, 33 tweets, 20 min read
My Authors
Read all threads
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
பிரச்சினை பெரியதாக வெடித்தது. பெரியார் இந்தி திணிப்புக்கு எதிராக தலைமையேற்றார் தமிழகமே கொந்தளித்தது.

எப்போதுமே மொழி, கலாச்சாரம் பண்பாடு, போன்றவற்றை மதித்து காக்கும் சாமான்ய மக்கள்தான் போராட்டங்களில் களமிறங்கினர் அப்படிப்பட்டவர்களில் சிலர் போராட்ட களத்தில் மாண்டும்போனார்கள்.
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு எதிரே பலமாடி கட்டிடமாய் பிரமாண்டமாக நிற்கிறதே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்கிற சிஎம்டிஏ மாளிகை

அதன் பெயர் தாளமுத்து-நடராசன் மாளிகை. இருவருமே இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் என்பது எதனை பேருக்கு தெரியும்.
ராஜாஜி அரசு ராஜினாமா என அடுத்தடுத்த நிகழ்வுகளால் இந்தி திணிப்பு திரும்ப பெறப்பட்டு 1940ல் அடங்கிப்போனது சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமரான நேரு இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிப்பு நடக்கவே நடக்காது என்று உறுதி அளித்தார்.

இந்த வாக்குகுறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு மறுபடியும்
1965ல் காங்கிரஸ் ஆட்சியில் இந்தி திணிப்பு தமிழக கல்விக்கூடங்களில் தலைதூக்கியது முதலமைச்சர் பக்தவச்சலம் அரசாங்க அதிகாரத்தை வைத்து மிரட்ட ஆரம்பித்தார்.

இந்த முறை பெரியாரின் சீடர்கள் உருவாக்கிய கட்சியான #திருட்டு_திமுக இந்தி திணிப்பு எனும் எதிர்ப்பு ஆயுதத்தை கையிலெடுத்து.
அப்பொழுது ஆரம்பித்த அரசியல் அது போதாக்குறைக்கு மாணவர்கள் வேறு
களமிறங்கினார்கள் எங்கு திரும்பினாலும் போராட்டம் பதற்றம்.

வியப்பான விஷயம் என்னவென்றால், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணாவே, நிலைமை படுமோசமாவதை பார்த்து கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என
சாந்தப்படுத்தினார்.
ஆனால் அவரின் சொல்லை தீவிர மனநிலையில் இருந்த மாணவ சமுதாயம்
கேட்கவில்லை.

அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்டு பெற்ற வெற்றியால்தான் இரு மொழிக்கொள்கை பாதுகாக்கப்பட்டது என மக்களை நம்பவைத்து ஏமாற்றிவருகிறார்கள்
1965 மொழிப்போர் போராட்டத்தில் மாணவர்களாக பங்கேற்று பின்னாளில் அரசியலில் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நிறைய பேர் எஸ்.டி சோமசுந்தரம், எல்.கணேசன், காளிமுத்து,
துரைமுருகன் போன்றவர்கள்.

இந்தி திணிப்பு 2வது இன்னிங்சிலும் காங்கிரஸ் ஆட்சியால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் போனது.
இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி சாவு மணி அடிக்கப்பட்டதற்கு அடித்தளம் இட்டதே அந்த போராட்டம் தான்.

இரண்டே வருடங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்பது தான் வரலாறு.
உண்மையில் இங்கு நடந்தது "#திருட்டு_திராவிட திணிப்பு

இலக்கியத்திலும் வரலாற்றிலும் பாரம்பரியத்திலும் இல்லாத "திராவிடத்தை" தமிழக மக்கள் மேல் வலிய திணித்தார்கள் அல்லவா? அதுதான் திராவிட திணிப்பு.

பழையது போகட்டும் இப்போதைய விஷயத்திற்கு வருவோம்,
1968-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்நடைமுறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப்பாடத்திட்ட பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்கவேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது.இந்தி பேசப்படும் மாநிலங்களிலும் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்று மூன்றாவது
மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இப்பொழுதும் இங்கு இந்தி திணிப்பு என எதுவுமில்லை, எதுவும் கடுமையாக திணிக்கபடவில்லை.
இந்தி படியுங்கள் என்பது வாய்ப்பே தவிர திணிப்பு அல்ல‌ தமிழை படிக்காதே, ஆங்கிலத்தை படிக்காதே, இந்தியினை
மட்டும் படி என்றால் அது திணிப்பு ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

பிரிட்டிஷ்காரன் வைத்திருந்த ஒரு சில விதிகளை இந்திய அரசுதுறையில் இன்னும் நடைமுறையில் வைத்துள்ளனர்.
அதில் மொழி என்பது சம்பந்தபட்ட துறையின் இயக்கத்தை பாதிக்குமாயின் அதை கண்டிப்பாக கற்றுகொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ்காரன் சொல்லி இன்று வரை இந்திய அரசு துறைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது ஒரு ஆட்சிதுறை அதிகாரி எக்காரணம் கொண்டும் தெரியாது அல்லது முடியாது எனும் வார்த்தைகளை சொல்லவே கூடாது
அது நிர்வாகத்தின் தாரக மந்திரம்,இன்றுவரை இந்திய நிர்வாகம் ஓரளவு நலமாய் இருக்கவும் அரசு தலையீடு இல்லையென்றால் இன்னும் பிரகாசமாக இருக்கவும் அந்த அடிப்படைதான் காரணம்.

நல்ல ஆட்சியாளர் இல்லையென்றாலும் தானாக இயங்கும் அளவு நுட்பமாக வடிவமைக்கபட்ட அரசு இயந்திரம்
அது.
உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஜெயலலிதா இல்லாமல் எடப்பாடி அரசை நடத்துவது போல்,

சிவில் சர்வீஸ் அதிகாரிகளும் அவர்கள் பணி புரியும் பகுதியின் வட்டார மொழி அதாவது Local Language தேர்ச்சி பெற வேண்டும் என்பது அடிப்படை விதி அது தமிழ்,இந்தி,தெலுங்கு, மராத்தி எதுவாக இருந்தாலும்.
அதன் பின்னரே ஆட்சி பணி ஏற்க இயலும் வேறு மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் IAS,IPS அதிகாரிகள் மத்திய அரசு ஊழியர்கள் என அனைவரும் அந்தந்த மாநில மொழியை அவசியம் கற்றே ஆகவேண்டும்.

அப்போது தான் மத்திய அரசிடம் இருந்து வரும் அனைத்து கோப்புகளையும் மாநில அரசு திறம்பட கையாளமுடியுமே தவிர
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருப்பதுபோல் இருக்க முடியாது IAS,IPS வேலைக்கு பிற மாநிலத்தில் இருந்து இங்கு வருபவன் எவனாவது நான் தமிழ் கத்துக்க மாட்டேன் போடா ன்னு சொல்லிட்டு போயிருக்கானா??

இல்ல தமிழ் திணிக்கப்படுகிறதுன்னு பொலம்பிருக்கானா ககன் தீப் சிங் பேடி அவர் பஞ்சாபி
ஆனால் மிக அழகாக தமிழ் பேசுவார் இன்னும் ஏராளமான வட இந்தியர்கள் அவர்கள் குஜராத்தி, பஞ்சாபி , இந்தி, ஓடிசா என இங்கு IAS,IPS என எப்பதவிக்கு வந்தாலும் தமிழை கண்டிப்பாக கற்று கொண்டு பேசுவார்கள்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா குமார் ஒரு தெலுங்கர் ஆனால் நம்மைவிட தமிழை அழகாக பேசுகின்றார்
வடக்கிருந்து வரும் அதிகாரிகள் இங்கு தமிழ்பேசும்பொழுது கம்மென்று இருப்பதும், இங்கே இந்தி பேச சொன்னால் குதியோ குதி என குதிப்பதும் வறட்டு #திருட்டு_திராவிடம் தின் மலிவான அரசியல்

எதற்கெடுத்தாலும் இந்தி திணிப்பு என அரசியல் செய்யும் #திருட்டு_திராவிட கூட்டம்,
இங்கு வந்து தமிழ்படிக்கும் வட
இந்திய அதிகாரிகளை மறந்துவிடுகின்றது மக்களும் மறக்கின்றார்கள்.

அவர்கள் தமிழ்பேசும் பொழுது நாமும் மற்ற மொழிகளை கற்பதில் என்ன தவறு என மக்களும் சிந்திப்பதில்லை.

நம் நாட்டில் இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் இந்தி பேசாத ஒருவர் உங்களால் காட்டமுடியுமா ?
தமிழ் தெரியாத தமிழ் நாட்டில் பணியாற்றும் ஒரு ராணுவத்தானை பிடித்து தமிழ் தெரியாமல் உனக்கு இங்கு என்னடா வேலை தமிழ் தெரியாவிட்டால் போடா என விரட்டட்டும் பார்க்கலாம்.

இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படைக்கான பயிற்சிகள் இந்தியில் தான் நடக்கும்.
அதை என்றாவது திமுக,திக கோஷ்டி இந்தியினை திணிக்காதே
"வலது கால்" &"இடது கால்" என கட்டளைகளை தமிழில் கொடு என போராடுமா?

தேசிய மாணவர் படை மாணவர்கள் பயிற்சியினை இந்தியில் பெறும் போதுஅதே மாணவர்கள் இந்தி படிக்கமாட்டார்களா ?

தைரியம் இருந்தால் தமிழக பள்ளி மற்றும் கல்லூரியில்
NCC பயிற்சி கொடுக்கும் ராணுவத்தின் மேல் இந்தி திணிக்காதே என கிளம்பட்டும் பார்க்கலாம்,

ஓடாத ரயில் முன் படுப்பதும் , ஆளில்லா லெவல் கிராசிங் போராட்டம் பண்றது பூட்டிய அறைக்குள் டி-சர்ட் போட்டு போஸ் கொடுப்பது ஒன்றே இவர்களின் மொழிபற்று.
ஏண்டா இந்திக்கு இவ்ளோ பொங்குற நீங்க என்றாவது தேசிய கீதம் தமிழில் வேண்டும் என கேட்டீங்களா?

இரவீந்திரநாத் தாகூரின் ஜன கண மன பாடலுக்கு பாரதியின் தாயின் மணிக்கொடி பாரீர்,வந்தே மாதரம் என்போம் போன்ற பாடல்கள் எவ்வகையில் குறைந்தது என கேட்டீங்களா டா அறிவு கேட்ட திருட்டு கம்முனாட்டிகளா ?
அவ்வளவு தான் உங்க தேசிய சிந்தனை அவ்வளவு தான் உங்க அக்கறை
அவ்வளவு தான் உங்க தமிழ் உணர்வு இன்னமும் மக்களை ஏமாத்தாதீங்க மக்கள் தெளிவா இருகாங்க.

ஆனானபட்ட வடிவேலுவே அவனுகள நம்பி நாசமாய் போயிட்டாரு அவர பார்த்து பாடம் படிச்சி பொழைக்கிற வழிய பாருங்கடா கொத்தடிமைகளே.
#திருட்டு_திமுக பேச்சை கேட்டு நல்ல காலத்தை தொலைச்சி வாழ்க்கையை இழந்துடாதிங்க அம்புட்டுதான்
சொல்லிட்டேன்.

நன்றி வணக்கம் 🙏
என்றும் அன்புடன்
உங்கள் #SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!