ஒருநாள் அக்பரின் அரசவையில், அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருக்கும் போது அக்பர் கேட்டார். "பீர்பால்! இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா?". உடனே பீர்பால்,"அரசே!அவருக்கு  ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள்.ஏன் கேட்கிறீர்கள்?"
அக்பர்,"இல்லை ஒரு சாதாரண யானையின் காலை,ஒரு முதலை பிடித்ததற்கா உங்கள் திருமால்,கருடன் மீது ஏறி,சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையைக் காக்கவேண்டும்.நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே.அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி,அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?
அதை விட்டு விட்டு அவரே ஏன் நேரில் வந்து,அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?" இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.அதைப்பார்த்ததும் அக்பருக்கு ஒரே சந்தோஷம்.பீர்பாலே பதில் சொல்லமுடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று.ஒரிரு நாட்கள் சென்றன.
அக்பரும் அவர் குடும்பத்தாரும்,அவர்களுடன் பீர்பாலும் சில மெய்க்காப்பாளர்களும் கங்கைக்கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர.அக்பரின் மூன்றுவயது பேரக்குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த பீர்பால்,படகு ஆழமான பகுதிக்கு வந்ததும், படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும்,
சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார்.பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன் பேரனை காப்பாற்றத்துணிந்தார்.அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து,அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்.
படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,"பீர்பால் ஏன் இப்படி என் பேரனைக்கொல்ல துணிந்தாய்? என்னால நம்பவே முடியவில்லை.என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்?"என்றார் கோபமாக.
பீர்பால் அமைதியாக,"உங்களுக்கு திருமாலைப்பற்றி தெரியவேண்டும் என்பதற்காக அப்படிச்செய்தேன் அரசே"என்றார். அக்பர்,"பீர்பால்!என்ன விளையாடுகிறாயா. நீ என் பேரனைத்தூக்கி தண்ணீரில் போட்டதற்கும், உமது திருமாலைப்பற்றி நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்?"
உடனே பீர்பால்,"அரசே மன்னித்துவிடுங்கள்.அன்று ஒரு நாள் நீங்கள் என்னிடம்,உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா?அவர்தான் வந்து யானையை காப்பாற்றவேண்டுமா எனக்கேட்டீர்களே.ஞாபகம் உள்ளதா உங்களுக்கு?". அக்பர் ஆமாம் என்று தலையசைத்தார்.
பீர்பால்,"அரசே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.என்னையும் சேர்த்து இந்தப்படகில் இப்பொழுது உங்களுக்கு பத்துசேவகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல், நீங்களே உங்கள் பேரனைக்காப்பாற்ற தண்ணீரில் குதித்துவிட்டீர்கள்,ஏன் அரசே?
எங்களை நீங்கள் நம்பவில்லையா"என்று கேட்டார்.அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து,"அப்படி இல்லை பீர்பால்!என் பேரன் மேல் நான் அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கிறேன்.நீங்கள் திடீரென்று தண்ணீரில்,அவனை தூக்கிப்போட்டதால் எனக்கு அவனை காப்பாற்றவேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் மேலோங்கி இருந்ததே தவிர
உங்களுக்கு உத்தரவிட்டு அவனை, காப்பாற்றச்சொல்லும் அளவுக்கு எனக்குப்பொறுமை இல்லாமல், நானே குதித்து அவனை காப்பாற்றினேன்"என்றார்.பீர்பால் புன்னகையுடன்,"அரசே!இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு பாசம் இருக்கும்போது அண்ட சராசரங்களையும் ஆளும்,எங்கள் திருமாலுக்கு எவ்வளவு பாசம் இருக்கும்,
உயிர்கள் மேல். அதனால்தான் அவருக்கு,எத்தனை சேவகர்கள் இருந்தாலும்,தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்.அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையைக் காப்பாற்றினார் என்று.
நான் நீரில் வீசிய உங்கள் பேரனைக்காப்பற்ற,இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன்.தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே"என்றார். உடனே அக்பர்,"இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
உங்கள் கடவுளைப்பற்றி தவறாக எண்ணி இருந்தேன். உங்கள் கடவுள்,தாயினும் மேலானவர் என்பதை புரிந்துக்கொண்டேன்" என்றார்.
நெகிழ்ச்சியாக பலமுறை பலர் உபன்யாசகங்களிலும் கதைகளிலும் சொன்னது போல்,அன்புக்கும் பண்புக்கும் நேர்மைக்கும் பகவான் கட்டுண்டவன்.
கூப்பிட்டக் குரலுக்கு உடனே ஓடோடி வந்து இன்றும் உதவுபவன். அவனே தாய்,தந்தை போல் நமக்கு இருக்கும்போது, அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

க்ருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

6 Jan
குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. Image
"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.
கிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். "என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்
செய்த தவறு என்ன?".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்"
Read 12 tweets
5 Jan
ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும்

எப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.

பாடல்:

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.
பொருள்:

நீராடிக் = குளித்து

கால்கழுவி = கால் கழுவி

வாய்பூசி = வாய் கொப்பளித்து

மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையோ சுற்றிலும் நீர் வலம் செய்து

உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப்படுபவர்
அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்

உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல

வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவிச் செல்வார்கள்

அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து

கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து  (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )
Read 7 tweets
3 Jan
ஆசாரக் கோவை - எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஆசாரக் கோவை ஒரு பட்டியல் தருகிறது.

"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்;
வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!"
கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது

நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக்கூடாது

வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக்கூடாது

சிறந்து மிக உண்ணார் = நன்றாக இருக்கிறது என்பதற்காக,நிறைய சாப்பிடக்கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது

இறந்து = ஒரு, முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)

ஒன்றும் தின்னற்க,நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது
Read 4 tweets
3 Jan
குருக்ஷேத்திர போர்க்களம்.உக்கிரமான மகாபாரதப்போர் நடைபெற்றது.சகோதரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்தப்போர்.அன்று உக்கிரப்போர் புரிந்தவன் மாவீரன் கர்ணன். தன் நண்பன் துரியோதனனிடம் வாக்குக் கொடுத்து வந்திருந்தான்.
போர்க்களத்தில் பாண்டவரை வீழ்த்திக்காட்டுவேன் என்பது அவனது தீர்மானம்.அந்த எண்ணத்தால் உக்கிரப்போர் புரிந்தான்.முதலில் வந்தது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்.பாண்டவர் சேனைக்குத் தலைவர் என்பதால்,அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன்.அவனது வில் திறமைக்கு முன்னால்,
தர்மரின் போர்த்திறம் பலம் குன்றியது.கர்ணனின் அம்பு மழையில் தர்மர் நினைவிழந்தார்.பதறியது கிருஷ்ணரின் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர் போன்றவர்கள்,அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்"என்று சொன்ன கண்ணனுக்கு,இப்போது தர்மரின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.வேறு என்ன செய்வது?
Read 19 tweets
1 Jan
நாலாயிர திவ்யப் பிரபந்தம் - கலியும் கெடும் 

ஒரு ஊரில் பெரிய பஞ்சம்.மழையே இல்லை.பூமி வறண்டு,மக்கள் தவித்துப் போனார்கள்.அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை என்ன செய்வது என்று முறையிட்டார்கள்.அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்"
என்று கூறி,அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார்.
ஒரு வாரம் யாகம் நடந்தது.கடைசி நாள் யாகம் முடிந்தவுடன்,மழை "சோ" என்று பெய்தது.மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அந்தத் துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள்,அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அப்போது அவர் சொன்னார்,"இந்த மழை என்னாலோ,இந்த யாகத்தாலோ,உங்களாலோ வரவில்லை.அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே,அந்தச்சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது"என்றார்.அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள். ஒருவர் கூட குடைக் கொண்டு வரவில்லை,துறவியும் சேர்த்து.

அவ்வளவு நம்பிக்கை!!
Read 9 tweets
1 Jan
ஒரு ஊரில் குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய  குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி வில்வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச்சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். Image
இதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது.அது கற்றுக்கொடுத்த குருவையே, அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
"இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே.இன்னும் கூட அதிகமாக கற்றுக் கொள்ள எனக்கு இளமையும்,வயதும் இருக்கிறது.இனி நான்தான் குரு.பழைய குருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!