*மகா சிவராத்திரி அன்று மட்டும் திறந்திருக்கும் சிவாலயம். இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சிவனை தரிசிக்க முடியும்.*
இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா இன்று இரவு கொண்டாடப் பட உள்ளது. இன்றைய தினம் இரவு கண் விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
சிவராத்திரி விரத பலன்கள் நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.
அத்தகைய மகத்தான சிவராத்திரியை முன்னிட்டு நாட்டில் பல்வேறு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆனால் நாம் இன்று பார்க்க போகும் சிவன் கோயில், சிவ ராத்திரி அன்று மட்டுமே திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும் என்றால், ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
ஆம். ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏக்லிங்கேஸ்வர் மகாதேவ் கோயில் தான் அது. ஜெய்பூரில் அமைந்துள்ள இந்த சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதற்காக பக்தர்கள் ஒரு வருடம் காத்திருக்கின்றனர்.
ஜெய்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த கோயில் உருவானதாக இந்த மக்கள் நம்புகின்றனர். சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி தரும் இந்த கோயிலில் ஆரம்பத்தில் சிவபெருமான் மட்டுமின்றி மற்ற கடவுள்களின் சிலை வைக்கப்பட்டது.
ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு, சிவலிங்கத்தை தவிர மற்ற சிலைகள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சிவபெருமான குடும்பத்தை சேர்ந்த கடவுள் சிலைகள் நிறுவப்பட்டதாகவும், மீண்டும் அந்த சிலைகள் மாயமாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.
அதன் பிறகு மற்ற கடவுள்களின் சிலைகளை நிறுவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஏக்லிங்கேஸ்வர் கோயிலில் ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தின் சார்பாக மட்டும் பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த கோயில் வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்று மட்டுமே திறக்கப்படுவதால், பக்தர்கள் இந்த கோயில் மீது சிறப்பு கவனத்தை கொண்டுள்ளனர். சுமார் 1 கி. மீ தூர வரிசையில், பல மணி நேரம் வரிசையில் நின்று சிவபெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
ஓம் நமசிவாய வாழ்க 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.