அ.ப.பெருமாள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் போராடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியோ மிகக்குறைந்த தொகுதிகளை பெற்று, ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டன.
இரு கம்யூ., கட்சிகளுக்கும், தலா, ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூ., கட்சிகள், எதற்காக இவ்வளவு குறைந்த தொகுதியுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...
அதற்கு காரணம், தொகுதி எண்ணிக்கை எவ்வளவு குறைகிதோ, அதற்கு ஈடாக, தி.மு.க., தரும் தேர்தல் நிதி அதிகமாகும். அந்த கணக்கு தான்! கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என, யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
கம்யூ., முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் ஓய்வு ஊதியத்தையும் பிடுங்கி, அவர்களை தன்னிறைவு வாழ்க்கை நடத்த இயலாத வறுமைச் சூழலுக்கு தள்ளுவதே, சிவப்பு சித்தாந்த கொள்கை. தி.மு.க.,விடம் கடந்த தேர்தலின் போது, 15 கோடி ரூபாய் பெற்றனர். இப்போது, எவ்வளவு என, இதுவரை தெரியவில்லை.
அந்த பணத்தில், மக்களுக்காக ஏதும் செய்கின்றனரா என்றால், அதுவும் இல்லை. அனாதை விடுதி போன்ற ஏதாவது சமூக நல அமைப்புக்கு நிதியுதவி அளிக்கின்றனரா என்றால், அதுவும் இல்லை. இந்த பணம், யாருக்கெல்லாம் போகிறது... கணக்கு உண்டா?
இக்கட்சி தலைவர்களை நல்லவர்கள் என நம்பி, டீயும், வடையும் சாப்பிட்டு, போராட்டக்களத்திற்கு செல்லும் தொழிலாளத் தோழர்கள் தான் பாவம். பா.ஜ.,வின் லட்சியமே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியாவை கட்டமைப்பதே. முன்னது நடக்காமல் போனாலும், பின்னது நடந்தே தீரும்!
கம்யூனிஸ்ட் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகி நிற்கிறது. போலி மதசார்பின்மையை கடைப்பிடிப்போர், காம்ரேட்கள் என்பதையும், மக்கள் புரிந்து கொண்டதும், கம்யூ., இயக்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
கம்யூ., கட்சி, தேசிய அளவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான், நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் வளமையான வாழ்விற்கும் நல்லது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க.,
கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., --- கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்...' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர்.
அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது.
*திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்*
மிகவும் பழமை வாய்ந்த கோயில் *எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.*
🇮🇳🙏1
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது.
இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன.
🇮🇳🙏2
இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது.
ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார்.
ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
திமுகவுக்கு ஆலோசகராக பணியாற்றும் "ஐ பேக்" கெஜ்ரிவாலா, ஜெகன்மோகன் மற்றும் தற்ப்போது " திருட்டு குடியேறிகளின் அத்தை" மம்தாவுக்கு ஆலோசனை கூறுகிறது.முந்தய நிகழ்வுகள்,தற்ப்போதய "ஐ பேக்" நிகழ்வுகள்! பார்ப்போம்!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில், முட்டை வீச்சு, மை தெளிப்பு, செருப்பு வீசுவது, கன்னத்தில், 'பளார்' விடுவது போன்ற பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றில், பெரும்பாலான சம்பவங்கள், தேர்தல் நேரத்து, 'ஸ்டன்ட்' எனவிமர்சிக்கப்பட்டது.அதைப்போலவே, 2018 ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, விமான நிலையத்தில் தாக்கப்பட்டார்.