அன்புடையீர் வணக்கம்!

சங்ககாலத்தில், மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள், இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப் பற்றி சங்க இலக்கியங்கள் மற்றும் மேனாட்டார்க் குறிப்புகள் மூலம் ஆய்கிறது இந்த நீள் பதிவு!
க) நோயில் இறந்தால்:

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர்!

போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயின் பக்கத்தான் இறந்தால் வாளாற் படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்க வேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுடைய பிராமணர்கள்... 1/2
.... தருப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது பிணத்தைக் கிடத்தி வாளால் வெட்டிப் புதைத்தனர் (புறம்: 93).

இன்று இந்த வழக்கத்திற்குப் பதிலாகப் பிணத்தை வைக்கோலில் கிடத்தி, கைகால்களை ஒடித்துப் புதைக்கிறார்கள்!

இந்தப் பணியைத் தற்போது வெட்டியானே செய்கிறார்!... 2/2
உ) பாடை:

பாடையைக் "கால்கழி கட்டில்" என அக்காலத்தில் வழங்கி வந்தனர் (புறம்: 286).

இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என்பதை #ஒளவையார் (புறம்: 286) குறிக்கிறார்!

இதை #தூவெள்ளறுவை போர்த்தல் எனப் புறம்: 291-ஆம் பாடல் சுட்டும்!
௩) பறைகொட்டுதல்:

சாவில் "பண்டு தொட்டுப் பறை கொட்டும்" மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுப்படுத்துகின்றன!

பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை "பூசன் மயக்கம்" என்று குறிக்கிறது.

"இரவலர் வம்மினென விசைத்த துடி" எனத் தகடூர் யாத்திரை பாடல் சுட்டுகிறது!
௪) சாப்பண் பாடுதல்:

சிறுவர்களும், துடியர்களும் பிணத்தைச் சுற்றி வந்து பறை கொட்டி சாப்பண்ணைப் பாடினர் என்பதை புறம்: 291 சுட்டும்!

கனல் முழங்கி விளரிப்பண் கண்ணினார் பாணர் எனப் புறப்பொருள் வெண்பாமாலை மேற்கோள் பாடல் சுட்டுவதால் அன்றே விளரிப்பண்ணில் பாட்டிசைத்தனர் எனத் தெரிகிறது!
௫) அழகு பார்த்தனர்:

இறந்த மன்னனின் பிணத்திற்குப் பொன்னும் மணியும் அணிவித்து இறுதியாக அழகு பார்த்திருக்கிறார்கள்!

மணிமருள் மாலையையும், ஒற்றைவட மாலையையும் ஒரு அரசனுக்கு சூட்டியதாகப் புறம் 291-ஆம் பாடல் காட்டுகிறது!
௬) மார்பில் அறைந்து கொள்ளுதல்:

இக்காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் பெண்கள் மார்பில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைப்பதைக் காண்கிறோம்!

அரசன் இறந்தஞான்று மகளிர் மாரடித்துக்கொண்டனர் என்பதை புறம்: 237- ஆம் பாடல் சுட்டும்!...1/2
கைகளில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து வாழைப் பூ போல் சிதறி விழும்படியாக மார்பில் அறைந்து கொண்டனர்!

அரசனின் பிணத்தைக் குளிப்பாட்டிப் பாடையில் (வெள்ளில்) வைத்துப் பின் சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ எடுத்துச் சென்றனர் (புறம்: 380)...! 2/2
௭) அடக்கம் செய்தல்:

பண்டுதொட்டு அரசனுடைய பிணத்தைச் சுடுதலும், தாழியில் கவிப்பதும், கழுகுகளுக்கு உணவாகப் பிணத்தை ஆல நீழலில் போட்டு வருவதும் மரபாக இருந்து வந்துள்ளது. (புறம்: 278, 238, 256)
௮) பெருங்காடு:

சுடுகாடும், இடுகாடும் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப் புறத்திலேயே அமைந்திருந்தன!

இக்காட்டை #பெருங்காடு (புறம்:383) தனித்தலை பெருங்காடு, தனி இடத்தை உடைய புறக்காடு (புறம்: 250) என சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன!... 1/2
பிணத்தை இட்டுப் புதைக்கப்பட்ட தாழியினது குவிந்த புறத்தே கழுகுடன், பொதுவல், அண்டங்காக்கை, கோட்டான் முதலியன தாம் விரும்பியபடி சுற்றித் திரியும் என்பதைப் புறப் பாடல்கள் காட்டுகின்றன!.... 2/2
௯) கைப்பலி:

அரசனின் பிணத்தைச் சுடக் குறவனே விறகை வெட்டி வருகிறான். (புறம்: 231)

சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்ட பிணத்தைத் தர்பைப் புல்லில் கிடத்திக் கள்ளையும் பருக்கை உணவையும் புலையன் படைக்கிறான். (புறம்:380) 1/2
இதை "வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையன் ஏவ" என்னும் அடிகளால் உணரலாம்!

இதையே "உப்பிலிப் புழுக்கல் காட்டுப் புலைமகனு குப்ப வேகக் கைப்பலியுண்டு' என்று சீவக சிந்தாமணியடிகளும் (2994) தெளிவுபடுத்துகின்றன...! 2/2
௰) பிண்டச் சோறு:

இறந்துபட்ட அரசன் சொர்க்கம் புகுதல் வேண்டி அன்புக் குரிய மனைவி வீட்டை மெழுகிப் பிண்டச் சோற்றைப் படைக்கிறாள் (புறம்: 234).

பொதுவாகச் சங்க காலத்தில் இறந்துபட்ட அண்மகனின் உயிர் சொர்க்கம் புகுதல் வேண்டித் தம் மக்களே பிண்டச் சோற்றை வழங்கினர். (புறம்:9)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Nov 20, 2021
யானைகள் கட்டிய இடம் #யானைச்சாலை எனப்பெற்றது. அவை படையின் பொருட்டு பாதுகாக்கப் பெற்றன.

அவற்றைப் பாதுகாத்தற் பொருட்டு மக்களிடமிருந்து அரசு பெற்ற வரி #ஆணைச்சாலைதேவை எனப் பெற்றது.
ஓராண்டுவரை கார்காலப் பயிர் செய்த உரிமையையோ, மீண்டும் நிலத்தைக் கைக்கொண்டு உழும் உரிமையையோ பெற்றவர்கள் அவ்வுரிமையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்காகக் கிராம வரிப் புத்தகத்தாரின் ஒப்பம் பெற்றனர்.

அதற்காக அளிக்கப்பெற்ற வரி #ஆண்டெழுத்துத்தேவை எனப்பெற்றது.
பசுப்பண்ணை வைத்திருந்தோர் ஆண்டொன்றுக்குத் தவணை முறையில் செலுத்திய வரி #ஆத்திறைப்பாட்டம் எனப்பெற்றது.

ஊரின் எல்லைக்குள் வணிகத்தின் பொருட்டு வரவும் போகவும் விதித்தவரி #ஆயம் எனப்பெற்றது. ஆயம் பெறுமிடம் #சுங்கச்சாவடி எனப்பெறும்.
Read 32 tweets
Nov 20, 2021
கோவிலில் தங்கம் திருடியமைக்காக்க பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!

2-ம் இராசராசசோழனின் 6-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1152) #தஞ்சாவூர் மாவட்டம் #பந்தநல்லூர் ஊரில் உள்ள #பசுபதீசுவரர் கோவில் கல்வெட்டில், கோவில் நிலங்களின் ஆட்சிமுறை பழங்காலத்திலிருந்து...
தொடர்ந்து வந்த முறையைக் குறிப்பிடுகிறது. அக்கோவில் திருமேனிக்கு அணிகலன்கள் செய்யப் பெறுவதற்காகக் கருவூலத்தில் தங்கத்தைப் பாதுகாத்து வந்தனர்.

அக்கோவிலில் பணிபுரிந்த பிராமணர்கள் அத்தங்கத்தைத் திருடிக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு...
அக்கோவிலின் பதிபாதமூலம், பட்டுடை தேவகன்மிகளும், மேற்பார்வையாளராகிய மாகேசுவரக் கண்காணி செய்வார்களும், ஸ்ரீகாரியம் செய்வார்களும், அரசு அலுவலர்களும் ஒன்றுகூடி அக்குற்றத்தை ஆய்ந்தனர். அவர்களுக்குத் தண்டனையும் வழங்கினர்.
Read 5 tweets
Nov 17, 2021
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!

3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.

பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.

அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
Read 4 tweets
Nov 17, 2021
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!

நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன. Image
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.

தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.

சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
Read 9 tweets
May 16, 2021
கல்வெட்டுகளில் முதியோர் பாதுகாப்பு!

முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n Image
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.

#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n Image
Read 15 tweets
Jul 1, 2020
#Select_Inscriptions:-2

The third regnal year (1055 CE) of #RajendraChola-II inscription in #Jambai Village in #Villuppuram district records the gift of 32 Kasu in memory of a lady by name Sendan Umaiyal (சேந்தன் உமையாள்) for burning a perpetual Nanda Lamp in the temple of 1/n Image
Thanthontri-Mahadevar at #Valaiyur alias Rajendra-puram by one "Palanguran Kunran" (பழங்கூரன் குன்றன்) the Tax Collector of #Kugurppadi the hamlet of Narippalli-nadu.

The gift is said to be in response to a demand made by the community "Nangudisai Padinenbhumi Nanadesi" 2/n
நான்குதிசை பதினெண்பூமி நானாதேசிகள் (வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் - வணிகப் பெருங்குழுக்கள்) who held him responsible for the suicide of that lady by poison because of some threat held out by him with regard to a tax due! 3/n
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(