*காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்தபோது நடந்தவை* :

சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.
1/22
கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார்.

கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.
2/22
இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன்.

அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.
3/22
இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை.

அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள
4/22
‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது.
அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.

அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன்.

ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன்.
5/22
தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
6/22
இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது..

‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை.
7/22
உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.

என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...

‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன?
இரண்டும் ஒன்றுதானே.
8/22
கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார்.

சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.

அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்...
9/22
‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.

லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது.

நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’

என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன்.
10/22
‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.

‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது;

என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார்.
11/22
‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.

தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது.
12/22
காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்...

அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?
13/22
எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன்.

அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை.
14/22
ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்ஃ.

அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.
15/22
*ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக்* *கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளைபோட்டவர்* , *கலைஞர்* .
16/22
ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்டதாக வெளியே காட்டிக்கொள்ளும், மனித உருவத்தில் திரிந்த சங்கரனாகவே மக்கள் நினைத்த இவர் ஒரு பெண் பித்தர்.
17/22
அவரை சட்டத்தால் தண்டிக்க இயலவில்லை, ஆனாலும் அவரை அவரது மனசாட்சி, கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவமானம் கொன்றிருக்கும்.
18/22
தன்னிடம் மேலாளராக பதவிவகித்த ஒரு பார்பணரையே அவர் சங்காராச்சாரியின் காமக் களியாட்டங்களை கண்டித்த ஒரே காரணத்திற்காக கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்கிறார்.
19/22
இப்படிப்பட்ட சாமியார்கள் போர்வையில் திரியும் பெண் பித்தர்களிடம் கருணை காட்டுவது, தண்டிக்காமல் அவரை விடுதலை செய்வது

இந்திய தண்டனைச் சட்டங்கள் கொலைக்குற்றவாளியைக் கூட தண்டிக்கப் போதுமானவையாக இல்லை.
20/22
தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தமிழகப் பண்பாட்டில் சங்கராச்சாரி ஒரு கரும்புள்ளியே.

இத்தகைய மோசமான, அவமானகரமான சூழலில் சங்கராச்சாரி செயேந்திரர் சொன்ன வார்த்தைதான் அதிரவைத்தது...
21/22
‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை.

இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை.

உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.
22/22

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

17 Dec
Why English as the Universal Language of Science Is a Problem for Research

Where do most of the researchers and inventors around the world appear today? What is their mother tongue?
1/8
The obstacle to many researches in our country is that many of the documents and research articles that they need to do research are available in English only 80-90%.

Can't anyone read and understand research articles so easily? Why is that?
2/8
Today most scientific papers are published in English. What is lost when other languages ​​leave?

Plagiarism in research articles Should not be. What is Plagiarism?
3/8
Read 9 tweets
15 Dec
அரசியல் கட்சிகளின் வரையறை

வளர்ந்த நாடுகளில் இரு கட்சி ஆட்சி முறையே உள்ளது.

இரு கட்சி முறையில் ஒரு கட்சியானது ஆளும்கட்சியாக இருக்கும். மற்றொன்று எதிர்கட்சியாக காணப்படும்.
1/19
இம்முறையில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி அரசாங்கத்தினை நடத்துகிறது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எதிர் கட்சி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
2/19
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் இரு கட்சி முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
3/19
Read 20 tweets
3 Dec
தமிழ் மொழிக்கு கிரந்த எழுத்துக்களான, ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ தேவையற்றது, எப்படி, ஏன்?

தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள்.
1/12
ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது.
2/12
கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும்.
3/12
Read 13 tweets
29 Nov
நமது இந்திய தண்டனை சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை. இப் பொழுதுள்ள குற்ற நடைமுறைகளால் எல்லா குற்றவாளிகளையும், குறிப் பாக பணபலமும், அரசியல் பின்புலமும் உடைய குற்றவாளிகளை தண்டிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைவிட கேவலம் சட்டம் ஒழுங்கையும் காக்க வேண்டிய அமைப்புகள் காவல்துறையும், நீதித்துறையுமே அதை காலில் போட்டு மிதிப்பது அன்றாட நிகழ்ச்சி.
மக்கள் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்த கேவலமான, பலவீனமான, வலுவிழந்த நமது இந்திய குற்றவியல் சட்டங்களை அதை வலுப்படுத்த வேண்டிய, ( நீர்த்துப் போக அல்ல) சட்டத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.
Read 18 tweets
14 Nov
அன்புத் தமிழர்களே! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:

நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...

இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்
ஏனெனில், (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்து

*இணைய ஞாலத்தினுள், தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *

புழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து,
அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..

காரணம், இன்று அனைத்து முடிவுகளும் "#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.
Read 7 tweets
2 Nov
👀மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,
1/22
இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம்.
2/22
மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.

மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
3 /22
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!