#வெற்றிவேல்_வீரவேல்
#திமுக_வேணாம்_போடா
#திமுகவின்_தேறாத_அறிக்கை

தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்தாரா மோடி?

பாகம் - 2 : நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

தமிழக மீனவர்களுக்கு எதிரியா மோடி?
காங்., - -தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நுாற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடினர். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பதவி ஏற்ற பின், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அனேகமாக தடுக்கப்பட்டு விட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர்கள், இலங்கைக்கு அடிக்கடி சென்று, மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு எதிரானவாரா மோடி?

இலங்கை போரில், பெரும் அளவில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது, உண்ணாவிரத நாடகம் ஆடியது கருணாநிதி. அதற்கு ஆதரவாக இருந்தது, சோனியாவின் காங்., அரசு.
ஆனால், மோடி அரசோ, இலங்கை தமிழர்களின் புனர்வாழ்வுக்காக நிதியுதவி அளித்து, 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்துக்கு நேரில் சென்று, அவர்களுக்காகச் செயல்படும் நலத்திட்டங்களை பார்வையிட்ட ஒரே இந்திய பிரதமர் மோடி தான்.
இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமான, ராகுலையும், சோனியாவையும், ஸ்டாலினையும் அல்லவா தமிழர்கள், 'திரும்பிப் போ' என்று சொல்லியிருக்க வேண்டும்.
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல் ஏமாற்றுகிறாரா மோடி?

மோடி அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று, மதுரையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஜப்பான் நிதியுதவியுடன் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. இது அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகளாகியும், இன்னும் செயல்படுத்தப்படவில்லை;
மத்திய அரசு வெறும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநில அரசு, நிலம் கையகப்படுத்துவதில் காலம் தாழ்த்தியதால், முதலில் தாமதம் ஏற்பட்டது. பின், கொரோனாவால் தாமதம் ஏற்பட்டது.
இதை ஒப்புக்கொண்டது, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மதுரை எம்.பி.,யும், மாநில அமைச்சர் உதயகுமாரும் தான். ஆக, மத்திய அரசு காலம் தாழ்த்தவும் இல்லை; கிடப்பில் போடவும் இல்லை.
திட்டம் நிச்சயமாக, 2023க்குள் முடிக்கப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உறுதிமொழி அளித்துள்ளார்,

எய்ம்ஸ் ஒரு பக்கம் இருக்க, நான்கு, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகளை, இதே மோடி அரசு கட்டி, அவை அனைத்தும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
கடந்த, 70 ஆண்டுகளில், தமிழகத்திற்கு எந்தவொரு பெரிய சுகாதார திட்டத்தையும், மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
தமிழகத்திற்கு வேறு என்ன செய்திருக்கிறார் மோடி?

மத்தியில், காங்கிரஸ்- - தி.மு.க., கூட்டணி ஆட்சி காலத்தில், 56 ஆயிரத்து, 971 கோடி ரூபாய் திட்ட நிதியாக, தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதுவே, மொடியின் முதல் ஆட்சி காலத்தில், 98 ஆயிரத்து, 911 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
அதாவது, தமிழகத்திற்கு, 74 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

* 'ஜன்தன்' திட்டம் வாயிலாக, 94 லட்சம் தமிழர்களின் வங்கி கணக்குகளில், 1,600 கோடி ரூபாய்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது
* 'ஜன் சுரக்ஷா' காப்பீட்டு திட்டங்கள் வாயிலாக, தமிழகத்தில், 1.14 கோடி பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது
* 'ஜன் ஆரோக்யா' உடல் நல காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்தவர்களில், 16 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
* தொழில் துவங்குவதற்காக அளிக்கப்படும், 'முத்ரா' கடன் திட்டத்தில், இந்தியாவிலேயே மிக அதிகமாக கடன் அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தான். தமிழகத்தில், 1.96 கோடி பேர் கடன் பெற்று, சிறு தொழில் நடத்தி வருகிறார்கள்
* 'கிஸான் சம்மான்' திட்டம் வாயிலாக, தமிழகத்தில், 48 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் பெறுகின்றனர்
* 36.60 லட்சம் பேர் இலவச காஸ் சிலிண்டர் பெற்றுள்ளனர்
* 'துாய்மை இந்தியா' திட்டத்தில், 49 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன
* 1,735 கி.மீ., துாரத்திற்கு தமிழகத்திற்குள் மட்டும், மத்திய அரசு சாலைகள் அமைத்துள்ளது.
இன்னும் இது போன்ற, நுாற்றுக்கணக்கான திட்டங்கள் வாயிலாக, தமிழகத்திற்கு பெரும் அளவில், மோடி நன்மைகள் செய்து வருகிறார். இந்த அளவுக்கு பிரமாண்டமான நல திட்டங்களை, முந்தைய காங்., கூட்டணி அரசு, தமிழகத்திற்கு அளித்ததே இல்லை.
அனைத்தையும், இங்கு விளக்க வேண்டுமானால், பல நுாறு பக்கங்கள் தேவைப்படும். மேலே சொல்லப் பட்டவை எல்லாம், ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.

நன்றி மறப்பது நன்றன்று. உப்பிட்டவரை உள்ளளவும் நினை. மோப்பக் குழையும் அனிச்சம் என்றெல்லாம், தமிழர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்.
விருந்தினர்களை வரவேற்பதும், பெற்ற உதவிகளுக்கு நன்றியுடன் இருப்பதும், அவர்களின் பண்பாடு.
ஆனால், அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, தமிழகத்தின் மீது பாசத்துடனும், அன்புடனும், அக்கறையுடனும் செயல்பட்டு வரும் பிரதமரை அவமதித்து, 'திரும்பிப் போ' என்று சொல்ல, எப்படி தமிழர்களுக்கு மனம் வந்தது?

#வெற்றிவேல்_வீரவேல்
#திமுக_வேணாம்_போடா
#திருட்டுதிராவிடம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

18 Mar
அடுத்து தி.மு.க., ஆட்சி தான் என ஸ்டாலின் தன்னை தானே ஏமாற்றி வருகிறார்

தமிழக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் எம்.பி., - இல.கணேசன். தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்த காலங்களில், இரு கட்சிகளின் தலைவர்
களுடன் பேச்சு நடத்தியவர்.
தற்போதைய சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து, தேர்தல்
களத்திற்காக அளித்த பேட்டி:

'ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறு
கிறாரே?
செயல் தான் முக்கியம்; வார்த்தை முக்கியம் அல்ல. தேர்தல் என்பதால், சங்கரா சங்கரா என, போலியாக கூறினால், மக்கள் நம்ப மாட்டார்கள். இந்தாண்டு ஹிந்துகளுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு, பின்னணியில் இருந்தது தி.மு.க., தான். அதிலிருந்து, தி.மு.க., தப்ப முடியாது.
Read 20 tweets
18 Mar
ஸ்ரீ ராகவேந்திரர் 

மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரர் பிறப்பு"

தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா 🙏🇮🇳1 Image
என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், 🙏🇮🇳2
கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.🙏🇮🇳3
Read 51 tweets
17 Mar
கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்

இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்
மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின‌

அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை
இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்
Read 17 tweets
17 Mar
#தமிழகத்தின்_தீர்ப்பு

இறுதி தேர்தல் கணிப்பு

திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. 1
கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.

2
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.

அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

மிக சிம்பிளாக,

3
Read 22 tweets
17 Mar
கர்ம வினை தீர்க்கும் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில்

இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. 🇮🇳🙏1
சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.

இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். 🇮🇳🙏2
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.

🇮🇳🙏3
Read 30 tweets
16 Mar
*லிங்காஷ்டகம்🙏*

*ஸ்ரீ_ஆதிசங்கரரால்_இயற்றப்பட்ட*
*ஸ்லோகம்_தமிழில்*
1 பிரம்மதேவன் ஸ்ரீ மகா விஷ்ணு தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியின் நிர்மலமாக பிரகாசத்துடன் கூடியதாகவும் சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை பிறப்பினால்
ஏற்படும் துக்கத்தை போக்குகின்ற லிங்க மூர்த்தியை மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்கத்தை நமஸ்கரிக்கின்றேன்🙏
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!