கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு(பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்ற சொல் வழக்கு உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில்,காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு காரணம் இருக்கிறது.
மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான்.ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே,அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கியபொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார்.
தன்னுடைய வழிபாட்டிற்காக,கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி,சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு,இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான்.அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து,
காவடி போல் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு பயணிக்கலானான்.
ஆனால் முருகப்பெருமானின் விருப்பமோ வேறுவிதமாக இருந்தது. அவ்விரு சிகரங்களும் திருவாவினன்குடியில்(பழனி), நிலைப்பெற்று இருக்கவேண்டும் என்பதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் தான் வந்த பாதை தடம் தெரியாமல் தயங்கிய சமயம்,வேலவன் ஒரு அரசனைப்போல் வேடம்கொண்டு,குதிரையின் மீது பவனி வந்தார்.எதிரில் வந்த இடும்பனைப் பார்த்து, திருவாவினன்குடிக்கு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு பயணத்தைத் தொடரும்படி பணித்தார்.அரசகட்டளை என்று ஏற்ற இடும்பன்,
இரு சிகரங்களையும் கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டான்.கிளம்பவேண்டிய தருணம் வந்தவுடன்,தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்க முற்பட்டான்.ஆனால் அவையிரண்டும் அசைந்து கூடக்கொடுக்கவில்லை.தன் குருபக்திக்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டான்.
அப்பொழுது சிவகிரியின் மேல் ஒரு சிறு பாலகன் கோவணத்துடன் நிற்பதைக்கண்டான். பாலகனை சிகரத்திலிருந்து இறங்கி விடும்படி இறைஞ்சினான்.ஆனால் பாலகன் அச்சிகரம் தனக்குண்டானது என்று கூறி இறங்கி வர மறுத்துவிட்டான். எத்தனை கெஞ்சியும் பாலகன் இடும்பனுக்கு பணிய மறுத்துவிட்டான்.
இடும்பனுக்கு அளவிடமுடியாத கோபம் உண்டானது.அதனால் அச்சிறுவனைத் தாக்க முற்பட்டான்.ஆனால் முற்பட்ட கணமே வேரற்ற மரம் போல் பூமியில் சாய்ந்தான்.சிஷ்யன் வராததைக் கண்ட அகத்தியர்,ஞான திருஷ்டியில் நடந்ததை அறிந்துக்கொண்டார்.தன் சீடனைக் காக்கும்படி முருகப்பெருமானிடத்தில் வேண்டிநின்றார்.
அழகனும் இடும்பனின் பக்தியை மெச்சி அருளாசி புரிந்தார். மேலும் அவனை,தன் காவல் தெய்வமாக அமர்த்திக்கொண்டார்.இடும்பனைப் போல் காவடி எடுத்துவரும் பக்தர்களுக்கு,அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும் அருள் வாக்கினை அளித்தார். அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்குக் காவடி எடுக்கும் பழக்கம்,
புழக்கத்தில் வந்தது.பழனி மலைப்பாதையின் தொடக்கதிலேயே தனியாக ஒரு பாதை செல்கிறது.அதில் சென்றால் காவடி தூக்கிவரும் இடும்பன் சிற்பமும்,அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம், வடிவேலர் சந்நிதியும் இருக்கிறது.இவையே தாத்பர்யத்தை விளக்கும் ஆதாரக் கதையாக அமைகிறது.
ஞானப்பண்டிதனுக்கு எடுக்கப்படும் காவடிகள் சில:
பால் காவடி,பன்னீர் காவடி,புஷ்பக் காவடி, அக்னி காவடி, சரப்பக்காவடி,மச்சக்காவடி,மயில்காவடி,சந்தனக் காவடி,சர்க்கரைக் காவடி,இளநீர் காவடி,வேல் காவடி,கரும்புத் தூளி காவடி போன்றவை ஆகும்.
பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே பகவான் அர்ச்சாவதாரியாக எழுந்தருளி உள்ளான். மனமாகிய குகையில் இருக்கும் குகனை நித்தமும் தொழுது, அவனுக்கு தொண்டாற்றி பேரின்பம் பெறுவோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது. பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது.
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை. நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தகால வழக்கப்படி,போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.தேரோட்டிகள் கீழே இறங்கி,மண்டியிட்டு நிற்பார்கள்.மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,
தேர்ப்பாகன் மன்னனை வணங்கி,மாலையிட்டு,வெற்றிக்கோஷம் முழங்குவான்.அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு,மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின்,வெற்றிகண்ட பாண்டவ சகோதரர்களுக்காக,
இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச்சடங்குகள் ஆரம்பமாயின.தர்மரின் தேரின் முறை முடிந்தபின்,பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான்
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு,செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவன்பக்கம் போர்ப்புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு,