Discover and read the best of Twitter Threads about #தொல்காப்பியம்

Most recents (7)

#பகுத்தல் - #பாதீடு!

பற்றாக்குறைப் பொருளியல் நிலை காரணமாக யாரும் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில்,

'தொல்குடிச் சமூகங்கள்' #பகுத்தல் மரபை ஒரு விதியாகவே (The Law of Division) பின்பற்றினர்.

இம்மரபு #உரிமை, #உழைப்பு, #துய்த்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது.
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.

போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
Read 16 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets
#குற்றியலுகரம்
என்பது
குறுமை + இயல் + உகரம்.

ஒரு சொல்லின் உடைய கடைசியில் வரும் வல்லின உகரம் ஆனது குற்றியலுகரம்.

(எ.கா: காசு)
பசு என்ற சொல்லையும்,
காசு என்ற சொல்லையும், சொல்லிப்பாருங்கள்.
பசு - சு நீண்டு ஒலிக்கும்.
காசு - சு சுருங்கி ஒலிக்கும்.
இந்த சுருக்கம் தான் குற்றியலுகரம்.
#குற்றியலுகரம் பற்றி தொல்காப்பியம் கூறும்
#சூத்திரம்

ஈரெழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்.

இங்கு "ஈரெழுத்து ஒருமொழி" என்பது நெடில் என்று பொருள்.

ஈரெழுத்து ஒருமொழி - இரண்டு மாத்திரை கொண்ட ஒரு எழுத்து - நெடில்
#குற்றியலுகரம் பற்றி எளிதாக சொல்ல வேண்டுமானால்...

குறில் எழுத்து / நெடில் எழுத்து / வல்லின எழுத்து / மெல்லின எழுத்து / இடையின எழுத்து / ஆயுத எழுத்து /
இவையாவற்றிக்கும் பின்னல்
"கு சு டு து பு று" போன்ற வல்லின உகரம் வந்தால்
அவையே
#குற்றியலுகரம்
Read 295 tweets
#இலக்கணம்_கற்போம்

முன்னுரை:

தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
கடைச்சங்க நூல்கள் சிலவை கிடைத்தாலும் பல நூல்கள் முழுவதுமாக கிடைக்கவில்லை.
அப்படி அழியாமல் காக்கப்பட்ட சில நூல்கள்: பின்வருமாறு...
தொல்காப்பியம்,
நன்னூல்,
நேமிநாதம்,
இறையனார் களவியல்,
நம்பியகப்பொருள்,
மாறன் அகப்பொருள்,
புறப்பொருள் வெண்பாமாலை,
புறப்பொருள் யாப்பெருங்கலம்,
யாப்பெருங்கலக் காரிகை,
தண்டியலங்காரம்,
மாறன் அலங்காரம்,
இவையாவும் பழம்பெரும் நூல்கள்

இதனை தொடர்ந்து 17'ம் நூற்றாண்டு நூல்கள் பின்வருமாறு...
Read 388 tweets
அன்புடையீர், வணக்கம்.

"முறிகள்..."

தமிழகத்தில் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு வரை #முறி என்ற சொல் அன்றாடப் பொருளாதார வாழ்வில் நிறைய வழங்கிய சொல்லாகும். இன்று அது வழக்கொழிந்து ஆய்வுக்குரியதாகிவிட்டது.

#பத்திரம் என்ற சொல் இன்று முறியின் இடத்தில் வழங்கி வருகின்றது!
சென்ற நூற்றாண்டு வரை ஒருவருக்கு ஒருவர் கொடுத்தல், வாங்குதல், விற்றல் போன்ற ஆவணப் பதிவுகளைச் செய்து அவற்றை #முறி என்றே அழைத்தனர்.

#முறி என்பதற்குக் கொழுந்தாக உள்ள இலை என்று பொருள் உண்டு.

#தொல்காப்பியம் இதனை ''இலையே, முறியே, தளிரே, தோடே'' என (தொல். பொருள் 642) உணர்த்துகின்றது!
#பனை ஓலையில் குருத்தாக உள்ளதையே ஏடுகளாகப் பயன்படுத்தி ஆவணங்கள் எழுதப்பட்டதால் கொழுந்து இலையில் எழுதிய அவற்றை #முறி என்றே அழைக்கும் மரபு உண்டாகியிருக்க வேண்டும்.
Read 20 tweets
"ஆதீண்டு குற்றி..."

மனிதனுக்குத் தினவு ஏற்பட்டால் கையால் சொறிந்து கொள்கிறான். ஆடு மாடுகளுக்குத் தினவு ஏற்பட்டால் அவற்றால் எப்படிச் சொரிந்து கொள்ள முடியும்? அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவை, அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆதி காலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்!
இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலையை நாடிச் செல்கின்றன.

சேற்றை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு சேறு காயும் போது தினவு ஏற்படுகிறது. உடன் குற்றியை நோக்கிச் செல்கின்றன!
Read 21 tweets
#தொல்லியல்நூல்

தமிழர் திருமணம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1985

இந்நூல் பத்துப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது!

முதல் நிலையில் தமிழர் யார், வாழ்ந்த இடம், பழக்கவழக்கங்கள் ஆகியன குறித்து மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது!

#பதிவிறக்கம்📥 bit.ly/2LRHMAb
பின்னர் #திருமணம் என்ற சொல்லுக்குப் பல அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் தரப்பட்டு, அச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள், மணப் பொருத்தம், வயது, திருமணம் நடைபெறுமிடம், காலம், பொழுது என்பவை இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன!
#தொல்காப்பியம் காட்டும் திருமண முறையில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர் மேற்கொண்ட களவுமணம், கற்புமணம் விளக்கப்பட்டு, பலர் அறியத் திருமணம் நடைபெற்ற காரணம் என்ன என்பது கூறப்பட்டு, அவற்றுடன் எண்வகை ஆரியமணம் எவை என்பதன் விளக்கமும் இடம்பெற்றுள்ளது!
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!