திராவிட வாசிப்பு “மு.க. ஸ்டாலின் எனும் நான்” கட்டுரைகளுக்கான நினைவூட்டல்.

திராவிட வாசிப்பு "மு.க.ஸ்டாலின் எனும் நான்" கட்டுரைக்கான நினைவூட்டல். அனைவரையும் எழுத ஆவலுடன் அழைக்கிறோம்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய அறிவிப்பு.
அண்ணா, கலைஞர் சிறப்பிதழ்களை தொடர்ந்து பிப்ரவரி மாத “திராவிட வாசிப்பு” மின்னிதழை, இன்றைய திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் அரசியலையும், ஆளுமையையும், ஆட்சித்திறனையும் பறைசாற்றும் வகையில் “மு.க. ஸ்டாலின் எனும் நான்” என்கிற தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வர இருக்கிறோம்.
மு.க ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழில் கீழ்காணும் தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை தரலாம்.
மிசா நாயகன் ஸ்டாலின்,
இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்,
சென்னை மேயர் ஸ்டாலின்,
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
துணை முதலமைச்சர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,
செயல் தலைவர் ஸ்டாலின்,
பாசிச/ மதவாத எதிர்ப்பு தலைவர் ஸ்டாலின்,
திமுக தலைவர் ஸ்டாலின்,
மு.க ஸ்டாலின் எனும் நான்,
ஏன் திமுக ஆட்சி மலர வேண்டும்?
மேற்சொன்ன இந்த தலைப்புகளிலோ அல்லது இதையொட்டிய வேறு தலைப்புகளிலோ நீங்கள் உங்கள் கட்டுரையை எழுதி அனுப்பலாம்.
எழுத முடியாதவர்கள் “ஏன் திமுக ஆட்சி மலர வேண்டும்?”
என்கிற தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பேசி காணொளியாக அனுப்பலாம்.
கட்டுரையை/ காணொளியை அனுப்ப வேண்டிய முகவரி: dravidavaasippu@gmail.com
அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 14 பிப்ரவரி 2021
இந்த தகவலை மற்றவர்களுக்கும் சொல்லி கட்டுரைகளை/ காணொளியை பெற்றுத்தர வேண்டுகிறோம்.
நன்றி!🖤❤️🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

13 Feb
கலைஞர், தளபதிக்கு எத்தனையோ சவால்களை தந்து அவர் எப்படி செயலாற்றுகிறார் என்று பார்த்திருக்கலாம்.

அன்பகம் கட்டிடம் தர 10 லட்சம் நிதி திரட்டி தரவேண்டும் என்று சொல்லி, அதை தளபதி சாதித்து காட்டியதாக இருக்கட்டும்,

மேயர் என்பது பதவியல்ல.. பொறுப்பு என்று சொல்லி, அதை தளபதி நிறைவேற்றி,
சிறந்த மேயராக பேர் வாங்கியதாக இருக்கட்டும்,

அவர் துணை முதல்வர் என்றால், எனக்கு துணையாக இருந்து செயல்படுகிறார் என்று பாராட்டியதாக இருக்கட்டும்,

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டியதாக இருக்கட்டும்.

தளபதிக்கான உயர்வை சாதாரணமாக தந்துவிடவில்லை கலைஞர்.
ஏனெனில் கலைஞருக்கு தெரியும், அவர் தாங்கியது தங்கக்கிரீடமல்ல, முள் கிரீடம் என்று.

இனக்காவலன் என்கிற பட்டம் சாதாரணமாய் கிடைக்கக்கூடியதல்ல. இங்கே நன்றியுடையுடைய நாய்களை விட, நன்றிகெட்ட ஓநாய்களே அதிகம் என்பதும் அவருக்கு தெரியும்.
Read 19 tweets
5 Feb
மிசா காலத்தில் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு ஆளாக்கப்பட்டது. குறிப்பாக விடுதலை, முரசொலி ஆகிய பத்திரிக்கைகள் குறிவைக்கப்பட்டது. கலைஞரை வெகுண்டெழ செய்த சம்பவம் ஒன்று இருக்கிறது.. கலைஞர் சொல்கிறார் கீழே..
ஜூன் மாதம் மூன்றாம் நாள் எனது பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்தநாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக்கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. "என் அன்னையைவிட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்" என்று
அந்த கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஜூன் முதல் நாள்இரவு, அன்றிரவு தான் அதிகாரிகளிடம் பேசினேன்.
Read 10 tweets
22 Dec 20
பொய்யிலும் புரட்டிலும் வாழும் பார்ப்பனீயம்:

வேதத்தை, நால்வர்ணத்தை, பார்ப்பன மதத்தை எதிர்த்து ஒரு பகுத்தறிவு மார்க்கத்தை இந்தியாவில் உருவாக்கிய புத்தரின் பௌத்தத்தை இந்தியாவில் இருந்து விரட்டிவிட்டு, புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யும், புரட்டுமாக பரப்பினார்கள்.
அந்த பொய்யை நாம் இன்னமும் மறுத்துக்கொண்டு இருக்கிறோம்.

எங்குமே பிறக்காத ராமரை அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என சொல்லி பாபர் மசூதியை இடித்தார்கள். மதக்கலவரம் மூண்டது. நாம் ராமன் பிறந்தானா என்பதை கேட்க முடியவில்லை.
கலவரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.

குரங்குகளை வைத்து ஒரு பாலம் கட்டினான் ராமன் என ஒரு புராணக்கதை. அதை நாசவே ஒத்துக்கொண்டது என ஒரு புருடா. நாசா வந்து நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டிய அளவுக்கு பார்பனீயத்தின் வலிமை இருக்கிறது.
Read 10 tweets
19 Dec 20
சமீபத்தில் நான் ரசித்து பார்க்கும் இணையதளம் Liberty Tamil. பல்வேறு ஆளுமைகளை, கட்சிகள் வித்தியாசமின்றி பேட்டி காண்கிறார். அதிக நேரம் பிடிக்காமல், சிறிய காணொளிகளாக இருந்தாலும் கருத்துக்களை தெள்ளத்தெளிவாக உள்வாங்கிக்கொள்ள உதவும் விவாதங்களாக இருக்கிறது.
திருமுருகன் காந்தியை எடுத்த பேட்டி முக்கியமானது. நமக்கிருக்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டார். ஆனால், பதில் வழக்கம் போல தெளிவாக வரவில்லை. 2021 தேர்தல் கருத்துக்கணிப்புகளும் களத்தை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கிறது.
எடுத்துக்காட்டாக தியாகராய நகரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜக சார்ப்பாக தியாகராய நகரில் பாஜகவின் எச்.ராஜா நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு,
Read 5 tweets
16 Dec 20
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.

கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.

யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.

யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
Read 4 tweets
16 Dec 20
புதிதாக அரசியல்வாதி வேடம் போட்டவர்களுக்கு கொள்கையை கேட்டால் பதட்டம் வருகிறது. கொள்கையே இல்லாமல் கட்சியை ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நாம் அவர்களை உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக, தேர்தல் அறி்க்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஆரம்பிக்கும். அந்தக்குழுவிற்கு தலைவர் இருப்பார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும், ஊர் வாரியாக அலசி, அந்த அறிக்கையை தயாரிப்பார்கள். அதுமட்டுமல்லாது, முத்தாய்ப்பான சில அறிவிப்புகளை திமுக வெளியிடும்.
அந்த அறிவிப்புகள், தேர்தலின் போக்கையே மாற்றும். ஏனெனில், திமுக இன்று அறிவித்தால், நாளை அது அரசாணையாகும் என்பதை மக்கள் அறிவார்கள்.

இந்த வரிகட்டாத, வாடகை தராத நடிகர்கள் இலவசத்திட்டம் என எள்ளி நகையாடும்,மக்கள் நல சமூகநீதி திட்டங்களை திமுக இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அறிவிக்கும்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!