போலி அறிவியலும் மூடநம்பிக்கை
விதைகளும்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்ட
முடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக்
மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின்
புராதனச் சின்னங்களான கோபுரங்களின்
மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில்
'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்
பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும்
சொல்லி இருக்கக்கூடும்.
இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும்,
சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும்,
அம்மை நோயின்
போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு 'ஆண்டிபயாடிக்' என்ற
அறிவியல் உண்மையின் காரணமாகத்தான்
என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும். மேற்கண்ட கருத்துகளை
நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் போலி அறிவியலுக்குப் பலி ஆனவர்தான்.
ஏனெனில், உண்மையில் கலசங்கள் இடிதாங்கிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில்
குறைந்து வருவதற்குக் காரணம் அவை கூடு கட்டுவதற்கு ஏற்ற இடங்கள், மரங்கள் குறைந்து வருவதுதான். பூமி கோள
வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே
தவிர அதன் வெளிப்பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை 'ஆண்டிபயாடிக்' என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்' வைரஸினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்' என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும்
வைரஸும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.

போலி அறிவியல் உருவாகக் காரணம்: நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான 'சண்டை' பல நூற்றாண்டு கால
வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது,
மதவாதிகள் அவரைக் 'குற்றவாளி' என்றனர்.
மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப்
பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரித் தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது
கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர்.
மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல் செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நம் நாட்டை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம்.
பாரம்பரியம், மரபு,கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை
வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம். மதத்தில் உள்ள கட்டுக்கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன்
கதைகளில் பூமியைக் கடத்திக்கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள்!
பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில்
மத அடிப்படைவாதிகள் 'அறிவியலால்' தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும்
என்றார்கள். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படை வாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை.
மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்து
விடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய்,
இப்போது ஒவ்வொரு மத நிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல்பூர்வமானது என்று அடித்துக்
கொள்ளும் நிலை வந்துவிட்டது.

இந்தப் போலி அறிவியலின் அடிப்படை மிக எளிமையானது.அதாவது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதுதான்.
இதன்படி அறிவியலையும் நம்பிக்கைகளையும், கட்டுக் கதைகளையும், பாரம்பரிய மருத்துவ மூட
நம்பிக்கைகளையும் கோர்த்து விடுவதுதான். இதனால் மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல்பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக
கதைகிளப்பி விடப்படுகிறது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, ஹோமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோவில் சுத்துவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல்பூர்வமானது என்று கதை
கட்டப்பட்டு உள்ளது.

இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.
இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு
வெளிவரும் பத்திரிகைகள் மூலம் இதனைச் சாதிக்கின்றனர்.ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக,
அதன் தலைப்புகள் 'அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை', ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்' என்றவாறு
இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள நாசாவும், நம்மூர்
திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள்.எதற்கெடுத்தாலும் 'நாசாவே சொல்லிடுச்சு' என்பார்கள்,
இல்லையானால் 'திருமூலர் அப்பவே இதச் சொல்லி வச்சுட்டுப் போயிட்டாரு' என்பார்கள். தமிழ் ஆசிரியர்களுக்கே புரியாத
ஏதாவது ஒரு செய்யுளை
எடுத்துப் போடுவார்கள். அதற்கு இதுதான் அர்த்தம் என்பார்கள். 'cosmic dance' அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் 'நடனம்' ஆடுகிறார் என்பார்கள்.

நூல்: முனைவர் எஸ்.சேதுராமன் அவர்கள் எழுதிய “மூட நம்பிக்கைகளும் போலி அறிவியலும்”

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

19 Feb
தமிழ்த்தாத்தா உ.வே.சா.அவர்களின் 167-வது பிறந்த தினம் இன்று!

அவர் எழுதிய,'என் சரித்திரம்',என்கிற நூலை படித்தால் தமிழ் பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கடும் சிரமங்களை அறிந்து பிரமிப்புணர்வு ஏற்படும்.
ஒரே ஒரு தமிழ் ஓலைச்சுவடிக்காக 50கி.மீ.வரை நடந்தே சென்றும் கூட சேகரித்திருக்கிறார்.இப்படி அவர் சேர்த்த ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை மட்டும் 3,000.

கனமான இந்தப் புத்தகத்தைப் படிக்க முதலில் தயங்கினேன்.தமிழ்ப்பண்டிதரான இவருடைய எழுத்து மிக கடினமாகயிருக்கும் என எண்ணியிருந்தேன்.
ஆனால்,எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன், கீழே வைப்பதற்கே மனம் வரவில்லை.அந்த அளவிற்கு எளிய தமிழ்நடை.சிறு சிறு வாக்கியங்களில் எழுதி நமை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

இவருடைய தாத்தாவுக்கும், இவருக்குமான உரையாடலை படிக்க படிக்க இன்பம்தான்.
Read 5 tweets
16 Feb
Men ask why women are so pissed off, even guys with wives and daughters. Jackson Katz, a prominent social researcher, illustrates why. He's done it with hundreds of audiences:
"I draw a line down the middle of a chalkboard, sketching a male symbol on one side and a female symbol on the other.
Then I ask just the men: What steps do you guys take, on a daily basis, to prevent yourselves from being sexually assaulted?
At first there is a kind of awkward silence as the men try to figure out if they've been asked a trick question. The silence gives way to a smattering of nervous laughter. Occasionally, a young a guy will raise his hand and say, 'I stay out of prison.'
Read 10 tweets
11 Feb
மணமுறிவு மனமுறிவு அல்ல!
*
எனக்கு தெரிந்த நண்பனின் அக்கா அவர். திருமணம் ஆகி சில மாதங்களில் கணவர் இன்னொரு உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று தெரிந்து விவாகரத்து வாங்கினார். என் உறவுக்கார பெண் இதே போன்றொரு காரணத்திற்காக உயிரையே விட்டார்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், தனது ஒரே மகளுக்கு மிக ஆடம்பரமாக செய்துவைக்கப்பட்ட திருமணம் தோல்வியுற்று, திருமணம் ஆன சில வருடங்களிலேயே பெண் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இன்னொரு பெண் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் குழந்தை இருக்கிறது. ஆனால், விவாகரத்து ஆகி விட்டது
மேற்கூறிய உதாரணங்கள் போல பல பெண்களின் வாழ்க்கையை நீங்களும் பார்த்திருக்கலாம். திருமணம் என்பது இன்னமும் நம் ஊரில் ஒரு மிகப்பெரிய நிகழ்வு. 25 வயதை கடந்துவிட்டால் பெண்ணுக்கும், 30 ஐ நெருங்கிவிட்டால் ஆணுக்கும் திருமணம் முடிக்கவேண்டுமே என்ற பாரம் பெற்றோர்களை நெருக்குகிறது.
Read 26 tweets
11 Feb
இன்னைக்கு ஏற்கனவே நிறைய கிண்டில் பதிவு வந்துட்டதுனால நானும் போட்டு வைக்கிறேன்.

‘ எப்படிங்க இவ்வளவு நூல் வாசிக்கிறீங்க?’ அப்படினு நிறைய பேர் கேட்டுருக்காங்க. அதுக்கு முக்கிய காரணம் diverse medium தான். அதாவது நான் கிண்டில், ஒலி நூல், அப்பப்ப அச்சு நூல்னு எல்லாமே படிப்பேன்.
அதுனால தான் நிறைய படிக்க முடியுது. அதே அச்சு நூல் மட்டும் தான் படிப்பேன்னு படிச்சா இப்ப படிக்கிறதுல கால்வாசி கூட என்னால படிக்க முடியாது.

அடுத்து, நான் தூங்கறதுக்கு முன்னாடி சில பக்கங்களாவது படிச்சிட்டு தான் தூங்குவேன்.
வீட்டுல இருக்க யாரையும் தொந்தரவு செய்யாம படிக்க கிண்டில் தான் நல்ல வழி. தூக்கம் வர வரைக்கும் படிச்சிட்டு தூங்கலாம். அதுவும் வீட்டுல சின்னக் குழந்தைங்க இருக்காங்கனா கண்டிப்பா அச்சு நூல் படிக்கிறத விட நாம கிண்டில் நூல் படிக்கிறது எளிதா இருக்கும்.
Read 9 tweets
10 Feb
#freeEbooks
இன்றைய புத்தகம்

கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய பல் துறைகளிலும் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாசகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆசிரியர் திருரகுநாதன்.

அவர் எழுதிய 'பஞ்சும் பசியும்' என்ற இந்நாவல் இலக்கியச் சாதனை வரலாற்றில் ஒரு மைல்கல்,
தமிழ் நாவல் இலக்கியப் பாதையில் ஒரு திருப்புமுனை; தமிழில் முற்போக்கு எதார்த்தவாதநாவல் இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி

மேலும், அயல்நாட்டு மொழியொன்றில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்ட முதல் தற்காலத் தமிழ் நாவல் என்ற சிறப்பையும் பெற்றது.
செக்கோஸ்லாவக்கியா அகடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்.

இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற் பதிப்பை 1957ல் வெளியிட்டது;
Read 4 tweets
10 Feb
#freeEbooks
இன்றைய புத்தகம்

இந்த வாழ்க்கையில் இருப்பதிலேயே ஆக விருப்பமானதென்றால் சினிமா பார்ப்பது மட்டுந்தான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே தினமும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவன் நான். ஒரு சிறுநகர இளைஞனுக்கு சினிமா கொடுக்கும் கனவுகள் அசாதாரணமானவை.
அந்தக் கனவுகள் தான் சினிமாவைத் தேடி இத்தனை தூரம் ஓடிவர வைத்துள்ளது. சினிமாவை ஒரு பார்வையாளனாக இருந்து அணுகுவதற்கும் எழுத்தாளனாய் அணுகுவதற்குமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு வயதில் எதையெல்லாம் ரசிகனாய் ரசித்துக் கொண்டாடினேனோ அதையெல்லாம் மறுதலிக்க வேண்டிய யதார்த்தம் உரைத்தது.
வெகுஜன ரசனையின் வாயிலாகத்தான் தமிழ் சமூகம் பெரும்பாலான விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புக்கிறது. தமிழ் சமூகத்திலிருந்து தமிழ் சினிமாவை ஒருபோதும் நம்மால் பிரித்தெடுக்க முடியாது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!