#பொறுத்தார்_பூமி_ஆள்வார்

இது யாருக்காக உருவான பழமொழி என்று தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை #மோடிக்காக உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.

Demonitisation, GST என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டு இருந்தும் அதையே அசால்ட்டாக கடந்து வந்தவருக்கு....
இந்த விவசாய போராட்டங்கள் பெரிய
விஷயம் அல்ல.

பஞ்சாப் ஹரியானா என்கிற இரண்டு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தினால் நாடு முழுவதும் புரட்சி உண்டாகி விடும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
பாரத் பந்த் என்று எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு நாடு முழுவதும் நடத்திய போராட்டத்தினால் ஒன்றும் புரட்சி உருவாகவில்லை.

அடுத்து டெல்லி பார்டரில் விவசாயிகள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தை முடித்து வைக்க மத்திய அரசு இறங்கி வரும் என்று நினைத்தார்கள். ஆனால்
அதுவும் நடைபெறவில்லை.
மணிக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்றாலே போராட்டக்காரர்களிடம் மண்டியிட்ட அரசுகளுக்கு பதில் மாதக்கணக்கில் நடைபெற்ற போராட்டங்களை கண்டும் மோடி அரசு இறங்கி வரவில்லை.

ஏன் என்றால் போராட்டத்தின் நோக்கம் மோடி எதிர்ப்பு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
கடைசியில் டில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி என்கிற பெயரில் செங்கோட்டையில் நுழைந்து போராடினால் நிச்சயமாக அரசு வேடிக்கை பார்க்காது;
அதிரடியாக ஏதாவது செய்யும்.

மிகப்பெரிய அளவில் உயிர் பலிகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.
ஆனால் டிராக்டர்கள் புழுதியைத்தான் கிளப்பி விட்டு வந்து இருக்கிறதே தவிர புரட்சி எங்கும் வெடித்ததாக தெரியவில்லை.
ஏனென்றால் இவர்கள் எதிர்பார்த்ததற்கு
மாறாக அரசே செங்கோட்டையை திறந்து விட்டார்கள்.
இவர்களும் போகிற போக்கில் இருக்கிறதையெல்லாம் உடைத்து விட்டும் வழி விட்டு நின்ற போலீசை அடித்து துவைத்தும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றியும் தங்களின் உண்மையான நோக்கம் தங்களின் அடையாளம் என்னவென்று காட்டிக் கொண்டார்கள்.
விவசாயிகள் போராட்டத்தை பற்றி அதில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றி பல நாட்களாக மத்திய அரசு கூறி வந்தாலும் அதைக்
கண்டு கொள்ளாத உச்சநீதிமன்றமும் மீடியாக்களும் செங்கோட்டையில் டிராக்டர் பேரணியை நுழைய வைத்ததன் மூலம்....
விவசாய போராட்டத்தை தூண்டி விடுபவர்களின் உண்மையான நோக்கத்தை
உலகம் அறிய செய்து விட்டார் மோடி.

மோடி அரசு நினைத்து இருந்தால் பத்தே நிமிடத்தில் இந்த டிராக்டர் பேரணியை நடந்த சுவடு தெரியாமல் முடித்து வைத்து இருக்க முடியும்.
அதைத்தான் அரசு செய்யும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் ஆவலோடு காத்து இருந்தார்கள்.

ஆனால் அந்தோ பரிதாபமாக டிராக்டர் பேரணி பூமாராங்காகி விட்டது. ஒரு வேளை மோடி அரசு டிராக்டர் பேரணியை
செங்கோட்டையில் நுழைய விடாமல்
தடுத்து கட்டுப்படுத்த நினைத்திருந்தால்....
நிச்சயமாக மிகப்பெரிய அளவில் உயிர்கள் பலியாகி இருக்கும்.

டெல்லி ராஜவீதி 1984ல் இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு மிகப்பெரிய அளவில் ரத்தங்களையும் உயிர்களையும் சந்தித்து இருக்கும். மீடியாக்கள் இன்னொரு
ஜாலியன் வாலாபாக் என்று கூறி இருக்கும்.
இதுவரை ஹிட்லர் என்று சொல்லி வந்த எதிர்(ரி)க் கட்சிகள் மோடியை ஜெனரல் டயரின் மறுவடிவம் என்று அழைத்து
இருப்பார்கள்.

அதை வைத்தே நாடு முழுவதும் போராட்டங்களை விரிவுபடுத்தி இருப்பார்கள். இதனால் மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்து இருந்த புரட்சிகள் நடைபெற்று இருக்க முடியும்.
இதன் மூலமாக இதுவரை பஞ்சாப் ஹரியானாவை சேர்ந்த ஜாட் இன விவசாயிகள் மட்டுமே நடத்தி வரும்
இந்த போராட்டத்தில் இனம் தாண்டி அனைவரும் கை கோர்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

மோடி தன்னுடைய புத்திசாலித்தனமான
நடவடிக்கைகள் மூலம் நடைபெற இருந்த
மிகப்பெரிய உயிர்இழப்புகளை தடுத்து....
எந்தநிலையிலும் தன்னுடைய மக்களை காப்பேன் என்கிற தன்னுடைய தலைமை பண்பை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

மோடி எதிர்ப்பாளர்களை நினைத்தால் ஐயோ பாவமாக இருக்கிறது. டிராக்டர் பேரணியால் புரட்சி வெடிக்கும் என்று
விட்டத்தை பார்த்து இருந்தார்கள்.
ஆனால் இப்பொழுது டிராக்டர் பேரணி கிளப்பிய புழுதியில் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

மாறாக மோடி அமைதியாக இருந்து நேற்று வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களை ஏன் பஞ்சாப் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் மட்டும் இந்தப் போராட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வைத்து இருக்கிறார்.
இந்த இந்த இரு மாநிலங்களில் உள்ள
பெரும் முதலாளிகளான ஜாட் இனத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின்
மண்டிகளின் மூலமாக ஏழை விவசாயிகளிடம் இருந்து அரிசி கோதுமைகளை
குறைந்த விலைக்கு பெற்று அதை பல
மடங்கு லாபம் வைத்து அரசிற்கு விற்று
வருகிறார்கள்.
இதை கட்டுப்படுத்தி இந்தியா முழுவதும்
உள்ள ஏழை விவசாயிகள் அனைவரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவே மோடி இந்த விவசாயிகள் சட்டத்தை கொண்டு வந்தார் என்பதை ஆறறிவு உடையவர்கள் அனைவரும் அறிவார்கள்
இந்த விவசாய சட்டங்கள் இனி நாட்டிலுள்ள ஏழை விவசாயிகளை எப்படி மாற்றியது என்று இரண்டே வருடங்களில் நாடு அறிந்து கொள்ளும். அது மட்டுமல்ல இந்த விவசாய சட்டங்கள் பஞ்சாப் மாநில
அரசியலை எப்படி மாற்ற போகிறது என்பதையும் 2022 பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் மூலம் நாடே அறிந்து கொள்ளும்.
பஞ்சாபில் சீக்கய ஜாட் இன விவசாயிகள் மூலமாக தூண்டப்பட்ட விவசாயிகள் போராட்டம் ஹரியானாவில் உள்ள இந்து ஜாட்களையும் அவர்களுடன இன அடிப்படையில் இணைய வைத்தது. இதற்கு எதிரான விளைவுகளும் இப்பொழுது இரண்டு மாநிலங்களிலும் நிகழ ஆரம்பித்து விட்டது.
வழக்கமாக ஜாட் இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தான். அதனால் தான் இந்தப் போராட்டம் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாபில் இருந்து துவங்கியது. காங்கிரஸ்
இதன் மூலமாக மிகப்பெரிய அளவில் அரசியல் ஆதாயம் அடைந்து விடலாம் என்று நினைத்தது.
ஆனால் இப்பொழுது பஞ்சாபில் அரசியல் நிலைமை மாறிக் கொண்டு வருகிறது
பஞ்சாபில் சுமார் 35% உள்ள தலித்களை பிஜேபியை நோக்கி கொண்டு வருகிறது இந்த விவசாய சட்டங்கள்.

25% உள்ள ஜாட்கள் தான் இதுவரை பஞ்சாப் அரசியலை தீர்மானித்து வந்தார்கள்.
ஜாட்கள் நடத்திய போராட்டங்களினால்
வாழ்வு இழந்த தலித் விவசாயிகள் மற்றும் ராஜ்புத்திரர்கள் வைசியர்கள் பிராமணர்கள் என்று அனைவரும் பிஜேபியை நோக்கி பார்வையை திருப்பி விட்டார்கள். பஞ்சாபில் சுமார் 40% இந்துக்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் இந்த போராட்டம்
மூலமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து சுமார் 58% உள்ள சீக்கியர்களில் 50% தான் ஜாட் சீக்கியர்கள். 40% தலித்சீக்கியர்கள். பஞ்சாபில் தலித் சீக்கியர்களுக்கும் ஜாட் சீக்கியர்களுக்கும் எப்பொழுதும் ஆகவே ஆகாது.
இந்த விவசாய போராட்டங்கள் தலித் சீக்கியர்களை மாற்று அரசியலை நோக்கி
கொண்டு செல்கிறது. அந்த மாற்று அரசியலை பிஜேபி திட்டமிட்டு செயல்படுத்தி
வருகிறது.

அதாவது பஞ்சாப் அரசில் இருந்த தலித் இனத்தை சார்ந்த உயர் அதிகாரிகளை பிஜேபிக்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.
வட மாநிலங்களில் பஞ்சாப் மட்டும் தான்
கை கொடுத்து வருகிறது. இந்த விவசாய
போராட்டங்கள் அதையும் இல்லாமல் செய்து கொண்டு வருகிறது. இந்த போராட்டத்தை அகாலி தளம் முன்னெடுத்து சென்றதால் ஜாட் சீக்கியர்கள் பெருமளவில் இப்பொழுது அகாலி தளம் நோக்கி திரும்பி
விட்டார்கள்.
அதே மாதிரி இந்த விவசாய சட்டங்கள்
மூலமாக பெருமளவில் பயன் பெற இருப்பது சிறிய தலித் விவசாயிகள் தான். அவர்கள் பிஜேபியை நோக்கி திரும்புகிறார்கள். காங்கிரஸ் தன்னுடைய அரசியல் தளத்தை பஞ்சாபில் இழந்து கொண்டு வருகிறது.

இதை தடுக்கவே இத்தனை ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் தூண்டி வருகிறது
கூடவே இந்திய அரசியலில் அட்ரஸ் இழந்து விட்ட கம்யூனிஸ்ட்கள் பிஜேபியை
பழி தீர்க்க இந்தப் போராட்டத்தில் நுழைந்து விவசாயிகளை தூண்டி புரட்சி வெடிக்குமா என்று காத்து இருக்கிறார்கள்.
ஆனால் மோடி மிக அற்புதமாக இந்த போராட்டத்தை கையாண்டு போராட்டம் மூலமாகவே விவசாய சட்டங்களை மக்கள் அறியும் வழியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்.
அதோடு இந்த போராட்டங்கள் மூலமாக வருகின்ற 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி
வருகிறார்.

நான் மீண்டும் கூறுகிறேன் பொறுத்தார் பூமியாள்வார் என்பது மோடிக்காக எழுதி வைக்கப்பட்ட பழமொழியோ...
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்... பொறுத்தார்க்கு பொன்றுந் துணையும் புகழ்

என்பதை நிரூபித்துள்ள நம் நாட்டின் #பெருமகனார்_மோடி

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@coman_20
@par_the_nomad
@bhaskaran2847 @raaga31280 @aarjeekaykannan @naturaize @rprabhu @Mina_Iyer @VasaviNarayanan others
This adds credence to the anti national activities of the sickulars

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

30 Jan
#Modi is the Global Leader

FOR ALL YOU ANTI MODI ANTAGONISTS

👏Joseph Hope, Editor-in-Chief of the New York Times:

Narendra Modi's sole aim is to make India a better Country.. If he is not stopped, in the future India will become the most Powerful Nation in the World..
It will surprise the United States, the United Kingdom, and Russia..

Narendra Modi is moving towards a specific goal.. No one knows what he wants to do..

Behind the Smiling face, a dangerous Patriot.. He uses all the Countries of the world for the benefit of his Nation India.
Destroyed US ties with Pakistan and Afghanistan..

Narendra Modi has created an alliance with Vietnam, shattered China’s Superpower dream and made use of the 3 Countries..

The long-running dispute over oil extraction overseas between Vietnam and China has benefited India..
Read 14 tweets
30 Jan
Kind ATTN. @sardesairajdeep & the like

A moral story

Once an old man spread rumours that his neighbor was a thief. As a result, the young man was arrested.

Days later the young man was proven innocent. After being released he sued the old man for wrongly accusing him.
In the court the old man told the Judge: "They were just comments, didn't harm anyone."

The judge told the old man: "Write all the things you said about him on a piece of paper. Tear it up on the way home and throw away the pieces. Tomorrow, come back to hear the sentence."
Next day, the judge told the old man: "Before receiving the sentence, you will have to go out and gather all the pieces of paper that you threw out yesterday."

The old man said: "I can't do that! The wind spread them and I won't know where to find them."
Read 5 tweets
29 Jan
Forwarded as received in WA:

அமெரிக்கா தன் தடுப்பூசியுடன் கொரோனாவுடன் பெரும் போராட்டம் நடத்துகின்றது, அவர்கள் மருந்தும் அவர்களை தாண்டி வரவில்லை

ரஷ்ய தடுப்பூசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கொடுக்கபடவில்லை, சீன தடுப்பூசியினை அவர்களே நம்பவில்லை
பைசர் நிறுவணத்தின் கொரானா தடுப்பூசி பிரிட்டனுக்கு செல்ல கூடாது என போர்கொடி தூக்குகின்றன ஐரோப்பிய யூனியன் நாடுகள்

உலகெல்லாம் மானிட நேயம் பேசும் அவர்களின் உண்மையான சுயரூபம் இதுதான்
இன்றைய உலகில் ஒரே ஒருநாடு மட்டும்தான் கொரோனாவினை மிக அழகாக கையாண்டு வெற்றி கண்டு, கொரோனா தடுப்பு மருந்திலும் வெற்றிபெற்று உலகெல்லாம் வழங்குகின்றது

18 நாளில் மில்லியன் கணக்கான மருந்தினை அது மானிட சேவை என்ற வகையில் உலகெல்லாம் வழங்கி கொண்டிருக்கின்றது
Read 9 tweets
17 Jan
#அனுபவப்பாடம் வரிசையில் இன்று

#யார்_பிச்சைக்காரன்???

இது ஒரு நீள் பதிவு. தொடராக எழுத விழைகிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை whatsappல் பதிவு செய்த போது எனது நண்பர்களையும் அது எவ்வாறு பாதித்து இருந்தது என்பதை அவர்கள் அனுபவங்களையும் பகிர உள்ளேன்.
இவற்றை படித்ததும் வெறுமனே 👌🙏👏 என்று சொல்லாமல் உங்கள் மனதில் தோன்றுவதை வார்த்தைகளில் தெரிவியுங்கள்
(உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருந்தால் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்)

பாதி இரவும் கடந்துவிட்டது. ஆனால் நித்ராதேவி என்னிடம் வர மறுக்கிறாள்.
தூங்குவதற்காக நான் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. தூக்கம் இல்லாத இது போன்ற இரவுகள் மிக நீளமானது.

இரவில் தூங்குவதற்காக படுக்கும் போது ஏதோவொரு சிறு நினைவால் பற்ற வைக்கப்படும் நெருப்பு அந்த இரவு முழுவதும் எரித்து விடுகிறது

இன்றைய இரவு தூங்கா இரவாக இருப்பதற்கு காரணம்?
Read 29 tweets
14 Jan
Corporate workshopல் சொல்லப்படும் அம்மாளு அத்தைபாட்டியின் கதை

என்னுடைய சிறு பிராயத்தில் மெட்ராஸ் மைலாப்பூர் ஹாமில்டன் பிரிட்ஜ் அருகில் குடியிருந்த அம்மாளுவின் ஆத்துல ஒரு முறை சென்றிருந்த போது அவரிடம் "எப்படி அத்தை! இவ்ளோ பெரிய சமையலை சொடக்கு போடற நேரத்துல
ரொம்ப ப்ரமாதமா பண்ணி முடிக்கற?"னு கேட்டேன்

அப்போ அம்மாளு "சமையல்னு நெனச்சா தான்... பெரிசா... மலப்பா... இருக்கும். இதையே.. பருப்பு... சாம்பார்.. ரசம்..கறி.. கூட்டு.. அப்படின்னு தனித்தனியா பிரிச்சு பார்த்தா.. நாம ஒண்ணுமே செய்யலைங்கற நினைப்பு தானே வந்துடும்.. சிரமமாவும் தெரியாது.
எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும்... பார்ட் பார்ட்டா பிரிச்சுட்டோம்னா... ரொம்ப ஈசியா ஆயிடும்.... முடிச்ச வேலையும் ப்ரமாதமா இருக்கும்!".

அதுக்காக ஒரு குட்டி கதைய சொல்லட்டுமானு கேட்டா...

கரும்பு தின்ன கூலியா!!! அம்மாளு அத்தை பாட்டி சொல்ற கதைனா... அப்படி ஒரு impact இருக்கும்....
Read 12 tweets
13 Jan
#சீனி_அத்தான்_மடியில்*

போன வாரம் என்கள் வீட்டுக்கு போயிருந்தேன். என்னோட mobile phoneல battery lowவாக இருந்ததால் chargeல் போட்டு விட்டு பேரன் ஶ்ரீராமை அழைச்சுண்டு அவாத்து basementக்கு போய் அவன் செய்யும் குறும்புகளுக்கு ஈடு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த apartmentல இருக்கற liftல வராமல், படபடவென மாடிப்படி வழியாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வேர்த்து விறுவிறுக்க வந்தாள் என் மகள்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க... வரும்போதே, "ஏம்பா... senior citizen ஆன பிறகும் உனக்கு இதெல்லாம் தேவையா???
அம்மாவுக்கு துரோகம் செஞ்சா நீ நன்னாவே இருக்க மாட்டேபா!!!!" - படபடன்னு கோபத்தின் உச்சத்தில் என்னென்னவோ சொல்லிண்டே இருந்தாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கம் போல திருதிருவென முழித்தேன்.

ஜெயாங்கறது யாருப்பா? ஒனக்கும் அவளுக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?

ஜெ....யாவா?.............
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!