#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
ஞானத்தில் மனம் உருகும், அவன் தத்துவத்தில் வாழ்வே புரியும், அவன் தந்திரத்தில் புன்னகை பெருகும். கடைசியில் கைகூப்பி வணங்கி கதறி அழவும் தோன்றும், அப்படி ஒரு தெய்வீக அவதாரம் அவன். பிறக்கும் பொழுதே சவால்கள் அதிகம், தப்பி பிழைத்தால் வாழவிடா அரக்க கூட்டம் பூத கூட்டம் ஒடி ஓடி துரத்தியது,
பிஞ்சு வயதிலே அந்த அதர்ம கும்பலை ஒழிக்க தொடங்கினான் கண்ணன். அன்று ஆயர்பாடியில் தொடங்கிய அவனின் அதர்மத்துக்கு எதிரான போராட்டம் மஹாபாரத களத்தில்தான் முடிந்தது. அவனுக்கும் வாழ்வெல்லாம் சோகமே, தாயிடம் வளரவில்லை உடன்பிறந்தார் யாருமில்லை. பலராமன் பலமும் கொஞ்சகாலமே அர்ஜூனன் அவ்வப்போது
வந்து போனான், மற்றபடி அவன் வாழ்வெல்லாம் தனிமையே!
ராமனுக்காவது லட்சுமணனும் அனுமனும் இருந்தார்கள், கண்ணனுக்கு அப்படி யாருமில்லை, அவன் அதுபற்றி வருந்தவுமில்லை. அவன் பிறப்பின் நோக்கம் தெரிந்து தன் அவதார கடமையினை நிறைவேற்ற கிளம்பினான். அவனின் முதல் குறி கம்சன், அவனை அழித்து விட்டு தன்
தாய் தந்தையினை விடுவித்து, தாத்தாவிடம் ஆட்சியை கொடுத்து மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானான் ஒரு கம்சனா வந்தான்? ஓராயிரம் கம்சர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்காக துவாரகையை சொர்க்கத்திற்கு நிகராக உருவாக்கி, உலகிலே முதன் முதலாக அதுவரை ஒடுக்கபட்ட,
விரட்டபட்ட, கடுமையாக புறக்கணிக்கப்ட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு நாடு கொடுத்து வாழச் செய்தான். அவன் போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின, அவன் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின, தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தான்.
கண்ணனின் மிகசிறந்த ராஜதந்திரம் மகாபாரதம்
அது துரியனுக்கும் பாண்டவருக்கும் நடந்த போர் என்றால் அறியாமை! மொத்த தர்மத்தையும் ஒரு பக்கமும் மொத்த அதர்மத்தை மறுபக்கமும் திரள வைத்து மொத்தமாக அவன் அதர்மத்தை நசுக்கி போட்ட நாடகம்.
பாஞ்சாலியும் துரியனும் சந்திக்க ஏதுவாக பாண்டவர் சூதாட்டம் ஆடும்பொழுது மறைந்து கொண்டான் கண்ணன்.
எல்லாம் முடிந்து பாஞ்சாலி கதறும் பொழுது அங்கே வந்தவன் அவளை காத்து நின்றான். ஒன்றும் அறியாதவன் போல் அடுத்த ஆட்டத்தை அவளை வைத்தே தொடங்கினான். வனவாசம் முழுக்க அவர்களோடு சுற்றி திரிந்தான், சும்மாவா திரிந்தான்? அது பாண்டவருக்கு துரியனை எதிர்க்கும் மிகபெரும் பயிற்சியும் இன்னும் சில
பலம்பெறும் காலமுமாக அதை மாற்றி காட்டினான். தொலைதூரத்தில் சில கொடிய மன்னர்கள் இருந்தார்கள். பாண்டவரோடு இணைந்து அவர்களை அழித்தான், காரணம் நாளை சண்டை என வந்தால் அவர்கள் நிச்சயம் துரியோதனுக்கு உதவ வருவார்கள்.
அவனை கொல் இவனை கொல் என பீமனையும் அர்ஜூனனையும் கண்ணன் ஓயாமல் ஏவி கொண்டு
இருந்ததில் பெரும் பயிற்சி அவர்களுக்கு கிடைத்தது, நல்லோர் நட்பும் கிடைத்தது. நிச்சயம் துரியோதனன் ஒரு சென்ட் நிலமும் கொடுக்க மாட்டான் என கண்ணனுக்கும் தெரியும், தெரிந்தும் ஏன் சென்றான் என்றால் கௌரவர் கூட்டணியில் குழப்பத்தினை ஏற்படுத்த! அரை குண்டூசி கூட கையில் இருந்தாலும் கொல்ல
முடியாத துரோணர், நினைத்த போது மட்டும் மரணம் பெரும் பீஷ்மர், உலகை அழிக்கும் விதுரர், இன்னும் வெல்ல முடியாத கர்ணன், கிருபர், நித்திய சஞ்சீவி அஸ்வத்தாமர் என மிக நீண்ட வரிசை அது அவர்களுக்குள்ளும் துரியன் மீது கோபமிருந்தது, ஆனால் குலப்பெருமைக்காக கூட இருந்தார்கள். எக்காலமும் துரியனை
விட்டு கொடுக்கா மாவீரர்கள் அவர்கள்
தூது சென்ற கண்ணன் நிகழ்த்திய நாடகத்தில் விதுரர் வெளியேறினார், அஸ்வத்தாமன் மேல் துரியோதனனுக்கு சந்தேகம் ஏற்படுத்தினான் கண்ணன்
இதற்கு மேல் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் ஈகோ பிரச்சினை, விளைவு பலமிக்க கூட்டணி சிதறியது.
போதாக்குறைக்கு கர்ணனிடம்
குந்தியை அனுப்பி அவனையும் காலம் பார்த்து குழப்பியாகிவிட்டது எதிரி கூட்டத்தை மனதளவில் குழப்பிவிட்டுத் தான் அவன் போரை தொடங்கினான், அதாவது பாண்டவர் 14 வருடமாய் தயாராகி வந்தனர், துரியன் பக்கம் அங்ககாரமும் அலட்சியுமே இருந்தது. போர் தொடங்கியது. சூத்திரதாரி அப்பாவியாக தேரோட்டியாக
நின்றான். பல்லாண்டுகள் கழித்து ஆசிரியரையும், உறவினரையும் கண்ட அர்ச்சுணன் தசை ஆடியது, உணர்ச்சியில் சண்டையிட மறுத்தான், அரசே வேண்டாமென்றான், அர்ச்சுணன் இல்லாவிட்டால் பாண்டவர் ஏது? யுத்தம் ஏது? தர்மம் நிலைப்பது ஏது? மாபெரும் உபதேசம் கொடுத்தான் கண்ணன், தெளிந்தான் அர்ச்சுணன். அது
அர்ச்சுணனுக்கு மட்டுமல்ல அல்ல மொத்த உலகிற்கு, அதுவே புனிதமான #பகவத்கீதை.
அதுவரை தன் உடன் இருந்த அர்ஜூனனுக்கு அக்கீதையினை போதிக்கா கண்ணன் மிக சிறந்த இடத்தில் அதை சொன்னான், அதுவும் சண்டையினை தொடங்க என்பது ஒரு காரணம், போரில் அபிமன்யு கொல்லபட்ட பின்பும் , இளம் பஞ்சபாண்டவர் கொல்லபட்ட
பின்பும் அர்ஜூனன் மிக தெளிவாக சண்டையிட அவனை தயார் படுத்தினான் என்பது சொல்லப்படா காரணம். அபிமன்யு கொல்லபடபோவது அவனுக்கு தெரியாமலா இருக்கும்? 18 நாள் பெரும்போரில் கண்ணனால் குழப்பபட்ட கௌரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர் அதுதான் பாண்டவருக்கு வாய்ப்பானது
அவர்கள் பெரும் பலசாலிகள், வரம் பெற்றவர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அதில் சரியாக இடம்பார்த்து அடிக்க சொன்னான் பாண்டவர்கள் அடித்தார்கள், நியாயம் வென்றது. சாவை நான் சொன்ன பொழுது அழைப்பேன் என நின்ற பீஷ்மரை படுக்கையில் கிடந்து அழை என அனுப்பிவைத்தான் கண்ணன்,
துரோணரா? ஆயுதம் இல்லாவிட்டால் நீ அவ்வளவுதானே, ஆயுதத்தை கீழே விழவைத்து துரோனரை அழித்தான்.
கர்ணனின் கவச குண்டலம் வாங்கி, குந்தியிடம் வரம் வாங்கி, பரசுராமனிடம் சாபம் வாங்க வைத்தவன் அவனே. கர்ணனின் பலமான வஜ்ராயுததை கடோத்கஜனை பலிகொடுத்து எடுத்தவனும், குந்தி மூலம் நாகாஸ்திரத்துக்கு
கட்டு போட்டவனும் அவனே. அர்ஜூனன் என்னதான் கீதையினை பெற்றிருந்தாலும் எதிரிகள் உயிரெடுக்க அஞ்சினான், அவனின் முதல் பாதி ஆட்டம் உறவுகளை காயபடுத்துவதாய் மட்டும் இருந்தது
அபிமன்யு கொல்லபட்ட பின்பே அவனுக்கு ரத்தம் கொதித்து அந்த பேயாட்டம் ஆடி எதிரிகளை சரித்தான், அபிமன்யுவினை போராட
விட்டதும் அவனை பலிகொடுத்து அர்ஜூனனை தூண்டிவிட்டதும் கண்ணனே. ஒரு கட்டத்தில் தன் இலக்கான துரியனை ஒருவரும் இல்லாமல் களத்துக்கு வரவைத்த பொழுது கண்ணன் வென்றிருந்தான். கடைசியில் காந்தாரியின் சாபத்தை வாங்கி பாண்டவரை காத்ததும் கண்ணனே. எல்லாம் முடிந்து கடைசி ஆட்டத்தை ஆட அஸ்வத்தாமன் வந்த
பொழுது அவனையும் ஆடவிட்டான் கண்ணன். அவன் நினைத்திருந்தால் இளம் பஞ்சபாண்டவரை காத்திருக்க முடியாதா? கடோத்கஜனையும் அபிமன்யுவினையும் காத்திருக்க முடியாதா என்றால் முடியும். ஆனால் ஏன் செய்யவிலை? சகோதர பாசம் வலுவானது ஆனால் சகோதரர் பிள்ளைகளுக்குள் வரும் மோதல் கொடுமையானது. திருஷ்ட்ராசனும்
பாண்டுவும் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் பிள்ளைகள்?
இதே நிலை பாண்டவருக்குள் வந்தால்? இந்த கணக்குத்தான் பாண்டவரின் புதல்வர்களை அப்படியே விட்டு யுத்தத்தில் அழிந்தார்கள் என சொல்ல வைத்தது. அவன் செய்த எல்லாவற்றிலும் ஒரு அர்த்தமும் நியாயமுமிருந்தது. பிரமாஸ்திரம் அஸ்வத்தாமன் ஏவுவான்
என கண்ணனுக்கு தெரியாதா? தெரியும் தெரிந்தும் ஏன் அனுமதித்தான்? போர் முடிந்து துரியனின் படைகளில் இருந்து ஒருவன் எழும்பலாம், ஏன் பாண்டவர் பக்கம் இருந்த படைகளில் இருந்து கூட ஒருவன் புத்திமாறி திரியலாம். தோல்வியின் வெறியும், வெற்றியின் மமதையும் மிகபெரும் விளைவுகளை கொடுக்கும், இதனால்
எல்லோரும் மொத்தமாய் சாகட்டும் என அனுமதித்தான. அவன் கணக்கு சரியாய் இருந்ததாலே 18 நாளுக்கு பின் போர் தொடரவில்லை. இல்லை வெகுசில ஆண்டுகளில் அடுத்த பெரும் போர் தொடங்கியிருக்கும். கண்ணனின் கணக்கும் தொலை நோக்கும் அவன் நடத்தி காட்டிய போரும் அவன் அழித்த அதர்மமும் அது மீள் எழாதவாறு அவன்
செய்துவிட்ட ஏற்பாடும் மகா உன்னதமானது. எல்லோரையும் அடக்கி இனி யுத்தமே இல்லை என்ற நிலையில் அர்ஜூனனின் வாரிசை மன்னராக்கி தர்மம் தளைக்க வழிசெய்துவிட்டு ஓய்ந்தான் கண்ணன். கடவுளாக நம்புபவர்களுக்கு அவன் கடவுள், நம்பாதவர்கள் அவன் நிச்சயம் பெரும் ராஜதந்திரி, ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன்,
பெரும் அறிவாளி, ஞானவான் என்பதை மட்டும் மறுக்கவே முடியாது. பெரும் ராஜ தந்திரமும், மேலாண்மை நுட்பத்தினையும் உலகிற்கு கொடுத்தது கிருஷ்ணன். அந்த கீதை இருட்டில் ஒளியாகும், வெயிலுக்கு நிழலாலுகும், மழைக்கு குடையாகும், துன்பத்தில் ஆறுதலாகும், இன்பத்தில் பயம் கொடுக்கும் மிரட்டலாகும். ஒரு
மனிதன் எந்த மனநிலையில் அதை படிப்பானோ அந்த நிலைக்கு அவனுக்கு கீதை அவ்வளவு அழகாக ஆறுதலும் ஞானமும் சொல்லும்.
இதனாலே உலகின் ஒப்பற்ற நூலென அது கொண்டாடபடுகின்றது. அந்நூலால் ஞானிகளை, வீரர்களை, யோகிகளை, நல்ல வேலைக்காரனை, நல்ல அரசனை என யாரை உருவாக்க முடியுமோ அவர்களை சரியாக உருவாக்க
முடியும், அப்படி ஒரு நூல் இதுவரை கீதையினை தவிர எந்நூலுக்கும் சாத்தியமில்லை. கண்ணனின் வாழ்வும், மாய வேலைகளும் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றுதான் "தீயவர்களின் கூடாரம் மிக பலமானதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த பலத்தில் ஒரு சிறிய பலவீனம் இருக்கும், தர்மத்தினை நிலை நாட்டுவதற்காக அது
இறைவனால் அனுமதிக்கபட்டது, அந்த பலவீனத்தினை அறிந்து நிதானமாய் இறைவன் துணையோடு போரிடுபவனுக்கு என்றுமே தோல்வி இல்லை, அதர்மம் நிச்சயம் வீழும்"
இந்த உலகம் ஒரு மாயை, இங்கு நடப்பதெல்லாம் ஏற்கனவே முடிவுசெய்யபட்டது, இதில் வருந்தி ஒன்றும் ஆகபோவதில்லை என்பதில் சரியாக இருந்தான் , நேரம்
வரும்பொழுது அதர்மம் அழியும் என்பதில் அவன் முழு நம்பிக்கையோடிருந்தான், அதை செயல்படுத்தியும் காட்டினான்
கண்ணா உன் திருவடிகளே சரணம்

ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 11
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள் Image
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த Image
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை Image
Read 38 tweets
Feb 11
#MahaPeriyava
The value of annadhanam
Author: Sri S. Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

It was the time when Maha Swamigal was staying in Kalavai, many years ago. It was a Sunday. A large crowd had gathered for darshan. Image
One by one the devotees prostrated to the sage, received His blessings and moved away. A middle-aged couple prostrated to Acharyal and stood up with folded palms. Keenly looking at them, Swamigal said, "Adede, who (is this) Palur Gopalan! You had come a year back. That time you
spoke about some problems. Are you fine now?" and laughed.
Palur Gopalan replied, "We are very fine Periyava. As directed by you, from the time we started feeding an athithi at noon time every day, only good things are happening, Periyava! Good harvest in (my) fields. The cows
Read 37 tweets
Feb 10
#ஸ்ரீதிரிநேத்ர_தசபுஜ_வீர_ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்த மங்கலம் கிராமத்தில ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர Image
ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சுவாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. Image
தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி உள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் Image
Read 16 tweets
Feb 10
#MahaPeriyava
Narrated by Balaji
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

During the period when Kanchi Mahan Paramacharya was on his tour of Maharashtra, a Jamindar (a rich landlord) was providing all the necessities and was looking after the
conveniences of Paramacharya’s stay there. The landlord had appointed a servant of his to be near the Paramacharya always to attend to His needs so that there were no problems with any of the arrangements. The young lad’s name was Pawar. The boy provided flawless service and
Periyava was very pleased with him. When the camp was nearing its end and Periyava was about to leave the place, He asked the landlord, “Can I take this boy with me?” The landlord was overjoyed! What a big honour it was that a servant of his was going to serve the Mahan! He
Read 26 tweets
Feb 9
#வேதம்_விட்ட_கண்ணீர்
#ஶ்ரீ_ஞானானந்த_கிரி_மஹாஸ்வாமிகள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவதரித்து 20ஆம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை(சுமார் 120+ஆண்டுகள்) ஸ்தூலமாயும் தற்போது சூட்ஷுமமாயும் அருள்பாலிக்கும் மஹாபுருஷர். #நாமசங்கீர்த்தன ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து. தம்மை பற்றி ஒருமுறை
குறிப்பிடுகையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி #ஸ்ரீ_பகவந்_நாம_போதேந்ர_ஸரஸ்வதி ஸ்வாமிகளை மூல குருவாகக் கொண்ட என்று அருளியவர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் #ஊஞ்சலூர் என்னும் க்ஷேத்திரத்தில் வசித்து, தற்போது பிருந்தாவனராய் அருளுபவர.
இந்த கட்டுரை ஸ்ரீ ரமணி
அண்ணாவால், அவரது சொந்த அனுபவமாக எழுதப்பட்டு, சக்தி விகடனில் வெளி வந்தது. எழுத்தும் அவருடையதே.

பல வருடங்களுக்கு முனபு ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்து விட்டு, திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திற்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்தபோது, காலை
Read 38 tweets
Feb 9
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 75 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(