, 25 tweets, 9 min read Read on Twitter
#கற்பனைக்குள்_மெய்யியல்பு
அறிவியல் உண்மைகளையும், முற்றுப் பெறாத அல்லது பெற முடியாத உண்மைக்கு அருகாமையில் உள்ள கற்பனைகளையும் கொண்டு இயங்குவது.
ஆன்மீகம் நேரெதிர், இதிலே அனைத்துமே கற்பனை தான்.
விளையாட்டே இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் கற்பனைக்குள் புகுந்து தான்.
Fa(ith)ct👇
எந்தக் கற்பனையை ஆய்வுக்கு உட்படுத்தலாம், எதைக் கூடாது!? இருக்கலாம் என்பது அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை, மற்றவை புறந்தள்ள வேண்டியவை.
கற்பனைக்கு எல்லை இல்லாத காரணத்தால் அது இரண்டு திசைகளிலும் பயணிக்கும்.
Logic/ possibility matters
எதற்கு வாய்ப்புள்ளது என்று உணர்வது பகுத்தறிவு👇
அறிவியலால் முற்றுப் பெற முடியாதது சில உண்டு, அதிலே குறிப்பாக மூளையும் அண்டமும், தேடத் தேடத் தொடரும் புதிர்கள்.
#மூளை மனிதனுக்குள் இயங்கும் போது நடப்பது எதுவும், ஆய்வுக்கூடத்தில் வைத்து இயக்கும் போது தெரியாது. அதுவும் மூளைக்குள் நடப்பது எல்லாமே வேதியியல் மாற்றங்கள்👇
வேதியியல் மாற்றங்கள் மீண்டும் பிந்திச் செல்லாதவை, மறுசுழற்சி நடவடிக்கைகள் அவற்றுக்குக் கிடையாது. Chemical changes are irreversible changes. மரபணுக்களையே மாற்றியமைக்கவல்லவை. அப்படியிருக்கையில் மூளைக்குள் நிகழ்வதை ஆய்ந்து தெரிந்து கொள்வது ஓரளவுக்கு மேல் சாத்தியமில்லாதது. 👇
உதாரணமாக, நரம்பணுக்கள் (neurons) புதிது புதிதாக பிறப்பதில்லை என்ற பார்வையில் இருந்து அறிவியல் மாறி வரும் காலகட்டம் இது. நரம்பணுக்கள் புதிது புதிதாக பிறக்காது மரபணு மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் நடந்திருக்க, நடக்க வாய்ப்பில்லை. இது மூளை உள்ள அனைத்து உயிர்களுக்குள்ளும் நடக்கும்👇
மனித மூளையில் எப்பொழுது புதிய நரம்பணுக்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது!?
மூளையில் உள்ள நரம்பணுக்கள் முழுமையாக பயன்படுத்தப்படும் போது, புதிய நரம்பணுக்கள்(neurons) பிறக்கின்றன. மனித மூளையில் சராசரியாக 10% மட்டுமே ஒரு மனிதனால் பயன்படுத்தப் படுகிறது, அதைப் பொறுத்தே இதுவும் அமையும்👇
அப்படிப் பயன்பாடு இல்லாத மூளைப் பகுதிகள் செயல்படும் போது, செயல்பட வேண்டிய தேவை ஏற்படும் போது புதிய நரம்பணுக்கள் பிறக்கும். மனிதனாலேயே அவனுது மூளையைப் 10%தான் பயன்படுத்த முடிகிறது என்றால் பிறவற்றைக் கேட்கவா வேண்டும்!? என்பவர்க்கு, டால்ஃபின்கள் 20%வரைப் பயன்படுத்துகின்றன
ஏன் 10%த்திற்கும் மேல் மனிதனால் பயன்படுத்த முடிவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. விடை தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப மறுப்போர் அதிகம். நம்பத் தேவையில்லை, கேள்விக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தாது புறந்தள்ளுவது அறிவியல் வழியில் சரியா!? விவரம்👇
சரி, புதிதாகத் தோன்றும் நரம்பணுக்களை விடுங்கள், இருக்கும் நரம்பணுக்களே தவறான வாழ்வு முறையால் இறக்கும் என்பதையும், மூளை நரம்பு மண்டலத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்தும், எந்த வகையான வேதியியல் மாற்றங்கள் நரம்பணுக்களை சிதைக்கின்றன என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்👇
நரம்பு சார் நாளமில்லாச் சுரப்பிகளும் அதன் செயல்பாடுகளும் இதனை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும். மாஸ்டர் கிளாண்ட் என்றழைக்கப்படும் பிட்யூட்டரி கிளாண்ட்(கபச் சுரப்பி), அதன் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஹைபோதாலமஸ், மர்மங்கள் நீடிக்கும் பினியல் சுரப்பி குறித்து அறிவோம்👇
டோபமைன் குறித்து கேள்விப் பட்டிருப்போம், அந்த டோபமைன் தான் பெரும்பாலான மூளை இயக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்டி வைக்கின்றது. இது குறைவதால் இயக்கம் தாமதப்படும், அதிகரிப்பதால் கட்டுப்பாடற்ற வேகமான இயக்கங்கள் தோன்றும். இது மேலோட்டமான விளக்கம் மட்டுமே, ஆழமான புரிதல் அவசியம்👇
டோபமைன் தான் நரம்பணுக்கள் மூலமாக செய்திகளைக் கடத்தும் காரணியே. அதுமட்டுமல்லாது, பிட்யூட்டரி சுரப்பியின் ப்ரோலாக்டின் சுரப்பிலும் பங்கு வகிக்கிறது, டோபமைன் அதிகரித்தால் ப்ரோலாக்டின் சுரப்பு குறையும். ப்ரோலாக்டின் பாலூட்டிகளுக்கு (குறிப்பாக பெண்களுக்கு) மிகவும் அவசியமானது. 👇
அப்படிப்பட்ட டோபமைன் சுரப்பு, எது எதனால் உந்தப் படுகிறது என்று பார்த்தால் தான், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பின் விளைவுகளையும், அதனால் நரம்பணுக்கள் மரணிப்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்கள் தான் டோபமைனை அதிகளவில் சுரக்க வைக்கிறது👇
டோபமைன் அதிக அளவில் சுரந்தால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம், அதிக வேகமாக செய்திகள் பரவி, கட்டுப்பாடற்ற நிலையை உருவாக்கும். தசைகள் தாமாகவே துடிக்கும், செருமல் உள்ளிட்ட ஓசைகளை எழுப்பத் தூண்டும், நரம்பணுக்களை செயலிழக்க வைக்கும். இருந்தும் ஏன் அடிமையாகிறோம்!?👇
அதீத டோபமைன் சுரப்பு ஒரு விதக் கிளர்ச்சியை ஏற்படுத்தும், அதனால் தான் அதற்கு அடிமையாகிறோம்(addiction).
ஆம்ஃபெடமைன் & மார்ஃபீன் எனும் மருந்துகள், கொக்கைன் ஆல்ககால் நிகோடின் போன்ற போதைப் பொருட்கள், செக்ஸ், அதிக கொழுப்பும் சுவையும் நிறைந்த உணவுகள், இவையெல்லாம் தான் காரணிகள்👇
மேற்கூறியவற்றில் சிலவற்றைக் கண்டிப்பாகத் தவிர்ப்பதும், உணவும் காமமும் அளவோடு இருப்பதும் நலம். இல்லாவிட்டால், டோபமைன் அதிக அளவில் சுரந்து சுரந்து அதன் ரிசப்டார்ஸயும், கடத்தும் நியூரான்களையும் பலவீனமடையச் செய்வதோடு, நியூரான்கள் மரணிக்கவும் காரணமாகி விடும். கொஞ்சம் கடினம் தானோ!?👇
சரி, புதிய நீயூராரான்கள் அதிகமாக (நரம்பணுக்கள்) பிறக்க வைப்பதும், மூளைப் பயன்பாட்டை அதிகரிப்பதும் எப்படி!? முதலில் சொன்ன தடுப்பாட்டம் இதற்கும் பொருந்தும் எனினும், அதற்குத் தேவையான ஆற்றலை பெருக்கவும் வேண்டும். இந்த ஆற்றல் உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் இருந்து மாறுபட்டது👇
உதாரணமாக அதிகாலை/மாலைச் சூரிய வெயிலை உடல் கிரகித்து விட்டமின் டி(D)யை உருவாக்கிக் கொள்கிறது. விட்டமின் டி, நோயெதிர்ப்பிற்கும், விந்து உற்பத்திக்கும் தேவை. இந்தப் பயன்பாடு குறைந்தால் ஒளியால் கிடைக்கும் ஆற்றல் உடலில் சேகரிக்கப்படும். Sun is the major source of energy to the earth👇
எப்படி விட்டமின் டி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது!? நோய் வரும் முன் காப்பதற்கு உகந்த வாழ்வுமுறையை வாழ்வதும், அளவுக்கு அதிகமான கலவி இன்பத்தைத் தவிர்ப்பதும் தான் வழி. நீண்ட காலத்திற்கு முன்பே, தற்போது அறிவியல் கண்டறிந்த ஒளியே விந்து என்பதை தமிழ் இலக்கியங்கள் விளக்கியிருக்கின்றன👇
ஒளியை விந்தாகவும், ஒலியை நாதமாகவும் விளக்கி, ஒளியிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆற்றல் அதிகரித்து வெளிப்படும் போது மூளைப் பகுதிகளில் திறவாத பக்கங்கள் திறந்து, அறிவு துலங்கும் என்றும், அதன் குறியீடாகவே லிங்கங்களை நாடெங்கும் நிறுவியிருக்கிறார்கள், கடவுளின் குறியீடாகவல்ல
ஒளி இருப்பற்றது👇
இந்திரியத்தில் இறைத்துவம் என்று சொன்னவர்கள் தான், அப்போது இந்திரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.
இந்திரியம்-ஒளி, இறைத்துவம்- மூளையின் விரிவடைந்த நிலை.
காற்று புகாத இடத்திற்குள்ளும் ஒளி புகும், ஒளிக்கு எதன் உதவியும் தேவையில்லை. ஒளியால் தான் உயிர்கள் உருவாவதும் உயிர் வாழ்வதும்.👇
அப்படிப்பட்ட ஒளியை உள்வாங்கும் நேரம்(அரை மணி) கதிரவனின் அதிகாலை உதயமும், மாலை மறைவு நேரமும் தான். மற்ற நேரங்களில், தலைப்பாகையோ தொப்பியோ அணிந்து கொண்டு தான் போக வேண்டும். இல்லாவிட்டால், ஆற்றலை வழங்கிய கதிரவனே வழங்கியதை விட அதிகமாகக் கூட எடுத்துக் கொள்ளும். ஆற்றல்களை சேமிப்போம்👇
மூளையையும் அண்டத்தையும் குறித்துப் பேசத் துவங்கி, மூளை குறித்து மட்டும் விளக்கி விட்டு முடிக்கிறானே என்ற கேள்வி எழலாம். பெரிய சைஸ் மூளை தான் அண்டம், சிறிய சைஸ் அண்டம் தான் மூளை. மூளை முழுமையாக துலங்கினால், அண்டமே மூளைக்குள் அடங்கும். அவ்வளவு வலிமையும் நுட்பமும் மூளைக்கு உண்டு👇
மூளையின் திறவாத பக்கங்களைத் திறக்கவும், செயல்பாட்டை அதிகரிக்கவும் ஒளியே வழி. அறிவியல் இதனைக் கண்டறியும் வரை காத்திருப்போர் காத்திருக்கலாம். கடைப்பிடித்து மூளையைத் துலங்க வைக்க விருப்பமுள்ளோர், இப்பொழுதே துவங்கலாம்.
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும், அதிலேயே குளியுங்கள்.🙏
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SOMASUNDARA PRABHU M
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!