குருக்ஷேத்திர போர்க்களம்.உக்கிரமான மகாபாரதப்போர் நடைபெற்றது.சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்தப்போர்.அன்று உக்கிரப்போர் புரிந்தவன் மாவீரன் கர்ணன். தன் நண்பன் துரியோதனனிடம் வாக்குக் கொடுத்து வந்திருந்தான்.
போர்க்களத்தில் பாண்டவரை வீழ்த்திக்காட்டுவேன் என்பது அவனது தீர்மானம்.அந்த எண்ணத்தால் உக்கிரப்போர் புரிந்தான்.முதலில் வந்தது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்.பாண்டவர் சேனைக்குத் தலைவர் என்பதால்,அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன்.அவனது வில் திறமைக்கு முன்னால்,
தர்மரின் போர்த்திறம் பலம் குன்றியது.கர்ணனின் அம்பு மழையில் தர்மர் நினைவிழந்தார்.பதறியது கிருஷ்ணரின் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர் போன்றவர்கள்,அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்"என்று சொன்ன கண்ணனுக்கு,இப்போது தர்மரின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.வேறு என்ன செய்வது?
அங்கே கர்ணனோ சிவந்த கண்களோடு கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறான்.தர்மனைக் காக்க என்ன வழி என்று சிந்தித்த
கிருஷ்ணர்,கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணை பிறப்பித்தார்.போர்க்களத்தில் மயங்கிச் சரிந்த தர்மரை அங்கிருந்து வெளியேற்றி,அவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
கர்ணனின் மீது அம்பு மழை பொழிந்தாலும்,"அண்ணன் எப்படி இருப்பானோ?"என்ற கவலையில் கொதித்தது அர்ஜுனனின் மனம். அவனது இயல்பை அறிந்தவர் கிருஷ்ணர்.ஆதலால்,பீமனை கர்ணனோடு மோதவிட்டு,அர்ஜுனனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து வந்தார்.
பாசறையின் ஓர் ஓரத்தில் தர்மருக்கு சிகிச்சை நடந்தது.நினைவு தப்பிய நிலையிலிருந்து மீண்டு, அங்கே அர்ஜுனன் அடி எடுத்து வைப்பதை ஆவலுடன் பார்த்தார் தர்மர்.தனக்கு பதிலாகப் போர் புரிந்த அர்ஜுனன் நிச்சயம் கர்ணனைக் கொன்று விட்டு வந்திருப்பான் என்பது அவரது எண்ணம்.
எனவே,அவனை ஆரவாரமாக வரவேற்றார்.அவர் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது."கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்"என்று தர்மர் சொன்னபோது,அர்ஜுனனால் பதில் பேச முடியவில்லை.இடையில் புகுந்தார் கிருஷ்ணர்."தர்மத்தை நாடும் உம் திருவாக்கிலிருந்து,கர்ணனைக் கொன்றுவிட்டு அர்ஜுனன் வந்ததாக வந்த
வார்த்தை ஒருபோதும் பொய்க்காது.நிச்சயம் ஒரு நாள் கர்ணனை வீழ்த்தி வருவான் அர்ஜுனன்."என்று கிருஷ்ணர் சொன்னதும், தர்மரின் மகிழ்ச்சி 'பொசுக்'கென்று காணாமல் போயிற்று."கர்ணன் இன்னும் கொல்லப்படவில்லை"என்பதை அறிந்த தர்மர், தாங்கவொண்ணாத் துயரத்துடன் புலம்பத் தொடங்கினார்.
"உன்னை காண்டீவி, ஸவ்யஸாசி"என்று உலகோர் புகழ்வதெல்லாம் பொய்யா?உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருள்தானோ?கர்ணனைக் கொல்லாத உனது காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு."என்று பலவாறு இகழ்ந்துப் பேசினார்.
"தந்தைக்குச் சமமானவன் அண்ணன்" என்ற தர்மத்தைக் கடைப்பிடித்து வருபவன் அர்ஜுனன்.
எனினும், தனது காண்டீபத்தை இகழ்ந்துப் பேசியதால்,தர்மரின் மேல் கோபம் கொண்டான்.அண்ணன் என்றும் பாராமல் கத்தியை உருவிக் கொண்டு தர்மரை கொல்லப் பாய்ந்தான். அருகிலிருந்த கிருஷ்ணர்,விருட்டெனப் பாய்ந்து,"அர்ஜுனனின் கத்தியைப் பிடுங்கி எறிந்தார்."அர்ஜுனா,என்ன செய்யத் துணிந்தாய்?அண்ணனைக்
கொல்வது அதர்மம்.அதிலும் ஒரு தர்மாத்மாவான தர்மரைக் கொல்வது தகாது"என்று அறிவுரைக் கூறினார்.
ஆனால் அர்ஜுனனோ,"காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன்"என்ற தனது சபதத்தைக் கூறி,"தர்மரைக் கொல்லாவிட்டால்,எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே"என்றான்.
தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை,
அறிந்திருந்த கிருஷ்ணர்,அர்ஜுனனுக்கு ஒரு யோசனை கூறினார் "அர்ஜுனா,மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும்,ஒருமையில் திட்டினாலும் அவரைக் கொலை செய்வதற்குச் சமம் என்பர்.அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து,உன் தர்மத்தைக் காத்துக் கொள்!"என்றார்.
அவரது வாக்கு மிகச்சரி என்பதை ஏற்ற அர்ஜுனன்,தர்மரைத் திட்டித் தீர்த்தான். "கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே,உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே.கர்ணனை விட பலசாலிகளும் திறமைசாலிகளும் உன்முன் வந்தால் என்ன செய்வாய்?
நீயெல்லாம் ஒரு வீரனா?"என்று பலவாறு இகழ்ந்தான்.இதைக் கேட்ட தர்மருக்கு,கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது. எதுவும் சொல்லத் தோன்றாமல் தலைக்குனிந்திருந்தார்.
கீழேக்கிடந்த கத்தியை இப்போது மீண்டும் கையில் எடுத்த அர்ஜுனன்,தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான்.
இப்போதும் கிருஷ்ணர் விருட்டெனப் பாய்ந்து,கத்தியை அவன் கையிலிருந்து பிடுங்கி தூர எறிந்தார்.பிறகு,"அர்ஜுனா,தற்கொலை செய்வது பாவம் என்பது தெரியாதவனா நீ? ஏன் இப்படிச் செய்கிறாய்?"என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.
உடனே அர்ஜுனன்,"கண்ணா,உனக்குத் தெரியாததல்ல.
என் முன்னால்,என் அண்ணன் தர்மரை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தேன்.இப்போது நானே அவனை இகழ்ந்து பேசிவிட்டேனே!அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதுதான் எனது தர்மத்துக்கு உகந்தது"என்று வேண்டினான்.
"பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்றும்,பாண்டவர் என் உயிரானவர்கள்!"என்று சொல்லி வந்த கிருஷ்ணருக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம்.இப்போது,இன்னோர் உபாயத்தைக் கூறினார்."தற்கொலை செய்வதற்குச் சமமான ஒரு செயல் உண்டு.அது, தற்பெருமை பேசுவதுதான்.எனவே, நீ உன்னைப் பற்றியே பெருமையாக
புகழ்ந்துப் பேசி, உனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்"என்றார்.
அதுவும் சரிதான் என்று எண்ணிய அர்ஜுனன், "காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி,போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து நின்று வெற்றி பெற்றேன்.வேட உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திர உலகு சென்று,வில் வித்தை கற்று,
இந்திரனின் பகைவர்களை வென்றேன்.என்னைப் போன்ற வில்லாளி உண்டோ?" என்று இன்னும் பலவாறு தன்னைத்தானே புகழ்ந்து பேசி,தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.

பெரியோரை இகழ்வது தகாது. தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் ஆகிய புதியதொரு வழியைக்காட்டினார் கிருஷ்ண பரமாத்மா.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

5 Jan
ஒருநாள் அக்பரின் அரசவையில், அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருக்கும் போது அக்பர் கேட்டார். "பீர்பால்! இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா?". உடனே பீர்பால்,"அரசே!அவருக்கு  ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள்.ஏன் கேட்கிறீர்கள்?" Image
அக்பர்,"இல்லை ஒரு சாதாரண யானையின் காலை,ஒரு முதலை பிடித்ததற்கா உங்கள் திருமால்,கருடன் மீது ஏறி,சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையைக் காக்கவேண்டும்.நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே.அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி,அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? Image
அதை விட்டு விட்டு அவரே ஏன் நேரில் வந்து,அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?" இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.அதைப்பார்த்ததும் அக்பருக்கு ஒரே சந்தோஷம்.பீர்பாலே பதில் சொல்லமுடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று.ஒரிரு நாட்கள் சென்றன.
Read 15 tweets
3 Jan
ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்;
வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!"
கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது

நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக்கூடாது

வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக்கூடாது

சிறந்து மிக உண்ணார் = நன்றாக இருக்கிறது என்பதற்காக,நிறைய சாப்பிடக்கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது

இறந்து = ஒரு, முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)

ஒன்றும் தின்னற்க,நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது
Read 4 tweets
1 Jan
நாலாயிர திவ்யப் பிரபந்தம் - கலியும் கெடும் 

ஒரு ஊரில் பெரிய பஞ்சம்.மழையே இல்லை.பூமி வறண்டு,மக்கள் தவித்துப் போனார்கள்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை என்ன செய்வது என்று முறையிட்டார்கள்.அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்"
என்று கூறி,அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது.கடைசி நாள் யாகம் முடிந்தவுடன்,மழை "சோ" என்று பெய்தது.மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அந்தத் துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள்,அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார்,"இந்த மழை என்னாலோ,இந்த யாகத்தாலோ,உங்களாலோ வரவில்லை.அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே,அந்தச்சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது"என்றார்.அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். ஒருவர் கூட குடைக் கொண்டு வரவில்லை,துறவியும் சேர்த்து.

அவ்வளவு நம்பிக்கை!!
Read 9 tweets
1 Jan
ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய  குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். Image
இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது.இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்.
Read 14 tweets
30 Dec 20
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை

வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்."இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது.பார்த்து வாருங்கள்.ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.
பேருந் மற்றும் புகைவண்டி நிலையம் போன்றப் பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.
உங்கள் மனதையும் உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக்கொள்வான்,சரியான கள்வன்.மனதைத்திருடுவது மட்டும் அல்ல,திருடியபின்,அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பிவிடுவான்.
உங்களை நீங்கள் இழந்தது கூட,உங்களுக்குத் தெரியாது.எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்பாக எச்சரிக்கிறார்.
Read 6 tweets
30 Dec 20
குருஷேத்திரப்போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துக் கொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க,ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?"என வருத்தமுடன் கேட்டார்.அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன்.அதன்பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.நீ அதற்கு பதில் சொன்னால்,நான் உனக்கு பதில் தருகிறேன்"என்ற பகவான்,
கதையைக் கூறினார்.

அந்த அரசன்,மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான்.சைவ நெறிப்படி வாழ்ந்தவன்.ஆனால்,அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்.அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா,அசைவமா
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!