தயாநிதிமாறன் செய்த தவறென்ன?

ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட நம்ம ஆடிட்டர் குருமூர்த்தி ஆரம்ப கட்ட விசாரணைகளை ரகசியமாக விசாரித்து இது உண்மை என்று
தெரிந்தவுடன் சிபிஐக்கு புகார் அனுப்புகிறார். அதற்கு பதில் இல்லாமல் போகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
இதை விசாரித்த உச்ச நீதி மன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐ க்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணையில் உறுதி செய்து கொண்ட சிபிஐ...
...தயாநிதி மாறன், 2007-இல் சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்திருந்தார்
தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் போட் கிளப் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு...
...ரகசியமாக கேபிள்களையும் மாநகராட்சி சாலையில் எந்தவித அனுமதியும் இன்றி .இரவோடுஇரவாக பதித்துள்ளனர்.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்.
அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே பேரன்களின் திருட்டுத்தனம் தாத்தாவிற்க்கும் தெரிந்திருக்கும்..

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் - 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை.
எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். ISDN (Integrated Services Digital Network) இணைப்புகளில் இரண்டுவகை உள்ளது. ஓன்று ISDN-BRI(Basic Rate Interface) அடுத்தது ISDN-PRI(primary rate interface) இதில் ISDN-PRI தான் உயர்ந்த தொழில் நுட்பம் உடையது.
இது தான் தயாநிதிமாறன் வீட்டில் பயன்படுத்தப்பட்டது.

மேலோட்டமாக பார்த்தால் 24371500 என்ற ஒரு தொலைபேசி நம்பரை தானே அவர் வைத்துள்ளார் என்று நம் மனதினில் தோன்றுவது இயல்பு. ஆனால் இது ஒரு ISDN-PRI கனெக்சன். இதன் வழியே 100 லிருந்து 500 தனிப்பட்ட எண்களை உபயோகித்து கொள்ளலாம்.
சன் டிவி அலுவலகத்தில் இண்டர்காம் மற்றும் அலுவலக தொலைபேசி பயன்பாடுகளுக்கு இந்த எண்கள் தான் பயன்படுத்தப்பட்டது.

இது வழக்கமா பெரிய கார்பரேட் நிறுவனத்தின் பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படும். ஆனால் தயாநிதிமாறன் என்ற தனி மனிதர்க்கு ISDN-PRI அவசியமே கிடையாது.
ISDN-PRI தொழில் நுட்பம் படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினாலும் அவை அதி வேகமாக போய்ச் சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுnபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, வீடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள்.
சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம்.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

#திருட்டு_திமுக
#திருட்டு_திராவிடம்
#திருட்டு_புத்தி_திமுக

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RADHAKRISHNAN

RADHAKRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Radhakris1975

12 Dec
நீங்கள் நினைக்கும் நம் இந்தியாவில்

கேரளா மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் சவுதியரேபியக்காரன் வரான்,

பஞ்சாபில் ஒரு பிரச்சனைனா கனடா காரன் வரான்,

காஸ்மீரில் பிரச்சனை என்றால் பாகிஸ்தான் காரன் வரான்,

தமிழ் நாட்டில் பிரச்சனை என்றால் கிருஸ்தவ நாடுகள் எல்லாம் வருது.
வடகிழக்கு மாநிலத்தில் பிரச்சனை என்றால் சைனாகாரன் வரான்,

ஒரிசாவில் பிரச்சனை என்றால் வாடிகன் பாதருங்க வராங்க,

பிஜேபி ஆளும் மாநிலங்களில் பிரச்சனை என்றால் கிருஸ்தவ பினாமி மீடியாக்கள் பூராவும் வருது,

ஹைதராபாத்தில் பிரச்சனை என்றால் இஸ்லாமிய வளைகுடா நாடுகள் எல்லாம் ஆதரவாக வருது.
இந்த கேள்விக்கு மட்டும் விடை தேடுங்கள் மோடியின் சாதனையும், வெளிநாடுகளின் வேதனையும் உங்களுக்கு புரியும்.

திருந்த வேண்டியது பிஜேபிகாரனில்லை இத்தனை ஆண்டுகளாக மூளை சலவை செய்யப்பட்ட நடுநிலை பேசும் எனதருமை அப்பாவி இந்து சொந்தங்கள் தான்.
Read 6 tweets
12 Dec
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள்
1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.
Read 9 tweets
10 Dec
ப.சிதம்பரத்தை சாகும் வரை தூக்கில் போட்டாலும் அது போதாது !

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஒரே சீரியல் எண்ணில்.

ஒன்றில் #ரெட்டி அவர்கள் கையெழுத்து..._

மற்றொன்றில்.. #சுப்பாராவ்.. கையெழுத்து...
இப்ப புரியுதா மோடி ஏன் ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தார் என்று ?
ப.சி. மாட்டியது இதில் தான்...
(சுப்பாராவும்....
வேணுகோபால்
ரெட்டியும்...ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்தவங்க)

பாகிஸ்தானுக்கு கொடுத்த பிரிண்டிங் மெசினை வைத்து சராசரியாக ஒரு மாதத்திற்கு ₹50 ஆயிரம் கோடி இந்திய நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழங்கவிட்டனர்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை உருவாக்கியதும் இதே பணம் தான்.

ஹவாலா மூலமாக இந்த பணம் இந்தியாவிற்குள் 2004-14 காலத்தில் பெரும் அளவில் வரத்தொடங்கியது. இந்த பணம் ரியல் எஸ்டேட்டில் அதிகளவில் புழங்கியது.
Read 10 tweets
10 Dec
ஆண்டிமுத்து ராசாவிற்கு இவ்வளவு சொத்துக்கள் வந்த மர்மம் என்ன?

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அவரின் சொந்த மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது.
இந்த மண்டலத்தில், ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் பங்குதாரர்கள்.

இந்த மண்டலத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நில கையகப்படுத்தலை எளிதாக முடித்துக் கொடுத்தார் என்பதற்காக ஆ.ராசாவுக்கு 199.6 ஏக்கர் நிலம், இந்த மண்டலத்திற்குள்ளாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
Read 16 tweets
17 Nov
மீண்டும்_மீண்டும் படிக்கத்தூண்டும் பதிவு.

இது படிக்க மட்டுமல்ல... உடனே பகிர....
=================================

இப்படி மடக்கி இருந்தால்
எத்தனையோ லக்ஷக்கணக்கான பேர் ஹிந்துக்களாகவே இன்று வரை இருந்திருப்பார்களே👏
நேற்று ஒருவர் கிறிஸ்தவ பாஸ்டர் என்று
அறிமுக படுத்திகொண்டு என்னிடம் ஒரு
பிட் நோட்டீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார். அதில்..

"மனம் திரும்புங்கள்
தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிடப்பட்டிருந்தது"
யார் பாவிகள்? என்று கேட்டேன்!

நாம் தான் என்றார்!

நாம் என்றால் நானுமா? என கேட்டேன்

ஆம்! என்றார்

நான் என்ன பாவம் செய்தேன் என்றேன் !

மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்... உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்?என்றேன்!

ஏசு என்றார்
Read 14 tweets
17 Nov
கேரளாவுல இந்த குண்டுகளை எல்லாம் வெடிக்க விட்டு பல ஆயிரம் பேர சாக விட்டுட்டு...

இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம் தான் அப்படின்னு சொல்லி இருந்தாலே போதும், பாதி கேரளா பாஜக பக்கம் வந்திருக்கும்.
ஆனா அந்த மாதிரி, அதாவது காங்கிரஸ் மாதிரி எழவு ஆரசியல் செய்யற இயக்கம் அல்ல பாஜக..

குண்டு வெடிக்கிறதுக்கு முன்னாடியே அதை கண்டுபிடுச்சு ஒத்த உயிரு கூட போகாம மக்களை காப்பாத்துற அரசு தான் பாஜக அரசு...
♦️இது கூட மன்மோகன் 10 வருட ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்புகளின் லிஸ்ட் இருக்கு.
இதெல்லா எவன் வைச்சான்னு சின்ன குழந்தைக்கு கூட தெரியும்...
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!