வீரன்னா யார் தெரியுமா?… நெஞ்சுரம்னா என்னன்னு தெரியுமா?
அஷ்வின் ஜி. சஞ்சிகை பகிர்வு
29 ஆண்டுகளுக்கு முன்பு….
ஜனவரி மாதத்தில் ஒரு நாள் (26 -1-1992)
தீவிரவாதிகள் சவால் விட்டிருந்தார்கள். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று இந்திய தேசீயக் கொடியை ஏற்ற வரும் இந்தியர்களை நாயை சுடுவது போல சுட்டுத் தள்ளுவோம். லால் சவுக்கில் நுழைபவர் எவரும் இந்தியாவுக்குள் உயிருடன் திரும்ப முடியாது என்று கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கைகோர்த்து நின்று கொண்டிருந்த நேரம் அது..
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்தச் சவாலை இந்தியாவில் இருந்து இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.
கன்னியாகுமரியில் இருந்து ஒரு (திரங்கா) மூவண்ணக் கொடியை ஏந்தி ஏக்தா யாத்திரா எனும் புனிதப் பயணத்தை அந்த இருவரும் தொடங்கி 26ந்தேதி ஜனவரி,1992 அன்று ஜம்மு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீநகர் லால் சவுக்கில் நுழைந்தார்கள்.
லால்சவுக்கில் நமது மூவண்ணக் கொடியை ஏற்றியதும், இந்திய தேசீய கீதத்தை இசைத்தார்கள் அந்த இருவர்.
இதை சற்றும் எதிர்பாராத தீவிரவாதிகள் ஐந்து வெடி குண்டுகளை மைதானத்தை சுற்றிலும் இயக்கி வெடிக்க வைத்தார்கள்.
இதற்கெல்லாம் சற்றும் அசைந்து கொடுக்காமல் மைதானத்தில் இந்தியாவின் மூவண்ணக் கொடியை ஏற்றியதும் கம்பீரமாக நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டார்கள்.
மீண்டும் ஹெலிபெடுக்கு வந்து ஹெலிகாப்டரில் ஏறி ஜம்மு வழியாக டெல்லிக்கு திரும்பினார்கள்.
நம் நாட்டின் தேசீயக் கொடியை தீவிரவாதிகளின் சவாலை ஏற்று உயிரைப் பணயம் வைத்து, ஸ்ரீநகரின் லால் சவுக், மைதானத்தில் ஏற்றிவிட்டு தேசீய கீதத்தை பாடிவிட்டு திரும்பிய அந்த இருவர் யார் என்று தெரிகிறதா?
அன்றைய கொடி ஏற்றும் வைபவத்தை தலைமை ஏற்று நடத்தி முடித்தவர்கள், திரு.முரளி மனோகர் ஜோஷியும், இன்றைய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிஜியும் தான்.
இது நடந்து இப்போது 29 ஆண்டுகள் கழிந்து சென்று விட்டன.
தனது உயிரை துச்சமென மதித்து லால் சவுக்கில் கொடி ஏற்றிவிட்டு திரும்பிய அந்த மாமனிதர் நமது நாட்டு வீரர்கள் மரணச் செய்தி கேட்டு அமைதியாகவா இருந்திருப்பார்???
அவரது மனசுக்குள் வீசிய சூறாவளி தான் 26.02.2019 அன்று அதிகாலை பாலாகோட்டில் மையம் கொண்டு தீவிரவாதிகளின் முகாம்களை சூறையாடி விட்டு திரும்பி இருக்கிறது..
நாற்பத்தைந்து வீரர்களை பலி கொண்ட பாகிஸ்தானை பழிவாங்கிட வெற்றிகரமாக மீண்டும் ஒரு துல்லியத் தாக்குதலை நடத்திக் காட்டியுள்ளார் பிரதமர் திரு.மோடி.. ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் 26ஆம் நாளை இந்திய வரலாறு இந்த நிகழ்வுகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கும்…
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*மகா சிவராத்திரி நாளில் ஏன் அன்னதானம் செய்யக் கூடாது?*
மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும்,
பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன.
நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம்.
மும்பை : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்திற்கு, ஜெய்ஷ் - உல் - ஹிந்த் என்ற, பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர் மும்பையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் வீடு அமைந்துள்ளது.
இவரது வீட்டருகே, சமீபத்தில், 'ஜெலட்டின்' குச்சிகளால் நிரப்பப்பட்ட கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், விசாரணையை துவங்கினர்.
*மகா சிவராத்திரி அன்று மட்டும் திறந்திருக்கும் சிவாலயம். இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சிவனை தரிசிக்க முடியும்.*
இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா இன்று இரவு கொண்டாடப் பட உள்ளது. இன்றைய தினம் இரவு கண் விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர்: பிரதமர் மோடி புகழாரம்
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாக இருப்பர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுவாமி சித்பவானந்தரின் பகவத் கீதை பதிப்பு 5 லட்சத்துக்கும் மேல் விற்று சாதனை படைத்ததை அடுத்து, அதன் மின்னூல் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. அப்பதிப்பைப் பிரதமர் மோடி காணொலி மூலம் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாகவும் ஜனநாயக மனோபாவத்துடனும் இருப்பர். கீதை சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
என்னங்க.... அக்கம் பக்கம் வீடுகளில் கரண்ட் இருக்கு, நம்ம வீட்ல மட்டும் நேத்து நைட்டு, நீங்க போனதில இருந்து கரண்ட் இல்லீங்க,
நைட்டெல்லாம் தூக்கமே இல்லை, புள்ளைக எல்லாம் புழுக்கத்துல தூங்காம அழுதுட்டே இருந்துதுங்க...
லைன் மேனுக்கு
போன போட்டு வரச்சொல்லி பாக்க சொல்லுங்க...
75வது சுதந்திர தின கொண்டாட்டம் ; நாளை துவக்குகிறார் பிரதமர் மோடி
புதுடில்லி :'நாட்டின், 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
அனைத்து, எம்.பி.,க்களும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்' என, மத்திய அரசின் பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் பேசினர்.