#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதாத்யயனம் நிறைவு பெற்று, இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது. ஒவ்வொரு மாணவனும்,
வேதத்தின் சிற்சில பகுதிகளைக் கூறும்படி ஆக்ஞாபித்து, கவனத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு வித்யார்த்தி (மாணவன்), செவிக்கு இன்பமாகவும், தெளிவாகவும் ஒப்பித்தான். பெரியவாளுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
“இவனுக்கு என்ன மார்க் போட்டிருக்கு?” என்று தேர்வு நடத்திய
விற்பன்னர்களைக் கேட்டார்கள்.
“இரண்டாம் கிளாஸ்” என்று பதில் வந்தது.
பெரியவா, சில விநாடிகளுக்குப் பின், “மார்க் லிஸ்டை சரியாகப் பார்” என்றார்கள்.
தேர்வு செய்த பண்டிதர்கள் கொடுத்த மதிப்பெண்களை மறுபடியும் கூட்டிப் பார்த்தபோது, அந்தப் பையன் தான் மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிக மார்க்
வாங்கியிருந்தான்!
“க்ஷமிக்கணும்” என்று பணிவுடன் கூறி, பெரியவாளிடம் மன்னிப்பு கேட்டார் தேர்வுக் குழுவின் தலைவர். முதல் மார்க் பெற்ற மாணவனுக்கு, சந்தோஷம் தாங்காமல் அழுகையே வந்துவிட்டது! பெரியவாளுக்கு உள்ளூர ஒரு நிறைவு.
“அவன் அழறதைக் கேளு, ஸ்வரம் தப்பாமல் – உதாத்தம், அனுதாத்தத்துடன்
அழறான்” (ஸ்வரம் வகை)
கடல் இரைச்சல் போல சிரிப்பொலி எழுந்தது.

********
கட்டுரையாளர்-பி.ராம கிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி

ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்த போதுஅவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம் வந்து இருந்தது. அந்த சமயத்துல ஏழு வயசு
சின்னப் பையன் ஓடி வந்து பெரியவா முன்னால் நின்றா. யாரும் எதிர்பார்க்காத விதமாக, மகா பெரியவாவிடம் “சார் இவ்வளவு பேர் உங்களைப் பார்க்க வராளே. நீங்க வி.ஐ.பி தானே. உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா" என்று கேட்டான்.
மகாபெரியவாளை அவன் 'சார்'னு கூப்பிட்டதும் கையெழுத்தைக்
கேட்டதும் பலருக்கு பதட்டம். ஆசார்யா என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்தனர். ஆனால் அவர் எதுவுமே சொல்லாமல் அந்தப் பையனைப் பார்த்து மென்மையாக சிரித்தார்.
"நான் வி.ஐ.பி. எல்லாம் இல்லைப்பா. ஆமா. எதுக்கு என்னோட கையெழுத்தைக் கேட்கிறே?” என்று கேட்டார்.
தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப்
புத்தகத்தைக் காட்டிய அவன்,"இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய முக்கியஸ்தர்கள் கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்த்து வைச்சிருக்கேன். உங்க கையெழுத்தையும் போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்!" இளங்கன்று பயமறியாது என்கிற மாதிரி சொன்னான்.
மடத்துக் காரியதரிசியை கூப்பிட்டார்
பெரியவா.
"இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு, ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப் போட்டு இவன்கிட்டே குடு!" -சொன்னார்.

ஒரு சில நிமிஷத்துல அப்படியே செஞ்சு, ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்து வந்து கொடுத்தார் மடத்துக் காரியதரிசி. அதை வாங்கிக் கொண்டவன், "தாங்க்யூ சார்!"
என்று சொல்லி நோட்டை பையில் வைத்துக் கொண்டு புறப்பட்டான்.
"ஒரு நிமிஷம் நிக்கறியா?" அவனைக் கூப்பிட்ட பெரியவா, "எனக்கும் ஒன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத தரியா?" என்று கேட்டார். சந்தோஷமா தலையாட்டினான் அந்தப் பையன். மடத்தோட ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துண்டு வரச் சொன்ன பெரியவா, அதுல அவனைக்
கையெழுத்துப் போடச் சொன்னார். சந்தோஷமா கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செய்தார் ஆசார்யா. அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான் என்கிற எண்ணம் வரணும். அப்படி வந்தாத்தான் அவன் வாழ்க்கையில் நன்றாக முன்னேறுவான், அதுக்காகத் தான் அவனையும் கையெழுத்துப் போடச் சொன்னேன். மகாபெரியவா
இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. ஆனால், அவரோட செயலுக்கான் காரணம் அதுதான் என்பது அங்கே இருந்த எல்லாருக்குமே புரிந்தது.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 14
#MahaPeriyava This incident is narrated by Sri Rajappa Gurukkal who till date has been doing the service as ordained by Sri Periyava.
Periyava once called on me and said, “One of these afternoons, you take your cycle, go around Kanchipuram and collect information regarding all
the Shiva Lingam that are open to the sky (Vaanam Paartha Lingam)." HE also advised me to refer to Kanchi Puranam. I found ShivaLingam under trees, on land, in dhargas, mosques and churches, on the banks of lakes and ponds. I compiled the names of the Lingams, the direction in
which they are facing, any pooja details available and gave it to HIM. As all the pertinent information was in the Kanchi Puranam, I did not have to worry much.
Periyava immediately embarked upon the task of Punar-Udhaaranam of these Vaanam Paartha Lingam temples. HE called on
Read 16 tweets
Jan 13
#ஶ்ரீசயன_நரசிம்மர்
திருவதிகை, பண்ருட்டி, கடலூர்
பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். வக்ராசுரனை திருவக்கரையில் சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மரின் சயனக் கோலக் Image
காட்சியை இக்கோயிலில் மட்டுமே காணலாம் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளி இருப்பதால் இது போக சயனம் ஆகும். 700ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக Image
கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தை ஆளும் மும்மூர்த்திகளும் இந்த அகிலத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சேர்ந்து போரிட்டு தர்மத்தை நிலைநாட்டுவார்கள். அப்படி மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து நிகழ்த்தியது தான் Image
Read 32 tweets
Jan 12
#நற்சிந்தனை
பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் சேவிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார். ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு
அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து, தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா? என்று கேட்டார். அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை! என்றார். உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன், எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே. அதைச் சொல்லேன் என்றார்.
வந்தவர், #கோவிந்தா #கோவிந்தா என்றார். பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன், இது தானா! நான் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது என்றார். குரு அவரிடம், நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சஹஸ்ரநாமம்.
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது.
Read 5 tweets
Jan 12
#foodforthought
There will always be somebody ahead of us, someone with a better job, nicer car, more money in the bank, more education, a prettier wife, a more handsome husband, better behaved children, better circumstances and better conditions etc. But one important
realisation is that, we can be the best that we can be, when we are not competing with anyone. Some people are insecure because they pay too much attention to what others are, where others are going, wearing and driving, what others are talking. Take whatever we have, the height,
the weight and personality. Accept it and realize, that we are blessed. Stay focused and live a healthy life.
Let us count our blessings! There is no competition in Destiny. Each has his own. Comparison and Competition is the thief of JOY.
Let us run our own Race that leads to
Read 4 tweets
Jan 11
#ஆதித்யன்_வழிபடும்_திருத்தலங்கள்
சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் உதய வேளையில் கோபுரவாயில் மண்டபங்களைக் கடந்து கருவறையில் நிறைந்து சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கும் திருத்தலங்களும் உண்டு. #பொங்கல் நன்னாளில் இத்தலங்களையும் அருகிலுள்ளோர் தரிசிக்கலாம். இவை #பாஸ்கர_ஷேத்திரங்கள் என்று
அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் சூரியனின் ஒளி ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. சிலர் இது கட்டிடக்கலை நுணுக்க அமைப்பால் அமைந்த விந்தை என்பர். என்றாலும் பக்திமான்கள் சூரியன் தன் ஒளிமாறாமல் சிவபெருமானை வழிபாடு செய்யும் நிலை என்றே
எண்ணுவர். பெரும்பாலும் காலை வேளைகளில் மட்டுமே இவ்வாறு ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படியும் வகையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம். சில மேற்கு நோக்கிய தலங்களில் மாலை நேரத்தில் ஒளி விழும்படியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. பொதுவாக 3 நாட்கள் மட்டுமே சூரிய ஒளிவிழும் வகையில் பல கோயில்கள் அமைக்கப்
Read 16 tweets
Jan 11
#MahaPeriyava
Reflections of Paramacharya- Part 1

“All of you think of me as a saint and perform namaskara to me. I have also a great yearning to perform namaskara to persons who are known to be real saints. But my position as Jagatguru and Peetadhipathi, and the title of Image
Bhagavatpada, which have come and stuck to me at a young age, without any merit on my part for deserving them, have deprived me from that young age itself, of the good fortune of doing namaskara to saints, the great ones, moving about before our very eyes. My receiving all your
namaskaras, without my performing namaskaras to any person, makes me think of my janma as empty and in vain.
Our Acharya (Adi Sankara) has done a great good in this regard. What is that? He has reminded that: "Sannyasis, like us, to whom you perform namaskaras, regarding them as
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(