அன்பெழில் Profile picture
May 3 22 tweets 7 min read Twitter logo Read on Twitter
#மதுரை_ஸ்ரீமீனாட்சிஅம்மன்_பட்டாபிஷேகம் #மீனாட்சி_அம்மன்_திருக்கல்யாணம் #சித்திரை_திருவிழா #கள்ளழகர்_ஆற்றில்_இறங்குவது
முன்பு மதுரையில் சைவப்பிரிவினர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தையும் , மீனாட்சி பட்டாபிஷேகத்தையும் சேர்த்து திருவிழாவாகவும் வைணவப்பிரிவினர் அழகர்கோவிலில் ImageImage
இருந்து ஸ்ரீ கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் திருவிழாவையும் தனித்தனியே கொண்டாடி வந்தனர். அந்த காலத்தில் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார்.
மாசியில் மீண்டும் பட்டத்து அரசியாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் பொறுப்பேற்கும் திருவிழா மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. மன்னர் #திருமலை_நாயக்கர் இந்த இரண்டு விழாகளையும் ஒருங்கிணைத்து, சித்திரை மாதத்தில், சித்திரை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்
காலத்தில் இருந்து தான் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப் பட்டது. அதனால் தான் மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை நான்கு மாதங்கள் மட்டுமே அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பாள்
மீதம் உள்ள எட்டு மாதங்கள் ஸ்ரீ சொக்கநாதர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார். இந்த வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும்,
மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான 8ஆம் நாள் திருவிழா ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் ஆகும். 30.4.2023 சித்திரை 17 ஞாயிற்றுக்கிழமை தலையில் வைர கிரீடம் சூடி, கையில் நவரத்தின செங்கோல் பிடித்து மதுரை பட்டத்தரசியாக முடி சூட்டப்
போகும் நாள் காலை ஊடல் லீலை நடக்கிறது. இரவு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடத்தை பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக அனுக்ஞை விநாயகர் சன்னதியில் ImageImage
இருந்து கொண்டு வரப்படும். கூடவே வைரங்கள் பதித்த செங்கோலும் கொண்டு வரப்படும். செங்கோல் கோயில் தக்காரிடம் ஒப்படைக்கப்படும். செங்கோலை பெற்ற தக்கார், சுவாமி சன்னதி 2ம் பிரகாரத்தில் வலம் வந்து மீனாட்சி அம்மனிடம் ஒப்படைப்பார். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் Image
செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி ImageImage
சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பவனி வரும் பட்டத்தரசியைக் காண விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் எங்கும் குவிந்திருக்கும். ஒன்பதாம் நாளான திங்கட்கிழமை அம்மனின் திக்விஜயம்! இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும்
அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமானது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேஸ்வரருடன் திருக்கல்யாணம். இந்த ஆண்டு மே 2ஆம் தேதி நடந்தது. புத்தம் புது புடவை கட்டி கழுத்து நிறைய நகை போட்டு தங்கள் வீட்டு
திருமணத்திற்கு கிளம்புவது போல பெண்கள் கோவிலுக்கு வந்து புது தாலி மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மை அப்பனை காண்பதற்காகவே மாலை முதலே வீதிகளில் கூட்டம் குவியும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத்
தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், பன்னீர்ப் பூக்கள் வாசம் மணக்க தம்பதி சமேதரராய் மீனாட்சி சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்து அருளுவர். மே 3ஆம் தேதியன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் மாட வீதிகளில் Image
குவிந்திருப்பார்கள். அதிர்வேட்டு சத்தம் விண்ணை பிளக்க, செண்டை மேளச் சத்தத்துடன், நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப் பட்ட பிரம்மாண்ட தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்துச் செல்வார்கள். தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை பார்த்து விட்டு நீர் மோர், பானகம்,
அன்னதானம் சாப்பிட்டு திருப்தியாக தங்கள் வீடு திரும்புவார்கள். ஸ்ரீ மீனாட்சி அம்மனுனுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக அதிர்வேட்டு முழங்க மதுரைக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்ரீ கள்ளழகர் அங்கங்கே பக்தர்கள் செய்யும் பூஜையை ஏற்க வழிநெடுக Image
மண்டகப்படியில் தங்கியதால் தாமதம் ஏற்பட்டு, முகூர்த்த நேரத்துக்குள் வர முடியாமல் போனதால் சொக்கநாதரே ஸ்ரீ கள்ளழகராகவும் வடிவமெடுத்து மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தை நடத்தி விடுகிறார். மதுரைக்கு தாமதமாக வந்த ஸ்ரீ கள்ளழகர், திருமணம் முடிந்து விட்டதால் கோபமடைந்து மதுரைக்குள் ImageImage
செல்லாமல் அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே தனது இருப்பிடம் திரும்ப முடிவெடுக்கிறார். அப்படி வைகைக்கு செல்ல வரும் ஸ்ரீகள்ளழகரை வரவேற்கும் விதமாக மே 4ஆம் தேதியன்று தல்லாகுளத்தில் எதிர்சேவை சாதிக்கப்படும். மே 5ஆம் தேதி சித்திரா பௌர்ணமி அன்று ஸ்ரீ கள்ளழகர் வைகை ImageImage
ஆற்றில் எழுந்தருளுகிறார். 1000 பொன் சப்ரதுடன் வண்டியூரில் இரவு சைத்யோபாச்சரம் நடைபெறுகிறது. நீராடி விட்டு தங்கையைக் காணாமலே தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்குத் திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாக அன்று கொண்டாடப் பெறுகிறது. இந்த விழாவின் போது மக்கள் வெள்ளத்தால் மதுரை Image
குலுங்குகிறது. ஆனந்தமயமாக மக்கள் காட்சி அளிக்கிறார்கள். நாத்திகம் இருக்கும் இடம் தெரியாமல் ஆத்திகத்தின் ஆதிக்கத்தை நம் கண் குளிர காணலாம்.
சித்திரை திருவிழாவில் பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு கள்ளழகர், Image
மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்பார் வீர ராகவ பெருமாள். 6 மே 2023 சனிக்கிழமை திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூரில் தேனூர் மண்டபத்தில் காலையில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் தரிசனம் தந்து அருள்கிறார். மாண்டுக மகரிஷிக்கு மோக்ஷம்
கிடைக்க அருள்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
7 மே 2023 ஞாயிறு காலை மோகனாவதாரம்
தேனூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் இரவு கள்ளழகர் திருக்கோல தரிசனம் அருள்கிறார்.
8 மே 2023 திங்கள் ஸ்ரீ கள்ளழகர் திருமலை அழகர்கோவிலை அடைந்து அருள் பாலிக்கிறார்.
வாழ்வில் ஒரு முறையேனும், மதுரைக்காரர் ஆக இல்லாவிடின், சென்று அனுபவிக்க வேண்டிய திருவிழா இந்த சித்திரை திருவிழா. வாழிய மீனாட்சி சொக்கநாதர் ஆட்சி!
வாழிய கள்ளழகர் திருநாமம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 5
#மகாபெரியவா அருள்வாக்கு

குழந்தை குறும்பு செய்தால் பெற்றவர்கள் கட்டிப் போடுகிறார்கள். நம்மிடம் ஆசை என்னும் குறும்பு இருப்பதால் நம்மை இறைவன் கட்டிப் போடுகிறான்.

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் உண்மையாக இருப்பவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக மகிழ்ச்சியாக Image
இருப்பவன் இறைவன் மட்டுமே.

நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவையெல்லாம் தேவையா என்ற எண்ணம் கூடாது. சேவை செய்வதால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

நெருப்பில் விட்ட நெய் தீயை அணைக்காமல் மேலும் வளர்க்கவே செய்யும். அதுபோல மனத்தில் எழும் ஆசையும் மேலும் வளரவே செய்கிறது.
தர்மவழியில் நடப்பவனை பிராணிகள் கூட ஆதரிக்கும். அதர்ம வழியில் நடப்பவனுக்கு உலகமே எதிரி தான்.

நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மை விட துன்பப்படுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள்.

யார்மீதும் கோப்பட நமக்கு தகுதி இல்லை. ஏனென்றால், உலகில் தப்பே
Read 4 tweets
May 5
#மகாபெரியவா
சொன்னவர்-ஓர் அன்பர்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகா. Image
அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டும் என்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள். அன்று மத்தியான
வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன், காலையில் ரிக்‌ஷாவைப் பிடித்துக்
Read 5 tweets
May 5
#MahaPeriyava
Source: Mahaperiaval Darisana Anubavangal V

In the month of February 1945, Mahaswamigal was camping in Ranippettai. Although it was a place where the maximum number of people living there were non-Hindus, a lot of people crossing the religious barrier were coming Image
for His darshan. In a place called Naavalpur near Ranippettai, some devotees who decided to build a temple for ‘Devi Karumariamman’ were a worried lot when they realised that the funds required would be in lakhs! Worried as they were, they came to Sri Maha Periyava to seek His
Blessings.
“We have made an ambitious plan. We may not get sufficient donations. Periyava should bless us” they appealed to Him. After a few moments’ silence, Periyava said, “It is for Ambal, is it not? She will take care of it”.
“We have that belief, but we don’t have even 25%
Read 11 tweets
May 5
#உடையவர்

#அ ஷ்டாக்‌ஷரத்தை உயர் கோபுரத்தில் உரைத்த உயிரான உடையவர்

#ஆ ண்டாளை தங்கையாக உடையவர்

#இ ளையாழ்வாரென இன்னொரு திருநாமம் ஏற்ற உடையவர்

#ஈ டில்லா அரங்கனிடம் உடையவர் என்ற பேற்றை பரிசாய் பெற்ற உடையவர்

#உ ய்ய ஒரே வழி என அவர் தம் திருவடியை காட்டி தந்த உடையவர்

#ஊ ற்றாய் Image
கருணையை பொழியும் காரேய் கருணை இந்த உடையவர்

#எ திராஜர் என்றே அத்திகிரி அருளாளன் சாத்திய திருநாமத்தை உடையவர்

#ஏ ழுமலையான் சூட்டிய தேசிகேந்திரன் என்ற திருநாமத்தை உடையவர்

#ஐ ந்து ஆசார்யர்களை கொண்ட ஜகதாச்சார்யனே இந்த உடையவர்

#ஒ ப்பில்லா ஸ்ரீ பாஷ்யம் தனை தந்து கலைமகளால் ஶ்ரீ
பாஷ்யக்காரர் என்றே கூப்பிட பெற்ற உடையவர்

#ஓ லை ஒன்று தந்து தும்பையூர் கொண்டிக்கு மோக்‌ஷத்தை பெற வழி வகை செய்த உடையவர்

#ஔ ஷதமாய் நின்ற உடையவர், நிற்கும், உடையவர்

#அஃ தொன்றுமில்லா பகவானை சரண் புகுவோரை எம்பெருமானிடம் சேர்க்கும் வரை அயராத உடையவரின் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Read 4 tweets
May 5
#Bhakti #foodforthought #faith
Every day early morning a little girl would come to the temple, stand before the deity, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes. Then open her eyes, bow down, smile and go out running. This was a daily affair. Image
The temple Poojari was observing her and was curious about what she was doing. He thought, she is too small to know the deeper meanings of religion. She would hardly know any prayers. But then what was she doing every morning in the temple?
15 days passed and Poojari now couldn’t
resist but to find out more about her behaviour. One morning, Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual. “My child, I have seen since the last 15 days that you come here regularly. What do you do?"

“ I pray,” She said spontaneously.
Read 6 tweets
May 4
#திருப்பாவையில்_நரசிம்மர்_பாசுரம்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்-
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக்
கோப்புடைய - Image
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பொருளுரை: கார் காலத்தில் மலைக் குகையை தன் இருப்பிடமாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கம், தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தன் சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தன் பிடறி முடி
அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல, காயா மலர் நிறம் கொண்ட மாயக் கண்ணனான நீ, உன் திருமாளிகையை விட்டு இங்கு வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து,
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(