நீதிக்கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப்போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில், இந்தியாவில் “இரட்டை ஆட்சிமுறை” செயலில் இருந்தது. முக்கியமான அதிகாரங்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு , சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர்.
அந்தச் சில்லறை அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான், சிறந்த முறையில் ஆட்சிப் பொறுப்பை நீதிக் கட்சியினர் நடத்தினர்.
அந்த இரட்டை ஆட்சி முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துடன் முடிந்துவிடவில்லை; இன்னும் அதே நிலைதான் இருந்து வருகிறது. மத்திய அரசு பலமான அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் அதிகாரத்தை மட்டும் மாநில அரசுகளிடம் விட்டு வைத்திருக்கிறது.
உணவுப் பொருள் தட்டுப்பாடு என்றால்-விலைவாசி உயர்வு என்றால்-மக்கள் என்னைத்தான் குறை சொல்வார்கள்; ஆனால் அதற்குக் காரணமாக உள்ள வரவுக்கு அதிகமாகச் செலவிடும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது மத்திய அரசாக இருக்கிறது;
அதற்காக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் அதிகாரத்தையும் மத்திய அரசே பெற்றிருக்கிறது; இதனால் வேதனையுறுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொறுப்போ, மாநில அரசினுடைய தாக இருக்கிறது.
இப்போதைய பத்தாண்டுக் காலத்தில் மிக முக்கியப் பணி ஒன்று உண்டென்றால், அது, மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரங்களைச் சம பலம் உள்ளவர்களாக உருவாக்குவதேயாகும்; அதற்கேற்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டியது அவசியமாகும்.
“இதை எந்தெந்த வகையில் செய்யலாம்-
இதற்கு அரசியல் சட்டம் எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்பதை நீதிக்கட்சி தனிக்குழு ஏற்படுத்தி ஆராய்ந்து இக்கட்சியின் அடுத்த மாநாட்டில் அறிக்கை கொடுத்தால், அரசியல் ரீதியாக உலகுக்கு சிறந்த பணியாற்றியவர்களாவார்கள்.
அரசியல் சட்டம் திருத்தப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதை தி.மு.கழகம் மட்டும் கூறவரவில்லை; மத்திய அரசிலே எதற்கு ஒரு சுகாதார இலாகா எதற்கு ஒரு சுகாதார அமைச்சர் என்றும் ‘டில்லியிலே எதற்கு ஒரு கல்வி இலாகா-அங்கே எதற்கு ஒரு கல்வி அமைச்சர்’ என்றும் ஆந்திர முதலமைச்சர்
வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். டெல்லி அரசினர், தாங்கள் கண்காணிக்கப் பள்ளிகளே இல்லை என்பதால்தான் “மத்தியப் பள்ளிகள்” என்று ஆங்காங்கு திறக்கிறார்கள் போலிருக்கிறது; இவை தேவைதானா? என்று ஆந்திரா முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர்,
கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து,
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராம போன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் போக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம்,
அவர்களில் எவருமோ உயிருடனில்லை! அத்தனை பேரும் மடிந்துவிட்டனர்! மண்ணோடு மண்ணாகிவிட்டனர்!
மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது!
மடிந்த மக்கள்-எனினும் அவர்கள் வாழ்விலே இருந்த மொழியை அழியாது நிலைக்கச் செய்யப் புதுமுறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!
இடிந்த கோட்டை, பாழான அகழ், கலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.
(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)
சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம்.
தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக
நம்புகிறோம். ஆனால் தாங்கள் அது கூடாது என எதிர்ப்பதாகவும் அதற்கு முக்கியக் காரணமாக இந்தி ஆரிய மொழி என்று கூறுவதாகவும் கேள்விப் பட்டோம். ஆகவே, இது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.
அறிஞர் அண்ணா Communal G.O ( Law made by Justice party grants reservation in Madras State ) ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அதை எதிர்த்து எழுதியக் கட்டுரையின் ஒரு பகுதி
சட்டம்,திட்டமாகக் கூறுகிறது,
‘ஜாதி காரணமாக,யாரையும்,கல்வித் துறையிலே அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று, இது, பரந்த நோக்கமாம்.ஜனநாயகப் பண்பாம். புதிய இந்தியாவின் இலட்சணமாம். இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக்கிறது.
கம்யூனல் ஜி.ஒ-ரத்தாகி விட்டது – இனி, பார்ப்பன மாணவர் இவ்வளவு எண்ணிக்கைதான் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர், என்ற முறை இராது, ‘மார்க்கு’ என்னும் தகுதியைக் கவனித்து யாரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.