#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் Image
புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில
தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர
இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்ட போது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர். மறு நாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப்
பாதங்களில் விழுந்தான். 'நீங்கள் யார்?' என வினவினான். 'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை
தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக் கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள். அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.
இந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணன். ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணன், ராதையுடன் குலவிக்கொண்டிருந்ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக் கொண்டு, (தண்டிர்) வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்
படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டார் கிருஷ்ணர். வழியில் பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டார் கிருஷ்ணர். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு
செங்கல்லைத் தூக்கிப் போட்டார். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றார். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினார். வந்தவர்களை வரவேற்றார். அதற்கு மேலும் பொறுக்க முடியாத Image
ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதைப் போட்டு உடைத்தார். புண்டரீகன் பதறினார். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். நண்பா உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றான்.

பாண்டுரங்கனே! நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் Image
தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீங்கள் இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார், புண்டரீகர்.
கிருஷ்ணர் மனமுவந்து, இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று
வாழ்வார்கள் என்று அருளினார். புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.
ஜெ பாண்டுரங்கா
ஜெ ஜெ விட்டலா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 22
#MahaPeriyava
Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal

In a small village in Thanjavur district, all the families were devoted to SriMatham. There was bitter enmity in the street where the Brahmins lived and they had fallen apart to form two Image
groups. The reason was not worth a pinch of salt, though the enmity grew to enormous proportions. By some quirk of circumstances, both Ananthu and Sethu, who spear-headed the two groups respectively, came to Sri Maha Periyava at the same time. They prostrated to Periyava.
"Excellent!" said Periyava. "Have you both come together?"
"Yes", they lied in one voice, not wanting to broadcast their enmity in Periyava's presence. Periyava chatted with them for long. In between, He gestured to the attendants in a way in which they alone could understand, to
Read 8 tweets
Mar 22
#நற்சிந்தனை
விசித்திரபுரம் என்ற ஊரில் ஞானசித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த ஸ்ரீ கிருஷ்ண பக்திமானாக இருந்தும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற Image
நேரங்களை இறை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். ஆனால் கஷ்டங்கள் என்னவோ அதிகமாக சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் குமணவித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தன் இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்யும் குணமுடையவன். அவனுக்கு நல்ல குணமுள்ள பக்தியில்
சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். அவனுக்கு கடவுள் நம்பிக்கை துளிகூட இல்லை. அவனுக்கு தன் நண்பன் ஞானசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து, கோபத்தில் ஞானசித்தன், ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாக
Read 17 tweets
Mar 21
#மொட்டை_அடித்துக்_கொள்ளுதல்
ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் தங்களுடைய ஆண் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குலதெய்வத்தின் ஆலயங்களுக்குச் சென்று அங்கு குலதெய்வத்தின் சந்நிதியில் குழந்தைகளுக்கு தலைமயிரை நீக்கி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பெரியோர்களும் ஒரு சில Image
விருப்பங்கள் நிறைவேறுவதற்காக மொட்டை அடித்துக் கொள்ளுதல் என்ற தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளும் தலையே முக்கியம் எனும் சாஸ்திரப்படி ஒருவன் தன்னையே, தனது உடலையே இறைவனுக்கு அர்ப்பணம் சரணாகதி செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை உணர்த்தும் Image
விதமாக தலையிலுள்ள கேசங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறான். இதுவே மொட்டை அடித்தல் எனப்படுகிறது. ஆகவேதான் இறைவனிடம் தன்னையே ஒப்படிக்கும் விதமாக பக்தர்கள் குலதெய்வ ஆலயங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்கள். குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது சில காலங்கள் முன்னோ
Read 14 tweets
Mar 21
#உலகம்மை_அந்தாதி எனும் அற்புதமான நூலை இயற்றினார் #நமச்சிவாயக்கவிராயர் அபிராமி அந்தாதியைப் போல் அதியற்புதமான நூல் இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் Image
பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து Image
வருவது வழக்கம். ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும் போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள
Read 10 tweets
Mar 20
#ராமநாம_மகிமை
1. நமக்கு நன்மை வர வேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயச்சித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் Image
தண்டனையை ஏற்பதும், பிராயச்சித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கில் இருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்தில் Image
இருந்து விலகி செல்கிறோம்.

4. ‘ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.'
Read 24 tweets
Mar 20
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம்_சொல்வதால்_ஏற்படும்_நன்மைகள்
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கதறிக் கொண்டிருந்த கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள், தாய்மார்கள் மத்தியில் இன்னொரு தெய்வப் பெண்மணியும் தனியாக நின்று அழுதாள். அதைக் Image
கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்”என்றார். தர்மபுத்திரரை பயம் சூழ்ந்து கொண்டது. காரணம்- Image
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள், அவர் சொல்வார்” என்றார்.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(