My Authors
Read all threads
#SriRamanuja
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இராமானுஜரின் 1003 வது திருநக்ஷத்திரப்பூர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது (April 28th 2020). இதை ஒட்டி அவரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து, நினைவுப்படுத்தி, அடுத்து வரும் 10 நாட்கள், அவரின் நினைவில் திளைப்போம் 🙏
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ கேசவ சோமயாஜிக்கும், ஸ்ரீ காந்திமதி என்கிற பூமிபிராட்டிக்கும் திருமகனாக இளையாழ்வார், 1017 ஆம் வருடம், சித்திரை திங்கள், சுக்லபக்ஷம் பஞ்சமி திதியில், குருவாராம் கூடிய சுபதினத்தில்,
திருவாதிரை நக்ஷத்திரத்தில் திருஅவதாரம் செய்தார்.

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே
- இராமனுஜநூற்றந்தாதி
பற்பல அவதாரங்கள் எடுத்து நின்ற போதிலும் மாதவனை நம்முடைய நாதனென்று காணாமல் நின்ற இவ்வுலகத்தாரெல்லாரும், எங்கள் இராமானுஜன் தோன்றிய அப்பொழுதே, ஞானம் ஏற்பட்டு ஸ்ரீமந் நாராயணக்கு சேஷப்பட்டனர் 🙏
பூவிருந்தவல்லியிருந்து தினம் காஞ்சி தேவப்பெருமாளுக்கு புஷ்பகைங்கர்யம் மற்றும் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார், வைஷ்ணவ பக்தர் திருக்கச்சி நம்பிகள். இவர் காஞ்சிபுரம் செல்லும் வழியில் கேசவ சோமயாஜியின் க்ருஹத்தில் இளைப்பாறுவது வழக்கம்.
இளையாழ்வார்,தன் தந்தையாரிடமே வித்யாப்யாஸம் செய்தார்.தன் தந்தையின் நெருங்கிய நண்பரான திருக்கச்சி நம்பிகளின் உயர்ந்த குணங்கள் இளையாழ்வாரின் மனத்தை கவர்ந்தது.சிறுவனான இளையாழ்வரின் திவ்யமுகம்,கூர்மையான கண்கள்நம்பிகளை வசீகரித்தது.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தோழமையோடு காந்தமாக கவர்ந்தார்கள்
பதினாறாவது வயதில் தஞ்சம்மாள் என்பவரை விவாஹம் செய்து வைத்தார் தந்தை. தன் புத்திரன் பிற்காலத்தில் ஜகதாசார்யராகவும், விசிஷ்டாத்வைதத்தின் உயர்ந்த ஆச்சார்யராக வருவார் என்பதை பார்க்கும் கொடுப்பினை இல்லாமல், கேசவ சோமயாஜி திருநாடு அலங்கரித்தார்.
தந்தையின் காலத்திற்கு பின்னர் இளையாழ்வார் காஞ்சி நகரத்திற்கு குடி பெயர்ந்தார். காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருப்புட்குழியில் யாதவ ப்ரகாசர் என்னும் அத்வைதத்தில் புகழ் பெற்ற ஆச்சார்யரிடம் தன் சிறிய தாயாரின் மகன் கோவிந்தனுடன் பாடம் பயின்றார். ஆச்சார்யரின் விளக்கம் இளையாழ்வருக்கு,
ஏட்புடையதாக இல்லை.மறுத்தார்.யாதவ ப்ரகாசர் கருத்து வேறுபாட்டை முடிவுகட்ட முயன்றார்.தன் சிஷ்யர்களுடன் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டார்.இளையாழ்வரும் கோவிந்தனும் யாத்திரை சென்றார்கள். கோவிந்தரின்மூலம்,யாதவ ப்ரகாசரின் திட்டம் இளையாழ்வருக்கு தெரியவந்தது. அங்கிருந்து தப்பித்து விந்திய
மலைக்காடுகளில் பெருந்தேவிதாயாரும், தேவப்பெருமாளும் வேடுவன் வேடுவச்சியாக தோன்றி, இளையாழ்வரை காஞ்சிக்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தனர்.தன்னை கருணையுடன் காப்பாற்றிய பெருமாளுக்கும் தாயாருக்கும் நன்றி செலுத்த சாளக்கிணற்றிலிருந்து தினமும் திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார்.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தை ஸ்தாபித்து திருவரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் ஆளவந்தார். அவர் மனதில்,தன் காலத்திற்கு பின் வைஷ்ணவ நெறியை வளர்க்கும் தகுந்த சீடனை கண்டறியும் பெரும் கவலை வாட்டியது. காஞ்சியிலிருந்து வந்த ஆளவந்தாரின் சீடர்கள் இளையாழ்வாரின் பெருமையை
பற்றி கூறினார்கள்.

அவரைக் காண வேண்டும் என்ற ஆசையும், அவரை ரங்கராஜனுக்கு கைங்கர்யம் செய்ய அழைப்பதற்கு முன்பு, வரதனிடம் உத்தரவு பெற வேண்டும் என்றும், காஞ்சிக்கு எழுந்தருளினார் ஆளவந்தார். திருக்கச்சி நம்பிகள் அவரை வரவேற்று உபசரித்தார். கோவிலின் சுற்று ப்ரகாரத்தில்,
ஸ்ரீ கரிய மாணிக்க வரதன் சந்நிதியில் தான், இளையாழ்வாருக்கு ஆளவந்தாரின் கடாக்ஷம் கிடைத்தது.

இளையாழ்வாரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என்று ஆசி வழங்கினார். ஆனால் அவர்கள் சந்திக்கவில்லை.
நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.
- இராமாநுஜநூற்றந்தாதி

மிக உயர்ந்த யதிகளுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய(யமுனைத்துறைவன்)
திருவடிகளை பற்றி, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார். அதனால் இனி நிதியை பொழியும் நீசர்களை நாடவேண்டிய அவசியம் எனக்கில்லை என்று இராமானுஜரின் பெருமையை சிலாகிக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.
ஆளவந்தார் பிளவை நோயால் அவதியுற்றார். நோய் முற்றின காரணத்தால் அவருடைய சீடர்கள் வருத்தமடைந்தனர். அவரின் மூத்த சீடரான பெரியநம்பிகள் ஆளவந்தாரின் விருப்பப்படி இளையாழ்வாரை சந்திக்க காஞ்சிபுரம் புறப்பட்டார்.
வரதனின் உத்தரவால் இளையாழ்வாரும் திருவரங்கம் நோக்கி பயணித்தார்.
இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்தனர். இளையாழ்வார் பெரியநம்பிகளிடம்
தமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தருளும்படி பிரார்த்தித்தார்.

பெரியநம்பிகள் இளையாழ்வாருக்கு ஆவணி மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில், மதுராந்தகம் ஏரி காத்த இராமனின் கோவிலில் இருக்கும் மகிழ மரத்தடியில்,
பஞ்சஸம்ஸ்காரம் செய்வித்தார். இன்றும் இவ்விடத்தை நாம் தரிசிக்கிலாம்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with V. Murali Madhavan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!