🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (2)

“அவள் கருப்பை உனக்குப் பொருந்துமாம்… என்னுடையது பெண் வாரிசுங்கறதால, அவளுக்குப் பொருந்துமாம்…

அவளுக்கு இதனால பிற்காலத்துல உறவிலயோ, பிள்ளைப் பேற்றுலயோ ப்ரச்சனையே வராதுன்னு
டாக்டர் திட்டவட்டமாச் சொல்லிட்டார் எங்களாண்ட…”

“அம்மா… அவ படிக்கற குழந்தை… இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு அவளுக்கு… இந்த நேரத்துல பாடம் போயிடும்… அவ வாழ்க்கையே போயிடும்மா படிப்பு போனாக்கா… வேணாம்மா ப்ளீஸ்…”

“அடி அசடு… இத்தனை யோசிச்சவ அதை யோசிக்க மாட்டேனா??
அவளோட காலேஜ் சேர்மேனப் பார்த்து, நானே விஷயத்தைச் சொல்லிட்டேன். ’அப்படி இருந்தாக்கா எப்போ வேணா இவளை ஆபரேஷனுக்கு அழைச்சுண்டு போகணும்’னு… அவரும்,

“கவலைப் படாதீங்கோ… யாரும் செய்யத் துணியாததை தைரியாமாச் செய்யறேள்… என் ஸ்டூடண்ட்டும் இதுக்கு முழுசா ஒத்துழைக்கறாங்கறப்போ,
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அவ மெச்சூரிட்டியைப் பாத்து… நான் அவளுக்கு ஃபுல் அட்டண்டன்ஸ் போட்டுடறேன்… ஒருவேளை பரீட்சை எழுத முடியலைன்னா… அதை அரியர் மாதிரி எழுதிக்கலாம்.

நான் கடைசி ஆறு மாசத்துக்கான பாடம் நடத்தும்போது, ஃபீஸ் இல்லாம இவளை காலேஜுக்கு அழைச்சுக்கறேன்…
இல்லை… என் மகனைக் கூட பாடம் சொல்லித்தரச் சொல்றேன்… போதுமா… இது தான் என்னால முடியற உதவி…”

அப்படின்னு சொல்லிட்டார்டி சுஜா…”

“அம்மாடி, இந்தாத்துல அப்பாவுக்கடுத்து, இன்னொரு பிஞ்சுக்கை அந்த மிருதங்கத்தைத் தட்டவும், அப்பா தோள் மேல ஏறிப் படுத்தவும்,
அவர் நெஞ்சுமேல ஏறிப் படுத்துத் தூங்கவும், அவர் பின்னாடியே தோட்ட வேலையப்போ ஓடிப்போய் அவரை வம்பிழுக்கவும்…

அதைப் பாத்து நான் ரஸிச்சு ரஸிச்சு சிரிக்கவும்… எங்களுக்கு வேணாமா…

க்ருஷ்ண ஜெயந்திக்கு, அவன் காலையே அகமெல்லாம் பதிச்சு அழகு பாக்க வேணாமா?
அவனைப் பாக்கும் போதெல்லாந்தான் உன் ஆத்துக்காரன் சின்ன வயசுல பண்ணின விஷமமெல்லாம் எங்களுக்கும் நினைவுக்கு வரும்…

அதையெல்லாம் நாங்க சொல்லிச் சிரிச்சு… நீ கேட்டு ரஸிச்சு… அவன் வெக்கப்படறைதைப் பாக்க உனக்கு ஆசை இல்லையா??

அதே பெண் குழந்தையானா… பட்டுப் பாவாடை, அலங்காரம், பூஜடை,
கால் நிறைக்க சதங்கையோட கொலுசு, கை வளை, ஒட்டியானம்… வாசல்ல அவளுக்காகவே பூந்தோட்டம், தலை நிறைக்க பூ…

அப்படின்னு எல்லா செலவும் வேலையும் எங்களுக்கு வைக்க வேணாமா? இந்த ஆத்துல மஹாலக்ஷ்மி கால்பதிச்சு ஓடற அழகை நாம ரஸிக்க வேணாமா?

புஷ்கலாவுக்கும், தன்னோட சிறுவயசைத் திரும்பிப் பார்க்க…
”இவளைப் போலத்தானே என்னையும் அண்ணா, அம்மாப்பா எல்லோரும் பாத்துண்டிருப்பா?” அப்படின்னு அவ நினைச்சு... நினைச்சு... சந்தோஷப்பட ஒரு சந்தர்ப்பம் வேணாமா?

இது எல்லாராத்துலயும் எல்லாருக்கும் இருக்கற ஆசை தானேடிம்மா…

உள்ள பாரு… மரப்பாச்சி பொம்மைகளும், கிலுகிலுப்பையும், நடை வண்டியும்,
குட்டி தங்க வளையல்கள், செப்புக் காப்பு, தங்கக் காப்பு, வெள்ளிக் காப்பு, வசம்பு வளை, வெள்ளி அரைஞான் கொடி, சைனா பொம்மை, பந்து… எல்லாம் தூங்கறது…

அத்தனையும் உன் ஆம்படையானும் புஷ்கலாவும் விளையாடினது… அவாளுக்குப் போட்டது… பரம்பரைச் சொத்து நகை எல்லாம்…
நன்னா இன்னும் ரெண்டு தலை முறைக்குப் போடற அளவுக்கு கனம்மா இருக்கும். அதெல்லாம் ஏங்காதா… எத்தனை நாள் உள்ளயே தூங்கறதுன்னு?

சுஜா… இத்தனை சந்தோஷங்களுக்கு முன்னால, இந்தச் சின்ன வலி எங்களையோ இல்லை உன்னையோ கஷ்டப்படுத்தப் போறதாம்மா?”

எனச் சொல்லிச் சற்று அமைதியாகி எச்சில் விழுங்கியவர்,
* ”நாங்கள் இருவரும் தயாரடி… நீ தாயாராக..." * என்றார் விழியில் சிந்திய நீருடன்…

அவர் என் கையைப் பிடித்திருந்த வலிமை, இது அவரது தீர்க்கமான முடிவு என்பதை எனக்கு நன்கு உணர்த்தியது. மறுக்க முடியாத நிலையில் நான் தலையசைக்க, எங்கள் கணவன்மார்களிடம் புரியவைத்து, டாக்டரிடமும் பேச,
அறுவை சிகிச்சை ஒரே நாளில் மூவருக்கும் அவசரமாக ஒரே நேரத்தில் நடந்தது.

"இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை நம்ம நாட்டில் இதுவே முதல் முறை… நன்றாக முடிந்தது… மாலைக்குள்ள எல்லாரும் கண் முழிச்சுடுவாங்க… நீங்க இப்ப தாராளமா அவங்களைப் போய் பாக்கலாம்…"
மருத்துவரின் சந்தோஷ வார்த்தையில், எல்லோரும் அமைதி கொண்டனர்... ஒரே வாரத்தில் மூன்று பேரையும் டிஸ்சார்ஜ் செய்தனர்.

புஷ்கலாவுக்கு மட்டும் அதிகம் இரும்புச் சத்துள்ள உணவு நேரிடையாக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்கள். இரு ஆண்களும் மாற்றி மாற்றி... எங்கள் மூவரையும் கவனித்துக் கொண்ட விதம்,
வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் இப்படியோர் சொந்தம் கிடைக்க…

சொந்தத்தில் இருந்து எப்போதும் ஸ்ரார்த்தம், பண்டிகை, எல்லாத்துக்கும் சமைக்க வரும் தேவகி மாமியை ஆறு மாதத்திற்குச் சமையலுக்கு வைத்தார்கள். அவரும் தனது ஒரே சிறு மகளுடன் வந்து இங்கேயே தங்கிவிட்டார்.
வேளா வேளைக்கு பழரசம், சுண்டக் காய்ச்சிய பசும்பால், ஆரம்பத்தில் கஞ்சிகள், பின் நெய்யோடு பருப்பு சாதம், பின்னர் மெதுவாக கூட்டு, மோர்க்குழம்பு என ஒவ்வொன்றாக சாப்பாடும் ஆரம்பமானது.

என் மாமனாரும் கணவரும் தூங்கினார்களா இல்லையா என்ற கவலையே எனக்கும் மாமியாருக்கும் அடிக்கடி வந்துவிடும்.
புஷ்கலாவை மாமி நன்கு... ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார். அவள் மகளும், “அக்கா… அக்கா…” என்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்து அவளிடம் விளையாடியதில் அவளுக்கும் நாட்கள் போனதே தெரியவில்லை.

உடல் தேறி, நாங்கள் இயல்பு வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள்,
மாமியார் என் கரம் பிடித்தபடி இறைவனடி இணைந்திட்டார். புஷ்கலாவின் இறுதி ஆண்டுப் படிப்பும் தடங்கல் இல்லாமல் முடிந்தது. மூன்றே மாதத்தில், புஷ்கலாவிற்குத் தன் மகனைப் பெண் கேட்டு வந்தார் அவள் கல்லூரி சேர்மேன் சேஷாசலம்…

அழுகையின் கறைகள் மறைய, அழகிய அந்தப் பையனின் கரங்களில்
புஷ்கலாவைக் கொடுத்து, அவள் மனம் மகிழ… மகிழ… பார்த்துப் பார்த்து எல்லாம் செய்து அவளது திருமணமும் முடித்திட்டோம்.

அதுவும் ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. எங்களுக்கு, நிற்க நேரமில்லை தற்போதெல்லாம்…

☘️தொடரும்...☘️

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

5 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்....🌿

மெல்லிய மார்கழிக் குளிர் ஓஸோனை நன்கு கீழே இறக்கி விட்டிருந்தது…. வாசல் பெருக்கிச் சானம் தெளிப்பதற்குள் பனித்துளிகள் படர்ந்து ஆடை அணைத்தன….
"பயித்தமாவும், சிகைக்காய் வாசமும், ஜொலிக்கும் மஞ்சளும் உனையும் ஈர்த்ததோ?"

மெல்லிய உதட்டுப் படரலுடன் அதை எண்ணிக்கொண்டே கோலமிட்டேன். லேசான தொண்டைக் கனைப்புக் கேட்டது. வந்துவிட்டார் என்னவர் தின்னையில், கையில் செய்தித்தாளுடன்...
நமுட்டுச் சிரிப்புடன் விரைந்து கூடம் நுழைந்து, கையலம்பியதும் அடுக்களையில் புகுந்துவிட்டேன். அகல் விளக்கை முதலில் இறையடியில் ஏற்றி, அதிலிருந்து தீபமெடுத்துக் கொடுத்ததும், நன்கு பற்றியது விறகடுப்பு.

நாசி துளைக்கும் காஃபிப் பொடியிட்டு, வெந்நீர் ஊற்றினேன். அவர் கையில் நீட்டும் வரை,
Read 24 tweets
4 Oct
🌺பல நோய்களை தீர்க்கும் துளசி🌺

'துளசி இலை நல்லது அதை சாப்பிட்டா சளிப் போயிடும்' என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம்.

அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள்.
நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பது போல நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும்
அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
Read 22 tweets
2 Oct
🌺மெட்ராஸ் பீச்சில் இன்று மாலை தர்ணா....🌺

#நாட்டுமக்களுக்கோர்எச்சரிக்கை...

அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.

அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
Read 27 tweets
30 Sep
🌺நீட்டு இல்லாம மெடிக்கல் சீட்டு...
பரீட்சை இல்லாம டாக்டர் கோட்டு...
🌺

திருப்பூர் அருகே சஞ்சய் எனும் 10ம் வகுப்பு மாணவன், பள்ளி திறக்கப்போகிறது என்று சொன்னதும் தற்கொலை செய்து கொண்டானாம்....

இதைக் கேட்டதும் மனம் துடித்தது...
நம் நாட்டில் மாணவர்கள் இந்த அளவிற்கு சீர்கெட்டுப் போக யார் காரணம்??

மக்களைச் சந்தித்துப் பேசியதில் அவர்கள் எண்ணங்கள் இதுதான்...

பள்ளிப் பருவத்தில் இருந்த நல்ல அறங்களைக் கூறிப் புரியவைக்கும் கதைகள்...

இப்போது இல்லை...

இறை நம்பிக்கை தரும் ஆன்மீகக் கதைகள்...

இப்போது இல்லை...
தேசபக்திக் கதைகள்...

இப்போது இல்லை...

தேச பக்தர்களின் வரலாறு...

இப்போது இல்லை...

இந்திய வீரர்களின் சரித்திரம்...

இப்போது இல்லை...

மொழி வளர்க்க உண்மையாகப் பாடுபட்டவர்கள் பற்றி...

ம்ம்ம்... அது யாரு?

பள்ளியில் காலை இறை வணக்கப் பாடல்கள்...

இப்போது இல்லை...
Read 15 tweets
26 Sep
🌺மகளே... நான் போதாதோ...🌺

🥀என் மகள்…🥀

செவியில் பாயுஞ் செந்தேனது
புவியிற் பிறந்து புதிரானது;
அன்னை என்றனுக் கன்பானது
என்னைப் படுத்தும் என்மானது!

கம்பனே சற்றே கண்மூடிடு...
செம்பென மிளிரும் செவ்வழகை
கண்விட மறுக்கும் கலையழகை...
எண்ணி எண்ணியே கவிபாடிடு!
கண்ண தாசனே கேளடா
எண்ண வீணையை மீட்டுடா....
சில்லென வீசும் சாரலை
சிறுநெருஞ்சி இடையைப் பாடடா!

வாலி சற்றிங்கே வாநீ
கேலிச் சொல்லதிலே தான்நீ...
கீதமது பாடிடவுங் கூடும்
தேகமதுந் துவண்டிடும் போதும்!

வைர முத்துவே வாடா
வைர வரிகளைத் தாடா...
கிராமத்து நளினமதைக் காட்டி
பாடவளின் அழகுக்குப் போட்டி!

ஔவைக் கிழவியே வாடி
சங்கக் கவிதைகள் தாடி...
துள்ளிடு மானினைப் பாடி
வர்ணித்து மயங்குவை யோடி!

காள மேகமே எங்கே
கண்கள் தேடுதே இங்கே...
சிலேடைச் சொல்லதுவும் வாழக்
கவிபாடு பாரிவளைத் தேட!
Read 5 tweets
24 Sep
🌺Just... I told the fact Ji... Nothing more...🌺

🕸️Caught in the net...🕸️

Very Interesting conversation between a *BJP Supporter* and a *DMK Supporter* in Tamilnadu.

👍How I won the hearts of a hardcore DMK Man👍

Me :Vanakkam sir, I am coming from Modi ji's BJP Party...
He : my entire family is a DMK family for generations.

Me : That's why I have come to talk to you
He : You can't change me or any one in my family

Me : I have not come to change
He : Then

Me : I have come to understand your problems and your concerns.
He : That's interesting, please come in let's talk.
Me : Thank you.

He : We don't like BJP, its fascist, authoritarian and against interests of Tamil Nadu.
Me : OK sir I will note it down.
He : Your party can never set its foot in TN. We won't allow your party to take roots.
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!