#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீராமர் உதித்த ரகுவம்சத்தில் #ஹரிச்சந்திரன் என்ற மஹாராஜா மாபெரும் வேந்தனாக‌ அரசாண்டு வந்தான். அவன் சத்தியத்தையும், நேர்மையையும் உயிர் மூச்சாக கொண்டிருந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்று மகனும் இருந்தார்கள். நாடு சுபிக்க்ஷமாகவும்
எதிரிகளின் பயமில்லாமல் இருந்தது. ஆனால் விதியின் விளையாட்டால் ஹரிச்சந்திரன் நாட்டை இழக்க நேர்ந்தது, மனைவியையும், மகனையும் விற்கவும் நேர்ந்தது.  விதி, பக்திமானான ஹரிச்சந்திரனை மயானத்தை காவல் காக்கும் பணியில் அமர்த்தியது. இந்த இழி நிலையிலும் ஹரிச்சந்திரனும் தன் சுயதன்மையை இழக்காமல்
அழிவில்லாமல் என்றும் நிலைத்திருக்கும் உண்மையையும், நேர்மையையும் அந்நிலையிலும் விடாமல் கடைப்பிடித்து வந்தான். பல ஆண்டுகள் இந்த நிலைமையில் கழிந்தன. ஒரு நாள் தன் நிலையைக் குறித்து துக்கசாகரம் என்னும் மஹா சமுத்திரம் அரசனை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக அவன் அப்போது கௌதம
மஹரிஷியைக் கண்டான். தன் இரு கரங்களையும் கூப்பி கௌதமரை பணிந்து, சோகம் நிறைந்த தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை கூறினான். ஹரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்ட கௌதம முனிவர் மிகவும் அதிர்ச்சியடைந்து, இவ்வுலகை வல்லமையுடன் ஆண்ட மாவேந்தனை பிணங்களிலிருந்து துணியை சேகரிக்கும் பணிக்குக் கொண்டு
வந்த விதியின் துரதிர்ஷ்ட விளையாட்டை எண்ணி வருந்தினார். இந்நிலையில் இருந்து மீள அஜா ஏகாதசி உபவாச விரதத்தின் மஹிமையை எடுத்து உரைத்தார். பாபங்களை எல்லாம் நீக்கி, மிக புண்ணிய பலன்களை அளிக்கும் அஜா ஏகாதசி, பாத்ரபத மாத கிருஷ்ணபட்சத்தில் வருகிறது. அஜா/அன்னதா ஏகாதசி மிகவும் மங்களமானது.
அன்று மற்ற விதிமுறைகளை பின்பற்றாமல் முடியாமல் போனாலும், உபவாசத்தை மட்டும் கடைப் பிடித்தாலே அனைத்து பாவங்களை நீக்கும் வல்லமை பெற்றது. நீ செய்த பாக்கியம், இன்றிலிருந்து ஏழாவது நாள் அஜா ஏகாதசி திதி. அன்று பகவான் மஹாவிஷ்ணுவை தியானித்து, உபவாசம் இருந்து, இரவு முழுதும் கண் விழித்து
பகவானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிரு. இதனால், முற்பிறவியின் பாவச்செயல்களின் தளைகளிலிருந்து விடுபடுவாய். ஹரிச்சந்திரா, நான் இங்கு வந்தது, நீ என்னைக் கண்டது எல்லாம் கூட கடந்த காலத்தில் நீ செய்த புண்ணிய தர்ம காரியங்களின் பலனாகத் தான். நீ வருங்காலத்தில் சர்வ மங்களங்களோடும் அனைத்து
பாக்கியமும் பெற்று வாழ என் ஆசிகள் என்று வாழ்த்தி, அரசனின் கண்களிலிருந்து மறைந்தார்.
ஹரிச்சந்திரனும் கௌதம முனிவரின் வார்த்தைகளின்படி புண்ணியங்களை அளிக்கும் அஜா ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டான். பாண்டவர்களில் யுதிஷ்டிரர், ராஜா ஹரிச்சந்திரா இருவரும் அந்நாளில் உபவாசம் இருந்து விரதத்தை
சரிவர மேற்கொண்டதன் விளைவாக, முற்பிறவியின் பாபங்கள் அனைத்து அழியப் பெற்றான். ஹரிச்சந்திரனின் துன்பங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகியது. இவ்விரதத்தின் பலனாக, மாயையால் மாண்டு மீண்டும் புத்துயிர் பெற்ற தன் மகன், மனைவி ஆகியோருடன் இணைந்தான். சொர்க்க லோகத்தில் வசிக்கும்
தேவர்கள், துந்துபி நாதம் ஒலிக்க, மலர்களை ஹரிச்சந்திரன், அவன் மனைவி சந்திரமதி மற்றும் மகன் லோகிதாசன் மீது தூவி வாழ்த்தினர். ராஜா ஹரிச்சந்திரன், தான் செய்த விரதத்தின் பலனாக, இழந்த ராஜ்ஜியத்தையும் எளிதில் மீட்டு ஆனந்தத்துடன் வாழ்ந்தான். இறுதியில் அவன் மட்டுமல்லாமல், அவனுடைய உற்றார்
உறவினர்கள், குடிமக்கள் அனைவரும் அவனுடன் பக்தி லோகத்தை அடையும் பேறு பெற்றனர்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 15
#MahaPeriyava Once some learned people were conversing with Sri Maha Periyava. Even though the topic was on a high level Vedantic matter, Periyava’s talk and the language was so simple that even an illiterate could understand it easily. It was different from the lectures normally Image
delivered by Pundits. At that time, a young man from Australia came there to have His darshan. The young man was doing research on the comparison of various religions and he could speak small sentences in Sanskrit. After the normal enquiries, Periyava asked him what he wanted.
“How should I be? How should I live? What is way of life? What is the way to perform good deeds in life and to get good results?” The young man piled his queries, politely. After a few minutes silence, Periyava said, “All that is okay. But why come here (Kalavai was the place)
Read 20 tweets
Sep 15
#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும்  விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான் Image
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி  மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார்.  தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே  வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில்  மனைவி குழந்தைகள் உணவின்றி
Read 16 tweets
Sep 15
#நற்சிந்தனை
ராம ராம ராம ராம!
ராம நாம ஜபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழ வேண்டி இருந்தால் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்படும். ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ராம நாமமே. எல்லாவித Image
பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ஸ்ரீராம நாமம். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜயம் சேர்க்கப்பட்டு ராம ஜயம்
என உச்சரிக்கப்படுகிறது. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜபத்தினால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி, ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கப்படும். வினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும்
Read 5 tweets
Sep 15
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் Image
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
Read 12 tweets
Sep 14
#The_cause_of_anger A monk decides to meditate alone away from his monastery. He takes his boat out to the middle of the lake, moors it there, closes his eyes and begins his meditation. After a few hours of undisturbed silence, he suddenly feels the bump of another boat colliding Image
with his own. With his eyes still closed, he senses his anger rising, and by the time he opens his eyes, he is ready to scream at the boatman who dared disturb his meditation. But when he opens his eyes, he sees an empty boat that had probably got untethered and floated to the
middle of the lake. At that moment, the monk achieves self-realization, and understands that the anger is within him, it merely needs the bump of an external object to provoke it out of him. From then on, whenever he comes across someone who irritates him or provokes him to anger
Read 4 tweets
Sep 14
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கொடியில் உணர்த்தியிருந்த புதிய புடவையை ஆசையோடு பார்த்தாள் கமலாபாய். இதுவரை ஒரே ஒருமுறை தான் அதை உடுத்தி இருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். சற்று விலைமதிப்புடையது. #துக்காராமின் மனைவ Image
நல்ல சேலைகளையும் கட்டுவாள் என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே! துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லா விட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! உத்யோகம் புருஷ லட்சணமாம்? ஆனால் துக்காராம்
எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள் தான் வாங்கிக் கொடுத்தாள்.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(