My Authors
Read all threads
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#அடேய்_லகுட_பாண்டிகளா 🤦
மகுட நாட்டு அரசன் மயூரன் வருத்தத்தில் இருந்தான். தன்னுடைய சந்தேகப் புத்தியால் தான் இவ்வாறு நடந்து விட்டது என பெரும் கவலையுற்றான். அவையில் எல்லோர் முன்னிலையிலும் தலைமை அமைச்சரைப் பற்றி தவறாக பேசியதால் தலைமை அமைச்சர் சாம்பு
கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இத்தனை ஆண்டு காலம் நல்ல விசுவாசமாக இருந்த திறமையான அமைச்சர்.‌
🔥அரசு நிர்வாகம்,
🔥நிதி,
🔥நீதி
என அனைத்தையுமே அவரே இத்தனையாண்டு காலம் கவனித்து வந்தார். அவர் சென்று விட்டதால் அரசவையில் தினசரி அலுவல்களே நடைபெற திணறியது.!
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு அரசன், மக்கள் நலப் பணிகளை திறம்பட நிர்வகிக்க பதிதாக மூன்று படித்த இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அமைச்சர்களாக நியமித்து, அவர்களுக்கு சற்று அதிகமாகவே அதிகாரங்களையும் கொடுத்தான்..! ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
அமைச்சர் பதவி, வானளாவிய அதிகாரங்கள் என மூவருமே கோலோச்சினார்கள்..!

சில வருடங்கள் உருண்டோடின.!
🏃🚶🧎

மக்கள் நலப்பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் தொடர்ந்து குவிந்தன.
அதனால் அமைச்சர்களான,
🔥 மதிமாறன்
🔥 கண்ணப்பன்
🔥 சுவாமிநாதன்
ஆகிய மூவரையும் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
"ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினார்கள்..!

மன்னன் அவர்களை அனுப்பிவிட்டான். ஆனால் ஒரே குழப்பம்🤔
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். அதனால் ஆதாரங்கள் எதுவுமே இல்லை...!
📜இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா..!
📜இல்லை மூவரும் கூட்டு களவாணிகளா..!
📜அல்லது இவர்களில் விதிவிலக்குகள் யாராவது இருக்கின்றனரா..!
என்பதை அறிய வேண்டும்''
என்று நினைத்தான் மன்னன் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அமைச்சர்கள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு பரீட்சை வைக்கப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
மூன்று நாட்களில் உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.

அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே நம் பாதாள சிறையில் உள்ள மூன்று கைதிகளிடம் கொடுத்து விடுவோம்.

அவர்கள் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறுர்களோ அவர்களே தலைமை அமைச்சராக நியமிக்கபடுவர்.
மறுநாள் மூன்று அமைச்சர்களும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். .ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.

மேலும் அதை சேகரிக்கும் வரை அமைச்சர்களுக்கு காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.
மூன்று அமைச்சர்களும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

இதில் சுவாமிநாதன் நல்ல பொருட்களைச் சேகரித்தான்
நல்ல கிழங்குகள், காய், கனி, பழங்கள் போன்ற நல்ல உணவுகளை சேகரித்தான்

சாக்குப்பையை நிரப்ப அவனுக்கு மூன்று நாட்கள் முழுமையாக தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
கண்ணப்பன் கொஞ்சம் வேறுவிதமாக செய்தான்..!

பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
அதனால் மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிட்டு, கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்து பையை மூடிவிட்டான்
இதனால் ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டு மற்ற இரண்டு நாட்களும் தன் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் ஓய்வெடுத்தான்.

மூன்றாவது அமைச்சரான மதிமாறன் அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.
பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் தன் அரண்மனை தோட்டத்தில் உள்ள காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் உள்ள பாதள சிறையில் சேர்த்துவிட்டான்.
சில மணிநேரங்களில் வேலையை முடித்துவிட்டத் திருப்தியில் அடுத்த மூன்று நாட்களும் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கி பொழுதை கழித்தார் அமைச்சர் மதிமாறன்.

நான்காம் நாள் காலை மன்னன் மூன்று அமைச்சர்களையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
"இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்..
அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.

இரண்டு வாரம் கழித்து பார்ப்போம். அதில் யார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்...!"

என உத்தரவிட்டு சென்றுவிட்டார்..!😂
இரண்டு வாரம் கழித்து..!😊

🔥 காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியாததால் மதிமாறன் மிகவும் நலிவடைந்து மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்டான்

🔥அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டான் கண்ணப்பன்..!
ஆனால், அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டான்..!

மன்னன் அவர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டான், சிகிச்சைக்கு பிறகு அவர்களை பாதாள சிறையில் அடைக்க ஆணையிட்டான்.

🔥 சுவாமிநாதன் இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தான்.
தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தான்

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை தலைமை அமைச்சராக ஆக்கிக் கொண்டான்...!😂
சில வாரங்கள் கழித்து பாதாள சிறையில் உள்ள தன் பழைய சக அமைச்சர்களான கண்ணப்பனையும், மதிமாறனையும் சந்திக்க சென்றான் சுவாமிநாதன்..!
சுவாமிநாதனை கண்ட இருவருமே
"துரோகி, இத்தனை நாளும் ஒன்றாகவே இருந்தோம், ஒன்றாகவே ஊழல் செய்து சம்பாதித்தோம், நன்றாக சொத்தும் சேர்த்தோம்..!
ஆனால் இந்த போட்டியின் விதிமுறைகளை கடைசியில் அரசர் இப்படி மாற்றுவார் என நீ எப்படியோ தெரிந்து கொண்டு எங்களை ஏமாற்றி விட்டாய்..!
அதோடு மட்டும் இல்லாமல் எங்களை இப்படி யாரும் பார்க்க முடியாத தனிமை சிறைக்கு வேறு மாற்றி விட்டாய்... உன்னை..!"
என்று கோபமாக கத்தினார்கள்..!
சற்றும் சலமில்லாமல் நிதானமாக சுவாமிநாதன் சொன்னான்..
"வாய்ப்புக்கள் எளிதில் அமைந்து விடாது.. அவ்வாறு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும். இல்லையெனில் இப்படித்தான் உங்களை போல் காலம் முழுவதும் வருந்த வேண்டும். இதற்கு பெயர் தான் அரசியல்" என கூறிவிட்டு நகர்கையில்..,
அறிவுமதி கேட்டான் "இதை மட்டுமாவது சொல்..உனக்கு மட்டும் எப்படி இது முன்கூட்டியே தெரிந்தது" சுவாமிநாதன் சொன்னான் "கோபித்துசென்ற பழைய தலைமை அமைச்சர் சாம்பு தான் என் தந்தை. அவர்தான் இந்த யோசனையையே மன்னருக்கு தெரிவித்தது" என்றான் ஏளனமாக சிரித்துக்கொண்டே.!😂

"அடேய், சாம்பு மவனே.!"😂😂
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with நிவா 🦋

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!