My Authors
Read all threads
#NamAzhwAr #Thirunakshthram
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 🙏

முன் உறைத்த திரு விருத்தம் நூறு பாட்டும்
முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும்
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
பின் உரைத்ததோர் திருவாய்மொழி எப்போதும்
பிழையற ஆயிரத்தொரு நூற்றிரண்டு பாட்டும்
இந்நிலத்தைல் வைகாசி விசாகம் தன்னில்
எழில் குருகை வருமாறா இரங்கு நீயே
- ப்ரபந்தசாரம் ஸ்ரீ வேதாந்த தேசிகன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு, தென்குருகைக்கு உண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்
- உபதேசரத்தினமாலை ஸ்ரீ மணவாள மாமுனிகள்

நம்மாழ்வாரின் திருநக்ஷத்திரம் வைகாசி விசாகம், இந்த வருடம், ஜூன் மாதம் 4 ஆம் தேதி, அதையொட்டி நம்மாழ்வாரை போற்றும் வெவ்வேறு திருநாமங்களின் தொகுப்பு.

1. சடகோபன் - சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம்
மூடிக்கொள்ளும்.சடம் என்னும் காற்றைத் தம்மேல் படாமல் தடுத்து உத்தம ஞானியாய் அவதரித்தவர் நம்மாழ்வார்.ஆகவே அவருக்குச் சடகோபன் என்ற பெயர் வழங்கிற்று.சடாரி, சடஜித் என்பன போன்ற இதர சொற்களும் இதே பொருளைத் தரும்.

கண்ணி நுண் சிறுத்தாம்பு - "தக்க சீர் சடகோபன் என்நம்பிக்கு ஆட் புக்க காதல்"
2. மாறன் - நம்மாழ்வார் எல்லா குழந்தை போல் அழவில்லை, தாய்ப்பாலும் அருந்தவில்லை, இப்படி உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். "வேதம் தமிழ் செய்த மாறன்"

3. காரி மாறன் - நம்மாழ்வாரின் தந்தை பெயர் காரியார், தாய் உடையநங்கை. அதனால் காரிமாறன் என்றும்
அழைக்கப்பெற்றார்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -"கண்டு கொண்டு என்னைக் காரி மாறப்பிரான்"

4. பராங்குசன் - பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
5. வகுளாபரணன் - வகுளம் (மகிழம் பூ) மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே "வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்மொழி: 4.10.11) என்று பாடியுள்ளார். இதனால் வகுளாபரணன் என்றும் பெயர் வழங்கப்பெற்றார்.
6. குருகைப்பிரான், குருகூர் நம்பி - நம்மாழ்வார் திருக்குருகூர் (தற்போதய ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் அவதரித்தார். அதனால் குருகைப்பிரான், குருகூர் நம்பி என்று அழைக்கப்பெற்றார்.

கண்ணி நுண் சிறுத்தாம்பு - "குருகூர் நம்பி. பாவின் இன்னிசை பாடித்திரிவனே"
7. திருவாய்மொழிப் பெருமாள் - திருவாய்மொழி என்ற சாமவேதத்திற்கு இணையான திவ்யப் பிரபந்தத்தை நமக்கு அளித்தமையால் திருவாய்மொழி பெருமாள் என்று வழங்கலானார்.

8. பொருநல்துறைவன் - தாமிரபரணி ஆற்றிற்கு பொருநல் என்ற பெயரும் உண்டு. திருக்குருகூர் பொருநல் ஆற்றின் கரையோரத்தில் அமைந்தமையால்
நம்மாழ்வாருக்கு பொருநல்துறைவன் என்ற பெயரும் உண்டு.

9. குமரி துறைவன் - பெயர்க்காரணம் தெரியவில்லை

10. பவரோக பண்டிதன் - பவரோக என்றால் பிறவிப் பெரும்பிணியைப் போக்கவல்லவன். ப்ரபந்த அமுதை தந்து, நம் பிறவிப் பிணியைப் போக்கி,"வைகுண்டம் புகுவது மன்னவர் விதியே" என்று நமக்கு உரைத்தமையால்
இந்த பெயர் என்று எண்ணுகிறேன்.

11. முனி வேந்து - வேந்தன் என்றால் அரசன், வேந்து என்பது மருவியிருக்கலாம், முனிகளுக்கெல்லாம் அரசன்

12. பரப்ரஹ்ம யோகி - பரப்ரஹ்மத்தை நோக்கி யோகம் செய்து நமக்கு ப்ரபந்தம் என்னும் வேத சாரத்தை அளித்தமையால்
13. நாவலன் பெருமாள், நாவலர் பெருமான் - நாவலன் என்றால் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி கொண்டு போவது, மற்றொரு பொருள் பேசுதலில் வல்லவர்.

14. ஞான தேசிகன், ஞானப்பிரான் - தேசிகன் என்றால் ஆச்சார்யன், ஞானத்தை நமக்கு ஊட்டிய ஆச்சார்யன்
15. தொண்டர்பிரான் - இப்படி ஒரு பாசுரம் அளித்தவரை தொண்டர்பிரான் என்றுதானே வழங்க வேண்டும்

அடிஆர்த்த வையம்உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல்குழ விப்படி எந்தை பிரான்தனக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யார்தமக்கு
அடியார் அடியார் தம்மடி யார்அடி யோங்களே (திருவாய்மொழி: 3.7.10)
16. நாவீரர், திருநாவீறு உடையபிரான் - வேதத்தை ஒத்த திவ்யப்ப்ரபந்தம் தந்த பெருமானை நாவீரர் என்று அழைப்பது தானே தகும்.

17. உதயபாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர் - பாஸ்கரர் - என்பது சூரியனுக்கு மற்றொரு பெயர். அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் சூரியனாதலால் இந்த பெயர்கள்
18. ஞானத் தமிழுக்கு அரசு, ஞானத் தமிழ் கடல், மெய்ஞானக்கவி, தெய்வஞானக்கவி, தெய்வ ஞானச செம்மல் - ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையான தமிழ் வேதத்தை அளித்து, நாதமுனிகளுக்கு தமிழ் வேதத்தை ஈட்டு தந்த நம்மாழ்வார் ஞானக்கவி தானே.

19. பாவலர் தம்பிரான் - பாவலர் என்றால் கவிஞர், பாடல் இயற்றுபவர்
என்று பொருள். திருவிருத்தம் (100 பாசுரங்கள்), திருவாசிரியம் (7 பாசுரங்கள்), பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்), திருவாய்மொழி (1102 பாசுரங்கள்), மொத்தம்: 1296 பாசுரங்கள் கொடுத்த கவிஞனுக்கு "பாவலர் தம்பிரான்" என்றொரு பெயர்.

20. வினவாது உணர்ந்த விரகர் - விரகர் என்றால் நலனை
எதிர்பார்த்து துதி செய்பவர் என்பது பொருள். இவர் எதிர்பார்த்த நலம், எல்லோரும் பெருவீடு பெற வேண்டும் என்று, நாராயணனை உய்வதற்கு வழி காட்டியவர்.

21. குழந்தை முனி - பிறந்ததிலிருந்து பதினாறு வருடம் உணவு இல்லை, உறக்கம் இல்லை, பேசவில்லை புளியமரத்தடியில் யோக நிலையில் இருந்தவர்,
குழந்தை முனி தானே.

22. ஸ்ரீ வைஷ்ணவ குலபதி - ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் விஸ்வக்சேனருக்கு அடுத்தபடியாக, நான்காவது ஸ்தானத்தில் இருந்து, நம்மை நாராயணனிடம் கொண்டு சேர்க்க வழி காட்டும் குலபதி

23. ப்ரபன்ன ஜன கூடஸ்தர் - ஆச்சர்யனிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்தவன் ப்ரபன்னன் (சரணாகதன்),
ப்ரபன்னர்களுக்கு தலைவன் நம்மாழ்வார்.

இந்த பதிவில் ஏதாவது பிழை இருப்பின் க்ஷமிக்கவும். அடியேனை திருத்திப் பணி கொள்ளவும்.

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 🙏
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம: 🙏
ஆச்சார்யன் திருவடிகளே சரணம் 🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with V. Murali Madhavan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!