மும்பை : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்திற்கு, ஜெய்ஷ் - உல் - ஹிந்த் என்ற, பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர் மும்பையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் வீடு அமைந்துள்ளது.
இவரது வீட்டருகே, சமீபத்தில், 'ஜெலட்டின்' குச்சிகளால் நிரப்பப்பட்ட கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், விசாரணையை துவங்கினர்.
இதற்கிடையே, அந்த காரின் உரிமையாளர், மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். தற்போது, இந்த வழக்கை, தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு, ஜெய்ஷ் - உல் - ஹிந்த் என்ற, பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
'டெலகிராம்' செயலி வாயிலாக, அந்த தகவல் கசிந்துள்ளது.டெலகிராமில் உருவாக்கப்பட்ட குரூப் ஒன்றில், கடந்த, 27ம் தேதி இரவு, அது குறித்த தகவல் பகிரப் பட்டிருந்தது.
அதில், அம்பானியின் வீட்டருகே, வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்ததற்கு, தாங்களே காரணம் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குரூப், டில்லி திஹார் சிறை அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் சிலரால் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.அவர்களை தேடும் பணிகளில், டில்லி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக, ஒரு தனியார் 'சைபர்' நிறுவனத்திடம், உதவி கோரப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.