'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
நம் அருகில் இருக்கும் கர்நாடகாவில் கூட, அக்கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. கிறிஸ்துவர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாநிலங்களிலும், இஸ்லாமியர் அதிகம் வாழும், உ.பி., போன்ற மாநிலங்களிலும், பா.ஜ., தான் ஆட்சி செய்கிறது. அங்கெல்லாம், சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனரா...
அப்படி இருந்தால், பா.ஜ., எப்படி ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும்?
அம்மாநிலங்களில் பட்டியலினத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டனவா; அந்தந்த மாநில மொழிகளை அழித்து விட்டனரா;
'ஹிந்தி தான், அனைவரும் கற்க வேண்டும்' என, கட்டாயமாக்கப்பட்டுள்ளதா... அப்படி ஏதும் நடக்கவில்லையே! 'ஹிந்து தவிர பிற மதங்கள் இருக்க கூடாது' என, சட்டம் போடப்பட்டுள்ளதா; எதுவுமே இல்லை.
தமிழகத்தில் நடந்த ஊழல் போல, பா.ஜ., ஆளும் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லையே.
கமிஷன், லஞ்சம் தலைவிரித்தாடவில்லை; அப்பாவி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படவில்லை; 16 மணி நேர மின்வெட்டு இல்லை; குடும்ப அரசியல் இல்லை. திராவிடக் கட்சிகள் போல, பா.ஜ., செயல்படவில்லை. எந்த மதத்தையும் இழிவுப்படுத்தவில்லை. மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்து, ஏழு ஆண்டுகள் ஆகின்றன.
இதுவரை எந்த மாநிலத்திலும், பெரிய அளவில்மதக்கலவரம் நடக்கவில்லை. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் கிறிஸ்துவ, முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக, பா.ஜ., முன்னிறுத்தப்பட்டு, மாய வலை விரிக்கப்படுகிறது; மக்கள் அதில் சிக்க கூடாது.
தி.மு.க.,வை விட, பா.ஜ.,வில் தான் அதிகளவில் கிறிஸ்துவர், முஸ்லிம் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், அமைச்சர்கள் உள்ளனர்.
சி.ஏ.ஏ., சட்டம் குறித்து, பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த சட்டம் அமலுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது.
இதுவரை, ஓர் இந்திய முஸ்லிம் கூட, அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டதில்லையே! ஜெ., மரணத்திற்கு பின், இ.பி.எஸ்., அரசைக் கவிழ்க்க, மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்திருந்தால், இந்நேரம் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருப்பார்.
ஆக, அரசியல் ஆட்டத்தில், தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் பொய் பிரசாரத்தை மேற்கொள்கின்றன என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்றும் "ஐ பேக்" கெஜ்ரிவாலா, ஜெகன்மோகன் மற்றும் தற்ப்போது " திருட்டு குடியேறிகளின் அத்தை" மம்தாவுக்கு ஆலோசனை கூறுகிறது.முந்தய நிகழ்வுகள்,தற்ப்போதய "ஐ பேக்" நிகழ்வுகள்! பார்ப்போம்!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில், முட்டை வீச்சு, மை தெளிப்பு, செருப்பு வீசுவது, கன்னத்தில், 'பளார்' விடுவது போன்ற பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றில், பெரும்பாலான சம்பவங்கள், தேர்தல் நேரத்து, 'ஸ்டன்ட்' எனவிமர்சிக்கப்பட்டது.அதைப்போலவே, 2018 ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விமான நிலையத்தில் தாக்கப்பட்டார்.