' நூலும் பட்டியலிட்டுள்ளன. Image
#ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

சந்தனமும், மயிலும் #இஸ்ரேல் நாட்டு #சாலமன் மன்னனுக்கு (பொ.மு 970 - பொ.மு 931) அனுப்பப்பட்டன என்று #கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

#கொற்கை முத்தை, #எகிப்து நாட்டின் பேரரசி #கிளியோபாட்ரா பெரிதும் விரும்பி அணிந்துள்ளார். ImageImage
#இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

சங்ககாலக் கடல் வணிகத்தில் ஏற்றுமதிகளைக் காட்டிலும், இறக்குமதி குறைந்த அளவில் கிரேக்க ரோமானிய நாடுகளிலிருந்து பழந்தமிழகத்திற்கு வந்துள்ளன. Image
Read 4 tweets
Jun 21
இலக்கியங்களில் கொற்கையும், வணிகச் சிறப்பும்...!

#தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் சங்க காலப் பாண்டியர்களின் இயற்கைத் துறைமுகம் #கொற்கை.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் தொழிலும், முத்து ஏற்றுமதியும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. Image
செங்கடல் வழி நூலாசிரியர் இதை #கொல்சி என்று எழுதியுள்ளார்.

#கொற்கை தமிழகத்திலுள்ள #புகார், #மாமல்லபுரம், #தொண்டி, #உவரி, #முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறைமுகமாகவும்;

கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.

மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
Read 23 tweets
Jun 20
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
Read 27 tweets
Jun 19
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 7). #வெப்பர், #வேரி, #கந்தாரம்

#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,

தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.

#கந்தாரம் - #புறநானூறு வெட்சித் திணைப் பாடல் ஒன்று (258) #கந்தாரம் எனும் #கள் வகையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 5 tweets
Jun 19
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 5). #நறவு, #நறா, #நனை

சங்க இலக்கியத்தில் #நறவு எனும் சொல் 47 இடங்களில் வந்துள்ளது.

பெரிய மலைகளில் விளைந்த மூங்கில் குப்பிகளில் நிரப்பி முற்ற வைத்த நறவினைக் குறிஞ்சி மக்கள் உண்டதை,

‘வாங்கமை பழுனிய நறவு உண்டு' என்கிறது #நற்றிணை (276:9).
தேறலையும், புளித்த கள்ளையும் உண்டதால் மக்கள் மயங்கி இன்புற்றிருந்தனர் என்பதை,

‘தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல்' என்கிறது #கலித்தொகை (147: 2).
#ஆநிரை கவர்ந்து வரும் களைப்புற்ற தலைவனின் களைப்பினைப் போக்க;

'நறவைப் பிழியுங்கள்,
கடா வெட்டுங்கள், பந்தர்க்கீழ் இளமணல் பரப்புங்கள்'

- என்று முழக்கமிடும் சூழலை #புறநானூறு பின்வருமாறு பதிவிடுகிறது.
Read 6 tweets
Jun 10
கோட்டாற்றுச் சிற்பிகள்...!

#கோட்டாறு என்ற ஊர்ப்பகுதி #கன்னியாகுமரி மாவட்டத்தில் #நாகர்கோயில் அருகில் அமைந்துள்ள பகுதியாகும்.

இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.

முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.

இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.

இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(