My Authors
Read all threads
அன்புடையீர், வணக்கம்.

"முறிகள்..."

தமிழகத்தில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு வரை #முறி என்ற சொல் அன்றாடப் பொருளாதார வாழ்வில் நிறைய வழங்கிய சொல்லாகும். இன்று அது வழக்கொழிந்து ஆய்வுக்குரியதாகிவிட்டது.

#பத்திரம் என்ற சொல் இன்று முறியின் இடத்தில் வழங்கி வருகின்றது!
சென்ற நூற்றாண்டு வரை ஒருவருக்கு ஒருவர் கொடுத்தல், வாங்குதல், விற்றல் போன்ற ஆவணப் பதிவுகளைச் செய்து அவற்றை #முறி என்றே அழைத்தனர்.

#முறி என்பதற்குக் கொழுந்தாக உள்ள இலை என்று பொருள் உண்டு.

#தொல்காப்பியம் இதனை ''இலையே, முறியே, தளிரே, தோடே'' என (தொல். பொருள் 642) உணர்த்துகின்றது!
#பனை ஓலையில் குருத்தாக உள்ளதையே ஏடுகளாகப் பயன்படுத்தி ஆவணங்கள் எழுதப்பட்டதால் கொழுந்து இலையில் எழுதிய அவற்றை #முறி என்றே அழைக்கும் மரபு உண்டாகியிருக்க வேண்டும்.
ஆவணங்களை #முறி என்று அழைக்கும் மரபு சென்ற நூற்றாண்டு வரை இருந்த போதிலும் இது பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் வழங்கித் தொடர்ந்து வந்த மரபுதான்.

கல்வெட்டுகளிலும், இலக்கியங்களிலும் ஆவணத்தை #முறி என்று அழைக்கும் மரபு இருந்ததைக் காண்கிறோம்.
#மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியிலிருந்து பல ஓலைச்சுவடிகள் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை சேலத்தில் நடத்திய கருத்தரங்கில் திரு பொ. இராசேந்திரன் அவர்களால் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.
அவ்வேடுகள் அவை கொண்டுள்ள வாசகங்களால்,

🔹நஞ்சைவிலை முறி
🔹குடிவிலை சாதனமுறி
🔹ஒத்தி முறி
🔹நில ஒத்திமுறி
🔹கடன்முறி
🔹காவல் ஒத்திமுறி
🔹பரைவிலைசாதன முறி

- என்று பலவாறு அழைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகக் கல்வெட்டுகளில் பிரமாணம், ஆவணம், தீட்டு என்று பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கு ஈடான இடங்களில் எல்லாம் #முறி என்ற சொல் இச்சுவடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

#பற்றுமுறி:

காளையார் கோயில் கல்வெட்டு ஒன்று (SII. VIII 174) பற்றுமுறி ஒன்றினைக் குறிக்கின்றது. அச்சொல் பின்வருமாறு;
இந்நிலங்கள் வரியில்லாது கோயிலுக்குக் கொடுக்கப்பட்டவை ஆதலால் ஆளுடையானுக்குப் #பற்றுமுறி எழுதப்படாது கோயிலுக்கு எழுதப்பட்டது.

அன்றைய தமிழகக் கோயில் மரபுகளுக்கு ஏற்ப இறைவன் பெயரிலில்லாது ஆதிசண்டேசுவரர் பெயருக்குப் #பற்றுமுறி எழுதப்பட்டது!
இங்கு "பற்று முறி" என்பது பணத்தைப் பற்றிக் கொண்டு எழுதிக் கொடுத்ததால் "பற்று முறி" என அழைக்கப்படுகிறது எனக் கருதலாம்.

#முறி என்பது #ஆவணம் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓலையில் எழுதப்பட்ட #முறி பின் கல்லிலும், செம்பிலும் வெட்டப்பட்டது!
#சிறுமுறி:

சிறுமுறி என்பது #கைச்சீட்டு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாகத் தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது.

''பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்'' என்ற நம்பிள்ளையின் ஈர் முப்பத்தாறாயிரப்படி வரிகளால் அதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
#புதுக்கோட்டை அருகே ஆதனூரில் பராக்கிரம பாண்டியனின் 8ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் #சிறுமுறி என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.

இக்கல்வெட்டைப் பதிப்பித்தவர்கள், #சறுமுறி என்று பதிப்பித்து "சறுவமான்யமுறி"யாக இருக்க வேண்டுமென அடிக்குறிப்புத் தந்துள்ளனர்.

அக்கல்வெட்டு பின்வருமாறு:
"திருமேனி அழகியார் விசையாலய தேவற்குத் திருவாய் மொழிந்தருளினபடிக்கு #சறுமுறி...''

இதே கல்வெட்டில் மற்றொரு பகுதி,

"நாநா கோத்திரத்துச் சதுர்வேதிப் பேற்குத் தாங் #கையோலை குடுத்த பேர் பன்னிரண்டுக்கும் காணி யாட்சியாக ஒரு ஊர் தரவேணுமென்று சொல்லுகையில்...''
இவ்விரு பகுதிகளில் வரும் #சிறுமுறி #கையோலை ஆகியவற்றை நோக்கும்போது தமிழ்ப்பேரகராதி குறிப்பிடும் பொருள் இவற்றின் மூலம் ஓரளவு தெளிவடைகிறது.

இராஜராஜன்-III #மன்னார்குடி கல்வெட்டில் (SII.Vol.VI 50) #சிறுமுறி என்ற சொல்லாட்சி பின்வரும் இரண்டிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
இங்கு #சிறுமுறி என்பது தமிழ்ப்பேரகராதி குறிப்பிடும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவில்லை. பின் ஆய்வில் தெளிவுறக்கூடும்!
#முறியன் - #முறிச்சி:

இச்சொற்களுக்கு ஆண் அடிமை, பெண் அடிமை என்று தமிழ்ப்பேரகராதி வழக்குச் சொற்களிலிருந்து பொருள் தந்துள்ளது.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "ஆண்டபிரான குணம் பரவி முறிசெய்து நம்மை" வரியால் அடிமையாதலுக்கு முறிசெய்தல் என்ற சொல்லாட்சியைக் கையாண்டுள்ளார்! (திரு.13-8)
தாயுமானவர் பாடலிலும் "மோகவாசை முறியிட்ட பெட்டியை" என்ற வரி மூலம் ஆசையை அடிமைப்படுத்துவது #முறியிடுதல் என்ற சொல்லால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை (தாயு.சிற்ப 1) அறியமுடிகிறது.
#மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் கிடைத்த ஒரு ஏடு "பரைவிலை சாதன முறி" என்ற ஒரு ஆவணத்தைக் குறிக்கிறது.

இதில் பறையர் விலைக்கு விற்கப்பட்டது தொடர்பான செய்திகள் உள்ளன.

இங்கு #முறி என்ற சொல் அடிமை என்ற கருத்தில் கையாளப்படவில்லை, ஆவணம் என்ற கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது.
முடிவுகள்:

கல்வெட்டுகளில் இதுவரை அறிந்தவரை, #முறி என்ற சொல் அடிமைக்குப் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

கல்வெட்டுகளில் ஆள் ஓலை, ஆள் விலைப்பிரமாணம் என்ற சொற்களே அடிமை தொடர்பான ஆவணங்களுக்குப் பயன்பட்டுள்ளன.
#சேக்கிழார் பெரிய புராணத்தில், சுந்தரமூர்த்தி நாயனாரை அடிமையெனக்காட்ட வந்த இறைவன் வைத்திருந்த ஓலையை #ஆள்ஓலை என்றே குறிக்கின்றார்.

முறிகளாகிய ஆவணங்கள் வைக்கும் பெட்டிகள் #முறிப்பெட்டி என்று அழைக்கப்பட்டன.
ஆவணம், பத்திரம், பிரமாணம் என்பனவற்றிற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்ட #முறி என்ற சொல் அவற்றோடும் சேர்ந்து,

🔹முறிப்பத்திரம்
🔹முறி சாதனம்
🔹முறிச்சீட்டு
🔹முறிப்பட்டையம்

என்றும் சென்ற நூற்றாண்டு வரை வழங்கப்பட்டிருக்கின்றது.

-நன்று-
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!