#பழனி_தண்டாயுதபாணி_திருக்கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிறு குன்றின் மேல் தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டது
முருகனின் விக்ரகம் நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப் பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்தது. இவை ஒன்று சேர்ந்து மருந்தாக அமைகிறது. இந்த நவபாஷாண விக்ரகம் மீன்களை போன்று செதில்களை கொண்டு உயிர்ப்புடன் இருந்து வியர்ப்பது ஓர்
அதிசயம். வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் விக்ரகத்தின் மீது முழுவதுமாக சந்தனக்காப்பு சத்தப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் விபூதி என்பவை. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய
படுகிறது. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும். தவ வாழ்க்கை நாடுபவர்களுக்கு ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கு
சுலபத்தில் வந்துதவுவார் முருகன். அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில்
கொண்டிருக்கும் புனித தலம் தான் பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில். இவர் கையில் உள்ள தண்டம் மிகவும் அருள் வாய்ந்தது. முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி
கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் ஞானாசிரியனாக இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.
இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. #திருப்புகழ் எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய #அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார். பழனி மலைக்கு செல்லும் வழியில் #இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு 
அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த இடும்பன் எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் சக்திகிரி, சிவகிரி என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான்
தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை
உண்டானது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. இங்கு கோவில் கொண்டு பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு
பெயர் பெற்ற ஊராகும். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த
கோயிலில் தங்கத் தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, தொழில் செழிக்க, செல்வம் பெருக இங்கு அதிகளவில் பிரார்த்தனைகள் செய்கின்றனர். முருகனுக்கு காவடி எடுத்தும், பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்வித்தும், அலகு குத்தியும்
முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துப் படுகிறது.
திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின்
உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு. மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் இருக்கும் கோவில்களில்
கோடிக்கணக்கில் பக்தர்களின் காணிக்கையை பெரும் கோவிலாக பழனி மலை முருகன் கோவில் இருக்கிறது. இங்கிருக்கும் போகர் சித்தரின் சமாதியில் வழிபடுவதால் இன்றும் சூட்சம வடிவில் இந்த பழனி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போகர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்தருள்கிறார். ஆன்மீக ஞானம் பெற,
திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மேன்மை போன்றவற்றிற்காக பக்தர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி கோவில் உட்பட அத்தனை கோவில்கள், சந்நிதிகளும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை திறந்து
இருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
பழனி
திண்டுக்கல் மாவட்டம் – 624 601
தொலை பேசி எண்
4545 242293
4545 242236
ஓம் சரவணபவாய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 11
#எழுத்தாளர்_சுஜாதா தான் எழுதினாரா என்று தெரியவில்லை ஆனால் வாட்சப்பில் வந்தது, அவர் எழுத்து சாயலில் உள்ளது. அருமையான அலசல! #ஶ்ரீவைஷ்ணவம் #பகுத்தறிவு

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும்
பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.” இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற” என்பேன்
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை
எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்” என்பார். அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக் கொள்ளச் சொல்ல மாட்டார். அவர் வேண்டிக் கொள்ளச் சொல்லுவது, நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ என்பார். இவை
Read 21 tweets
Dec 10
#தீபம்_விளக்கு எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம். சகல விதமான செல்வங்களை சுகபோகங்களை விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குல தெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் Image
கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால் Image
விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது. கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலை, தொல்லைகளை, பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின் Image
Read 8 tweets
Dec 10
#திருவண்ணாமலை
திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். Carbon datingம் இதை உறுதி செய்கிறது. மலையே சிவபெருமானின் அம்சம். Image
அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது. அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டு Image
இருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகிறது. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் Image
Read 14 tweets
Dec 10
#தொட்டமளூர்_நவநீதகிருஷ்ணன்

வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபட்ட தலம் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டமளூர் அப்ரமேயப் பெருமாள் கோயில். ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் இங்கே தவழ்கிறான் கண்ணன். நான்காம் Image
நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக் ImageImage
கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளதால் ‘ராம அப்ரமேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள். இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளது
தக்ஷிண அயோத்தியை, சதுர் வேத மங்களபுரம், ராஜேந்திர Image
Read 19 tweets
Dec 9
#MahaPeriyava
This industry was a partnership business. Lot of money had been pumped in and when it became sick, one of the two partners stayed out of the day to day running of the factory. The other struggled to continue the business and somehow managed to pay the workers and Image
keep the wheels moving. But, at a certain point, it became a court case. The man who was managing the show hired a lawyer. The lawyer and he were both devotees of Sri Maha Periyava. The lawyer suggested that they go to Kanchi and take Periyava's blessings. But the client said he
did not wish to disturb Sri Maha Periyava for such a petty materialistic thing. The lawyer was surprised and impressed and said, “Alright, I will conduct the case. We will take His blessing only to guide us.” The client reluctantly agreed and the next morning they drove down to
Read 8 tweets
Dec 9
#மகாபெரியவா
பெரியவர் மகாராஷ்டிரத்தில் பயணம், பூனாவில் முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர் இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர். யாரிடமும் நல்ல பெயர் இல்லாதவர்.
பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல அவர் பெரியவரான்னு பார்த்து விடுகிறேன். என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும்? இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன் என்றெல்லாம் கொக்கரித்தார். அவர் குடும்பத்தார்
மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜையைப் பார்க்க ஆயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த வம்பரும் சென்று கடைசியில் கடைசியாய் இருந்து கொண்டு கையில் மையை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்தார். அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது திருநீர்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(