Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
Sep 8, 2022 32 tweets 11 min read Read on X
#ஓணம்

ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;

(1)
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு

(2)
அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.

ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய

(3)
ஒரு முக்கியமான கதை உள்ளது, அது தான் கேரள நாட்டின் தோற்றம் குறித்து புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கதை.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான "பரசுராமன்" தன் போர்க் கோடாலியை கடலில் வீசி கடலில் மூழ்கி இருந்த கேரளத்தை மேலே கொண்டு வந்து மீட்டதாக சொல்கிறது புராணக் கதைகள்.

(4)
விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் உருவாக்கிய கேரளாவை ஆண்ட மன்னன் மகாபலியை, விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமனன் எப்படி வதம் செய்திருக்க முடியும்!? ஏதோ லாஜிக் இடிக்கிற மாதிரி இருக்குல்ல. புராணங்களில் லாஜிக் இடிக்காமல் இருந்தால் தான் அதிசயம்,

சரி இங்கு புராணங்களின் படி மகாபலி யார்!?

(5)
பிரம்மாவின் மகன் மரீசி என்பவர், இந்த மரீசியின் மகன் கஷ்யபன், கஷ்யபனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் ஒருவர் திதி இன்னொருவர் அதிதி. திதி எனும் மனைவிக்கு பிறந்தவர்கள் அசுரர்கள் எனவும் அதிதி எனும் மனைவிக்கு பிறந்தவர்கள் தேவர்கள் எனவும் விஷ்ணு புராணம் கூறுகிறது.

(6)
திதி எனும் மனைவிக்கு பிறந்த அசுரர்களில் ஒருவர் ஹிரண்யகசிபு அதாவது இரணியன், இரணியனைப் பற்றிய கதை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை கொன்ற பிறகு இரணியனின் மகன் பிரகலாதன் அசுரர் தலைவராக பதவி ஏற்கிறார். பிரகலாதனின் மகன் விரோசனன்,

(7)
இந்த விரோசனனின் மகன் தான் மகாபலி, அதாவது பிரகலாதனின் பேரன் தான் மகாபலி.

பிரகலாதன் எப்படி தீவிர விஷ்ணு பக்தராக இருந்தாரோ அதேபோல மகாபலியும் தீவிர விஷ்ணு பக்தர். மேலும் இந்து புராணங்களின் படி ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் மகாபலி, இறப்பே இல்லாத பிறவி இவர்.

(8)
இந்து மத புராணங்களின் படி வாமனன் மகாபலியை அழிப்பதற்கான காரணத்தை பல விதமாக கூறுகிறார்கள்.

முதல் கதை, மகாபலி அசுரர் குல தலைவன் இந்த அசுரர் சக்கரவர்த்தி ஆட்சியில் மக்கள் மிக செழிப்பாக இருந்ததாகவும் அவர் மிக சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் அதை கண்டு தேவர்கள் பொறாமை கொண்டு

(9)
விஷ்ணுவிடம் சென்று முறையிட்டதாகவும், தேவர்களை திருப்தி படுத்த தன் பக்தனான மகாபலியை வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு அழித்ததாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது கதை, அனைத்திலும் சிறந்து விளங்கிய மகாபலி கடைசியாக தேவர் குல தலைவனாகும் ஆசையும் கொண்டார்.அனைத்திலும் சிறந்த விஸ்வஜீத் யாகம்

(10)
நடத்தியதாகவும்(விஷ்வா என்றால் பிரபஞ்சம் மற்றும் ஜீத் என்றால் வெற்றி. இதன் மூலம், விஸ்வஜீத்தை பிரபஞ்சத்தை வென்றவர் என பொருள் கொள்ளலாம்)அது பிடிக்காத தேவர்களும் இந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டு அதற்கு இணங்க, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அழித்ததாகவும் சொல்கிறார்கள்.

(11)
இந்த முதல் கதையில் வாமன உருவில் இருந்த விஷ்ணு மகாபலியின் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் தள்ளவில்லை, சுதலம் எனும் சொர்க்கத்தை விட மேன்மையான ஒரு இடத்திற்கு தள்ளி மோட்சம் கொடுத்தார் என சொல்லப்படுகிறது. சூதலத்திற்கு விஷ்ணுவே துவார பாலகனாக இருப்பதாகவும் கதைகள் உண்டு.

(12)
பாகவத புராணத்தின் படி ஏழு கீழ் உலகங்களில் ஒன்றாக பாதளத்தை குறிப்பிடுகிறது. அசுரர்களின் கட்டிடக் கலைஞரான மயன், பாதாள லோகத்தில் பல அழகிய கட்டிடங்கள் கட்டினார். அந்த அழகிய இடம் தான் சுதலம்.

விஷ்ணு புராணத்தின் படி, ஏழு கீழ் உலகங்களை, அதலம், விதலம், நிதலம், தலாதலம், மகாதலம்,

(13)
சுதலம் மற்றும் பாதாளம் பெயர்களால் குறிப்பிடுகிறது. இதிலும் சுதலம் என்பது தேவர்களே செல்ல ஆசை கொள்ளும் அளவிற்கு மிக அழகான இடம் என சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது கதையில் மகாபலி பாதாளத்திற்குள் தள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

(14)
இதே போல வாமனனுக்கும் ஒரு கதை உண்டு அனைவருக்கும் பொதுவாக தெரிந்தது வாமனன் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம். விஷ்ணு புராணத்தின்படி தேவர்களை பெற்றெடுத்த அதிதி தனக்கு விஷ்ணுவே மகனாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்து அவளுக்கு பிறந்த மகன் தான் வாமானன். அதாவது வாமனன் மகாபலியின் தாத்தா.
(15)
இப்படி இந்து மத புராணங்களின்படி பார்த்தால் ஒன்று தன் தீவிர பக்தன் மகாபலியை தேவர்களின் பொறாமை காரணமாக விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அழித்துள்ளார், அதுவும் தன் சொந்த பேரனையே அழித்துள்ளார் இந்த பொறாமைக்கார தேவர்களுக்காக.

(16)
இந்த கதையில் எங்காவது நியாயம் உள்ளதா!? ஒரு அசுரன் தன் மக்களை சிறப்பாக ஆட்சி செய்தான் அவன் ஆட்சியில் மக்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் இருந்தனர் என்பது நல்ல விஷயம் தானே, பிறகு ஏன் அவனை அழிப்பதாக கதை சொல்லப்பட்டுள்ளது!

மகாபலி சிறப்பாக இருந்ததால் அவன் அழிக்கப்பட்டான்
(17)
என்பது மேலோட்டமாக இருக்கும் விஷயம், ஆனால் நுட்பமாக பார்த்தால் ஒரு விஷயம் புரியும்,

எப்படி சூத்திரனான ஏகலைவனின் கட்டைவிரல் அவன் சிறந்த வில்லாளனாக இருந்த ஒரே காரணத்தினால் துரோணாச்சாரியாரால் சூழ்ச்சி செய்து முறிக்கப்பட்டதோ, சூத்திரனான சம்புகன் தவம் செய்த ஒரு காரணத்திற்காக

(18)
அவன் தலை ராமனால் கொய்யப்பட்டதோ. அதே போல அசுரனான மகாபலி தேவர்களை விட சிறப்பாக இருந்தான் என்பதற்காக விஷ்ணுவால் சூழ்ச்சி செய்து அழிக்கப்பட்டான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்து மதத்தின் மிக முக்கிய புராணங்களாக சொல்லப்படும் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூட மகாபலி

(19)
பற்றிய குறிப்புகள் உள்ளது. மகாபாரதத்தில் வரும் வன பர்வம் மற்றும் சாந்தி பர்வத்தில் மகாபலி பற்றி சொல்லப்பட்டுள்ளது.

வாமனனால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட மகாபலியை, இராவணன் பாதாளத்திலிருந்து விடுவிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

(20)
அதேபோல பாகவத புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்திலும் கூட மகாபலியை பற்றிய குறிப்புகள் உள்ளது.

மேலும் இந்து மத புராணங்கள் தவிர பௌத்தம் மற்றும் ஜைனம் புராணங்களிலும் மகாபலியை பற்றிய குறிப்புகள் உள்ளது.

(21)
பௌத்த நூல்களான லோட்டஸ் சூத்ரா (Lotus sutra) தான பரமித சூத்ரா (Dana Paramita sutra) போன்ற நூல்களிலும் நாராயணனால் சிறைபிடிக்கப்பட்ட மகாபலி என்பது போன்ற குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் ஜைன மதத்தில் ஒன்பது துஷ்ட சக்திகளில் ஆறாவது துஷ்ட சக்தியாக மகாபலி சொல்லப்பட்டுள்ளார்.

(22)
ஜைன கதையின்படி மகாபலி ஒரு வில்லன்.

சரி இத்தனை புராணக் கதைகளையும் கடந்து வரலாற்றுப் பூர்வமாக மகாபலி எனும் மன்னர் வாழ்ந்ததற்கான தரவுகள் ஏதேனும் உள்ளதா என்று பார்த்தால் அப்படி எந்த தரவும் இல்லை என்பதுதான் உண்மை.

(23)
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக இத் திருவிழாவை எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
(24)
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர"
~ மதுரைக் காஞ்சி (590 - 599)

(25)
அதாவது, ஓண நாளில் காய்கறி, கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் எனவும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுக்களைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என மதுரையில் நடைபெற்ற ஓணத்தை விளக்கியுள்ளார்.

(26)
அதே போல பெரியாழ்வார் திருமொழியில் 6 ஆம் பாடல், இரண்டாம் திருமறையின் தேவார பாடல் 503,
பரிபாடலில் உள்ள 55 -ஆவது பாடல், என பல பக்தி இலக்கிய பாடல்களிலும் ஓணம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மொத்தத்தில் மகாபலி எனும் மன்னனின் கதை முழுக்க முழுக்க பக்தி சார்ந்து மட்டுமே காணப்படுகிறதே

(27)
தவிர வரலாற்று ரீதியாக மகாபலி மன்னனுக்கும் வாமனனுக்கும் நடந்த நிகழ்வுகள் என சொல்லப்படும் எதற்கும் எந்த விதமான தரவுகளும் இல்லை.

வரலாற்று ரீதியாக அப்படி ஒரு விஷயம் இல்லாத போது ஏன் ஓணம் குறிப்பிட்ட மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் மழை முடிந்ததும்,

(28)
எங்கு பார்த்தாலும் அறுவடைகள் நடக்கும் அதை தொடர்ந்து வியாபாரங்கள் நடக்கும்.

மழை பெய்யும் போது கடல் வழி போக்குவரத்து சிரமம், ஆடி மாதம் மழைக்காலம் முடிந்து கடல் வழி போக்குவரத்திற்கு ஏதுவான சூழல் உருவாகும் அப்போது வணிகர்கள் கடல் வழியாக பயணித்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

(29)
அறுவடையும் வியாபாரமும் நடந்து மக்கள் செல்வ செழிப்புடன் இருக்கும் நாட்களில் தான் இந்த ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இந்த ஓணப்பண்டிகையை, அறிவுக்கு பொருந்தாத பல கட்டுக்கதைகளை எழுதி ஒரு மதப் பண்டிகையாக மாற்றி முயற்சித்துள்ளனர்.

(30)
தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவான பொங்கல் போன்று, கேரளாவின் அறுவடை திருவிழா தான் இந்த ஓணம்.

பண்பாட்டு விழாவை மதவிழாவாக மாற்ற முயன்றாலும், இன்றும் கேரள மக்கள் சாதி மதம் கடந்து அனைவரும் ஓணம் கொண்டாடுகின்றனர்.

(31)
கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஓணம் கொண்டாடிய காணொளி. இது ஒரு உதாரணம் தான், இது போல பல இடங்களிலும் சாதி மதம் கடந்த பண்பாட்டு பண்டிகையாக ஓணம் கொண்டாடப்படுகிறது.

சர்ச்சில் ஓணம் கொண்டாடிய காணொளி 👇🏽



(32)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Jan 3
#BookRecommendations #Thread

2024-ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று (03-01-2024) முதல் 21-01-2024 அவரை நடைபெறுகிறது, பலருக்கும் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என திட்டமிடல் இருக்கும், சிலருக்கு எதைவாங்குவது என குழப்பம் இருக்கும், அப்படி குழப்பத்தில் உள்ளவர்கள் வாங்க
👇🏽 Image
வசதியாக பல தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை இங்கே தொகுத்து பதிவிடுகிறேன், விருப்பம் உள்ள தோழர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்துப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.

புத்தகங்களின் பட்டியல் கீழ்வருமாறு.

👇🏽
நாவல் ;

📙 புத்தகம் :- பர்தா
ஆசிரியர் :- மாஜிதா
பதிப்பகம் :- எதிர் வெளியீடு

📙 புத்தகம் :- இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் :- இமையம்
பதிப்பகம் :- க்ரியா வெளியீடு

📙 புத்தகம் :- உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
ஆசிரியர் :- அரிசங்கர்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்

👇🏽
Read 26 tweets
Aug 18, 2023
#BookRecommendations #BookReview #Thread

பார்ப்பனியம் தன்னை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன செய்யும் என்பதை இன்றைய அரசியல் சூழல் நமக்கு புரிய வைக்கிறது. இந்த பார்ப்பனியத்தின் ஆணி வேர் முதல் அதன் கிளைகள் வரை அலசி ஆராய்கிறது தொ. பரமசிவன் அவர்களின் "இது தான் பார்ப்பனியம்"புத்தகம்.

(1) Image
வரலாற்றுப் பூர்வமாக பார்ப்பனியம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவியது, அரசர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எப்படி வளர்த்துவிட்டார்கள் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார்.

(2)
பார்ப்பனர்கள் யார், அவர்களுக்கிடையிலுள்ள உட்பிரிவுகள் என்ன அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார், அதோடு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தையே எப்படி தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதையும்,

(3)
Read 10 tweets
Jun 18, 2023
#BookTwitter #Bookmark #readingcommunity
நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக,
தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன்.

(1)
புத்தகம் : கிடை

எழுத்தாளர் : கி.ராஜநாராயணன்

பக்கங்கள் : 61

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

விலை : 73

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் : amzn.eu/d/1dq5ppP

(2) Image
புத்தகம் : குறத்தி முடுக்கு

எழுத்தாளர் : ஜி. நாகராஜன்

பக்கங்கள் : 96

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

விலை : 125

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும் : amzn.eu/d/ffck3vQ

(3) Image
Read 6 tweets
Jun 9, 2023
#BookTwitter
#Thread
#ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.

(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)

எழுத்தாளர் : இமையம்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 40

(2) Image
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)

எழுத்தாளர் : ஜெயமோகன்

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்

பக்கங்கள் : 80

(3) Image
Read 12 tweets
Jun 8, 2023
#BookRecommendation

#Bookreview

வெறும் கவிதை தொகுப்பல்ல "பெருந்தேவி" அவர்களின் "அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது" புத்தகம்.

ஆழ்மன உருவமில்லா எண்ணங்களின் வார்த்தை வடிவம். காதல் காமம் வன்மம் உதாசீனம் நட்பு வெறுமை ஆதங்கம் நிதானம் என பல உணர்வுகளின் தொகுப்பு,

(1) Image
பாலின அரசியல் சமகால அரசியல் டெக்னாலஜி ரசனை என பல முகங்கள் கொண்ட கவிதைகள் அணிவகுத்து நிற்கின்றன இந்த புத்தகத்தில்.

என்னை மிகவும் கவர்ந்த ஒரு கவிதையை இங்கே பகிர்கிறேன்,

(2) ImageImage
இது மட்டுமல்ல,

"யாருமில்லாத இடத்திலும்
யாரும் கைவிடப்படுவதில்லை"

"நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது"

"தம் பிடித்து குளத்தைத் தாண்டும் பாவனையில்
கடலைத் தாண்ட முடியுமா?"

"ஒரு நினைவூட்டலில் வற்றிவிட்ட காதல் நீரூற்றுக்காக"

(3)
Read 7 tweets
Apr 1, 2023
#BookReview

#Thread

வானில் மிதக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த உருவங்களை பொருத்திப் பார்த்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மைப் போல மேகங்களில் மிதந்து வரும் உருவங்களுடன் விளையாடி சிரித்து மகிழும் மென் வண்ணத்துப்பூச்சி இவள்.

(1)
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.

தன் கனவுகளை மட்டுமல்ல தன்னை சுற்றி இருந்தவர்களையும் சேர்த்தே சுமந்தாள்.

(2)
கணேசன், அலங்காரவேலன், அப்புனு, ஜோதி, தவமணி, தனக்கே தனக்கான ரேவதி என அனைவரையும் சுற்றி இருந்த அவள் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொருங்கிய பின்னும், உற்ற தோழியாக உடன் இருந்த உடன்பிறவா சகோதரி மல்லிகா அக்கா, அவர் மகன் சிவக்குமார் என வாழ்வில் ஏதோ ஒரு பிணைப்புடன் ஓடினாள்.

(3)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(