Abdullah_Rawuthar Profile picture
Jul 26, 2020 13 tweets 6 min read Read on X
"தனி ஒருவர்" - நம் தாத்தா!!

"தமிழ் தாத்தா #உவேசா".. இது ஒன்றை தவிர, தற்போதுள்ள இளைய தமிழருக்கு இந்த தாத்தாவை பற்றி வேற எதுவுமே தெரியாது.

கும்பகோணத்தில் பிறந்திருக்கிறார். இந்த தாத்தாவுக்கு, அவருடைய தாத்தாதான் தமிழ் சொல்லி தந்தாராம். அப்போதெல்லாம் பேப்பர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதனால் வெறும் மணலில் மட்டுமே அரிச்சுவடி எழுதி பழகி.. அதற்கு பிறகு ஓலைச்சுவடியில் எழுதி எழுதி படித்திருக்கிறார்.

#கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தார். இன்னின்ன பாடங்களை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் குறிப்பு வெளியிடுவார்கள்.
ஆனால், அந்த குறிப்பு பற்றி எங்குமே தொகுப்பு இருக்காது. அதனால், அது சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தேடி கண்டுபிடித்து, அதை வைத்து கொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார்.

இவர் பாடம் நடத்தினாலே காலேஜ் #பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை..
கொஞ்ச நேரம் கிளாசுக்கு வெளியே நின்று கேட்டுவிட்டுதான் போவார்களாம். காரணம், பாடம் நடத்தும்போது, நிறைய கதை சொல்வாராம். அதனால், எல்லோருக்குமே இவர் வகுப்பு என்றால் ஒரு ஆர்வம்!

மொத்தம் 22 வருடம் இங்கு வேலை பார்த்திருக்கிறார்.. அப்பறம்தான் #சென்னை மாநில கல்லூரிக்கு டிரான்ஸ்பர்
ஆகி வந்திருக்கிறார்.

1919-ல் ரிடையர் ஆகிவிட்டார். இவரது நண்பர் அண்ணாமலை செட்டியார் கேட்டு கொண்டதற்காக, மீனாட்சி தமிழ்கலைச்சாலை என்ற கல்வி நிறுவனத்தின் தலைவராக 4 வருஷம் வேலை பார்த்தார்.. அந்த நிறுவனம்தான் இப்போது இருக்கிற "#அண்ணாமலை யூனிவர்சிட்டி"ஆகும்!!
இதெல்லாம் அவரது வேலை சம்பந்தப்பட்டது என்றாலும்..

#தமிழுக்கு இவர் செய்த பணிதான் எனக்கு மலைப்பை தருகிறது.. தமிழ் பற்றி எத்தனையோ அறிஞர்கள், வெவ்வேறு காலகட்டங்களில் எத்தனையோ குறிப்புகளை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு இறந்தும் விட்டனர்..
அப்படி புதைந்து, மறைந்து கிடந்த ஓலைச்சுவடிகளை தேடி கண்டுபிடித்ததுதான் இவர் செய்த பெரிய சாதனை.

தெரிந்தவர், தெரியாதவர் வீடுகளுக்கெல்லாம் சென்று ஏதாவது #ஓலைச்சுவடி இருக்கிறதா என்று விசாரிப்பார். ஒரு வீட்டில் ஓலைச்சுவடி இருக்கிறது என்று கேள்விப்பட்டாலே போதும், அந்த வீடு எவ்வளவு
தூரம் என்றாலும், நடந்தே போவாராம்.

இதற்காக சரியாக #சாப்பிடுவது கூட இல்லை. போகிற வழியில் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காதாம். சில வீடுகளில் சுவடியை இவரிடம் தருவதற்கு மனசு வராதாம். பலமுறை #அலைக்கழித்துவிட்டு, அதற்கு பிறகு தருவார்களாம். தமிழ் முன் எதுவுமே அவமானம் இல்லை என்பதால்
இதையெல்லாம் #உவேசா பெரிசாக எடுத்து கொள்வதில்லை.

இப்படியாக, செல்லரித்து-தூசுபடிந்து -கிழிந்த நிலையில் இருந்த பொக்கிஷங்களை எல்லாம் சேகரித்தார்.

அதில் இருந்து ஆராய்ச்சி,ஆய்வுரைகள் எழுதினார். அப்படி பதிப்பித்த நூல்கள்தான் #சீவகசிந்தாமணி, #பத்துப்பாட்டு, #சிலப்பதிகாரம், #புறநானூறு,
#மணிமேகலை, போன்றவை.

இப்படி 100 புத்தகங்களை இவர் வெளி கொண்டு வந்தார். இவ்வளவும் செய்து முடித்தபோது, தாத்தாவுக்கு 50 வயசு கூட ஆகவில்லை.

உவேசா மட்டும் இல்லை என்றால், இன்று நமக்கு சிலப்பதிகாரமும் இல்லை. மணிமேகலையும் இல்லை. கையில் கிடைத்த நூல்களை எல்லாம் ஒளித்து வைத்து கொள்ளாமல்,
நமக்காக அச்சிட்டு கொடுத்த #வள்ளல் இவர். பனை ஓலைகளில் மறைந்து கிடந்த பொக்கிஷங்களை தூசு தட்டி புதுப்பித்து கொடுத்த பழுத்த #பழம்!

உவேசாவிற்கு தமிழும், இங்கிலீஷூம் கலந்து பேசினால் பிடிக்காது. 1942-ல் உவேசா மறைந்துவிட்டார்.
எதிர்கால சந்ததியினருக்கு தமிழ் பொக்கிஷங்கள் போய் சேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக 87 வருடம் கஷ்டப்பட்டிருக்கிறார்.

தமிழரைப் பொறுத்தவரை இவரைதான் "#தனி_ஒருவர்" என்று சொல்ல வேண்டும். காரணம், எத்தனையோ #புலவர்கள், #தமிழ்_அறிஞர்கள்,
#கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து செய்யக்கூடிய ஒரு செயலை உவேசா மட்டுமே செய்து முடித்திருக்கிறார்.

இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தவர். தமிழாகவே வாழ்ந்தவர். தமிழே அவரானது.

அவரே தமிழானார். பழுத்த அனுபவத்தின் #முதிர்ச்சியும் வெளிப்பாடும்தான், நம் தாத்தா உவேசா!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_Rawuthar

Abdullah_Rawuthar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

Jan 18, 2021
#மார்வாடி களின் வணிக ரகசியம்!!

ஒரு தொகுப்பு!! சற்று பெரியதே..

பிர்லா, கோயங்கா, மித்தல், கன்ஷியாம்தாஸ், ஓஸ்வால், சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பொத்தார், பிரமல், ஜுன்ஜுன்வாலா என பல பெயர்களில் உள்ள மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகம் முழுவதும் உள்ளது எனச் சொல்லலாம்.
மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள்.

இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகம் அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.
Read 19 tweets
Jan 18, 2021
பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
Read 6 tweets
Jan 18, 2021
#டென்மார்க்

கார் விலை மிக அதிகம்!!

அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள்.

உணவகங்களில் கட்டுபடியாகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.

பள்ளியை பொறுத்தவரை மிகவும் லேட்டாகத்தான் படிக்கத் துவங்குவார்கள்.
ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக லேட் ஆக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள்.

நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் #இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள்.

படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள்.
ஏதாவது ஒரு புராஜக்டை எடுத்துச் செய்வார்கள். #கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூடக் கொடுக்கும்.

அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.
Read 11 tweets
Jan 17, 2021
முன்னாள் #லிபியா அதிபர் #கடாபி யின் மறுபக்கம்!

1.லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு, மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்றவரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று #கடாபி சபதம் பூண்டிருந்ததால்!!

அவரது பெற்றோர்கள் இறக்கும்வரை வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்.
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
Read 10 tweets
Jan 7, 2021
#Bill_Gates

யார் இவன்.??

இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்குத் தெரியவில்லை.

உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்குத் தெரியவில்லை.
தன் தடுப்பூசி வியாபாரத்திற்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்குத்தெரியவில்லை,

குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்குத்தெரியவில்லை,

சோதனை செய்ததில், பல ஆயிரக்கணக்கானவரை கொலை செய்திருக்கிறான் என்று பலருக்கு தெரியவில்லை.
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்குத் தெரியவில்லை.

தன் தடுப்பூசி மூலம், உலகமக்கள் தொகையை மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்குத் தெரியவில்லை.
Read 12 tweets
Jan 7, 2021
#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(