அனைவருக்கும் வெற்றியைத் தரும் #விஜயதசமி நல்வாழ்த்துகள்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னை மகிஷாசுரனை அழித்து வெற்றி பெற்றாள்.
இந்த நாளை விஜயதசமி (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகின்றனர். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் #ராம்லீலா என்றும் கொண்டாடுகிறார்கள். புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து
வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்த நாள் விஜயதசமி. இந்த நாளில் எந்த
ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது இந்து மத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். விஜயதசமி கல்வி
தொடங்க உகந்த நாள். இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல் முதலாக எழுத்தறிவிக்கப் படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு #வித்யாரம்பம் என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, இசை வகுப்புகள், இதர கலைகளை கற்க புதிய வகுப்புகள்
தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துகள் எழுதப்படும்). மேலும் அவரவர் அபிமான
தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். புதிய ஆரம்பம்! இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவர் என்பது ஐதீகம். விஜய தசமி நன்னாளில் சிவன் கோவில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறும். இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம். இதன் மெய்
பொருள் என்னவென்றால், வன்னி மரம் மனிதனாக கருதப்படுகிறது. இறைவன் வன்னி மரத்தில் அம்பு போடுவது, நமக்கு ஞானத்தை உபதேசிப்பதாக அர்த்தம். அம்புகள் தான் ஞானம். விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம். தேவி மாகாத்மியத்தில் மகா நோன்பு என்று
குறிப்பிடப்படும் நாள் இது தான். மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் புகுவதற்கு முன்பு பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்தில் மறைத்துவைத்து தாய் துர்கையை வணங்கி ஸ்தோத்தரித்தனர். பின் ஓராண்டு முடிந்து திரும்பி வந்து துர்கையை மீண்டும் போற்றி வழிபட தாய் துர்கை அவர்களின் ஆயுதங்களை வழங்கி
ஆசி அருளிய நாள் விஜயதசமி. விஜய தசமி அன்று பல கோவில்களில் நடக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. சண்டி என்பது முப்பெரும் தேவியரை குறிப்பிடுவது ஆகும்.
புதிய ஆரம்பத்தை வரவேற்போம்! வெற்றியை பெறுவோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#HappyVijayadashami

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 7
#MahaPeriyava
This man was the miser of all misers! He was of course a wealthy man but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time. Image
Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say" asked Periyava.
"Certainly" said the man.
"It might be difficult.”
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever
Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer”saying this, he wiped his eyes. Generally, Maha Periyava had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Could Periyava let him down?
Periyava said, "In the well,
Read 8 tweets
Oct 6
#நற்சிந்தனை
சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது. நன் முறையில் முன்னேற விரும்பினால் நம் பக்கத்தில் இருப்பவர் யார் என்பதில் அதிக கவனம் Image
செலுத்த வேண்டும். சிலர் எப்பொழுதும் நடக்கும் அனைத்து கெட்டதையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எந்தச் செயலை செய்ய தொடங்கும் போதும் அதைரியப் படுத்துவார்கள். அவர்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அதே சமயம் இடித்துரைக்க, எடுத்து சொல்லத் தக்கவர்களை நம் அருகில் வைத்துக் கொள்ளத்
தவறக் கூடாது. ஆமாஞ்சாமிகளை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொண்டதால் வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள், அரசியல்வாதிகள், தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள். நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. காரில்
Read 7 tweets
Oct 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #துளசி எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் துளசி தேவியை வணங்கி வருகிறார்களோ அங்கு யமதேவன் நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் தீபமேற்றி பூஜிப்பவர் நூற்றுக் கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும் துளசியை வலம் வந்து ImageImage
வணங்கினாலும் எல்லா பாபங்களும்
நீங்கும். தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். பகவானது தாமரைப் பாதங்களில் ImageImage
சந்தனம் கலந்து துளசி இலையை சமர்ப்பிப்பவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை, துவாதசி, சூர்ய
சங்கராந்தி, உச்சி மதியம், இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட Image
Read 6 tweets
Oct 5
#திருவண்ணாமலை #அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டி முடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியான கல்வெட்டுகள் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் Image
ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்கள் இக்கல்வெட்டுகளில் இருந்து தான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் கட்ட சுமார் 1000 ஆண்டுகள் ஆன தகவலும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல Image
நூறு கல்வெட்டுகளில் 119
கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் ஏராளமான தகவல்கள், வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் ஆலயத்தின் பழமை, சிறப்புகள், துல்லியமாக கிடைத்து Image
Read 21 tweets
Oct 5
One of the advices given by my father, when he was alive, which I cherish to this day, was to always look at the positives and ignore the negatives. Always #count_your_blessings. When I read this story I was reminded of my father.
A famous book writer sat in his study. He took
his pen and began to write.
"Last year, I had surgery to remove gallstones. I was bedridden for a long time. In the same year, I turned 60 and was retired, quitting a company that I loved so much. I had to leave the job I've been doing for 35 years. That same year I was abandoned
by my beloved mother who passed away. Then, still in the same year, my son failed his final medical exam because of a car accident. Repair costs from the car damage marked the peak of bad luck last year. At the end he wrote, What, what a bad year!
The writer's wife entered the
Read 8 tweets
Oct 4
#MahaPeriyava #ResultofAmbalWorship
Ambal upasana itself is a great blessing. We do not require any other boon. But due to the entanglement in the world which is perceived through Maya, we are unable to shed our ego initially and seek the happiness derived out of meditating on
Her and for Her sake alone. We expect something in return and worship her in anticipation of our wishes getting fulfilled. She also gives allowance by answering all our prayers as long as they are fair and not against Dharma.
Acharyal knows the nature of humans. He knew that if
said initially that by the upasana of Ambal we can get rid of births and attain Moksha no one would be interested to involve themselves. So when listing out in the #Soundaryalahari as to what one can get by Ambal’ s worship, he starts with knowledge, wealth, and beauty. In the
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(