Sasithra Profile picture
17 Nov, 15 tweets, 9 min read
#SavidhaDiary

கவிதா..
மிகவும் புத்திசாலித்தனமான பெண். குழந்தைப்பேறுக்காக, பல வருடங்களாக முயன்று, சவிதாவில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக, இரட்டையர்களைக் கருத்தரித்து, கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஏற்பட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சமாளித்த தைரியம் மிகுந்த பெண்..
1/n Image
ஏழு மாத முடிவில், (முப்பது வாரங்கள்) கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் அதிக நீர் சுரப்பு ஆகிய காரணங்களால், அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் கவிதா..
2/n Image
குறைகாலப் பிரசவம், குறைந்த எடைக் குழந்தைகள் என்பதால், இரண்டு குழந்தைகளுக்கும், Neonatal Intensive Care Unit (NICU) என்ற பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது..
3/n Image
கவிதாவின் அறுவை சிகிச்சையின்போது,
"மேம்..
ட்வின்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.." என்ற உதவி மருத்துவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இரட்டைக் கர்ப்பம் பற்றி ஒரு சிறிய பாடம் அன்று அறுவை அரங்கில்..
4/n
"இரட்டைக் கர்ப்பம் இரண்டு வகைப்படும்..
பெரும்பாலும் நாம பாக்கறது, வேறுபாடுள்ள இரட்டைக் குழந்தைகள்ன்னு சொல்லப்படற
Dizygotic Twins தான்..
இதுல, இரண்டு கருமுட்டைகள் + இரண்டு விந்தணுக்கள் தனித்தனியா கூடறதால இரட்டை கர்ப்பம் உருவாகுது..
5/n Image
இதுல அம்மாவோட கருவறைக்குள்ள தனித்தனி ரூம்ல வளர இரண்டு குழந்தைகளுக்கும் அதுக்கான இடம், உணவு, இரத்த ஓட்டம் எல்லாம் தனித்தனியா கிடைக்கணும்ங்கறதுக்காக அம்மாவோட கருவறை, இயற்கையிலயே இரண்டாப் பிரிஞ்சு, அழகா இடம் பண்ணிக் கொடுக்குது..
கவிதாக்கும் இந்த வகை கர்ப்பம் தான்..
6/n Image
இன்னொரு வகை..
இங்கே இரண்டு குழந்தைகளும்,ஒரே போல இருக்கும் இரட்டையர்கள்ன்னு சொல்லப்படற Monozygotic Twins..
இங்கே ஒரு கருமுட்டை + ஒரு விந்தணு கூடி உருவாகற ஒரு கரு, இயல்புக்கு மாறா இரண்டாப் பிரியறதால இரட்டைக் கர்ப்பம் உருவாகுது..
7/n Image
ஆனா இந்தவகை கர்ப்பத்தில, அம்மாவோட கருவறையில இரண்டு குழந்தைகளும் தனித்தனி ரூம்ல இல்லாம, ஒன்னாவே வளரும். அதனால தன்னோட உணவு, இடம், இரத்த ஓட்டம்னு எல்லாத்துக்கும் இரண்டு குழந்தைகளும் சண்டை போடும்.
அதனால பல பாதிப்புகளும் ஏற்படலாம்" என்றபடி அறுவை அரங்கில் அன்றைய வகுப்பை முடித்தேன்.
8/n Image
கவிதாவின் குழந்தைகள் பிறந்த ஆறாவது நாளாக இன்று, தீவிர கண்காணிப்பில் இரண்டு குழந்தைகளும் நன்கு தேறி வர..
"மேம்.. கொஞ்சம் NICU வாங்க.." என அவசர அழைப்பு விடுத்தாள் ட்யூட்டி நர்ஸ்..
உடைகளை மாற்றிக் கொண்டு, உள்ளே சென்றால், அங்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது..
9/n Image
கவிதாவின் இரு குழந்தைகளும் ஒன்றின் மேல் ஒன்று கைகளையும், கால்களையும் போட்டபடி, ஒன்றை ஒன்று
அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தன..
10/n Image
"மேம்..
நீங்க தானே, Dizygotic twins வேற வேற ரூம்ல வளரும்ன்னு சொன்னீங்க..
இப்ப பாருங்க..
இரண்டு பேரும்
ஒரே ரூம்ல ஒன்னோட ஒன்னு சண்டைப் போட்டுட்டு இருக்காங்க
அதுலயும், பொண்ணு ரொம்பச் சுட்டி..
பையனைக் கிள்ளி வைச்சுட்டா..
ஆனா, அடுத்த நிமிஷமே அணைச்சுட்டு தூங்கிட்டா.."
11/n Image
என குதூகலித்த அந்த செவிலியரிடம் சிரித்தபடி நான் சொன்னேன்..
"அதான் வெளியே வந்துட்டாங்க இல்லடா..
இனி நம்மளை எல்லாம் சமாளிக்கணும்னா சண்டையும் போடணும், பின்ன சமாதானமும் ஆகணும்ன்னு புரிஞ்சுட்ட புத்திசாலிக் குழந்தைங்க.." என்றேன்..
12/n Image
இன்று உலகப் பச்சிளம் குழந்தைகள் தினம்...
Together for babies born too soon..
Caring for the future..
என்ற தலைப்பில், பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக் காக்க மருத்துவ உலகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.. Image
"இந்த கோவிட் தொற்று காலத்தில நம்மளை முதல்ல காப்பாத்திக்குவோம்..
அப்பறமா இதெல்லாம்.." என்பவர்களுக்கெல்லாம் பதிலளித்துச் செல்கின்றன ஒன்றை ஒன்று அரவணைத்துக் கொண்டு வாழும் இந்த இரு பச்சிளம் குழந்தைகளும்...
n/n

#November17 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sasithra

Sasithra Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @savidhasasi

19 Nov
"எனக்கு ஐஜியைத் தெரியும்...
...ஆனா அவருக்கு என்னைத் தெரியாது..."

"எல்லா இடத்திலயும் ப்ளாஸ்டிக்கை வைச்சு எரிக்கறான்... ஓசோன்ல ஓட்டையைப் போட்டுட்டான்..."
...என சர்வ சாதாரணமாக ஓரிரு வரிகளைப் பேசிவிட்டு சர்வகாலமும் நம்மை சிரிக்க வைப்பவர் தான் பத்மஸ்ரீ விவேக் அவர்கள்...
1/n Image
"என்ன..
காமெடி நடிப்பு தானே... அதெல்லாம் அசால்ட்டா அடிச்சுட்டுப் போயிடலாம்..." என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் தருகிறார் விவேக்..?
2/n
"மார்கழி உற்சவம்" புத்தக வெளியீடு டிசம்பர் 11 என்று நாள் குறித்தவுடன், விழாவில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் கலந்துகொண்டு, தலைமையேற்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் முதன்முதலாக அவரைத் தொடர்பு கொண்டபோது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சின்னக்கலைவாணர்.
3 Image
Read 14 tweets
22 Oct
#SavidhaDiary

இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன்.
1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை..
2/n
இரவு வேளையில் கூட தூங்காமல், அதிலும் மாஸ்க் வேறு அணிந்து நின்றிருந்த அந்தக் குழந்தையிடம்,
"உன் பேர் என்ன குட்டிம்மா..?" என்று நான் கேட்க, "ராகுல் கிஷோர்" என்று என்னிடம் பதிலளித்துவிட்டு, மறுபுறம் திரும்பி,
"சிஸ்டர்.. மாஸ்க்கை சரியாப் போடுங்க..." என்றது..
3/n
Read 9 tweets
15 Sep
#SavidhaDiary
#September15
#திரும்பிப்பார்க்கிறேன்

சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..
1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது..
2/n
அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி..
3/n
Read 12 tweets
31 Aug
#வாமனனா?
#மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..!
1/n
மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர்.
2/n
அனைத்தையும் இழந்தபின்னும், தனது மக்கள் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வரம் கேட்டதோடு, அவர்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருபவர் மகாபலி.
அவர் வருகை தரும் நாளான ஓணத்தையும், அன்பு நிறைந்த அந்த மகாபலியையும், மக்கள் கொண்டாட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது..!!
3/n
Read 17 tweets
29 Aug
#SavidhaDiary

"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு..
1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
2/n
"எனக்கு நாலு புள்ளைங்க. எல்லாம் வீட்டில தான் பிரசவம். இவ அப்பன் பொறந்தப்ப உதவிக்கு கூட யாருமில்ல"
என்றார் அவர்.
"ம்மா, உங்க காலம் வேற. இப்ப நிலமை வேற. அப்ப வீட்டில நீங்க எத்தனை வேலை பாத்திருப்பீங்க?
ஆனா உங்க பேத்திக்கு மெஷின்தானே வேலை செஞ்சு தருது?" என்று நான் சொன்னதை ஏற்கவில்லை
Read 16 tweets
24 Aug
#Savidha Diary

மருத்துவருக்கும், செவிலியருக்கும் இடையே ஓர் உரையாடல்..

"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் கொதிக்குது..
எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா..
காய்ச்சல் மருந்து தந்தவுடனே அப்படியே துப்பிடறா..
யூரின் போகவே இல்ல..
விடாம அழுதுட்டே இருக்கா..
என்ன பண்றதுன்னே தெரியல மேம்.."
1/n
"குழந்தைக்கு ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்ல கொஞ்சம் ஆரஞ்சு இல்லே ஆப்பிள் சேர்த்துக் குடும்மா..
சரியாயிடும்.."

"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்கிரீமா..?
அதிகமாயிடாதா..?"

"நீ முதல்ல சாப்பிடக் குடுடா..
அப்பறமா வந்து சொல்லு.."
2/n
"மேம்.. நிஜம்மாவே பாப்பாக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்கு..
விளையாட ஆரம்பிச்சுட்டா..
ஆனா எப்படின்னு சொல்லுங்க..?"

"சிம்பிள்டா.. காய்ச்சல், சளி இருக்கும்போது குழந்தைங்க சாப்பிடவும் செய்யாது, வெறும் தண்ணி இல்ல கஞ்சி இது எதையும் முழுங்காது..
3/n
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!